Santhana Krishna
புதிய முகம்
உன் மேல் கொண்ட மோதலால் வந்த காதலால்
இமையில் நீ இறங்கியே என் மனதை நீ ஆள்கிறாய்
வார்த்தைகள் பல பேச மனம்
நினைத்தும் ஊமை போன்றே
எனை உணர்கிறேன்
எதிலும் மனம் நாட்டம் இல்லாமல் போகவே நான் இயங்காமலே இற்றுப்போகிறேன்
உண்ண உணவு பல இருந்துமே நீ கடந்த காற்றை அருந்தி
உயிர் வாழ்கிறேன்
கன்னி மனம் நொந்தே கண்ணீர் விழி கொண்டே காத்து நிற்கிறேன்
காலம் நீ கடத்தி காதல் மனம் உருக்கி கோதை விழி குளமாக்காமல்
நாள் ஒன்றை நீ குறித்து நல்ல செய்தி ஒன்றைத் தந்து என் சோகம்தனை மாற்ற மண நாளும் குறித்து வா எனை மணமேடை ஏற்றியே மாலை சூட வா....
மனதிற்குள்ளே என் திருமண எண்ணத்தில்.......
நீ-சூட்டிய மாலையின் வாசம் என்னுள்
சொர்க்கத்தின் வாசலில் சோலையின் மத்தியில் வீற்றிருக்கும் உணர்வையே தருகிறது.
உற்றாரும் உறவினரும் நம் பொருத்தம் கண்டு சற்றே பெருமூச்சு விடுவதும் என் கண்முன்னே தெரிகிறது.
உன் அருகில் உன் கரம் பிடித்து என் கண்ணில் கசிந்த நீர் நீ துடைத்து
நம் திருமண நிகழ்வின் தித்திக்கும் தருணத்தை இருவரும் ரசித்து
இனி வரும் காலம் உனக்காகவே நான் இருப்பேன் என்று நினைத்து
உன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து உன் கண் அசைவிலே இனி வரும் நாட்கள் நான் கழிக்கபோகும் நேரத்தை நினைத்து சூடிய மாலையின் வாசத்தில் நான் சொக்கியே நிற்கின்றேன்..
மாலை தந்தவர் மனம் கோணாமல் நடக்கவே மனமொத்து வாழ வாழ்த்தும் பெறுவேன்
தந்தை கைப்பிடித்து உலகத்தை வலம் வந்தவள் என் அன்பிற்கினியவன் கைப்பிடித்து மணமேடையை வலம் வருவேன்
மந்திர ஒலியிலே மாலையின் வாசத்திலே புத்தாடையின் சரசரப்பில் சொந்தபந்தங்களின் ஆரவாரத்தில்
கனவில் கைபிடித்தவரின் கரம் நிஜத்தில் என் அருகில் இருப்பதை நினைத்தே மனம் பூரிப்பேன்.
மனதில் படபடப்பு வரும் மயக்கம் வரும் இன்பத்தில் இனம் புரியாத எண்ணம் தொற்றிக்கொள்ளும் என்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் என் அன்பில் உனை உரையவைப்பேன் என்று உறுதி கொள்வேன்.
வாழ்க்கை என்பது வாழத்தான் என்றே வார்த்தையால் சொன்னால் போதாது அதை நாங்கள் வாழ்ந்து காண்பிப்போம் என்றே நான் வைராக்கியம் கொள்வேன்.
கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் என் கண்களும் உன்னை ஏறெடுத்துப் பார்க்கும்.இத்தனை நாள் ஏங்கிய மனம் அன்று முதல் விடுமுறை எடுத்து என்னை உன்னிடம் விட்டுச்செல்லும்.
இன்பமும் என்னவனும் இரண்டற பிணைந்து எனக்கே எனக்கென்று என்னுடன் கூடவர
காணும் கண்களெல்லாம் எங்களின் கல்யாண கோலம் கண்டு களி கொள்ள பெண்மை மென்மை குறையாமல் நான் தலை குனிந்து உடல் சிலிர்த்து என்னவன் கரம் பற்றி பெற்றோர் உற்றாரை விட்டு பிரியும் வருத்தத்தில் ஆற்றாமையில் கண்களில் கண்ணீர் மல்க சந்தோஷமும் சங்கடமும் முண்டியடித்து என்னை பெருமூச்சு விடச் செய்யும் அந்த வேளைக்காக காத்து நிற்கிறேன் ....
புது மனை புகுந்து பெரியவர்களிடம் ஆசியும் பெறுவோம் என் பெற்றோர்கள் மனம் குளிர நம் உற்றார் உறவினர்களிடம் நற் பெயரும் பெற நான் நற்பண்புகளை வெளிக்காட்டுவேன்.
அனைவரிடமும் அன்பாகவும் என் அன்பரிடத்தில் ஆசையாகவும் என் நாளை நான் நகர்த்துவேன்
குடும்பத்தின் பெயரை நான் உயர்த்துவேன் குலத்தின் பெருமையை நான் மேம்படுத்துவேன்
என் ஆசை குறையாமல் உன் பாசம் மறையாமல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வோம் .
வாழ்க்கையின் தத்துவம் உணர்ந்தே வளர்ச்சியின் அவசியம் உணர்ந்தே சேர்ந்தே உழைத்து செல்வமும் சேர்ப்போம்.
அமர்ந்து பேசி அர்த்தமில்லா சங்கடங்களை குறைப்போம் நம் அன்பின் ஆழம் புரிய பிரிவென்ற ஒன்றை அடிக்கடி மேற்கொள்வோம்
நல்லொழுக்கம் புகட்டி நம் மக்கள் நாம் வளர்ப்போம் சிந்தனையில் நல் மரபுகளை புகுத்தி தரணியிலே சிறந்தவர்களாய் சிறப்படையச் செய்வோம்
அன்பே
என் உள்ளமாய் மாறிப்போன உன்னை
என் சிந்தனையில் ஊறிப்போன உன்னை மணக்க மண நாள் எதிர்பார்த்து உன் கையால் என் கழுத்தில் இடும் மாலையை எதிர்பார்த்து எந்த நொடியில் நான் என்னை மறக்க போகிறேன் என்று எதிர்பார்த்து காத்து நிற்கிறேன்
என்னவனே காலம் தாழ்த்தாதே இன்றோடு எனக்கு 60 வயது நிறைவடைந்தது
என் கனவோடு வாழ்ந்த நீங்கள் நிஜத்தில் வாழ வாருங்கள் இனியும் காலம் தாழ்த்தினால் நீங்கள் வாங்கி வரும் மாலை ஒரு நாள் என் கழுத்திற்கு மாற்றாய் என் பாதத்தில் வைக்கும் நாளாய் மாறலாம்.....
என் கழுத்தில் பூ மாலை உன் கையால் வாங்க வேண்டும் என்றே இத்தனை நாள் காத்திருக்கிறேன் என் ஏக்கம் தெரியாமல் நாள் கடத்தாதே சூழ்நிலை என்று சொன்னால் சொல்லாமல் சொல்லிவிடு சொர்க்கத்தில் சந்திப்போம் என்று.
உனக்காக நான் காத்திருப்பேன் அங்கேயும்........
இமையில் நீ இறங்கியே என் மனதை நீ ஆள்கிறாய்
வார்த்தைகள் பல பேச மனம்
நினைத்தும் ஊமை போன்றே
எனை உணர்கிறேன்
எதிலும் மனம் நாட்டம் இல்லாமல் போகவே நான் இயங்காமலே இற்றுப்போகிறேன்
உண்ண உணவு பல இருந்துமே நீ கடந்த காற்றை அருந்தி
உயிர் வாழ்கிறேன்
கன்னி மனம் நொந்தே கண்ணீர் விழி கொண்டே காத்து நிற்கிறேன்
காலம் நீ கடத்தி காதல் மனம் உருக்கி கோதை விழி குளமாக்காமல்
நாள் ஒன்றை நீ குறித்து நல்ல செய்தி ஒன்றைத் தந்து என் சோகம்தனை மாற்ற மண நாளும் குறித்து வா எனை மணமேடை ஏற்றியே மாலை சூட வா....
மனதிற்குள்ளே என் திருமண எண்ணத்தில்.......
நீ-சூட்டிய மாலையின் வாசம் என்னுள்
சொர்க்கத்தின் வாசலில் சோலையின் மத்தியில் வீற்றிருக்கும் உணர்வையே தருகிறது.
உற்றாரும் உறவினரும் நம் பொருத்தம் கண்டு சற்றே பெருமூச்சு விடுவதும் என் கண்முன்னே தெரிகிறது.
உன் அருகில் உன் கரம் பிடித்து என் கண்ணில் கசிந்த நீர் நீ துடைத்து
நம் திருமண நிகழ்வின் தித்திக்கும் தருணத்தை இருவரும் ரசித்து
இனி வரும் காலம் உனக்காகவே நான் இருப்பேன் என்று நினைத்து
உன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து உன் கண் அசைவிலே இனி வரும் நாட்கள் நான் கழிக்கபோகும் நேரத்தை நினைத்து சூடிய மாலையின் வாசத்தில் நான் சொக்கியே நிற்கின்றேன்..
மாலை தந்தவர் மனம் கோணாமல் நடக்கவே மனமொத்து வாழ வாழ்த்தும் பெறுவேன்
தந்தை கைப்பிடித்து உலகத்தை வலம் வந்தவள் என் அன்பிற்கினியவன் கைப்பிடித்து மணமேடையை வலம் வருவேன்
மந்திர ஒலியிலே மாலையின் வாசத்திலே புத்தாடையின் சரசரப்பில் சொந்தபந்தங்களின் ஆரவாரத்தில்
கனவில் கைபிடித்தவரின் கரம் நிஜத்தில் என் அருகில் இருப்பதை நினைத்தே மனம் பூரிப்பேன்.
மனதில் படபடப்பு வரும் மயக்கம் வரும் இன்பத்தில் இனம் புரியாத எண்ணம் தொற்றிக்கொள்ளும் என்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் என் அன்பில் உனை உரையவைப்பேன் என்று உறுதி கொள்வேன்.
வாழ்க்கை என்பது வாழத்தான் என்றே வார்த்தையால் சொன்னால் போதாது அதை நாங்கள் வாழ்ந்து காண்பிப்போம் என்றே நான் வைராக்கியம் கொள்வேன்.
கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் என் கண்களும் உன்னை ஏறெடுத்துப் பார்க்கும்.இத்தனை நாள் ஏங்கிய மனம் அன்று முதல் விடுமுறை எடுத்து என்னை உன்னிடம் விட்டுச்செல்லும்.
இன்பமும் என்னவனும் இரண்டற பிணைந்து எனக்கே எனக்கென்று என்னுடன் கூடவர
காணும் கண்களெல்லாம் எங்களின் கல்யாண கோலம் கண்டு களி கொள்ள பெண்மை மென்மை குறையாமல் நான் தலை குனிந்து உடல் சிலிர்த்து என்னவன் கரம் பற்றி பெற்றோர் உற்றாரை விட்டு பிரியும் வருத்தத்தில் ஆற்றாமையில் கண்களில் கண்ணீர் மல்க சந்தோஷமும் சங்கடமும் முண்டியடித்து என்னை பெருமூச்சு விடச் செய்யும் அந்த வேளைக்காக காத்து நிற்கிறேன் ....
புது மனை புகுந்து பெரியவர்களிடம் ஆசியும் பெறுவோம் என் பெற்றோர்கள் மனம் குளிர நம் உற்றார் உறவினர்களிடம் நற் பெயரும் பெற நான் நற்பண்புகளை வெளிக்காட்டுவேன்.
அனைவரிடமும் அன்பாகவும் என் அன்பரிடத்தில் ஆசையாகவும் என் நாளை நான் நகர்த்துவேன்
குடும்பத்தின் பெயரை நான் உயர்த்துவேன் குலத்தின் பெருமையை நான் மேம்படுத்துவேன்
என் ஆசை குறையாமல் உன் பாசம் மறையாமல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வோம் .
வாழ்க்கையின் தத்துவம் உணர்ந்தே வளர்ச்சியின் அவசியம் உணர்ந்தே சேர்ந்தே உழைத்து செல்வமும் சேர்ப்போம்.
அமர்ந்து பேசி அர்த்தமில்லா சங்கடங்களை குறைப்போம் நம் அன்பின் ஆழம் புரிய பிரிவென்ற ஒன்றை அடிக்கடி மேற்கொள்வோம்
நல்லொழுக்கம் புகட்டி நம் மக்கள் நாம் வளர்ப்போம் சிந்தனையில் நல் மரபுகளை புகுத்தி தரணியிலே சிறந்தவர்களாய் சிறப்படையச் செய்வோம்
அன்பே
என் உள்ளமாய் மாறிப்போன உன்னை
என் சிந்தனையில் ஊறிப்போன உன்னை மணக்க மண நாள் எதிர்பார்த்து உன் கையால் என் கழுத்தில் இடும் மாலையை எதிர்பார்த்து எந்த நொடியில் நான் என்னை மறக்க போகிறேன் என்று எதிர்பார்த்து காத்து நிற்கிறேன்
என்னவனே காலம் தாழ்த்தாதே இன்றோடு எனக்கு 60 வயது நிறைவடைந்தது
என் கனவோடு வாழ்ந்த நீங்கள் நிஜத்தில் வாழ வாருங்கள் இனியும் காலம் தாழ்த்தினால் நீங்கள் வாங்கி வரும் மாலை ஒரு நாள் என் கழுத்திற்கு மாற்றாய் என் பாதத்தில் வைக்கும் நாளாய் மாறலாம்.....
என் கழுத்தில் பூ மாலை உன் கையால் வாங்க வேண்டும் என்றே இத்தனை நாள் காத்திருக்கிறேன் என் ஏக்கம் தெரியாமல் நாள் கடத்தாதே சூழ்நிலை என்று சொன்னால் சொல்லாமல் சொல்லிவிடு சொர்க்கத்தில் சந்திப்போம் என்று.
உனக்காக நான் காத்திருப்பேன் அங்கேயும்........