- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
மார்க்கண்டேய புராணம். பதினெண் புராண வரிசையில் ஏழாவதாக உள்ளது. அது 9,000 பாடல் களைக் கொண்டது என்று சொல்லப்பட்டிருப்பினும், இன்று கிடைப்பது 6,900 பாடல்களே. மிகப் பழைய முதலாவதாக வைத்து எண்ணாமல், கிருத்திகையை ஒன்று என்று வைத்து எண்ணுகின்ற பழங்காலத்தைச் சேர்ந்தது. பல முக்கியமான பகுதிகளைக் கொண்டது இப்புராணம். இன்று பிரபலமாகச் செய்யப்படுகின்ற சண்டி ஹோமத்திற்கு அடிப்படையாக உள்ள துர்க்கா சப்தசதி என்ற பெயருள்ள துர்க்கையைப் போற்றும் 700 பாடல்கள் 81ஆம் அதிகாரத்தில் இருந்து 93ஆம் அதிகாரம் வரை உள்ளன. துர்க்கா சப்தசதி மிகவும் சக்தி வாய்ந்த ஒர் அறிவுரையைத் தருகின்றது. இந்த மாபெரும் சக்தியைப் பணிவு, அன்பு, வணக்கம் இவற்றோடு கூடிய மனத்துடன் வழிபட்டால், எத்தகைய துன்பத்தையும் எதிர்ப்பையும் வெல்லும் சக்தியைத் தருகின்றது. அஞ்ஞானம், ஆணவம் முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள். கருணையே வடிவான அந்த மாபெரும் சக்தி நல்லோரைக் காக்கத் தயாராக இருக்கின்றது. 'யாதேவி! சர்வபூதேவி. என்று தொடங்கும் பாடலில், "எல்லா மனிதருடைய இதயக் கமலங்களில் தங்கி இருப்பவளான அந்த மகாசக்தியை நான் வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்” என்ற ஒரு நம்பிக்கையோடு கூடிய பெரும் சக்தியை நமக்கு அளிக்கின்றது. சப்தசதி.
மனிதனிடத்தில் பேராற்றல் உள்ளே மறைந்து நிற்கின்றது. உலக நன்மைக்காக ஒருவன் அதனைப் பயன்படுத்த விரும்பினால் அது வெளிவந்து தொழிற்படும். ஒருவேளை அந்த முயற்சி பயன் தரவில்லையானால், பெண்சக்தி அதனை வெளிப்படுத்தி அந்தப் பயனைப் பெறுமாறு செய்கிறது. இந்தச் செய்தியை ஒர் உருவகமாகத் தருவதுதான் துர்க்கா சப்தசதி. ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், மிக முக்கியமான நேரத்தில் ஆண் சக்தி தொழிற்பட முடியாமல் திகைக்கும் பொழுது, பெண்சக்தி போரில்கூட வெளிப்பட்டு ஆண் சக்திக்கு உதவி புரியும் என்ற மாபெரும் தத்துவத்தின் உருவகக் கதையே துர்க்கா சப்தசதி ஆகும்.
துர்க்கையைப் பற்றி உள்ளது என்பதால் சாக்தர்கள் மட்டும் இதனைப் பாராயணம் செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது. சைவர்கள், வைணவர்கள்கூட துர்க்கா சப்தசதியைப் பாராயணமாகச் செய்வது, ஹோமமாகச் செய்வது என்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். தசரா பண்டிகைக்கு முன்னர் 9 நாட்கள் துர்க்கையை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்புராணம் 137 அதிகாரங்களை உடையது.
ஜெய்மினியும் மார்க்கண்டேயனும்
மிகப் பெரிய முனிவராகிய ஜெய்மினி ஒருமுறை மார்க்கண்டேயரைப் பார்க்க வந்தார். வந்தவர், “முனிவரே! எனக்கு அடிப்படையில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விடை கூறக் கூடியவர் தாங்கள் ஒருவரே. விஷ்ணு எங்கும் நிறைந்தவர். வடிவமும் உருவமும் அற்றவர். அப்படி இருக்க, அவர் ஏன் பூலோகத்தில் மனிதனாக கிருஷ்ணர் என்ற பெயருடன் பிறக்க வேண்டும்? பாண்டவர்கள் ஐவரையும் திரெளபதி ஏன் மணக்க வேண்டும்? அவருடைய பிள்ளைகளாகிய இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒரே நேரத்தில் ஏன் கொல்லப்படவேண்டும்? இவைகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விடையாக மார்க்கண்டேயர் கூறியதாவது: "முனிவரே! பிரார்த்தனை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. உம்முடைய கேள்விகளுக்கு விடை அளிக்க எனக்கு அவகாசம் கிடையாது. இவ்வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்கள் யார் என்று மட்டும் கூறுகிறேன். அவர்களிடம் சென்று உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். விந்தியமலையில் நான்கு பறவைகள் வாழ்கின்றன. அவை பிங்கக்ஷா, விவோதா, சுபுத்ரா, சுமகா என்ற பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அவை துரோணரின் பிள்ளைகள். அங்கே செல்லலாம்." இப்படிக் கூறியவுடன், ஜெய்மினி இடை மறித்து, “முனிவரே! பறவைகள் வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு அறிந்துள்ளன என்கிறீர்கள். பறவைகள் எப்படி இவற்றை அறிய முடியும்? பறவைகள் எப்படிப் பேச முடியும்? அவற்றின் தந்தை என்று சொல்லப்படும் துரோணர் யார்?’ என்று கேட்டார். மார்க்கண்டேயர் கூறிய விடை வருமாறு
பறவைகள்
ஒருமுறை நாரதர் நந்தன கானகம் என்ற பூந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கே பல அப்ஸ்ரஸ்கள் நாட்டியம் ஆட இந்திரன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டவுடன் அவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். அப்பொழுது இந்திரன் “இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். யாருடைய நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். நாரதர், “நான் வேண்டுவது மிகச் சிறந்த அழகும், நாட்டியக் கலையில் வன்மையும் உடைய ஒரு அப்ஸரஸைத் தேடுகிறேன். உங்களில் யார் இரண்டிலும் சிறந்தவர்கள்?" என்று கேட்க, அவர்கள் அனைவரும் தாம் தாம் என்று வாதிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த நாரதர் அவர்களைப் பார்த்து, நல்லது, உங்களுக்குள் முடிவு செய்ய முடியாத பொழுது நான் சொல்லும் காரியத்தை யார் நிறைவேற்றுகிறீர்களோ, அவர்கள் தான் இரண்டிலும் சிறந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம்' என்றார். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாரதர் பேசலானார். "இமயமலையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கிறார். உங்களில் யார் சென்று அவருடைய தவத்தைக் கலைக்க முடியும்” என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் எல்லாரும் பின்வாங்கி விட்டனர். வட என்ற அப்ஸரஸ் மட்டும் துணிந்து முன்வந்து, “நீங்கள் சொன்ன காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொன்னாள். அனைவரும் ஒப்புக் கொள்ளவே வட இமயமலைக்குச் சென்று துர்வாசர் தவம் செய்யும் இடத்திற்கு நேரே செல்லாமல் சற்று எட்டி இருந்து கொண்டு குயில்போல் கூவ ஆரம்பித்தாள். அந்தக் குயிலோசையைக் கேட்ட துர்வாசர் அந்தக் குரலில் ஐயம் கொண்டு பார்க்க வந்தார். வட நிற்பதையும், குயில்போல் பாடுவதையும் கண்ட அவர், “என் தவத்தைக் கலைப்பதற்காகவே நீ வந்துள்ளாய் என்று தெரிகிறது. பறவைபோல் பாடியதால் நீ பறவையாகப் போவாய்! பதினாறு ஆண்டுகள் கழித்து, ஒரு வேடன் உன்னைக் கொல்வான். பிறகு தேவலோகம் திரும்பி வருவாய்!” என்று சாபமிட்டார்.
