ஊர் உறங்கும்
வேளையிலே...
வெளிர் நிற உடையில்
அழகிய ராணி போல்
ஊர் கோலம் செல்கிறாய்...
சத்தம் அடங்கிய
பொழுதிலே...
விண்மீன் படையோடு
வருகிறாய்...
இருள் சூழ்ந்த
வேளையிலே...
மௌன பூட்டை உடைத்து
எறியும் சாவியாக வருகிறாய்...
கண் உறங்கும்
ஜாமத்திலே...
கனவை தூண்டி விட்டு
விளையாடும் கள்ளியாக வருகிறாய்...
காடு மலை எல்லாம்
மறைந்து மறைந்து செல்கிறாய்...
வாழ்வேட்டில் எழுதிய சோகம்
எல்லாம் நீக்கவே வருகிறாய்...
மனம் எல்லாம் குளிர
தென்றலோடு வருகிறாய்...
மூச்சு காற்றில்
புத்துணர்ச்சியை தூண்டவே
விண்ணை தாண்டி வருகிறாய்!
வேளையிலே...
வெளிர் நிற உடையில்
அழகிய ராணி போல்
ஊர் கோலம் செல்கிறாய்...
சத்தம் அடங்கிய
பொழுதிலே...
விண்மீன் படையோடு
வருகிறாய்...
இருள் சூழ்ந்த
வேளையிலே...
மௌன பூட்டை உடைத்து
எறியும் சாவியாக வருகிறாய்...
கண் உறங்கும்
ஜாமத்திலே...
கனவை தூண்டி விட்டு
விளையாடும் கள்ளியாக வருகிறாய்...
காடு மலை எல்லாம்
மறைந்து மறைந்து செல்கிறாய்...
வாழ்வேட்டில் எழுதிய சோகம்
எல்லாம் நீக்கவே வருகிறாய்...
மனம் எல்லாம் குளிர
தென்றலோடு வருகிறாய்...
மூச்சு காற்றில்
புத்துணர்ச்சியை தூண்டவே
விண்ணை தாண்டி வருகிறாய்!