ஹாய் டியர்ஸ் நானே இது நானே!
அடுத்த கதை தலைப்பு "மருகுவதேனோ மதிமலரே!"
முதல் எபி எப்பன்னு சொல்ல மாட்டேன்...ஏனா எனக்கே தெரில
ஆனா இந்த டீசர் மண்டைய உருட்டிட்டே இருந்ததால இங்க தள்ளிட்டு போலான்னு வந்துட்டேன்
இது மாதிரிதான். இதே சீன் எபில சில மாற்றங்களோட வரலாம்.... இல்ல அப்படியேவும் வரலாம்...ஆனா இதுதான் டீசர்...
குழப்பறேனா வேண்டாம் நீங்க டீசர் படிங்க... கருத்த சொல்லுங்க...
******************************
டீசர்;
அந்தகாரம் போல் கரிய இருட்டு, உலகை தன் கொடுங்கரம் கொண்டு ஆக்கிரமித்திருந்தது.
நாய்கள் வீட்டைக் காக்கும் பாதுகாவலனாகவும், வேட்டைக்காரனாகவும் சுற்றிக்கொண்டிருக்கும் முன்னிரவு வேளை.
பதினெட்டு வயதுப் பருவப் பெண்ணவள் நட்ட நடு சாலையில் வியர்வைப் பூத்த தன் உள்ளங்கையால் தான் அணிந்திருந்த உடையை இருக்கிப் பிடித்திருக்க, அதற்கும் சற்று மேலே பயத்தில் மேலே கீழே என சீசா ஆடிக்கொண்டிருந்தது தொண்டைக்குழி.
கண்களோ அதீத அச்சத்தை தாங்கி அசைவற்று நின்றிருந்தது.
காரணம்? அவளைச் சுற்றி நின்றிருந்த ஆறு பேர். ஆண்களிடம் சரிசமமாக வீரம் காட்டுபவனே பலசாலி ஆவான்.
மெல்லிய பெண்ணிடத்தில் தன் வீரத்தை காட்ட வந்திருக்கும் இந்த அறுவரும் பெருத்த உடலைக் கொண்டு மற்றவரை ஏய்த்து உண்ணும் பெருச்சாளிகள்!
அதிலும் ஆறுபேரின் கைகளிலும் அறிவாள்கள் வேறு வெட்கமின்றி...
"எவ்ளோ தைரியமிருந்தா எங்கையா பையன கொன்னுட்டு தண்டனை இல்லாம வெளிய வந்திருப்ப... ஆனா பாரு அங்க தப்பிச்சாலும் இங்க இருந்து உன்னால தப்பிக்க முடியாது..." என்று வாயைப் பிளந்து பெருங்குரலெடுத்து சிரித்தது ஒரு உருவம்.
இவளுக்கு சர்வமும் ஆடியது.ஒருத்தராக இருந்தாலும் முடிந்தளவில் சமாளிக்கலாம்... ஆனால் இவர்கள் ஆறு பேர்.
இப்படி பெண்களை உடலளவில் வலிமை இல்லாதவர்களாக படைத்த இறைவனின் எண்ணம்தான் என்னவோ?
இவளைப்போன்ற சிறு புறாக்கள் பகைவர்களிடம் சீரழியத்தானா?
"டேய் என்னடா வேடிக்கை பாத்துட்டு சீக்கரமா இத்த முடிச்சிட்டு போலாம்... " என ஒருவன் அவசரப்படுத்த மற்றொருவன் அதை ஆமோதித்தவாறு கையிலிருந்த ஆயுதத்தை இருக்கிப் பிடித்து அவளை நோக்கி எட்டு வைத்தான்.
அவளோ கால்கள் நடுங்க பயத்தில் மூச்சை இழுத்து அதை விட மறந்தவளாய் கோரமாக முடியப்போகும் தன் நிலையை எண்ணி கண்களை இறுக்கமாக மூடினாள் . இத்தனைக்கும் பயமிருந்ததே தவிர அழவில்லை அவள் கண்கள்.