கருடனின் பரம்பரையில் தோன்றிய கன்கா, காந்தாரா என்ற இரு சகோதரப் பறவைகள் இருந்தன! முதலில் கன்கா என்ற பறவை இமயமலை நோக்கிப் பறந்து சென்றது. அங்கே குபேரனின் பணியாளன் ஆகிய ‘வித்யுத்’ என்ற அரக்கன் மதனிகா என்ற தன் மனைவியுடன் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கன்கா அங்கே சென்றதும் தங்கள் சல்லாபத்திற்கு இடையூறாக இருந்ததால், வித்யுத் அப்பறவையைக் கொன்று விட்டான். தன் சகோதரப் பறவை இறந்ததை அறிந்த காந்தாரா, வித்யுத் இருக்குமிடம் வந்து பழி வாங்கும் நோக்கத்துடன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்று விட்டது. உடனே அவன் மனைவியாகிய மதனிகா ராட்சசி ஆகையால், பறவை வடிவம் எடுத்துக் கொண்டு காந்தாராவை மணந்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் துர்வாசரால் சபிக்கப்பட்ட வட என்ற அப்ஸரஸ் தர்ஷி என்ற பெயருடன் பெண்ணாகப் பிறந்தது. இந்த தர்ஷி என்ற பெண்ணையே துரோணர் என்ற பிராமணர் மணந்து கொண்டார். ஒருமுறை குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் பொழுது தர்ஷி அங்கே சென்றது. எதிர்பாராமல் அர்ச்சுனன் அம்புபட்டு தர்ஷி இறக்க நேரிட்டது. அது இறப்பதற்குள் அதன் வயிற்றில் இருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகுதத்தன் என்ற அரசனுடைய சுப்ரதிகா என்ற யானை அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. யானையின் கழுத்தில் கட்டி இருந்த பெரிய மணி எதிர் பாராதவிதமாக ஒர் அம்பு பட்டதால் அறுந்து கீழே விழுகையில் இந்த நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக் கொண்டது.
பாரதப் போர் முடிந்து பல காலம் ஆன பிறகு, ஷமிகா என்ற முனிவர் அவ்விடத்தில் நடக்கையில் இந்தப் பெரிய மணிக்குள் பறவைகளின் சப்தத்தைக் கேட்டு மூடியிருந்த மணியை அகற்றினார். நான்கு குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துக்கொண்டு தம் ஆசிரமம் சென்று எவ்வித ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான இடத்தில் வைத்து இக் குஞ்சுகளை வளர்த்தார். அவை பெரிய பறவைகள் ஆனதும், காட்டில் சுதந்திரமான பறவைகளாய்த் திரிந்தன. இருந்தாலும் இரவானதும் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டன. அப்படித் தங்கி இருக்கும் பொழுது அங்கு விவாதிக்கப்படும் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை ஒரளவு புரிந்து கொண்டன. ஒருநாள் இந்தப் பறவைகள் நான்கும் ஷமிகா முனிவர் எதிரே சென்று மிக்க வணக்கத்துடன், “முனிவரே! நாங்கள் நால்வரும் இந்த உடம்புடன், உயிருடன் இருப்பது தங்கள் கருணையால்தான். அது மட்டுமல்ல; தாங்கள் எங்களுக்கு இங்கே இடம் தந்ததால்தான் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்” என்று கூறின.
பறவைகள் பேசுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போன ஷமிகா முனிவர், "உண்மையில் நீங்கள் பறவைகள் அல்ல. நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டவுடன் அப் பறவைகள் ஒரு கதையைச் சொல்ல
பறவைகளின் கதை
நீண்ட காலத்திற்கு முன்னர் சுக்ரிஷா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகளே இந்த நான்கு பறவைகளும் ஆகும். ஒருநாள் இந்திரன் வயதான, பெரிய பறவை உருவம் எடுத்து அங்கு வந்தான். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், மனித மாமிசம் கொடுத்தால் தனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் என்றும் அப்பறவை கூறியது. உடனே சுக்ரிஷா முனிவர் தம் பிள்ளைகளை அழைத்து அவர்களையே அப் பறவைக்கு உணவாகும்படிக் கூற, அந்த நால்வரும் இதை மறுத்து விட்டனர். இதனால் கடுங்கோபம் கொண்ட முனிவர், தன்னுடைய நான்கு மகன்களும் பறவை களாகப் பிறக்கும்படி சாபமிட்டு, தன் உடம்பையே பறவையாக வந்த இந்திரனுக்கு உணவாக அளிக்க விரும்பினார். இந்திரன், மன்னிப்புக் கேட்டான். சாபமிடப்பட்ட நான்கு மகன்களும் தங்கள் தந்தையை வணங்கி, தாங்கள் தங்கள் உடல் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளபடியால், தந்தை கூறியதை ஏற்க மறுத்தனர் என்றும், உண்மையான ஞானத்தைப் பெறும் பொழுது உடல் மீதுள்ள பற்று நீங்கும் என்றும் கருதி, அடுத்த பிறவியிலாவது எங்களுக்கு உண்மை ஞானம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முனிவரும் "அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நான்கு பிள்ளைகளும் இந்தப் பிறவியில் தர்ஷியின் வயிற்றில் பறவைகளாகப் பிறந்தோம். அந்த நால்வரும் நாங்களே என்று பறவைகள் சொல்ல, முனிவர், “விந்திய மலைக்குச் செல்லுங்கள்” என்று கட்டளை இட்டார்.
இந்த நீண்ட கதையை ஜெய்மினிக்குச் சொல்லிய மார்க்கண்டேயர், நீங்கள் சென்று அந்தப் பறவைகளைப் பாருங்கள் என்று கூறி விடை கொடுத்தார்.
ஜெய்மினியும் பறவைகளும்
ஜெய்மினி பறவைகளைப் பார்த்து, இரண்டு கேள்வி களைக் கேட்டார்: “பஞ்ச பாண்டவர் யார்? திரெளபதி ஏன் ஐவரையும் மணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பறவைகள் சொன்ன விடை கீழே தரப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் துவஷ்டா என்ற அசுரனின் மகன் திரிசரா என்பவன் தலைகீழாக நின்று கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய தவம் நிறைவேறினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என்பதை அறிந்த இந்திரன் மறைவாக நின்று தவத்தில் இருந்த திரிசராவைக் கொன்று விட்டான். திரிசரா பிராமணன் ஆகையினாலும், தவத்தில் இருந்தானாகையாலும் அவனைக் கொன்ற இந்திரனின் ஆற்றலில் ஒரு பகுதி தருமதேவதையிடம் சென்று விட்டது. திரிசரா கொல்லப்பட்டதை அறிந்த துவஷ்டா தன் தலையில் இருந்து ஒர் உரோமத்தை எடுத்து அக்னியில் போட, அதிலிருந்து சர்வ வல்லமை உள்ள விருத்ராசுரன் தோன்றினான். விருத்திரனைக் கண்டு அஞ்சிய இந்திரன், சப்த ரிஷிகளிடம் சென்று முறையிட்டு தனக்கும் விருத்திரனுக்கும் நட்புச்செய்து வைக்குமாறு வேண்டிக் கொண்டான். இருவரும் நண்பர்கள் ஆயினர். மனத்துக்குள் வஞ்சகத்தை நிரப்பி இருந்த இந்திரன், நம்பி இருந்த விருத்திராசுரனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இந்தத் தவறான கொலையின் காரணமாக இந்திரன் தன் ஆற்றலின் ஒரு பகுதி வாயுவிடம் சென்று விட்டது.
இந்திரன் ஆற்றலின் மற்றொரு பகுதி நேரே அருச்சுனனுக்குச் சென்றது. கெளதமன் என்று நம்பிய முனிபத்தினி யாகிய அகலிகையை ஏமாற்றியதால், இந்திரனிடம் மிஞ்சி இருந்த ஆற்றல் முழுவதும் இரண்டு அஸ்வினிகளிடம் சென்று விட்டது.
இந்த நிலையில் பூமியில் அரக்கர்கள் மிகுதியாகத் தோன்றி விட்டமையால், பூமி தேவி சுமேரு மலைக்குச் சென்று தனது ஆற்றாமையை வெளியிட்டாள். தேவர்கள் அவளுக்கு பாரத்தைக் குறைப்பதாகக் கூறி தருமதேவதை இந்திரனிடம் பெற்ற ஆற்றலை யுதிஷ்டிரனாகவும், வாயு பெற்ற ஆற்றலை பீமனாகவும், இந்திரன் ஆற்றல் அருச்சுனனாகவும், அஸ்வினிகளின் ஆற்றல் நகுல, சகாதேவர்களாகவும் பிறக்குமாறு செய்தார்கள். இந்திரன் மனைவியாகிய சச்சி திரெளபதி யாகவும் பூமியில் பிறந்து ஐவரையும் மணந்து கொண்டாள். யுதிஷ்டிரன் முதல், சகாதேவன் வரை உள்ள ஐவரும் மனிதர்கள் என்ற முறையில் வெவ்வேறானவர்களாக இருப்பினும், இந்திரனுடைய ஆற்றலின் ஒவ்வொரு கூறாகவே இருந்தனர். இந்த ஐவரும் இந்திரன் ஆற்றல்களே. ஆதலால் சச்சி அல்லது திரெளபதி ஐவரையும் மணந்ததாகச் சொன்னாலும், உண்மையில் இந்திரன் ஒருவனையே மணந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரிச்சந்திரன் கதை
முன்னொரு காலத்தில் திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் இந்த நில உலகை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிச் சிறப்பால் பஞ்சம், நோய், பிணி முதலிய எதுவும் ன் நாட்டில் ட்டவில் வேட்டைக்கச் சென்ற அவன், தப்பி ஓடிய சில மான்களைத் துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் வந்து விட்டான். மானின் பின்னே ஒடிக்கொண்டிருந்த மன்னன் காதுகளில், “எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் அபயக் குரல் விழுந்தது. உடனே, மானின் பின் போவதை விட்டுவிட்டு அபயக் குரல் வந்த திசைப் பக்கம் சென்றான். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர் எதிரே சில பெண்கள் 'காப்பாற்றுங்கள் என்று ஒலமிடுவதையும் கண்டான். வில்லில் அம்பைப் பூட்டிய மன்னன் எதிரே இருப்பவர் ஒரு முனிவர் என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெண்கள் உண்மையில் பெண்களே அல்ல. வித்யாஞானத்தின் பல கூறுகளே ஆவர். வித்யா ஞானத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளவாறு அறிந்து கொண்டு அதன் மூலம் உண்மையான ஞானத்தை அடைய விரும்பினார் எதிரிலிருந்த முனிவர் விசுவாமித்திரர். அதனால்தான் வித்யாவின் பல பகுதிகள் வெளிப்பட்டு 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறை யிட்டன.
