இது சில நாள்களுக்கு முன் எழுதியது. காலையில் கடைத்தெருவில் சில புலம்பெயர்த் தொழிலாளர் மூட்டைமுடிச்சுகளுடன் கூட்டமாய் நடந்து செல்வதைக் கண்டேன். இரவு மழை பெய்கிறது என்று என் மனைவி முற்றத்திலிருந்து அழைத்த போது ஏனோ என்னால் வழக்கம் போலச் சென்று அம்மழையை இரசிக்க இயலவில்லை... காலையில் நான் கண்ட அப்புலம்பெயர்த் தொழிலாளர்கள் கண்முன் வந்தனர்... ’ஏற்கனவே எந்த வண்டியும் இல்லாமல், சரியான உணவோ பாதுகாப்போ இல்லாமல் அவர்கள் தம் தாயூரை நோக்கிய ஒரு நெடிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள், இதில் இந்த மழை வேறா? அவர்கள் எங்கே ஒதுங்குவார்கள்?’ என்ற கவலை என் மனத்தை அரித்தது... அதன் உணர்ச்சி வெளிப்பாடாகப் பிறந்ததே இக்கவிதை!
-------------------
கொட்டும் மழையே கேளாய்
.....கூரை உண்டிங் கெனக்குக்,
கொட்டும் உன்னைக் கண்டு
.....கொண்டா டிடுவேன் நானும்!
பட்ட நோயால் தாயூர்
.....பார்த்துச் சாலை தன்னில்
எட்டி நடக்கும் ஏழை
.....என்ன செய்வார் பாவம்?
பொழியும் மழையே கேளாய்
.....புகவோர் வீடுண் டெனக்குப்,
பொழியும் உன்னைப் பார்த்துப்
.....போற்றிக் களிப்பேன் நானும்!
மொழிமா றிவந்திங் குழைத்தோர்
.....மூட்டை சுமந்து தாயூர்
வழிபார்த் தேகின் றாரே
.....மழைக்கெங் கொதுங்கி நிற்பர்?
தூவும் மழையே கேளாய்
.....தொழிலுண் டைவுண் டெனக்குத்,
தூவும் உன்னை நோக்கித்
.....துள்ளிக் குதிப்பேன் நானும்!
மேவி இருந்த வேலை
.....மேற்கொண் டில்லா தாகி
ஆவித் தாயூர் செல்லும்
.....அவரை எண்ணி நிற்றி!
[நிற்றி - நின்றுவிடு; முன்னிலை ஏவல்!]
-------------------
கொட்டும் மழையே கேளாய்
.....கூரை உண்டிங் கெனக்குக்,
கொட்டும் உன்னைக் கண்டு
.....கொண்டா டிடுவேன் நானும்!
பட்ட நோயால் தாயூர்
.....பார்த்துச் சாலை தன்னில்
எட்டி நடக்கும் ஏழை
.....என்ன செய்வார் பாவம்?
பொழியும் மழையே கேளாய்
.....புகவோர் வீடுண் டெனக்குப்,
பொழியும் உன்னைப் பார்த்துப்
.....போற்றிக் களிப்பேன் நானும்!
மொழிமா றிவந்திங் குழைத்தோர்
.....மூட்டை சுமந்து தாயூர்
வழிபார்த் தேகின் றாரே
.....மழைக்கெங் கொதுங்கி நிற்பர்?
தூவும் மழையே கேளாய்
.....தொழிலுண் டைவுண் டெனக்குத்,
தூவும் உன்னை நோக்கித்
.....துள்ளிக் குதிப்பேன் நானும்!
மேவி இருந்த வேலை
.....மேற்கொண் டில்லா தாகி
ஆவித் தாயூர் செல்லும்
.....அவரை எண்ணி நிற்றி!
[நிற்றி - நின்றுவிடு; முன்னிலை ஏவல்!]