அந்த பெருந்தேகக்காரன் பெண்ணவளை நெருங்கிய சமயம் கரிய காரிருளை விரட்டியடிப்பதுபோல வெளிச்சம் பளீரிட்டது.
சுற்றியிருந்த கைக்கூலிகள் வெளிச்சத்தை கண்டு கண்களை மூட, இவளோ வெளிச்சத்தை காண கண்களைத் திறந்தாள்.
மின்னல் வேகத்தில் வந்த அந்த காரானது இவளின் பின்புறம் கீரிச்சிட்டு நின்றது. அது வந்த வேகத்தில் அவளின் பின்னால் நின்றவர்கள் பதறியடித்து முன்னால் வந்திருந்தனர்.
காரின் கண்ணாடிகள் மூடியிருக்க வந்தது யாரென்று அவர்களால் அறியமுடியவில்லை.
அவர்கள் படபடப்புடன் மற்றவர்களைப் பார்க்கப் பார்க்க நேரம்தான் சென்றதே தவிர கார் திறக்கப்படவில்லை.
கார் வந்த வேகத்தில் இவளும் பயந்தாளே தவிர அந்த இடத்தை விட்டு அசையவில்லை. வந்திருப்பவன் காப்பவனா? அழிப்பவனா? என காரைப் பார்த்து நின்றிருந்தாள்.
நேரம் செல்லவும் காத்திருந்தது போதும் என நினைத்தார்களோ என்னவோ? ஒருவன் காரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே மீண்டும் பெண்ணவளை நெருங்க, காரின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது.
ஓங்கிதாங்கி வளர்ந்திருந்த அவன் கீழறங்கி நின்றான். மங்கி மங்கி அடித்த காரின் வெளிச்சத்தில் அவனைக் கண்டவள் முகம் சற்றே ஆசுவாத்தை அளிக்க சுற்றியிருந்த சிலருக்கோ சகலமும் உறைந்தது.
எச்சிலை விழுங்கியவாறு, "என்னடா இவன் வந்திருக்கான். இது இவன் குணமில்லையே!" என ஒருவன் முனக, அவனைப்பற்றி அறியாத மற்றொருவனோ, "ண்ணா யார்ண்ணா இவன்? நாம ஆறுபேர் அவன் ஒருத்தன்...அவனப் பாத்து இப்படி பயப்யபடற?" என கொக்கரிக்க, அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து 'இளரத்தம்ல அதான்' என நினைத்தவன், "நேத்து ஒருத்தன போய் பார்த்தோமே ஆஸ்பத்திரில..." என கேட்டான்.
"ஆமா"
"அவன அடிச்சவன பத்தி நீ என்ன நினைக்கற..." என்றான் பார்வையை கார்க்காரன் மீது வைத்தவாறே!
"ஒருத்தனா? நான் நாலஞ்சு பேருன்னுல்ல நினைச்சேன்..." என தன் எண்ணத்தைக் கூறியவன்,
"பேசாம அவனை கொன்றுக்கலாம்.." என ஆஸ்பத்திரியில் இருந்தவனின் நிலையை நினைத்தவனாய் கூறினான்.
"அது இவன்தான்...." என்றவன் மற்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கார்க்காரன் பக்கம் திரும்பினான்.
அவ்வளவுதான் கேட்டவன் முகம் பேயறைந்ததை விட மோசமாக மாறியது. கை கால்கள் நடுக்கமெடுத்தது.
இப்போது கார்க்காரனைப் பார்த்தவன், "ஆனா! இவன் அமைதியா இருக்கானே...இவனா அடிச்சான்?ஆமா... இவன் யாருண்ணே?" என பயத்திலும் தன் சந்தேகத்தைக் கேட்க,
"இவன் ஒரு லாயர்... ஆனா சரியான கிறுக்கன்... கோவம் வந்தா அரக்கன்..." என சுருக்கமாக கூறினான்.
இவர்களது அத்தனை மெல்லிய உரையாடலும் அந்த நிசப்தத்தில் அனைவரையும் அடைந்தது. அதில் பெண்ணவளுக்கு மேலும் சற்று தைரியம் வந்தது.
மீண்டும் அடியாட்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தவர்களாய் ஒருவன் பேசத்தொடங்கினான்.
"இங்க பாரு வீரா. இது உனக்கு சம்பந்தமில்லாத மேட்டரு. கம்முனு போயிடு. " என மிச்சமிருந்த தைரியத்தை திரட்டி கேட்க, வீரா என்று அழைக்கப்பட்டவனோ ஒன்றும் பேசாமல் அவளை நோக்கி ஓரடி வைத்து அவளுடன் இணைந்து நின்றான்.
அவன் உடல்மொழி புரிய, "வேண்டாம் வீரா... நீ ஒதுங்கிடு. தலைவர் பையன கொன்னுருக்கா இவ. அதனால போட்டுட்டுதான் போவோம்...ஒருவேள இன்னைக்கு இல்லனாலும் இது கண்டிப்பா நடக்கும்" என உரும,
இப்போதும் அலட்சியத்தை கண்களில் தேக்கி, வீரா அவள் கரத்தைப் பிடித்தான். அதுவே கூறியது என்னைத் தாண்டி இவளிடம் வாவென்று.
இந்த சூழ்நிலை! வீராவின் மனக்கண்ணில் அவன் தாயின் இதேபோன்ற அன்றைய நிலையை காட்டியது.
அன்று சிறுவனான அவனால் தன் தாய்க்கு உதவ முடியவில்லை.
அதன் பின்னான அவன் தாயின் நிலை! அவளின் வார்த்தைகள் !
அர்ஜுனனுக்கு கிருஷ்ண உபதேசம் போல அவனுக்கு அவன் தாயின் வார்த்தைகள்.
அவன் தாய்க்கு நேர்ந்த அவலம் அப்படி! அதனால் அவன் கொண்ட கோலம் இப்படி!
அன்றைக்கு நடந்ததற்கு இன்று இதில் பதில் கொடுக்க நினைப்பவனாய், தீக்கங்குகளாக ஜொலித்த அவன் கண்கள் முன்னிருந்தவர்களை எடை போட்டது.
"வீரா வேண்டாம் கடைசியா சொல்றேன் விலகிடு..." என கூட்டத்தின் தலைவனாகப்பட்டவன் மீண்டும் கூற,
அதில் பிடித்திருந்த அவள் கையை இன்னும் வலுவாக பிடித்தவன் அப்படியே திரும்பி தன் காரின் இருக்கைக்கு அடியில் இருந்து வாள் போன்ற நீண்ட கத்தியை எடுத்திருந்தான்.
அவன் தயாராகி விட்டான். அவன் தாக்குவதற்கு முன் தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்கள் இவர்களை நோக்கி ஆவேசமாய் முன்னேற, அத்தனை நேரத்தில் இப்பொழுதுதான் இவளைத் திரும்பி பார்த்தவன் அதில் அச்சத்திலும் சிறிது நம்பிக்கையை தேக்கி அவனைப் பார்த்து நின்றிருந்த அவளது தோற்றத்தில் அன்று அபலையாய் நின்ற தன் தாயின் முக சாயலைக் கண்டு என்றோ நடந்ததற்கு இன்று பலிதீர்ப்பவனாய் கண்களை கூர்மையாக்கி திரும்பி அவர்களைப் பார்த்தவாறே முன்னேறினான்.
வாள் அவன் கையில் பம்பரமாய் சுழல, ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான்.
உயிரை பாதிக்காத அதே சமயம் உடலை முடக்கிப்போடும் அளவு லாவகமாக இருந்தது அவன் வாள்வீச்சு.
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா...
வீரா வீரா கண்கள் ஆள்தக்கும் குருவாளா....
இதை சற்று தூரத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்திருந்தவனின் கண்கள் அழியாத குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்த கதை தலைப்பு "மருகுவதேனோ மதிமலரே!"
முதல் எபி எப்பன்னு சொல்ல மாட்டேன்...ஏனா எனக்கே தெரில
ஆனா இந்த டீசர் மண்டைய உருட்டிட்டே இருந்ததால இங்க தள்ளிட்டு போலான்னு வந்துட்டேன்
இது மாதிரிதான். இதே சீன் எபில சில மாற்றங்களோட வரலாம்.... இல்ல அப்படியேவும் வரலாம்...ஆனா இதுதான் டீசர்...
குழப்பறேனா வேண்டாம் நீங்க டீசர் படிங்க... கருத்த சொல்லுங்க...
******************************
டீசர்;
அந்தகாரம் போல் கரிய இருட்டு, உலகை தன் கொடுங்கரம் கொண்டு ஆக்கிரமித்திருந்தது.
நாய்கள் வீட்டைக் காக்கும் பாதுகாவலனாகவும், வேட்டைக்காரனாகவும் சுற்றிக்கொண்டிருக்கும் முன்னிரவு வேளை.
பதினெட்டு வயதுப் பருவப் பெண்ணவள் நட்ட நடு சாலையில் வியர்வைப் பூத்த தன் உள்ளங்கையால் தான் அணிந்திருந்த உடையை இருக்கிப் பிடித்திருக்க, அதற்கும் சற்று மேலே பயத்தில் மேலே கீழே என சீசா ஆடிக்கொண்டிருந்தது தொண்டைக்குழி.
கண்களோ அதீத அச்சத்தை தாங்கி அசைவற்று நின்றிருந்தது.
காரணம்? அவளைச் சுற்றி நின்றிருந்த ஆறு பேர். ஆண்களிடம் சரிசமமாக வீரம் காட்டுபவனே பலசாலி ஆவான்.
மெல்லிய பெண்ணிடத்தில் தன் வீரத்தை காட்ட வந்திருக்கும் இந்த அறுவரும் பெருத்த உடலைக் கொண்டு மற்றவரை ஏய்த்து உண்ணும் பெருச்சாளிகள்!
அதிலும் ஆறுபேரின் கைகளிலும் அறிவாள்கள் வேறு வெட்கமின்றி...
"எவ்ளோ தைரியமிருந்தா எங்கையா பையன கொன்னுட்டு தண்டனை இல்லாம வெளிய வந்திருப்ப... ஆனா பாரு அங்க தப்பிச்சாலும் இங்க இருந்து உன்னால தப்பிக்க முடியாது..." என்று வாயைப் பிளந்து பெருங்குரலெடுத்து சிரித்தது ஒரு உருவம்.
இவளுக்கு சர்வமும் ஆடியது.ஒருத்தராக இருந்தாலும் முடிந்தளவில் சமாளிக்கலாம்... ஆனால் இவர்கள் ஆறு பேர்.
இப்படி பெண்களை உடலளவில் வலிமை இல்லாதவர்களாக படைத்த இறைவனின் எண்ணம்தான் என்னவோ?
இவளைப்போன்ற சிறு புறாக்கள் பகைவர்களிடம் சீரழியத்தானா?
"டேய் என்னடா வேடிக்கை பாத்துட்டு சீக்கரமா இத்த முடிச்சிட்டு போலாம்... " என ஒருவன் அவசரப்படுத்த மற்றொருவன் அதை ஆமோதித்தவாறு கையிலிருந்த ஆயுதத்தை இருக்கிப் பிடித்து அவளை நோக்கி எட்டு வைத்தான்.
அவளோ கால்கள் நடுங்க பயத்தில் மூச்சை இழுத்து அதை விட மறந்தவளாய் கோரமாக முடியப்போகும் தன் நிலையை எண்ணி கண்களை இறுக்கமாக மூடினாள் . இத்தனைக்கும் பயமிருந்ததே தவிர அழவில்லை அவள் கண்கள்.
அந்த பெருந்தேகக்காரன் பெண்ணவளை நெருங்கிய சமயம் கரிய காரிருளை விரட்டியடிப்பதுபோல வெளிச்சம் பளீரிட்டது.
சுற்றியிருந்த கைக்கூலிகள் வெளிச்சத்தை கண்டு கண்களை மூட, இவளோ வெளிச்சத்தை காண கண்களைத் திறந்தாள்.
மின்னல் வேகத்தில் வந்த அந்த காரானது இவளின் பின்புறம் கீரிச்சிட்டு நின்றது. அது வந்த வேகத்தில் அவளின் பின்னால் நின்றவர்கள் பதறியடித்து முன்னால் வந்திருந்தனர்.
காரின் கண்ணாடிகள் மூடியிருக்க வந்தது யாரென்று அவர்களால் அறியமுடியவில்லை.
அவர்கள் படபடப்புடன் மற்றவர்களைப் பார்க்கப் பார்க்க நேரம்தான் சென்றதே தவிர கார் திறக்கப்படவில்லை.
கார் வந்த வேகத்தில் இவளும் பயந்தாளே தவிர அந்த இடத்தை விட்டு அசையவில்லை. வந்திருப்பவன் காப்பவனா? அழிப்பவனா? என காரைப் பார்த்து நின்றிருந்தாள்.
நேரம் செல்லவும் காத்திருந்தது போதும் என நினைத்தார்களோ என்னவோ? ஒருவன் காரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே மீண்டும் பெண்ணவளை நெருங்க, காரின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது.
ஓங்கிதாங்கி வளர்ந்திருந்த அவன் கீழறங்கி நின்றான். மங்கி மங்கி அடித்த காரின் வெளிச்சத்தில் அவனைக் கண்டவள் முகம் சற்றே ஆசுவாத்தை அளிக்க சுற்றியிருந்த சிலருக்கோ சகலமும் உறைந்தது.
எச்சிலை விழுங்கியவாறு, "என்னடா இவன் வந்திருக்கான். இது இவன் குணமில்லையே!" என ஒருவன் முனக, அவனைப்பற்றி அறியாத மற்றொருவனோ, "ண்ணா யார்ண்ணா இவன்? நாம ஆறுபேர் அவன் ஒருத்தன்...அவனப் பாத்து இப்படி பயப்யபடற?" என கொக்கரிக்க, அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து 'இளரத்தம்ல அதான்' என நினைத்தவன், "நேத்து ஒருத்தன போய் பார்த்தோமே ஆஸ்பத்திரில..." என கேட்டான்.
"ஆமா"
"அவன அடிச்சவன பத்தி நீ என்ன நினைக்கற..." என்றான் பார்வையை கார்க்காரன் மீது வைத்தவாறே!
"ஒருத்தனா? நான் நாலஞ்சு பேருன்னுல்ல நினைச்சேன்..." என தன் எண்ணத்தைக் கூறியவன்,
"பேசாம அவனை கொன்றுக்கலாம்.." என ஆஸ்பத்திரியில் இருந்தவனின் நிலையை நினைத்தவனாய் கூறினான்.
"அது இவன்தான்...." என்றவன் மற்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கார்க்காரன் பக்கம் திரும்பினான்.
அவ்வளவுதான் கேட்டவன் முகம் பேயறைந்ததை விட மோசமாக மாறியது. கை கால்கள் நடுக்கமெடுத்தது.
இப்போது கார்க்காரனைப் பார்த்தவன், "ஆனா! இவன் அமைதியா இருக்கானே...இவனா அடிச்சான்?ஆமா... இவன் யாருண்ணே?" என பயத்திலும் தன் சந்தேகத்தைக் கேட்க,
"இவன் ஒரு லாயர்... ஆனா சரியான கிறுக்கன்... கோவம் வந்தா அரக்கன்..." என சுருக்கமாக கூறினான்.
