• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மாருதி கவசம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்
அனைவர்க் அருள அவனியில் வந்தான்
அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்
அனுமனை போற்றி அவனியில் வாழ்த்த

வஞ்சனை நீக்கும் அஞ்சனை செல்வன்
கதாயுதனை காற்றின் மைந்தனை இன்சொல்
அதேகொண்டு அவனை அனைத்தும் காக்க
சதா சபிடேகம் சாற்றுவர் உவந்து

காக்க காக்க அனுமன் காக்க
நோக்க நோக்க நுணுகி நோக்க
தீர்க்க தீர்க்க தீவினை எல்லாம்
சேர்க்க சேர்க்க செம்பொருள் அனைத்தும்

ஆர்க்கும் பகைவர் அலறிஓடிட
வேர்க்குள் பகையாய் விழைந்தவர்அழிய
காக்க காக்க கண்ணுதல் காக்க
பார்க்குள் அவன்போல் இறைவன் இல்லை

ஓம்ரீம்ஸ்ரீஜெய ராம் எனும் அனுமன்
க்ரீம்க்ளீம் ஸ்ரீராம் பக்த அனுமன்
ஹம்க்ரீம் என்றே கொடியில் ஆர்க்கும்
ஸ்ரீஜெய ராம பக்த அனுமன்

காக்க காக்க கவசம் இதனை
போக்க போக்க பொய்யை தீய்மையை
தீய்க்க தீய்க்க தீவினை எல்லாம்
சேயாய் பிறந்து செய்வினை அறிந்து

சேவை செய்ய வாயு உகந்தான்
ஆவி அனைய அஞ்சனை மாதும்
அதனை உகந்தாள் அவனி உதித்தான்
மாருதி என்போன் மாருதம் அனையன்

பாரதில் என்றும் நிலவும் சீரோன்
பாரதம் போற்றும் பண்பு டையாளன்
காரணம் அவனே காருண்யம் அவனே
நாராயணன் ராமன் நடவெனச் சொன்னான்

ஆதவன் மகிழ்ந்து கல்வியைத் தரவும்
பூதவம் செய்ததால் பூமியில் வாழ்ந்தும்
மாதவம் இயற்று சிரஞ்சீவி அவனே
ஆதவன் குலத்தின் ஆணி அவனே

ராமனும் கண்ணனும் வாழ்ந்த நற்பூமியில்
ராமனைத் தன்னுடை நெஞ்சினில் வைத்தான்
ராகவன் தூதன் ஆதவன் குலத்தைக்
காத்து நின்றவன் காக்க என்னை

காக்க காக்க அனுமன் காக்க
காக்க காக்க கால்கள் இரண்டை
காக்க காக்க கணுக்கால் முழந்தாள்
காக்க காக்க கருணையில் காக்க

தீக்குள் புகையாய் திகழும் பொய்மை
போக்க போக்க புன்மையைப் போக்க
குருதி அதனில் ஒருரணம் இன்றி
மாருதி காக்க மாருதம் போல

இறுதி இல்லா இறைவன் காக்க
உறுதி அளிக்கும் உயர்வோன் காக்க
அஞ்சனை செல்வன் அடியினை காக்க
வஞ்சனை ஏதும் வாட்டா வண்ணம்
ஆஞ்ச நேயனே அடிவயிறு காக்க
துஞ்சம் போதும் துயருறா வண்ணம்
காக்க அனுமன் கண்ணினை காக்க
போக்க எந்தப் பொல்லா வினையும்

நோக்க நோக்க உண்மையை உறுதியை
தீங்குள் இலங்கை செற்றான் காக்க
போக்கும் வரத்தும் கபீந்திரன் காக்க
நோக்க காக்க நுணுகி நோக்க

பிட்டம் அதனை அனுமன் காக்க
வட்டக் குதத்தை வாலினால் காக்க
அட்டமச் சனியால் அடையும் துன்பம்
அனைத்தும் நீக்கி அனுமன் காக்க

சிற்றிடை அதனை அஞ்சனை செல்வன்
சிறப்புடன் காக்க சேர்க்கப் பெருமை
நற்றவ மிக்கோர் நவையறு நல்லோர்
நாணங் கயிற்றை அனுமன் காக்க

நற்குறி தன்னை காற்றின் செல்வன்
காக்க காக்க காக்கவந் துவந்தே
மார்பின் மதாணி மதகரி கேள்வன்
மாருதி காக்க மதிக்க வந்துவந்தே

ஆர்முன் பின்னென் றதுஒரு கேள்வி
ஆகா வண்ணம் அனுமன் காக்க
சீர்வனம் உறும்இறை செல்வன் காக்க
சீர்த்திகள் அருள்க செந்திரு மாலென

கூர்நக முடைய குரங்கினத் தலைவன்
காக்க காக்க கதிர்முடியாலே
ஆர்க்க ஆர்க்க அனைத்துயர் போர்க்களம்
வேர்க்க வேர்க்க சூர்ப்பகை வெருள

தீர்க்க தீர்க்க தினகரன் மாணி
தீராக் கொடுமை எல்லாம் தீர்க்க
ஈரல் இரைப்பை இதனைக் காக்க
ஆவலைத் தூண்டும் அரியவன் நீயே

ஆமரி அவனின் ஒர் துணை நீதான்
போயெவர்க் கூறினும் போற்றுதல் அறியார்
நீயறி இதனை நினைவாய்க்கொண்டே
நித்தம் நேர்ந்திடில் நிரம்ப சந்தோஷமே.

மார்பைக் காக்க மாருதி மகிழ்ந்தே
மற்றுள உறுப்பை மகிமையன் காக்க
சார்புள உறுப்பை சற்குணன் காக்க
சற்று மேலான கழுத்தை அனுமன்

ஆர்வமுடனே அணைத்தொனைக் காக்க
அருவிழி இரண்டு சூர்ப்பகை காக்க
அனைத்துப் பெருமை எனக்கு உறினும்
தருவெனும் அனுமன் என் சிரம் காக்க

நாசியை வாசியை நல்லவன் காக்க
பெருமைகொள் அனுமன் பிடரியைக் காக்க
பேசிடும் நாவைப் பெரியோன் காக்க

அருவிழி தன்னில் அனுமன் காக்க
அரஹர சிவசிவ ஸ்ரீஜெய ராமமென
அனைவரும் துதிக்கும் அனுமனே காக்க
காக்க காக்க கவலைகள் நீக்க

ஐயும் கிலியும் சௌவும் நீக்கி
அனைத்தும் அழிக்கும் அரியவன் காக்க
பொய்யும் களவும் போதாறு கென்றே
புரையா அன்பு மறைமுதல் காக்க

எய்யும் கணைபோல் இறைவர்க் காமோர்
இமையே போலும் தூதன் காக்க
செய்யும் செயலில் செம்மை வல்லான்
செம்பொருள் காக்க சிறந்திட காக்க
நவகோள் தோஷம் நீங்க

சனியின் தந்தை உன்னகுரு நாதன்
சற்குணன் பருதி அதனால் தொல்லை
இனியெனக் கில்லை என்றும் காக்க
இமையாத் தேவர் வியப்பினில் ஆழ

கனியெனும் எம்மிறை கண்ணுதற் பெருமான்
உனைவடித் திட்டனர் உத்தமப் பொருளாய்
பனிமிகும் மார்கழி மூலம் கேது
பார்புகழ் வலியவன் காலில் தோன்றினை

இனியன நல்குவை எத்தோஷ மாயினும்!
இன்குரு வீட்டினில் பிறந்தவ னன்றோ!
இராகு செவ்வாயும் உன்னருள் இருப்பின்
இராவுமத் துன்பம் இதுதான் உண்மை

புராதனன் புனிதன் இராமன் போற்றும்
புண்ணிய மூர்த்தி கண்ணியன் அனுமன்
விராதனை வென்றோன் வேண்டிய நல்கும்
வினயமே ஆஞ்ச நேயன் என்றறிநீ.

குராமணம் கொண்ட கூந்தற் கோவியர்
திரேதாயுகத்தில் இவைனைத் தேர்ந்தான்
தேர்ந்தவன் தன்னை சேர்ந்தனன் அதனால்
தீர்த்தனன் பெரும்பகை செழும்புகழ் கொண்டான்

நேர்ந்தனன் மனத்தில் நினைவில் கனவில்
ஓர்ந்தனன் அவனை அவனே அனுமன்
சூரிய சுக்கிர புதபக வானும்

ஆரியன் உன்சொல் அறியாரோகாண்
வேரியங் கமலைச் செல்வி ஸ்ரீதேவி
வேட்டனளே உனைச் சிரஞ்சீவி என்றே
வருக வருக அனுமன் வருக

வருக வருக அனுமன் வருக
வருக வருக அஞ்சனை சிறுவன்
கெருவம் தீர்க்க வருக அனுமன்
அருவரு அதுவாய் அனுமன் வருக
ராமசாமியின் தூதன் வருக
நாமம் ஆயிரம் சாற்றுவோன் வருக
காமம் நீக்கிய கடவுள் வருக
எமப்புணையாம் எம்மிறை வருக
அருளுரு வாகிய ஐயா வரக
தெருளினை மாற்றும் தேவா வருக
உருகவே வைக்கும் ஒருவர் வருக
மருளற வைக்கும் மாருதி வருக
விந்தைக் கிறையாம் வித்தே வருக
முந்தித் தவம்செய் மூதறி முதல்வா
சிந்தித்து இன்னே சீக்கிரம் வருக
வந்தித்தோம் உனை வருகவென்று உவந்தே.

முந்துக முந்துக முந்துக
முந்துக முந்துக முதல்வன் முந்துக
செந்தணல் படவழ கெழுதிய ஓவியம்
முந்துக முந்துக முறையுடன் முந்துக
இந்தனம் அதநில் இலங்கையை எரித்த
அந்தண முந்துக அறவோன் முந்துக
நந்தியின் நாதனும் நாரண தேவனும்
அந்தியும் பகலும் சிந்தித் திருக்கும்
சிந்தையன் முந்துக சீரியன் முந்துக
சீமான் அனுமன் செம்பொருள் முந்துக

வழிபடும் முறை

சிலையோடு சித்திரம் கதையொடு ஆரல்
நிலைவிளக் கதனொடு நேரிய குடும்பம்
வலையென உன்றனை விரித்திடும் மந்திரம்
நிலைபெறக் கூறி தகுவன சாத்தி
வழிபடு போதில் வருவாய் அதனில்
இழிவுற இலங்கை எரித்தவப் போதில்
எழிலுறு வுடைய எம்மிறை நீயே
ஒழித்தனை அன்றோ ஒண்ணை அவுணர்
அந்தப் போதில் ஆர்த்தநல் நெஞ்சம்
இந்தப் போதில் இங்குற வேண்டும்
எந்தப் போதில் எதுவரு மேனும்
நிந்தனை இன்றிநிகழ்ந்திட வேண்டும்
கந்தம் துளசி களப கஸ்தூரி
சொந்தம் சாந்தம் சுந்தரன் தனக்கே
தந்திடு வெண்ணை தகுவடைமாலை
நொந்திடா வண்ணம் வெற்றிலை மாலை
பன்னீர் ஆட்டுக பங்கயன் தனக்கே
நன்னீர் ஆட்டுக நாயகன் தனக்கே
உண்ணீர் என்றே ஊட்டுக பல்கனி
எண்ணீர் இவனே எம்மிறை என்பீர்
மாருதி உண்டேல் சோருதல் இல்லை
ஆறுதல் அவனே அவனே இறைவன்
காரியம் காரணம் ஆனவன் அவனே
கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே
வேரியங்கமலைச் செல்வியம் போற்றும்
மாருதி தன்னை மனதில் இறுத்துக.

பயன்

வஞ்சனை அகலும் வயிரம் வாய்க்கும்
துஞ்சிடும் போதும் துன்பம் வராது காண்
அஞ்சுவர் பகைவர் அடலே றணையான்
நஞ்சுண்டாலும் நம்முயிர் காப்பான்
மனையின் வஞ்சகம் நீக்குவன், மாற்றுவன்
புணைபோல் பொய்யா கூட்டைக் களவை
தினமும் உன் முன்னரே தெரிகுவன் மாருதி
இனமுடன் வாழ்ந்திடினியன் நல்குவன்
கோளுறு பாபம் தீர்க்கும் அனுமன்
பாழ்பிற விதனையே நீக்கும் அனுமன்
கேளெனவந்து உதவிடும் அனுமன்
வாழ்வுறச் செய்யும் வடிவுடை இறைவன்
நாற்பதோ டைந்து நாளே அவனை
நோற்பவர் பற்பல பெறுவர் இதனை
நூற்பயன் என்ன நுவலும் துளசி
நாற்பயன் பெற்றிட நல்குவன் அனுமன்
அனுமன் எனுமோர் அறமே கவசம்
அனுமன் எனுமோர் அறிவே கவசம்
அனுமன் எனுமோர் அணுநேர்த் தியனே
தினமென் கவசம் திவ்வியம் அருள்வோன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top