Crazee queen
மண்டலாதிபதி
பகுதி -2
இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள் மிருதுளா. பார்த்து விரிந்த கூடம், ஒரு சிறு திருமண வரவேற்பை தாங்கும் அளவு பிரமாண்டமாய் இருந்து. விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தபடி அறையில் பின் மூலைக்கு வந்தாள். மெல்லிய இரவு விளக்கு மட்டும் விட்டு மற்ற எல்லா விளக்குகளையும் அனைத்து விட்டாள்.
சுவருக்கு பதில் மேற்கூரை வரை ஏறி இருந்த கண்ணடி வழியே பின்பக்கம் தெரிந்த தோட்டம். அங்கே மாட்டப்பட்டிருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடினாள். தோட்டம் ஆடுவது போல் மாயை தோன்றியது. வாழ்வே மாயம் தானே! அதிலும் தன் வாழ்வு... யார் அதன் சூத்திரதாரி? கடவுளா? மாமியாரா? ரக்ஷனாவா? யாருக்காக அவள் இந்த ஆட்டத்தை ஆடுகிறார்? யார் பார்க்க இந்த நாடகம்? கதாநாயகியாக அவள் வாழும் இந்த நாடகத்தில் உண்மையில் அவள் 'காமெடி பீசா?"
"தூக்கம் வரலையா? எப்படி வரும்?"
குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். மாமியார் வெற்றிவிழி . சட்டென ஊஞ்சலில் இருந்து இறங்கி, தடுமாறி நடக்கும் மாமியார் கைப்பற்றி நடத்தி அருகில் இருந்த போபாலில் அமர்த்தினாள்.
"நீங்க தூங்கலையா? சரியான நேரத்துக்கு தூங்காட்டி பி.பி... சுகர் எல்லாம் அதிகமாகுமே, அத்தை."
"வியாதி மாத்திரையால மட்டும் சரியாகாதும்மா. மனசுல நிம்மதி இருக்கணும். இந்த வயசுல எனக்கு அது இல்ல. என்ன செய்ய? இருதயராசன் இன்னும் வரலையே? இனி எங்க, காலை தான் வருவான்" குரலில் அலுப்பும் சலிப்பும் வழிந்தது.
சிறிது நாட்களாகவே மாமியார் இப்படி பேசுவது வாடிக்கையாக இருந்து. அவள் தன் கை விரல் நகங்களை பார்த்துக் கொண்டு நின்றாள். அதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்? இந்த நாடகத்தில் தன் பங்குக்கு ஒழுங்கா நடிக்கிறாள். கதை எப்படி முடியும்? வாழ்க்கை என்ற மெகா சீரியல் 'இவருக்குப் பதில் இவர்' என்ற வாசகம் தாங்கி தன் இடத்திற்கு வர ஒருத்தி தயாராக இருக்கிறாள். கணவன் என்ற டைரக்டர் சொன்னவுடன் அவள் சரியென்று வெளியேற வேண்டும். இதில் மாமியார் மருகி என்ன பயன்?
வெற்றிவிழி அவளை பரிதாபமாக பார்த்தார்.
"சாயந்திரம் 'ஒப்பந்ததுல அப்படி இல்லையே'னு நீ சொன்ன...இது வாழ்க்கை இல்லையா? என்ன வியாபாரமா?"
அவள் மெல்ல தன் மாமியார் அருகை வந்து அமர்ந்து கொண்டாள்.
" உங்க ஆதங்கம் புரியுது, அத்தை. ஆனா, என்னால் தான்.... நான் என்ன செய்ய முடியும்?"
நீ பெறாத குழந்தையை உன் அன்பால் கட்டிப்போட முடியும்னா, உரிமை உள்ள உன் கணவனை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா? ஒப்பந்தம் அது இதுனு பேசி நீ விலகி நின்னா, அவன் தன் போக்குல ஆடறான்.... நீங்க ரெண்டு பேரும் முறையா வாழ்ந்திருந்தா இன்னும் ரெண்டு பேரன் பேத்தினு..."
"தாலி கட்டிட்டா மனைவி ஆயிட முடியுமா , அத்தை?"
மிருதுளா சன்னமாகத் தான் கேட்டாள் ஆனால், அந்த குரலில் இருந்த வலி, வேதனை, நிதர்சனம்.... அடிபட்டுப் போனார் வெற்றிவிழி. அவளை ஆழமாக பார்த்தார். பின் மெல்ல அவள் கையை தட்டிக் கொடுத்து விட்டு எழுந்து தன் அறை நோக்கி போனார்.
மெல்ல நடந்து போகும் அவரையே சில நொடிகள் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள், அப்படியே கால்களை மடக்கி, கண்களை முடி போபாலில் சாய்ந்து கொண்டாள்.
எண்ணங்கள் பரபரவென 11 வருடங்கள் பின்னோக்கி ஓடினார்....
?மிருதுளவின் வாழ்க்கையில் 11 வருடங்கள் முன்னோடி என்ன நடந்தது அடுத்த பகுதியில் பாக்கலாம் ?
இரவு குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள் மிருதுளா. பார்த்து விரிந்த கூடம், ஒரு சிறு திருமண வரவேற்பை தாங்கும் அளவு பிரமாண்டமாய் இருந்து. விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தபடி அறையில் பின் மூலைக்கு வந்தாள். மெல்லிய இரவு விளக்கு மட்டும் விட்டு மற்ற எல்லா விளக்குகளையும் அனைத்து விட்டாள்.
சுவருக்கு பதில் மேற்கூரை வரை ஏறி இருந்த கண்ணடி வழியே பின்பக்கம் தெரிந்த தோட்டம். அங்கே மாட்டப்பட்டிருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடினாள். தோட்டம் ஆடுவது போல் மாயை தோன்றியது. வாழ்வே மாயம் தானே! அதிலும் தன் வாழ்வு... யார் அதன் சூத்திரதாரி? கடவுளா? மாமியாரா? ரக்ஷனாவா? யாருக்காக அவள் இந்த ஆட்டத்தை ஆடுகிறார்? யார் பார்க்க இந்த நாடகம்? கதாநாயகியாக அவள் வாழும் இந்த நாடகத்தில் உண்மையில் அவள் 'காமெடி பீசா?"
"தூக்கம் வரலையா? எப்படி வரும்?"
குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். மாமியார் வெற்றிவிழி . சட்டென ஊஞ்சலில் இருந்து இறங்கி, தடுமாறி நடக்கும் மாமியார் கைப்பற்றி நடத்தி அருகில் இருந்த போபாலில் அமர்த்தினாள்.
"நீங்க தூங்கலையா? சரியான நேரத்துக்கு தூங்காட்டி பி.பி... சுகர் எல்லாம் அதிகமாகுமே, அத்தை."
"வியாதி மாத்திரையால மட்டும் சரியாகாதும்மா. மனசுல நிம்மதி இருக்கணும். இந்த வயசுல எனக்கு அது இல்ல. என்ன செய்ய? இருதயராசன் இன்னும் வரலையே? இனி எங்க, காலை தான் வருவான்" குரலில் அலுப்பும் சலிப்பும் வழிந்தது.
சிறிது நாட்களாகவே மாமியார் இப்படி பேசுவது வாடிக்கையாக இருந்து. அவள் தன் கை விரல் நகங்களை பார்த்துக் கொண்டு நின்றாள். அதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்? இந்த நாடகத்தில் தன் பங்குக்கு ஒழுங்கா நடிக்கிறாள். கதை எப்படி முடியும்? வாழ்க்கை என்ற மெகா சீரியல் 'இவருக்குப் பதில் இவர்' என்ற வாசகம் தாங்கி தன் இடத்திற்கு வர ஒருத்தி தயாராக இருக்கிறாள். கணவன் என்ற டைரக்டர் சொன்னவுடன் அவள் சரியென்று வெளியேற வேண்டும். இதில் மாமியார் மருகி என்ன பயன்?
வெற்றிவிழி அவளை பரிதாபமாக பார்த்தார்.
"சாயந்திரம் 'ஒப்பந்ததுல அப்படி இல்லையே'னு நீ சொன்ன...இது வாழ்க்கை இல்லையா? என்ன வியாபாரமா?"
அவள் மெல்ல தன் மாமியார் அருகை வந்து அமர்ந்து கொண்டாள்.
" உங்க ஆதங்கம் புரியுது, அத்தை. ஆனா, என்னால் தான்.... நான் என்ன செய்ய முடியும்?"
நீ பெறாத குழந்தையை உன் அன்பால் கட்டிப்போட முடியும்னா, உரிமை உள்ள உன் கணவனை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா? ஒப்பந்தம் அது இதுனு பேசி நீ விலகி நின்னா, அவன் தன் போக்குல ஆடறான்.... நீங்க ரெண்டு பேரும் முறையா வாழ்ந்திருந்தா இன்னும் ரெண்டு பேரன் பேத்தினு..."
"தாலி கட்டிட்டா மனைவி ஆயிட முடியுமா , அத்தை?"
மிருதுளா சன்னமாகத் தான் கேட்டாள் ஆனால், அந்த குரலில் இருந்த வலி, வேதனை, நிதர்சனம்.... அடிபட்டுப் போனார் வெற்றிவிழி. அவளை ஆழமாக பார்த்தார். பின் மெல்ல அவள் கையை தட்டிக் கொடுத்து விட்டு எழுந்து தன் அறை நோக்கி போனார்.
மெல்ல நடந்து போகும் அவரையே சில நொடிகள் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள், அப்படியே கால்களை மடக்கி, கண்களை முடி போபாலில் சாய்ந்து கொண்டாள்.
எண்ணங்கள் பரபரவென 11 வருடங்கள் பின்னோக்கி ஓடினார்....
?மிருதுளவின் வாழ்க்கையில் 11 வருடங்கள் முன்னோடி என்ன நடந்தது அடுத்த பகுதியில் பாக்கலாம் ?