அரிச்சந்திரனைக் கண்டதும் அவர்கள் ஒலம் நின்றது. காரணம் கடுந்தவத்தில் இருந்த விசுவாமித்திரர் மிக்க கோபமாக அப்பெண்களைப் பார்த்தவுடன் அவர்கள் அஞ்சி மறைந்து விட்டனர். பெண்கள் மறைந்தவுடன் வெட்கிப்போன அரிச்சந்திரன் விசுவாமித்திரர் கால்களில் விழுந்து, "என்னை மன்னித்து அருளல் வேண்டும். இங்கு நடந்தது ஒன்றும் தெரியாது எனக்கு. பெண்களின் அபயக் குரலைக் கேட்டு அரசன் என்ற முறையில் அவர்களைக் காக்க முன்வந்தேன்” என்று கூறினான். விசுவாமித்திரர், 'உன்மேல் எனக்கு ஒன்றும் கோபமில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாகிய உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் விசுவாமித்திரர் மூன்று கேள்விகளைக் கேட்டார். "யாருக்கு தருமம் செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற வேண்டும்? யாருடன் போரிட வேண்டும்?”
இந்த வினாக்களுக்கு விடை கூறப் புகுந்த அரிச்சந்திரன், முதல் கேள்விக்கு பதிலாக, தவசிகட்கும், முனிவர்கட்கும், பிராமணர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அஞ்சினவர் களைக் காப்பாற்ற வேண்டும். பகைவர்களிடம் போரிட வேண்டும்” என்று கூறி முடித்தவுடன், விசுவாமித்திரர், "அரசனே! நான் பிராமணன் என்பது உனக்குத் தெரியு மல்லவா? உன்னிடம் தானம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறியவுடன் அரிச்சந்திரன் மிக்க மகிழ்ச்சியோடு "எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று கூறிவிட்டான். விசுவாமித்திரர், “நீ ஆளும் உலகம் முழுவதும் அதிலுள்ள பொருள்கள், ராஜ்ஜியத்தில் உள்ள தேர்கள், யானைகள், குதிரைகள், பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் எனக்கு வேண்டும். சுருங்கச் சொன்னால், நீ உன் மனைவி, உன் மகன் ஆகிய மூவர் தவிர உன் ராஜ்ஜியத்தில் உள்ள மக்கள் அனைவரும் என் உடைமை ஆகவேண்டும்” என்று கூறினார். அரிச்சந்திரன், "இப்பொழுதே தந்து விட்டேன்” என்று கூறினான். “என்னுடைய ராஜ்ஜிய எல்லைக்குள் நீ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இந்த எல்லைக்கப்பால் நீ உன் மனைவி, மகனுடன் சென்று விடுவாயாக!” என்றார் முனிவர். “முனிவர் உத்தரவுப்படியே இந்த நாட்டின் எல்லைக்கப்பால் செல்கிறேன்.” என்று புறப்பட்ட அரிச்சந்திரனைத் தடுத்து நிறுத்திய விசுவாமித்திரர், "நீ செய்த ராஜதுய யாகத்தில் எல்லா பிராமணர்களுக்கும் தட்சணை தந்தாய் அல்லவா? என்னுடைய பங்கை இப்பொழுது தரவேண்டும்” என்றார் முனிவர். அரிச்சந்திரன், “முனிவரே! என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துவிட்டேன். இப்பொழுது என்னைத் தவிர என்னுடையது என்று சொல்லக் கூடியது எதுவுமில்லை. நான் என்ன செய்ய முடியும்?” என்றான். அதைக் கேட்ட விசுவாமித்திரர், "நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தட்சிணையைத் தந்தே தீர வேண்டும்” என்றார். ஒரு விநாடி திகைத்து நின்றுவிட்ட அரிச்சந்திரன், “முனிவரே! ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் நிச்சயமாக வந்து உங்களுக்குரிய தட்சினையைத் தந்து விடுகிறேன்” என்றான். அவன் வாய்மொழியை ஏற்றுக் கொண்டு, “சென்று வா” என்று அனுப்பிவிட்டார் விசுவாமித்திரர்.
நாட்டின் எல்லையை விட்டுப் போய்க் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். அவன் மனைவி அரசியாகவே இருந்து பழகி விட்ட காரணத்தால், வேகமாக நடக்க முடியாமல் கொஞ்சம் மெல்லவே நடந்து சென்றாள். சினம் கொண்ட விசுவா மித்திரர் “சீக்கிரம் இவ்வெல்லையை விட்டுப் போ” என்று சொல்லிக் கொண்டே அரிச்சந்திரன் மனைவியாகிய ஷைவியாவை ஒரு தடி கொண்டு பலமுறை அடித்தான். அரிச்சந்திரன் இதுபற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், "இதோ போய் விடுகிறோம், கோபம் வேண்டாம் முனிவரே என்று கூறினான். ஆனால் மேலே இருந்து இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வதேவர்கள் ஐவரும் மன வருத்தம் தாங்காமல், 'விஸ்வாமித்திரர் செய்வது வெட்கக் கேடு, வெட்கக் கேடு என்று கூறிவிட்டனர். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும், விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு விஸ்வதேவர்கள் ஐவரையும் மானிடராகப் பிறக்கக் கடவது' என்று சாபமிட்டார். கலங்கிப் போன ஐவரும் வந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க முனிவர் மனமிரங்கி, "மானிடராகப் பிறந்தாலும் உங்கட்கு மனைவி, குழந்தைகள் என்ற பந்தமிராது. சாதாரண மனிதர்களை ஆட்டிப் படைக்கும் எந்தத் துன்பமும் உங்கள் ஐவரையும் பாதிக்காது” என்றார்.
சாபம் பெற்ற ஐந்து விஸ்வதேவர்களே, பாண்டவர்களின் புதல்வர்களாக- இளம் பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் திரெளபதிக்குப் பிறந்தனர்.
பறவையிடம் அரிச்சந்திரன் கதையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்று ஜெய்மினி முனிவர் கூறியவுடன், பறவைகள் சொல்ல ஆரம்பித்தன. "நாட்டின் எல்லைக்கு வந்த அரிச்சந்திரன் எங்கே போவது என்று தெரியாமல் தவித்தான். எங்கே சென்றாலும் அது விசுவாமித்திரருக்கு தானம் செய்த பகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் வாரணாசி அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஊர் எந்த அரசனுக்கும் சொந்த மில்லை. சிவனுக்குரிய ஊர். எனவே மனைவியையும் குழந்தை யையும் அழைத்துக் கொண்டு வாரணாசிக்குள் புக முற்பட்டான். விசுவாமித்திரர் தடுத்து நிறுத்தினார். “அரிச்சந்திரா! நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. ஒரு மாதம் தவணை
மார்க்கண்டேய புராணம். பதினெண் புராண வரிசையில் ஏழாவதாக உள்ளது. அது 9,000 பாடல் களைக் கொண்டது என்று சொல்லப்பட்டிருப்பினும், இன்று கிடைப்பது 6,900 பாடல்களே. மிகப் பழைய முதலாவதாக வைத்து எண்ணாமல், கிருத்திகையை ஒன்று என்று வைத்து எண்ணுகின்ற பழங்காலத்தைச் சேர்ந்தது. பல முக்கியமான பகுதிகளைக் கொண்டது இப்புராணம். இன்று பிரபலமாகச் செய்யப்படுகின்ற சண்டி ஹோமத்திற்கு அடிப்படையாக உள்ள துர்க்கா சப்தசதி என்ற பெயருள்ள துர்க்கையைப் போற்றும் 700 பாடல்கள் 81ஆம் அதிகாரத்தில் இருந்து 93ஆம் அதிகாரம் வரை உள்ளன. துர்க்கா சப்தசதி மிகவும் சக்தி வாய்ந்த ஒர் அறிவுரையைத் தருகின்றது. இந்த மாபெரும் சக்தியைப் பணிவு, அன்பு, வணக்கம் இவற்றோடு கூடிய மனத்துடன் வழிபட்டால், எத்தகைய துன்பத்தையும் எதிர்ப்பையும் வெல்லும் சக்தியைத் தருகின்றது. அஞ்ஞானம், ஆணவம் முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அழிக்கப்படுகிறார்கள். கருணையே வடிவான அந்த மாபெரும் சக்தி நல்லோரைக் காக்கத் தயாராக இருக்கின்றது. 'யாதேவி! சர்வபூதேவி. என்று தொடங்கும் பாடலில், "எல்லா மனிதருடைய இதயக் கமலங்களில் தங்கி இருப்பவளான அந்த மகாசக்தியை நான் வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்” என்ற ஒரு நம்பிக்கையோடு கூடிய பெரும் சக்தியை நமக்கு அளிக்கின்றது. சப்தசதி.
மனிதனிடத்தில் பேராற்றல் உள்ளே மறைந்து நிற்கின்றது. உலக நன்மைக்காக ஒருவன் அதனைப் பயன்படுத்த விரும்பினால் அது வெளிவந்து தொழிற்படும். ஒருவேளை அந்த முயற்சி பயன் தரவில்லையானால், பெண்சக்தி அதனை வெளிப்படுத்தி அந்தப் பயனைப் பெறுமாறு செய்கிறது. இந்தச் செய்தியை ஒர் உருவகமாகத் தருவதுதான் துர்க்கா சப்தசதி. ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், மிக முக்கியமான நேரத்தில் ஆண் சக்தி தொழிற்பட முடியாமல் திகைக்கும் பொழுது, பெண்சக்தி போரில்கூட வெளிப்பட்டு ஆண் சக்திக்கு உதவி புரியும் என்ற மாபெரும் தத்துவத்தின் உருவகக் கதையே துர்க்கா சப்தசதி ஆகும்.
துர்க்கையைப் பற்றி உள்ளது என்பதால் சாக்தர்கள் மட்டும் இதனைப் பாராயணம் செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது. சைவர்கள், வைணவர்கள்கூட துர்க்கா சப்தசதியைப் பாராயணமாகச் செய்வது, ஹோமமாகச் செய்வது என்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். தசரா பண்டிகைக்கு முன்னர் 9 நாட்கள் துர்க்கையை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்புராணம் 137 அதிகாரங்களை உடையது.
ஜெய்மினியும் மார்க்கண்டேயனும்
மிகப் பெரிய முனிவராகிய ஜெய்மினி ஒருமுறை மார்க்கண்டேயரைப் பார்க்க வந்தார். வந்தவர், “முனிவரே! எனக்கு அடிப்படையில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விடை கூறக் கூடியவர் தாங்கள் ஒருவரே. விஷ்ணு எங்கும் நிறைந்தவர். வடிவமும் உருவமும் அற்றவர். அப்படி இருக்க, அவர் ஏன் பூலோகத்தில் மனிதனாக கிருஷ்ணர் என்ற பெயருடன் பிறக்க வேண்டும்? பாண்டவர்கள் ஐவரையும் திரெளபதி ஏன் மணக்க வேண்டும்? அவருடைய பிள்ளைகளாகிய இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒரே நேரத்தில் ஏன் கொல்லப்படவேண்டும்? இவைகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விடையாக மார்க்கண்டேயர் கூறியதாவது: "முனிவரே! பிரார்த்தனை செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. உம்முடைய கேள்விகளுக்கு விடை அளிக்க எனக்கு அவகாசம் கிடையாது. இவ்வினாக்களுக்கு விடை கூறக் கூடியவர்கள் யார் என்று மட்டும் கூறுகிறேன். அவர்களிடம் சென்று உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். விந்தியமலையில் நான்கு பறவைகள் வாழ்கின்றன. அவை பிங்கக்ஷா, விவோதா, சுபுத்ரா, சுமகா என்ற பெயர்களால் அழைக்கப் படுகின்றன. அவை துரோணரின் பிள்ளைகள். அங்கே செல்லலாம்." இப்படிக் கூறியவுடன், ஜெய்மினி இடை மறித்து, “முனிவரே! பறவைகள் வேதம், சாஸ்திரம் இவற்றை நன்கு அறிந்துள்ளன என்கிறீர்கள். பறவைகள் எப்படி இவற்றை அறிய முடியும்? பறவைகள் எப்படிப் பேச முடியும்? அவற்றின் தந்தை என்று சொல்லப்படும் துரோணர் யார்?’ என்று கேட்டார். மார்க்கண்டேயர் கூறிய விடை வருமாறு
பறவைகள்
ஒருமுறை நாரதர் நந்தன கானகம் என்ற பூந்தோட்டத்திற்குச் சென்றார். அங்கே பல அப்ஸ்ரஸ்கள் நாட்டியம் ஆட இந்திரன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டவுடன் அவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். அப்பொழுது இந்திரன் “இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். யாருடைய நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். நாரதர், “நான் வேண்டுவது மிகச் சிறந்த அழகும், நாட்டியக் கலையில் வன்மையும் உடைய ஒரு அப்ஸரஸைத் தேடுகிறேன். உங்களில் யார் இரண்டிலும் சிறந்தவர்கள்?" என்று கேட்க, அவர்கள் அனைவரும் தாம் தாம் என்று வாதிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த நாரதர் அவர்களைப் பார்த்து, நல்லது, உங்களுக்குள் முடிவு செய்ய முடியாத பொழுது நான் சொல்லும் காரியத்தை யார் நிறைவேற்றுகிறீர்களோ, அவர்கள் தான் இரண்டிலும் சிறந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம்' என்றார். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாரதர் பேசலானார். "இமயமலையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கிறார். உங்களில் யார் சென்று அவருடைய தவத்தைக் கலைக்க முடியும்” என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் எல்லாரும் பின்வாங்கி விட்டனர். வட என்ற அப்ஸரஸ் மட்டும் துணிந்து முன்வந்து, “நீங்கள் சொன்ன காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொன்னாள். அனைவரும் ஒப்புக் கொள்ளவே வட இமயமலைக்குச் சென்று துர்வாசர் தவம் செய்யும் இடத்திற்கு நேரே செல்லாமல் சற்று எட்டி இருந்து கொண்டு குயில்போல் கூவ ஆரம்பித்தாள். அந்தக் குயிலோசையைக் கேட்ட துர்வாசர் அந்தக் குரலில் ஐயம் கொண்டு பார்க்க வந்தார். வட நிற்பதையும், குயில்போல் பாடுவதையும் கண்ட அவர், “என் தவத்தைக் கலைப்பதற்காகவே நீ வந்துள்ளாய் என்று தெரிகிறது. பறவைபோல் பாடியதால் நீ பறவையாகப் போவாய்! பதினாறு ஆண்டுகள் கழித்து, ஒரு வேடன் உன்னைக் கொல்வான். பிறகு தேவலோகம் திரும்பி வருவாய்!” என்று சாபமிட்டார்.
கருடனின் பரம்பரையில் தோன்றிய கன்கா, காந்தாரா என்ற இரு சகோதரப் பறவைகள் இருந்தன! முதலில் கன்கா என்ற பறவை இமயமலை நோக்கிப் பறந்து சென்றது. அங்கே குபேரனின் பணியாளன் ஆகிய ‘வித்யுத்’ என்ற அரக்கன் மதனிகா என்ற தன் மனைவியுடன் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கன்கா அங்கே சென்றதும் தங்கள் சல்லாபத்திற்கு இடையூறாக இருந்ததால், வித்யுத் அப்பறவையைக் கொன்று விட்டான். தன் சகோதரப் பறவை இறந்ததை அறிந்த காந்தாரா, வித்யுத் இருக்குமிடம் வந்து பழி வாங்கும் நோக்கத்துடன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்று விட்டது. உடனே அவன் மனைவியாகிய மதனிகா ராட்சசி ஆகையால், பறவை வடிவம் எடுத்துக் கொண்டு காந்தாராவை மணந்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் துர்வாசரால் சபிக்கப்பட்ட வட என்ற அப்ஸரஸ் தர்ஷி என்ற பெயருடன் பெண்ணாகப் பிறந்தது. இந்த தர்ஷி என்ற பெண்ணையே துரோணர் என்ற பிராமணர் மணந்து கொண்டார். ஒருமுறை குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் பொழுது தர்ஷி அங்கே சென்றது. எதிர்பாராமல் அர்ச்சுனன் அம்புபட்டு தர்ஷி இறக்க நேரிட்டது. அது இறப்பதற்குள் அதன் வயிற்றில் இருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகுதத்தன் என்ற அரசனுடைய சுப்ரதிகா என்ற யானை அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. யானையின் கழுத்தில் கட்டி இருந்த பெரிய மணி எதிர் பாராதவிதமாக ஒர் அம்பு பட்டதால் அறுந்து கீழே விழுகையில் இந்த நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக் கொண்டது.
பாரதப் போர் முடிந்து பல காலம் ஆன பிறகு, ஷமிகா என்ற முனிவர் அவ்விடத்தில் நடக்கையில் இந்தப் பெரிய மணிக்குள் பறவைகளின் சப்தத்தைக் கேட்டு மூடியிருந்த மணியை அகற்றினார். நான்கு குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அறிந்தார். அவற்றை எடுத்துக்கொண்டு தம் ஆசிரமம் சென்று எவ்வித ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான இடத்தில் வைத்து இக் குஞ்சுகளை வளர்த்தார். அவை பெரிய பறவைகள் ஆனதும், காட்டில் சுதந்திரமான பறவைகளாய்த் திரிந்தன. இருந்தாலும் இரவானதும் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டன. அப்படித் தங்கி இருக்கும் பொழுது அங்கு விவாதிக்கப்படும் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை ஒரளவு புரிந்து கொண்டன. ஒருநாள் இந்தப் பறவைகள் நான்கும் ஷமிகா முனிவர் எதிரே சென்று மிக்க வணக்கத்துடன், “முனிவரே! நாங்கள் நால்வரும் இந்த உடம்புடன், உயிருடன் இருப்பது தங்கள் கருணையால்தான். அது மட்டுமல்ல; தாங்கள் எங்களுக்கு இங்கே இடம் தந்ததால்தான் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்” என்று கூறின.
பறவைகள் பேசுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போன ஷமிகா முனிவர், "உண்மையில் நீங்கள் பறவைகள் அல்ல. நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டவுடன் அப் பறவைகள் ஒரு கதையைச் சொல்ல
பறவைகளின் கதை
நீண்ட காலத்திற்கு முன்னர் சுக்ரிஷா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகளே இந்த நான்கு பறவைகளும் ஆகும். ஒருநாள் இந்திரன் வயதான, பெரிய பறவை உருவம் எடுத்து அங்கு வந்தான். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், மனித மாமிசம் கொடுத்தால் தனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் என்றும் அப்பறவை கூறியது. உடனே சுக்ரிஷா முனிவர் தம் பிள்ளைகளை அழைத்து அவர்களையே அப் பறவைக்கு உணவாகும்படிக் கூற, அந்த நால்வரும் இதை மறுத்து விட்டனர். இதனால் கடுங்கோபம் கொண்ட முனிவர், தன்னுடைய நான்கு மகன்களும் பறவை களாகப் பிறக்கும்படி சாபமிட்டு, தன் உடம்பையே பறவையாக வந்த இந்திரனுக்கு உணவாக அளிக்க விரும்பினார். இந்திரன், மன்னிப்புக் கேட்டான். சாபமிடப்பட்ட நான்கு மகன்களும் தங்கள் தந்தையை வணங்கி, தாங்கள் தங்கள் உடல் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளபடியால், தந்தை கூறியதை ஏற்க மறுத்தனர் என்றும், உண்மையான ஞானத்தைப் பெறும் பொழுது உடல் மீதுள்ள பற்று நீங்கும் என்றும் கருதி, அடுத்த பிறவியிலாவது எங்களுக்கு உண்மை ஞானம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முனிவரும் "அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நான்கு பிள்ளைகளும் இந்தப் பிறவியில் தர்ஷியின் வயிற்றில் பறவைகளாகப் பிறந்தோம். அந்த நால்வரும் நாங்களே என்று பறவைகள் சொல்ல, முனிவர், “விந்திய மலைக்குச் செல்லுங்கள்” என்று கட்டளை இட்டார்.
இந்த நீண்ட கதையை ஜெய்மினிக்குச் சொல்லிய மார்க்கண்டேயர், நீங்கள் சென்று அந்தப் பறவைகளைப் பாருங்கள் என்று கூறி விடை கொடுத்தார்.
ஜெய்மினியும் பறவைகளும்
ஜெய்மினி பறவைகளைப் பார்த்து, இரண்டு கேள்வி களைக் கேட்டார்: “பஞ்ச பாண்டவர் யார்? திரெளபதி ஏன் ஐவரையும் மணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பறவைகள் சொன்ன விடை கீழே தரப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் துவஷ்டா என்ற அசுரனின் மகன் திரிசரா என்பவன் தலைகீழாக நின்று கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய தவம் நிறைவேறினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என்பதை அறிந்த இந்திரன் மறைவாக நின்று தவத்தில் இருந்த திரிசராவைக் கொன்று விட்டான். திரிசரா பிராமணன் ஆகையினாலும், தவத்தில் இருந்தானாகையாலும் அவனைக் கொன்ற இந்திரனின் ஆற்றலில் ஒரு பகுதி தருமதேவதையிடம் சென்று விட்டது. திரிசரா கொல்லப்பட்டதை அறிந்த துவஷ்டா தன் தலையில் இருந்து ஒர் உரோமத்தை எடுத்து அக்னியில் போட, அதிலிருந்து சர்வ வல்லமை உள்ள விருத்ராசுரன் தோன்றினான். விருத்திரனைக் கண்டு அஞ்சிய இந்திரன், சப்த ரிஷிகளிடம் சென்று முறையிட்டு தனக்கும் விருத்திரனுக்கும் நட்புச்செய்து வைக்குமாறு வேண்டிக் கொண்டான். இருவரும் நண்பர்கள் ஆயினர். மனத்துக்குள் வஞ்சகத்தை நிரப்பி இருந்த இந்திரன், நம்பி இருந்த விருத்திராசுரனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டான். இந்தத் தவறான கொலையின் காரணமாக இந்திரன் தன் ஆற்றலின் ஒரு பகுதி வாயுவிடம் சென்று விட்டது.
இந்திரன் ஆற்றலின் மற்றொரு பகுதி நேரே அருச்சுனனுக்குச் சென்றது. கெளதமன் என்று நம்பிய முனிபத்தினி யாகிய அகலிகையை ஏமாற்றியதால், இந்திரனிடம் மிஞ்சி இருந்த ஆற்றல் முழுவதும் இரண்டு அஸ்வினிகளிடம் சென்று விட்டது.
இந்த நிலையில் பூமியில் அரக்கர்கள் மிகுதியாகத் தோன்றி விட்டமையால், பூமி தேவி சுமேரு மலைக்குச் சென்று தனது ஆற்றாமையை வெளியிட்டாள். தேவர்கள் அவளுக்கு பாரத்தைக் குறைப்பதாகக் கூறி தருமதேவதை இந்திரனிடம் பெற்ற ஆற்றலை யுதிஷ்டிரனாகவும், வாயு பெற்ற ஆற்றலை பீமனாகவும், இந்திரன் ஆற்றல் அருச்சுனனாகவும், அஸ்வினிகளின் ஆற்றல் நகுல, சகாதேவர்களாகவும் பிறக்குமாறு செய்தார்கள். இந்திரன் மனைவியாகிய சச்சி திரெளபதி யாகவும் பூமியில் பிறந்து ஐவரையும் மணந்து கொண்டாள். யுதிஷ்டிரன் முதல், சகாதேவன் வரை உள்ள ஐவரும் மனிதர்கள் என்ற முறையில் வெவ்வேறானவர்களாக இருப்பினும், இந்திரனுடைய ஆற்றலின் ஒவ்வொரு கூறாகவே இருந்தனர். இந்த ஐவரும் இந்திரன் ஆற்றல்களே. ஆதலால் சச்சி அல்லது திரெளபதி ஐவரையும் மணந்ததாகச் சொன்னாலும், உண்மையில் இந்திரன் ஒருவனையே மணந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரிச்சந்திரன் கதை
முன்னொரு காலத்தில் திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் இந்த நில உலகை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிச் சிறப்பால் பஞ்சம், நோய், பிணி முதலிய எதுவும் ன் நாட்டில் ட்டவில் வேட்டைக்கச் சென்ற அவன், தப்பி ஓடிய சில மான்களைத் துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் வந்து விட்டான். மானின் பின்னே ஒடிக்கொண்டிருந்த மன்னன் காதுகளில், “எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் அபயக் குரல் விழுந்தது. உடனே, மானின் பின் போவதை விட்டுவிட்டு அபயக் குரல் வந்த திசைப் பக்கம் சென்றான். அங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர் எதிரே சில பெண்கள் 'காப்பாற்றுங்கள் என்று ஒலமிடுவதையும் கண்டான். வில்லில் அம்பைப் பூட்டிய மன்னன் எதிரே இருப்பவர் ஒரு முனிவர் என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெண்கள் உண்மையில் பெண்களே அல்ல. வித்யாஞானத்தின் பல கூறுகளே ஆவர். வித்யா ஞானத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளவாறு அறிந்து கொண்டு அதன் மூலம் உண்மையான ஞானத்தை அடைய விரும்பினார் எதிரிலிருந்த முனிவர் விசுவாமித்திரர். அதனால்தான் வித்யாவின் பல பகுதிகள் வெளிப்பட்டு 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறை யிட்டன.
அரிச்சந்திரனைக் கண்டதும் அவர்கள் ஒலம் நின்றது. காரணம் கடுந்தவத்தில் இருந்த விசுவாமித்திரர் மிக்க கோபமாக அப்பெண்களைப் பார்த்தவுடன் அவர்கள் அஞ்சி மறைந்து விட்டனர். பெண்கள் மறைந்தவுடன் வெட்கிப்போன அரிச்சந்திரன் விசுவாமித்திரர் கால்களில் விழுந்து, "என்னை மன்னித்து அருளல் வேண்டும். இங்கு நடந்தது ஒன்றும் தெரியாது எனக்கு. பெண்களின் அபயக் குரலைக் கேட்டு அரசன் என்ற முறையில் அவர்களைக் காக்க முன்வந்தேன்” என்று கூறினான். விசுவாமித்திரர், 'உன்மேல் எனக்கு ஒன்றும் கோபமில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாகிய உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் விசுவாமித்திரர் மூன்று கேள்விகளைக் கேட்டார். "யாருக்கு தருமம் செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற வேண்டும்? யாருடன் போரிட வேண்டும்?”
இந்த வினாக்களுக்கு விடை கூறப் புகுந்த அரிச்சந்திரன், முதல் கேள்விக்கு பதிலாக, தவசிகட்கும், முனிவர்கட்கும், பிராமணர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அஞ்சினவர் களைக் காப்பாற்ற வேண்டும். பகைவர்களிடம் போரிட வேண்டும்” என்று கூறி முடித்தவுடன், விசுவாமித்திரர், "அரசனே! நான் பிராமணன் என்பது உனக்குத் தெரியு மல்லவா? உன்னிடம் தானம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறியவுடன் அரிச்சந்திரன் மிக்க மகிழ்ச்சியோடு "எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று கூறிவிட்டான். விசுவாமித்திரர், “நீ ஆளும் உலகம் முழுவதும் அதிலுள்ள பொருள்கள், ராஜ்ஜியத்தில் உள்ள தேர்கள், யானைகள், குதிரைகள், பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் எனக்கு வேண்டும். சுருங்கச் சொன்னால், நீ உன் மனைவி, உன் மகன் ஆகிய மூவர் தவிர உன் ராஜ்ஜியத்தில் உள்ள மக்கள் அனைவரும் என் உடைமை ஆகவேண்டும்” என்று கூறினார். அரிச்சந்திரன், "இப்பொழுதே தந்து விட்டேன்” என்று கூறினான். “என்னுடைய ராஜ்ஜிய எல்லைக்குள் நீ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இந்த எல்லைக்கப்பால் நீ உன் மனைவி, மகனுடன் சென்று விடுவாயாக!” என்றார் முனிவர். “முனிவர் உத்தரவுப்படியே இந்த நாட்டின் எல்லைக்கப்பால் செல்கிறேன்.” என்று புறப்பட்ட அரிச்சந்திரனைத் தடுத்து நிறுத்திய விசுவாமித்திரர், "நீ செய்த ராஜதுய யாகத்தில் எல்லா பிராமணர்களுக்கும் தட்சணை தந்தாய் அல்லவா? என்னுடைய பங்கை இப்பொழுது தரவேண்டும்” என்றார் முனிவர். அரிச்சந்திரன், “முனிவரே! என்னிடம் உள்ள அனைத்தையும் தந்துவிட்டேன். இப்பொழுது என்னைத் தவிர என்னுடையது என்று சொல்லக் கூடியது எதுவுமில்லை. நான் என்ன செய்ய முடியும்?” என்றான். அதைக் கேட்ட விசுவாமித்திரர், "நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தட்சிணையைத் தந்தே தீர வேண்டும்” என்றார். ஒரு விநாடி திகைத்து நின்றுவிட்ட அரிச்சந்திரன், “முனிவரே! ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் நிச்சயமாக வந்து உங்களுக்குரிய தட்சினையைத் தந்து விடுகிறேன்” என்றான். அவன் வாய்மொழியை ஏற்றுக் கொண்டு, “சென்று வா” என்று அனுப்பிவிட்டார் விசுவாமித்திரர்.
நாட்டின் எல்லையை விட்டுப் போய்க் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். அவன் மனைவி அரசியாகவே இருந்து பழகி விட்ட காரணத்தால், வேகமாக நடக்க முடியாமல் கொஞ்சம் மெல்லவே நடந்து சென்றாள். சினம் கொண்ட விசுவா மித்திரர் “சீக்கிரம் இவ்வெல்லையை விட்டுப் போ” என்று சொல்லிக் கொண்டே அரிச்சந்திரன் மனைவியாகிய ஷைவியாவை ஒரு தடி கொண்டு பலமுறை அடித்தான். அரிச்சந்திரன் இதுபற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், "இதோ போய் விடுகிறோம், கோபம் வேண்டாம் முனிவரே என்று கூறினான். ஆனால் மேலே இருந்து இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வதேவர்கள் ஐவரும் மன வருத்தம் தாங்காமல், 'விஸ்வாமித்திரர் செய்வது வெட்கக் கேடு, வெட்கக் கேடு என்று கூறிவிட்டனர். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும், விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு விஸ்வதேவர்கள் ஐவரையும் மானிடராகப் பிறக்கக் கடவது' என்று சாபமிட்டார். கலங்கிப் போன ஐவரும் வந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க முனிவர் மனமிரங்கி, "மானிடராகப் பிறந்தாலும் உங்கட்கு மனைவி, குழந்தைகள் என்ற பந்தமிராது. சாதாரண மனிதர்களை ஆட்டிப் படைக்கும் எந்தத் துன்பமும் உங்கள் ஐவரையும் பாதிக்காது” என்றார்.
சாபம் பெற்ற ஐந்து விஸ்வதேவர்களே, பாண்டவர்களின் புதல்வர்களாக- இளம் பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் திரெளபதிக்குப் பிறந்தனர்.
பறவையிடம் அரிச்சந்திரன் கதையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்று ஜெய்மினி முனிவர் கூறியவுடன், பறவைகள் சொல்ல ஆரம்பித்தன. "நாட்டின் எல்லைக்கு வந்த அரிச்சந்திரன் எங்கே போவது என்று தெரியாமல் தவித்தான். எங்கே சென்றாலும் அது விசுவாமித்திரருக்கு தானம் செய்த பகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் வாரணாசி அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஊர் எந்த அரசனுக்கும் சொந்த மில்லை. சிவனுக்குரிய ஊர். எனவே மனைவியையும் குழந்தை யையும் அழைத்துக் கொண்டு வாரணாசிக்குள் புக முற்பட்டான். விசுவாமித்திரர் தடுத்து நிறுத்தினார். “அரிச்சந்திரா! நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. ஒரு மாதம் தவணை