இவர்களது அத்தனை மெல்லிய உரையாடலும் அந்த நிசப்தத்தில் அனைவரையும் அடைந்தது. அதில் பெண்ணவளுக்கு மேலும் சற்று தைரியம் வந்தது.
மீண்டும் அடியாட்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தவர்களாய் ஒருவன் பேசத்தொடங்கினான்.
"இங்க பாரு வீரா. இது உனக்கு சம்பந்தமில்லாத மேட்டரு. கம்முனு போயிடு. " என மிச்சமிருந்த தைரியத்தை திரட்டி கேட்க, வீரா என்று அழைக்கப்பட்டவனோ ஒன்றும் பேசாமல் அவளை நோக்கி ஓரடி வைத்து அவளுடன் இணைந்து நின்றான்.
அவன் உடல்மொழி புரிய, "வேண்டாம் வீரா... நீ ஒதுங்கிடு. தலைவர் பையன கொன்னுருக்கா இவ. அதனால போட்டுட்டுதான் போவோம்...ஒருவேள இன்னைக்கு இல்லனாலும் இது கண்டிப்பா நடக்கும்" என உரும,
இப்போதும் அலட்சியத்தை கண்களில் தேக்கி, வீரா அவள் கரத்தைப் பிடித்தான். அதுவே கூறியது என்னைத் தாண்டி இவளிடம் வாவென்று.
இந்த சூழ்நிலை! வீராவின் மனக்கண்ணில் அவன் தாயின் இதேபோன்ற அன்றைய நிலையை காட்டியது.
அன்று சிறுவனான அவனால் தன் தாய்க்கு உதவ முடியவில்லை.
அதன் பின்னான அவன் தாயின் நிலை! அவளின் வார்த்தைகள் !
அர்ஜுனனுக்கு கிருஷ்ண உபதேசம் போல அவனுக்கு அவன் தாயின் வார்த்தைகள்.
அவன் தாய்க்கு நேர்ந்த அவலம் அப்படி! அதனால் அவன் கொண்ட கோலம் இப்படி!
அன்றைக்கு நடந்ததற்கு இன்று இதில் பதில் கொடுக்க நினைப்பவனாய், தீக்கங்குகளாக ஜொலித்த அவன் கண்கள் முன்னிருந்தவர்களை எடை போட்டது.
"வீரா வேண்டாம் கடைசியா சொல்றேன் விலகிடு..." என கூட்டத்தின் தலைவனாகப்பட்டவன் மீண்டும் கூற,
அதில் பிடித்திருந்த அவள் கையை இன்னும் வலுவாக பிடித்தவன் அப்படியே திரும்பி தன் காரின் இருக்கைக்கு அடியில் இருந்து வாள் போன்ற நீண்ட கத்தியை எடுத்திருந்தான்.
அவன் தயாராகி விட்டான். அவன் தாக்குவதற்கு முன் தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்கள் இவர்களை நோக்கி ஆவேசமாய் முன்னேற, அத்தனை நேரத்தில் இப்பொழுதுதான் இவளைத் திரும்பி பார்த்தவன் அதில் அச்சத்திலும் சிறிது நம்பிக்கையை தேக்கி அவனைப் பார்த்து நின்றிருந்த அவளது தோற்றத்தில் அன்று அபலையாய் நின்ற தன் தாயின் முக சாயலைக் கண்டு என்றோ நடந்ததற்கு இன்று பலிதீர்ப்பவனாய் கண்களை கூர்மையாக்கி திரும்பி அவர்களைப் பார்த்தவாறே முன்னேறினான்.
வாள் அவன் கையில் பம்பரமாய் சுழல, ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான்.
உயிரை பாதிக்காத அதே சமயம் உடலை முடக்கிப்போடும் அளவு லாவகமாக இருந்தது அவன் வாள்வீச்சு.
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா...
வீரா வீரா கண்கள் ஆள்தக்கும் குருவாளா....
இதை சற்று தூரத்தில் நின்றிருந்த காரில் அமர்ந்திருந்தவனின் கண்கள் அழியாத குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.