அத்தியாயம் 3
கண்களில் கண்ணீருடன் கையைப் பிடித்து நின்று கொண்டிருப்பவளை லேசாகத் திரும்பிப் பார்த்தான். பின் அவள் கை அவன் கையை விட்டு விலகியது. அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“விட்டா, ஆம்புலன்ஸ் பின்னாடியே ஓடுவீங்களா” என்று கேட்டான்.
அதற்குள் அந்தப் பெரியவர் வந்து….
“சார், அவ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா… அதனாலதான் இப்படி…. சாரி சார் “ என்றார்.
“வா…போலாம்” என்று உள்ளே அவளை அழைத்துச் சென்றார்.
“இன்பா, சரியான பயந்தாங்கொள்ளி போல “ என்றான் மதி.
“ஃபேமிலியே அப்படித்தான் சார்.. ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேங்கிறாங்க…
ஃபார்மாலிட்டீஸ்க்கு ஸ்டேஷன் வரைக்கும் வரச் சொன்னா… வரமாட்டேன்னு சொல்றாரு” என்று சொல்லியபடியே அழகேசன் வந்தார்.
“இப்பவே வந்து ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கணும்னு சொல்லிடுங்க” என்றான் மதி.
சரி எனச் சொல்லித் திரும்பிச் சென்றவரை, அதுவரை அமைதியாக நின்ற இன்பன்..
“அழகேசன், காலைல வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க” என்றான்.
“சார் “
“அதான் சொல்றேன்ல”..
“சரி சார் “என்று இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார்.
“போலாமா மதி”
மதி சிரித்தான்.
“பசிக்கிதுடா...வீட்ல ஏதாவது சாப்பிட இருக்கா“ என்றான் அவன் சிரிப்பைக் காணாதவன் போல.
“இல்ல… ஆனா நான் செஞ்சு தாரேன்… இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான என் கையால சாப்பிடப்போற” என்று சொல்லிப் பைக்கில் ஏறினான் மதி.
“இன்பா…ஒன்னு சொல்லட்டா… “
ஆரின்பன் அவனது பைக்கில் ஏறியபடி என்ன என்பது போல் பார்த்தான்.
“மாமனார் வீட்ல கேட்டுப் பார்க்கிறியா “
“அடிங்… “ என மட்டியைக் கடித்துக்கொண்டு வண்டியிலிருந்து கால் ஊன்றி நின்றவனைப் பார்த்து சிரித்தவாறே இளமதி புறப்பட்டுச் சென்றான்.
கேகே நகர்….
அடுத்த நாள் காலை… கேகே நகர் வீட்டில்
“ஸ்டேஷன்ல இருந்து வரச் சொன்னாங்க” என்றார் அந்தப் பெண்ணின் தாத்தா.
அவள் அவரைப் பார்த்தாள்.
“நான் போல… நீயும் கூப்பிட்டா போகாத... ” என்றார்.
"இல்ல.." என்று ஏதோ ஆரம்பித்தாள்.
“போதும்மா…. நீ கவலப்படாத…தாத்தாவுக்கு வயசாயிருச்சி.. உன்ன யார் கைலயாவது புடிச்சுக் கொடுக்கனும்” என்று ஏதேதோ புலம்பிய படியே அழுதார்.
அவளும் கண்ணீர் மல்க நின்றாள். ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் வந்தவளைப் பார்த்து…
“நான் சொல்றத மட்டும் கேளும்மா ” என்று சொல்லி எழுந்துச் சென்று விட்டார்.
ஆணையர் அலுவலகம்.
இள வெயில் சூழ்ந்த மாலை நேரம்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாக வளாகத்தின் உள்ளே வந்தாள். அவளுக்கு யாரிடம் என்ன கேட்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பயத்தில் உடலெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியது.
“நீங்களா” என்ற குரலைக் கேட்டு பயந்தபடியேத் திரும்பினாள். அங்கே ஆரின்பன் நின்றான்.
“இங்கேயேன் வந்தீங்க.. உங்க ஏரியா ஸ்டேஷன்ல தான ஃபார்மாலிட்டீஸ் பண்ணனும் “
“அங்க போக பயமா இருக்கு… தனியா வேற போனும்… அதான் இங்கே வந்தேன்”
அவன் அவளின் பின்னே யாரவது இருக்காங்களா எனப் பார்த்தான்.
“என்ன “ என்றாள்.
“இல்ல, இங்கயும் தனியாதான வந்திருக்கீங்க”
“ஆமாங்க “
“பயமில்லயா”
அவள் சில வினாடிகள் யோசித்த பின் “இல்ல “ என்றாள் உறுதியாக.
