Rajiprabha
முதலமைச்சர்
Very emotional
இரண்டுல ஒன்னு செத்துடுச்சுனா... செத்த குழந்தை மிருவோடது... பிறந்த குழந்தை என்னதுனு சொல்லுவாங்களோ இந்த பாசமலர் அக்கா...தம்பி பிள்ளை இறந்த அப்ப... இந்த அக்கா ஏன்... என் குழந்தையை தம்பிக்கு தரேன்னு சொல்லலை? ஓ... இவங்களுக்கு பிள்ளை பெத்துக்க வயசும் இளமையும் இருக்குல்ல... அதைத் தானே இப்பவும் அக்கா சொன்னா தான... உங்களுக்கு வயசு இருக்கு... நீங்க இன்னொனு பெத்துக்கலாம்னு... selfish...
இவன் எதுக்கு அக்கா மூச்சு விட தடுமாறும் போது பக்கத்தில் இருந்தான்? லூசுப்பயல்... மாமாவ அக்காகிட்ட உட்கார சொல்லிட்டு... மருத்துவரைக் கூப்பிட போயிருக்கலாம்ல்ல... அசமந்தம் பிடிச்சவன்...
இவனுக்கு மனைவி, இப்ப ரெண்டு பிள்ளைகள்! சரி... ஒரு வேளை... பிரசவத்தில் ஒரு குழந்தை அவளுக்கு இறந்து பிறந்துடுச்சுனா? தீனு சொன்னா வாய் வெந்துடாது...
ஆனா இந்தக் கதை ஆசிரியர்... ஏற்கனவே... ஒரு கருக்கலைப்பு... இன்னொரு கரு இறப்புனு சர்வ சாதாரணமா இரண்டு, மொதது கொலை, இரண்டாவது தற்கொலை பண்ணிட்டாங்க... அவங்களுக்கு இன்னும் ஒன்ன போட்டுத்தள்ள ரொம்ப சுலபம்...(காதாசிரியர் மன்னிக்கவும்... நீ இதுவரை எழுதியதை வச்சு சொன்னேன்!)
சரி... இரண்டு குழந்தை பிறக்குது... அதில் ஒரு ஆண், இன்னொன்று பெண்னு வச்சுக்கலாம்... அக்கா... எந்த குழந்தையைக் கேட்பாங்க? ஏற்கனவெ என் கிட்ட பொண்ணு இருக்கு உன் ஆண் குழந்தையை என் கிட்ட கொடுத்துடுனா?தம்பியை ஒழுங்கா வளர்க்க முடியலை இன்னொன்னா?
இல்லை... ஆண் உன் வம்ச விருத்தி... பொண்ண நான் வளர்த்துக்கிறேன்னு சொல்லுவாங்களோ? ஆத்தாடி... அக்கா... தன் பொண்ணையே ஒழுங்கா வளர்க்கலை... இன்னொரு பொண்ணா?
சரி ஒரு வேளை... ஒரு குழந்தை முடமாயும் இன்னொன்று நல்லாவும் பிறந்தா எந்தக் குழந்தையை வளர்க்க கேட்பாங்க?
ஆனால்... இது போன தலைமுறையில் நடக்காத ஒன்னு கிடையாது... இரண்டு அக்கா இருக்க... மூத்த அக்காவிற்கு/தங்கைக்கு ஆண் குழந்தை இல்லைனு இளைய தங்கை/அக்கா தன் இரண்டு குழந்தையில் ஒன்ன குடுத்தது எல்லாம் சகஜமா தான் இருந்திருக்கு!
ஆனா... இப்ப... ஒன்னு இரண்டு குழந்தைனு ஆன பின்ன தான் எல்லாம் தப்பா தெரியுதோ? இல்லை... கூட்டுக் குடும்பம் உடைந்த பின் தான் எல்லாம் தப்பா ஆகிடுச்சா?
ஆனா... எப்படி தன் பிள்ளையை இன்னொருத்தர் கிட்ட கொடுக்க மனசு வரும்...
கொஞ்ச காலம் முன்ன... நீயா நானா வில் தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் தன் தத்துப் பெற்றோருடன் ஒரு புறம் மற்றும் பெத்தவங்க மறுபுறம் என்று ஒரு நிகழ்ச்சி நெசிழ்ச்சியா நடந்தது... அதுக்கு பின் இப்படி தான் நிறைய வலி இருக்குமோ???
அந்த காலத்திலும் இந்த முடிவ... அதாவது ஒரு குழந்தையைத் தூக்கிக் கொடுக்கச் சொல்லி கேட்கிறது ஒரு பொண்ணாவும்... அதை லூசு மாதிரி செய்யுறது தகப்பனாவும் தான் இருக்கும். பெத்த தாய் என்னைக்கும் அதைச் செய்ய மாட்டா!!! அப்படிச் செய்தா... அது கட்டாயம்... ம்ம்ம்ம்
என்னமோ போங்க எழுத்தாளரம்மா... இது எல்லாம்... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு! எப்படித்தான் கதையைநீங்க முடிக்கப் போறீங்கனு பார்க்கநான் ரொம்பஆவலா இருக்கிறேன்! Bigg Boss மாதிரி I am waiting... எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு நீங்க உங்க mind voice இல் சொன்னது எனக்குக் கேட்டுடுச்சு!!! I am waiting to see how you finish this story! thanks for taking such a great anti-hero subject and all the best to you!
Apadiya avana naal saathu saathu ma. Padma ku konjam kuda arivu ila .enna Mathiri manusangaவணக்கம்! வணக்கம்!
சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி! நன்றி!
மயங்கினேன் பொன்மானிலே - 25
இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
உங்கள்
அனாமிகா - 10