கார் முகில் கூட்டங்கள்
ஒன்றுகூடிவிட்டன...
முட்டிக்கொண்ட மேகங்கள்
வலிக்க முணங்கும்
முணக்கங்கள்
முழக்கங்களாக...
உரசிச்சென்ற மேகத்தின்
உரசலின் வேகம் இங்கே மின்னலாய் கொஞ்சம் மின்னி மறைகின்றன...
மழைக்குருவிகள்
வட்டமாய் சுற்றி பாடித்திரிய...
தென்றல் காற்று
கொஞ்சம் வேகமாய்
குளிர் போர்த்தி
அசையா மரங்களை
கொஞ்சம் அசைக்க...
இசையாய் இசைந்து
கொடுக்கின்றன்...
நிலம் விழும்
முதல் துளிகள்
பாரமாய் வந்து பட்டுத்தெறிக்க...
எழும் மண்வாசனை
எனை மழை ரசிக்க
அழைப்பு விடுத்தன...
மழை ரசிக்க
வேண்டும்...
ரசித்திட
ரசனைக்கொண்ட
ரசிகன் வேண்டும்...
அமர்ந்திட அவன்
மடிவேண்டும்...
மாரோடு சாய
துளிகள் அங்கே
தூவலாகிட
வேண்டும்...
காதோடு நின்
கவி வேண்டும்...
மழையங்கே
அணை உடைத்து
விழ வேண்டும்...
இசைகளாய்
ராகங்கள்
தாளங்கள்
இணைந்திட...
எதை ரசிக்க
வந்தாள்
என்பதையே
மறக்க வேண்டும்...
அவன் கவிக்குள்
இவள் காவியமாக...
வேண்டியதெல்லாம்
நீயே என்றும் வேண்டும்...
//மனதோடு இம்சிக்கும்
இம்சனை வேண்டி...
மழையோடு கொஞ்சம் பேசிக்கொண்டாள்...//
இமையி...
ஒன்றுகூடிவிட்டன...
முட்டிக்கொண்ட மேகங்கள்
வலிக்க முணங்கும்
முணக்கங்கள்
முழக்கங்களாக...
உரசிச்சென்ற மேகத்தின்
உரசலின் வேகம் இங்கே மின்னலாய் கொஞ்சம் மின்னி மறைகின்றன...
மழைக்குருவிகள்
வட்டமாய் சுற்றி பாடித்திரிய...
தென்றல் காற்று
கொஞ்சம் வேகமாய்
குளிர் போர்த்தி
அசையா மரங்களை
கொஞ்சம் அசைக்க...
இசையாய் இசைந்து
கொடுக்கின்றன்...
நிலம் விழும்
முதல் துளிகள்
பாரமாய் வந்து பட்டுத்தெறிக்க...
எழும் மண்வாசனை
எனை மழை ரசிக்க
அழைப்பு விடுத்தன...
மழை ரசிக்க
வேண்டும்...
ரசித்திட
ரசனைக்கொண்ட
ரசிகன் வேண்டும்...
அமர்ந்திட அவன்
மடிவேண்டும்...
மாரோடு சாய
துளிகள் அங்கே
தூவலாகிட
வேண்டும்...
காதோடு நின்
கவி வேண்டும்...
மழையங்கே
அணை உடைத்து
விழ வேண்டும்...
இசைகளாய்
ராகங்கள்
தாளங்கள்
இணைந்திட...
எதை ரசிக்க
வந்தாள்
என்பதையே
மறக்க வேண்டும்...
அவன் கவிக்குள்
இவள் காவியமாக...
வேண்டியதெல்லாம்
நீயே என்றும் வேண்டும்...
//மனதோடு இம்சிக்கும்
இம்சனை வேண்டி...
மழையோடு கொஞ்சம் பேசிக்கொண்டாள்...//
இமையி...