மென் முறுவல் தந்து “சரி சரி.. வாங்க “என்றான்.
அவன் பின்னேயே நடந்தாள்.
“காலைல சீக்கிரமாகவே வந்திருக்கலாம்ல ஏன் லேட்டு”
“ ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் இருந்திச்சு… அத முடிச்சிட்டு வர்றதுக்கு லேட் ஆயிடுச்சு”
“ஓ.. ஏங்க.. கொஞ்சம் கூடயே நடந்து வர்ரீங்களா”
“ஏன் “
“பின்னாடி திரும்பிப் பார்த்துப் பேச கஷ்டமா இருக்கு “
சரியெனச் சொல்லி அவன் கூடயே நடந்தாள். ஆனால் அதற்கப்புறம் அவன் எதுவும் பேசவில்லை.
ஒரு அறையின் அருகே வந்து உள்ளே போங்க என்பது போல் கை காட்டினான். உள்ளே சென்றாள். அங்கு இளமதி அமர்ந்திருந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார் “என்றான் இன்பன்.
தலையை நிமிர்ந்து பார்த்த மதி, இவன் ஏன் இவளக் கூட்டிட்டு வந்திருக்கான் என்று நினைத்தான்.
இன்பனும் உள்ளே வந்து மேஜையின் மீது ஏறி அமர்ந்தான்.
“நீ ஏன் இங்க வந்த… ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளைன்ட் பண்ணு”என்றான் மதி அந்தப் பெண்ணைப் பார்த்து.
“எனக்கு அது சரியாத் தெரியாது சார்…. அதனால தான் இங்க வந்தேன்”
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்… ஸ்டேஷனுக்குப் போ… அங்க அவங்க பார்த்துப்பாங்க”
அவள் சிறிது நேரம் முழித்துக் கொண்டிருந்தாள். பின் எழுந்து நடக்கத் தொடங்கும் போது,
“எதுக்கு இன்பன்.. “ என மதி பேசும்போது…
இடையிலே… “ஒரு நிமிஷம் இருங்க” என்றான் இன்பன். பின் வெளியே சென்று யாருக்கோ போன் பண்ணினான்.
“நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன்… நாளைக்கு ஸ்டேஷன் போக மட்டும் செய்ங்க.. போதும் “
அமைதியாக நின்றாள்.
“என்னங்க”
“தண்ணீ வேணும்…”
“இருங்க “என தண்ணீர் எடுக்கத் திரும்பினான் இன்பன் .
“டேய்.. பிடிடா… மயங்கி விழுப் போறா” என்று மதி கத்தினான்.
அதற்குள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள். இன்பன் அவளைத் தூக்கி ஒரு நாற்காலியில் அமரச் செய்தான். அவள் மயக்கத்திலே இருந்தாள்.
“மதி.. என்னடா இப்படி ஆயிருச்சு”
“இந்தததத மயக்கும்…. இந்தப்ப்ப் பொண்ணு.. அந்தததத ஸ்டேஷனில் போட்டிருக்க வேண்டியது… இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த”
“ நான் எங்க கூட்டிட்டு வந்தேன்… அவ தான் வந்தா “
“முதல எழுப்பி வெளியில போச்சொல்லு”
“மயக்கத்தில இருக்காடா… இப்போ எப்படி சொல்ல.. “
“என்னமோ பண்ணு… நான் கிளம்புறேன் “ என்று மதி கிளம்பி விட்டான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் முன் இன்பன் அமர்ந்திருந்தான். யாரும் இல்லையா என்பது போல் தலையை இருபுறமும் திருப்பிப் பார்த்தாள்.
“யாரும் இல்ல… ஆனா பயப்படாதீங்க.... நம்மளும் கிளம்பலாமா”
“அந்த ஸ்டேஷன்ல என்ன பண்ணனும்னு சொல்ல முடியுமா “
“அப்பவே சொன்னேன்ல.. இப்ப ஸ்டேஷன் போனாலும் நீங்க பார்க்க வேண்டியவங்க இருக்க மாட்டாங்க…அதனால வீட்டுக்குப் போங்க” என்று சொன்னான்.
இருவரும் வெளியே வந்தனர்.
“உங்க பேரு என்னங்க… “என்று அவன் பேச்சை ஆரம்பித்தான்.
“அனலிக்கா”...
“உங்க பேரு “
“ஆரின்பன்”
அவள் வாய்மூடிச் சிரித்தாள்.
