மழையில் நனையும் உயிரே!
ஹாய் நட்பூஸ்,
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். இந்நாளில் “மழையில் நனையும் உயிரே!” என்ற அடுத்த கதையின் சிறிய அறிமுகத்துடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
“மழை” என்றவுடன் டக்கென்று நம் நினைவிற்கு வருவது பள்ளி மற்றும் கல்லூரி காலம் தான். ஏதோவொரு விதத்தில் மழையில் நனைந்த அனுபவம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சிலருக்கு ஏனோ மழையை வேடிக்கைப் பார்க்க பிடிக்கும்.
தன் துயரை மறக்க நினைத்து
மழையில் நனைந்திட..
அவளுக்கு ஆறுதலாய் இருக்க
அடம்பிடிக்கிறதே..
அவனின் இதயம்..
என் மற்ற கதைகளுக்கு தந்த அதே ஆதரவை இந்த கதைக்கும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