செமையா சொல்லிருக்கீங்க நன்றிView attachment 33174
அடிப்பாவி அக்காவுக்காக தன் பிள்ளையையே காவு வாங்கியவனிடம் இப்படிக்கேட்க வெட்கமாயில்லை.வம்சி வேதாளம் அக்காவின் தற்போதய நிலை அறியும்போது மிருதுளா வேண்டுமென்றேதான் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்று சண்டைபோடுவான் பாருங்க இந்த அக்காகோண்டு .தமக்கைகாரிக்கு மருத்துவமனைக்கு போவதற்கும் தம்பி வேணுமோ.அப்படியான அக்காகாரி வம்சியை திருமணம் செய்து வைக்காமல் தன்கூட வைத்திருக்கவேண்டும்.அப்படி தம்பி மேல் அளவு கடந்த பாசமெனில் அதை தேவையானபோது காட்டி, அவர்களுக்கான உன்னோட தேவையை அவர்களுக்கு தேவைப்படும்போது கொடுத்தாலே பாசப் பயிர் தன்னாலே வளரும் ஏன் மிருதுளா கூட தண்ணி ஊற்றி இன்னும் வளர்த்திருப்பார்.நீ நந்தி மாதிரி அவர்களிடையே குறுக்கே நின்றால் இப்படி வெறுப்புத்தான் வரும்.