காதல் சொல்ல வந்தேன்
கதையை படிக்கும் போது காதெலெனும் தீவில் நுழைந்த பிரமை ஏற்படுகிறது. திகட்ட திகட்ட காதலுடன் நம்மை பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.
பிஞ்சில் மலர்ந்த காதல், உணர்வுபூர்வமாய் உள்ளார்ந்த காதல், சிரிப்புடன் கூடிய அடாவடிக் காதல் என மூன்று காதல் ஜோடிகளை நம் கண்முன்னே நடமாட வைத்து விட்டார்.
இயற்கையை, மழையை ரசிக்க வைத்து, நமக்கும் மழை மேல் காதல் வந்து விடுகிறது. நளினமான, எளிமையான தமிழ்நடை கதை முழுவதிலும் நம்மை ஈர்த்து, கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.
காதல் கண்ணியத்துடன் கதை முழுவதும் நடமாட வைக்கிறார் ஆசிரியர்.
நாகு பாட்டி, கருத்தபாண்டி கதாபத்திரங்கள் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
மொத்தத்தில் காதலர்களின் அன்பையும், உறவுகளின் அருமையையும் சிரிப்போடு சொல்லி, நம்மை கதைக்குள்ளேயே இழுத்து வைத்து விடுகிறார்.
மேலும் பல நாவல்களை படைத்து, நீண்ட எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஷா...