ஹாய் மக்களே
நம் பப்ளிகேஷனில் மார்ச் வெளியீடாக,
இனி மாதந்தோறும், நமது தள எக்ஸ்க்ளுசிவ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழ்நிலையில் நான் ஒன்றை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எங்களுக்கு யாருடனும் பகையோ விரோதமோ இல்லை. அப்படி யாரையும் நாங்கள் நினைப்பதும் இல்லை. அப்படி யாரேனும் எங்களை நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பும் இல்லை. எதோ ஒரு பிரச்னையை சாக்கிட்டு யாரோ இப்படியெல்லாம் முதிர்ச்சியில்லாமல் பேசுவதை எல்லாம் நாங்கள் பெரிதாக எண்ணுவதுமில்லை. வாசகர்கள் அனைத்து வகையான புத்தகங்களையும் படிப்பார்கள். விகடன் படிப்பவர்களுக்கு குமுதம் எதிரியல்ல. குமுதம் படிப்பவர்களுக்கு குங்குமம் விரோதமல்ல. அவர்களுக்கு எல்லாரும் ஒன்றுதான். நல்ல கதைகளால் மட்டும் தான் வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற முடியும். அதை விடுத்து ஆன்லைன் அரசியல் செய்வதால் அல்ல. இது வாசகர்களை குழப்பி பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை தவிர வேறு எதையும் கூற முடியவில்லை. முன் கவிசந்திரா அவர்கள் எம்எம் சைட்டில் ஒரு பிரச்சனையை சந்தித்த போது எம்எம் சற்றும் தயங்காமல் சம்பந்தப்பட்ட எழுத்தாளரை அழைத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அவரும் எம்எம் காக மட்டுமே மன்னிப்பு கேட்டார். யாரோ கம்பு சுற்றியதால் அல்ல.
இப்போதும் மோனிஷா அவர்களை நான் கேட்டுக் கொண்டதால் தான் அவர் அந்த க்ரூப்பை கலைத்தார். யாரோ மிரட்டியதால் அல்ல. இங்கு யாரும் யாரையும் மிரட்டவும் இல்லை. மிரட்டவும் முடியாது. எஸ் எம் சைட் என்றாலும் எம்எம் சைட் என்றாலும் எந்த எழுத்தாளரையும் மிரட்டி நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கருத்துரிமை உள்ளது. அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பது அவர்களுடையது. மோனிஷா எங்களுடைய மரியாதைக்குரிய எழுத்தாளர். ஆனால் அவருக்கு கருத்துரிமை இருக்கிறதல்லவா. அவரது கருத்தை அவருக்கு வெளிப்படுத்த முழு உரிமை உள்ளது. அதை தான் அவர் செய்தார். அதனால் வரும் விளைவுகளை சந்திக்கவும் எதிர்கொள்ளவும் அவருக்கு முதிர்ச்சி இருக்கிறது. இதில் தளத்தையும் அதன் எழுத்தாளர்களையும் இழுத்து தங்களின் சுய லாபத்துக்காக வாசகர்களை குழப்பி பிரித்தாளுவதை என்ன சொல்ல?
விஜயஸ்ரீ பத்மநாபனை மோனிஷா விமர்சித்தார் என்பது அவரது தனிப்பட்ட கருத்து. இதில் தளம் எங்கே வந்தது? மோனிஷா ஒரு தனி மனுஷி இல்லையா? அவருக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக் கூடாதா? இதில் எங்கு வந்தார்கள் மற்றவர்கள்?
நாங்கள் எதிலும் முன்னணியில் இல்லை. யாரையும் முந்த நினைக்கவுமில்லை. யாருக்கும் போட்டியுமில்லை. நாங்கள் எப்போதும் பெருமை பேசும் ஆட்களுமல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. நாங்கள் யாரென்றும், எந்த இடத்தில் இருக்கிறோமேன்றும் நாங்கள் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதுமில்லை. நாங்கள் எந்தவிதமான அசிங்கமான ஆன்லைன் அரசியலுக்கும் தயாராக இல்லை. இங்கு வந்து படிப்பவர்களின் மகிழ்ச்சி மட்டுமே எங்களுக்கு முக்கியம். கும்பல் சேர்த்து கோஷம் போடுவது கிடையாது. பிரச்சனை என்று வந்தாலும் அதை நாங்கள் எதிர்கொண்டு மட்டும் தான் பழக்கம். வாசகர்களையோ சக எழுத்தாளர்களையோ துணைக்கு அழைத்து தூண்டி விட்டு அரசியல் செய்வது எங்கள் பழக்கம் இல்லை. எங்களது கூட்டணி வாசகர்களோடு மட்டுமே. எப்போதும் போல மெளனமாக கடந்து விடத்தான் நினைத்தோம். ஆனால் எல்லா நேரமும் மௌனம் சாத்தியமல்ல. இந்த சிறு வெளிப்பாடும் அதன் காரணமாகத்தான். ஆனால் யாரும் எங்களை வம்புக்கு அழைத்து பேச வைக்க நினைத்தால் இனி அது நடக்காது. better luck next time.
அன்புடன்,
சஷி முரளி
இதை நான் சொல்லியே ஆக வேண்டும். இத்தனை புத்தகங்களுக்கும் ப்ரூப் பார்த்து எனக்காக, நம்முடைய எழுத்தாளர்களுக்காக பெரும் சிரத்தை எடுத்துக் கொண்ட என்னுடைய தோழிகளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
நம் பப்ளிகேஷனில் மார்ச் வெளியீடாக,
- உரசாதே உசுரத்தான் - வநிஷா @vanisha
- ப்ரியங்களுடன் முகிலன்- வத்சலா ராகவன் @Vathsala Raghavan
- கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி- மோனிஷா @Monisha
- கேளடி கண்மணி- அனி சிவா @anisiva
- உன் விழிகளில் விழுந்த நாட்களில்- தென்றல் @Thendral
- மயங்காதே மனமே- அழகி @Zainab
- துருவ காதல்- உமா தீபக் @umadeepak25
- கட்டங்கள்- அகிலா கண்ணன் @akila kannan
- இதயத்தை திருடாதே- கிருஷ்ணப்ரியா நாராயண் @KPN
- பனி சிந்தும் சூரியன்- ரம்யா ராஜன்
இனி மாதந்தோறும், நமது தள எக்ஸ்க்ளுசிவ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழ்நிலையில் நான் ஒன்றை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எங்களுக்கு யாருடனும் பகையோ விரோதமோ இல்லை. அப்படி யாரையும் நாங்கள் நினைப்பதும் இல்லை. அப்படி யாரேனும் எங்களை நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பும் இல்லை. எதோ ஒரு பிரச்னையை சாக்கிட்டு யாரோ இப்படியெல்லாம் முதிர்ச்சியில்லாமல் பேசுவதை எல்லாம் நாங்கள் பெரிதாக எண்ணுவதுமில்லை. வாசகர்கள் அனைத்து வகையான புத்தகங்களையும் படிப்பார்கள். விகடன் படிப்பவர்களுக்கு குமுதம் எதிரியல்ல. குமுதம் படிப்பவர்களுக்கு குங்குமம் விரோதமல்ல. அவர்களுக்கு எல்லாரும் ஒன்றுதான். நல்ல கதைகளால் மட்டும் தான் வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற முடியும். அதை விடுத்து ஆன்லைன் அரசியல் செய்வதால் அல்ல. இது வாசகர்களை குழப்பி பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை தவிர வேறு எதையும் கூற முடியவில்லை. முன் கவிசந்திரா அவர்கள் எம்எம் சைட்டில் ஒரு பிரச்சனையை சந்தித்த போது எம்எம் சற்றும் தயங்காமல் சம்பந்தப்பட்ட எழுத்தாளரை அழைத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அவரும் எம்எம் காக மட்டுமே மன்னிப்பு கேட்டார். யாரோ கம்பு சுற்றியதால் அல்ல.
இப்போதும் மோனிஷா அவர்களை நான் கேட்டுக் கொண்டதால் தான் அவர் அந்த க்ரூப்பை கலைத்தார். யாரோ மிரட்டியதால் அல்ல. இங்கு யாரும் யாரையும் மிரட்டவும் இல்லை. மிரட்டவும் முடியாது. எஸ் எம் சைட் என்றாலும் எம்எம் சைட் என்றாலும் எந்த எழுத்தாளரையும் மிரட்டி நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கருத்துரிமை உள்ளது. அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பது அவர்களுடையது. மோனிஷா எங்களுடைய மரியாதைக்குரிய எழுத்தாளர். ஆனால் அவருக்கு கருத்துரிமை இருக்கிறதல்லவா. அவரது கருத்தை அவருக்கு வெளிப்படுத்த முழு உரிமை உள்ளது. அதை தான் அவர் செய்தார். அதனால் வரும் விளைவுகளை சந்திக்கவும் எதிர்கொள்ளவும் அவருக்கு முதிர்ச்சி இருக்கிறது. இதில் தளத்தையும் அதன் எழுத்தாளர்களையும் இழுத்து தங்களின் சுய லாபத்துக்காக வாசகர்களை குழப்பி பிரித்தாளுவதை என்ன சொல்ல?
விஜயஸ்ரீ பத்மநாபனை மோனிஷா விமர்சித்தார் என்பது அவரது தனிப்பட்ட கருத்து. இதில் தளம் எங்கே வந்தது? மோனிஷா ஒரு தனி மனுஷி இல்லையா? அவருக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக் கூடாதா? இதில் எங்கு வந்தார்கள் மற்றவர்கள்?
நாங்கள் எதிலும் முன்னணியில் இல்லை. யாரையும் முந்த நினைக்கவுமில்லை. யாருக்கும் போட்டியுமில்லை. நாங்கள் எப்போதும் பெருமை பேசும் ஆட்களுமல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. நாங்கள் யாரென்றும், எந்த இடத்தில் இருக்கிறோமேன்றும் நாங்கள் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதுமில்லை. நாங்கள் எந்தவிதமான அசிங்கமான ஆன்லைன் அரசியலுக்கும் தயாராக இல்லை. இங்கு வந்து படிப்பவர்களின் மகிழ்ச்சி மட்டுமே எங்களுக்கு முக்கியம். கும்பல் சேர்த்து கோஷம் போடுவது கிடையாது. பிரச்சனை என்று வந்தாலும் அதை நாங்கள் எதிர்கொண்டு மட்டும் தான் பழக்கம். வாசகர்களையோ சக எழுத்தாளர்களையோ துணைக்கு அழைத்து தூண்டி விட்டு அரசியல் செய்வது எங்கள் பழக்கம் இல்லை. எங்களது கூட்டணி வாசகர்களோடு மட்டுமே. எப்போதும் போல மெளனமாக கடந்து விடத்தான் நினைத்தோம். ஆனால் எல்லா நேரமும் மௌனம் சாத்தியமல்ல. இந்த சிறு வெளிப்பாடும் அதன் காரணமாகத்தான். ஆனால் யாரும் எங்களை வம்புக்கு அழைத்து பேச வைக்க நினைத்தால் இனி அது நடக்காது. better luck next time.
அன்புடன்,
சஷி முரளி
இதை நான் சொல்லியே ஆக வேண்டும். இத்தனை புத்தகங்களுக்கும் ப்ரூப் பார்த்து எனக்காக, நம்முடைய எழுத்தாளர்களுக்காக பெரும் சிரத்தை எடுத்துக் கொண்ட என்னுடைய தோழிகளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
- சங்கீத் சிவா (@Sanshiv)
- செல்வ சங்கரி (@Selva sankari)
- சுவிதா (@Suvitha )
- பானுமதி ஜெயராமன் (@banumathi jayaraman )
- ஸ்ரீவித்யா நாராயணன்
- சித்ரா சரஸ்வதி (@Chitrasaraswathi )
Last edited: