மௌன ஆட்சியில் மட்டுமே
இருவரும் இருந்த போதும்,
சீன சுவரின் அளவை விடவும்
நம் உரையாடலின் அளவு
பல மடங்கு பெரியதாக
தோன்றிய பிரமையே, காதலா?
உன் உதட்டில் பூக்கும்
சிரிப்பிற்காக முள்
பாதையிலும் நடக்க
மனம் விழைகிறதே?
இது தான் நேசமா?
சிவனின் கோப கனலே
உன் கண் அசைவிடும்
கட்டளையை செய்யும்
நாய்க்குட்டியாக என்னை
மாற்றி விட்டாயே!
சூரியன் வரும் வேலை
நிலவும் வானில்
தெரிவது இல்லை...
என் கண் பார்வையில்
நீ இருக்கும் நேரம்
நெஞ்சில் வேறு
நினைவும் இல்லை...
பாரதி கண்ட
புதுமை பெண்ணாய்
திரிந்த என்னுள்
பய விதையை விதைத்து,
நாளுக்கு நாளாய்
தண்ணீர் விட்டு
ஏன் என் ஜீவனை குடிக்கிறாய்?
விடையில்லா கேள்விகள்
மனதில் பலவும்
உலவுகிறதே...
விடையாக நீ வந்து
கேள்வி குறியாக
இருக்கும் என்னை,
ஆச்சரிய குறியாக்குவாயா?
இருவரும் இருந்த போதும்,
சீன சுவரின் அளவை விடவும்
நம் உரையாடலின் அளவு
பல மடங்கு பெரியதாக
தோன்றிய பிரமையே, காதலா?
உன் உதட்டில் பூக்கும்
சிரிப்பிற்காக முள்
பாதையிலும் நடக்க
மனம் விழைகிறதே?
இது தான் நேசமா?
சிவனின் கோப கனலே
உன் கண் அசைவிடும்
கட்டளையை செய்யும்
நாய்க்குட்டியாக என்னை
மாற்றி விட்டாயே!
சூரியன் வரும் வேலை
நிலவும் வானில்
தெரிவது இல்லை...
என் கண் பார்வையில்
நீ இருக்கும் நேரம்
நெஞ்சில் வேறு
நினைவும் இல்லை...
பாரதி கண்ட
புதுமை பெண்ணாய்
திரிந்த என்னுள்
பய விதையை விதைத்து,
நாளுக்கு நாளாய்
தண்ணீர் விட்டு
ஏன் என் ஜீவனை குடிக்கிறாய்?
விடையில்லா கேள்விகள்
மனதில் பலவும்
உலவுகிறதே...
விடையாக நீ வந்து
கேள்வி குறியாக
இருக்கும் என்னை,
ஆச்சரிய குறியாக்குவாயா?