“ஹலோ .. எதுக்குச் சிரிக்கிறீங்க”
“இல்ல… இந்தக் காலத்திலயும் இன்சியலோட பேரச் சொல்றீங்க.. அதான் “
இன்சியலா என யோசித்தான்.. “ஏங்க, ஆரின்பன் “
“ம்ம்.. R இன்பன் “ என அவள் பிரித்துக் கூறினாள்.
அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
“பென் இருக்காங்க “
இதோ என கைப்பையில் இருந்து பேனாவை எடுத்து நீட்டினாள்.
“கைய நீட்டுங்க “
எதுக்கு என்பது போல் யோசித்தாள்.
“அட.. நீட்டுங்க”
நீட்டினாள். அவள் உள்ளங்கையில் அவன் பேரை ‘ஆரின்பன்‘ என எழுதினான்.
பார்த்தவுடன் “ஸ்ஸ்.. ஸாரிங்க.. உங்கள, உள்ள இருந்த போலிஸ் இன்பன்னு கூப்பிட்டாறா.. அதான்.. ஸாரி “
“ம்ம்ம்.. பரவால்லீங்க.. எப்படி வீட்டுக்குப் போறீங்க.. “
“கார்ல”
“ஓஓ.. கார்லாம் ஓட்டத் தெரியுமா “
“ம்ம்ம், தாத்தாதான் சொல்லிக் கொடுத்தாரு”
“அவரு உங்க தாத்தாவா”
அவள் ஆமாம் என்பது போல் புன்னகையைப் பதிலாக தந்தாள்.
“ம்ம்... இப்பதான மயக்கம் போட்டீங்க.. ஸோ நீங்க டிரைவ் பண்ண வேண்டாம்… நானே என் ஜீப்ல டிராப் பண்றேன் “
அவள் யோசித்தாள்.
“என்ன யோசிக்கிறீங்க “
“போலிஸ் ஜீப்னா பயம்”
இது வேறயா என்று நினைத்தபடி”சரி உங்க கார்ல டிராப் பண்றேன் “
தலையை நன்றாக ஆட்டினாள்.
கண்களில் கண்ணீருடன் கையைப் பிடித்து நின்று கொண்டிருப்பவளை லேசாகத் திரும்பிப் பார்த்தான். பின் அவள் கை அவன் கையை விட்டு விலகியது. அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“விட்டா, ஆம்புலன்ஸ் பின்னாடியே ஓடுவீங்களா” என்று கேட்டான்.
அதற்குள் அந்தப் பெரியவர் வந்து….
“சார், அவ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா… அதனாலதான் இப்படி…. சாரி சார் “ என்றார்.
“வா…போலாம்” என்று உள்ளே அவளை அழைத்துச் சென்றார்.
“இன்பா, சரியான பயந்தாங்கொள்ளி போல “ என்றான் மதி.
“ஃபேமிலியே அப்படித்தான் சார்.. ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டேங்கிறாங்க…
ஃபார்மாலிட்டீஸ்க்கு ஸ்டேஷன் வரைக்கும் வரச் சொன்னா… வரமாட்டேன்னு சொல்றாரு” என்று சொல்லியபடியே அழகேசன் வந்தார்.
“இப்பவே வந்து ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கணும்னு சொல்லிடுங்க” என்றான் மதி.
சரி எனச் சொல்லித் திரும்பிச் சென்றவரை, அதுவரை அமைதியாக நின்ற இன்பன்..
“அழகேசன், காலைல வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க” என்றான்.
“சார் “
“அதான் சொல்றேன்ல”..
“சரி சார் “என்று இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார்.
“போலாமா மதி”
மதி சிரித்தான்.
“பசிக்கிதுடா...வீட்ல ஏதாவது சாப்பிட இருக்கா“ என்றான் அவன் சிரிப்பைக் காணாதவன் போல.
“இல்ல… ஆனா நான் செஞ்சு தாரேன்… இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான என் கையால சாப்பிடப்போற” என்று சொல்லிப் பைக்கில் ஏறினான் மதி.
“இன்பா…ஒன்னு சொல்லட்டா… “
ஆரின்பன் அவனது பைக்கில் ஏறியபடி என்ன என்பது போல் பார்த்தான்.
“மாமனார் வீட்ல கேட்டுப் பார்க்கிறியா “
“அடிங்… “ என மட்டியைக் கடித்துக்கொண்டு வண்டியிலிருந்து கால் ஊன்றி நின்றவனைப் பார்த்து சிரித்தவாறே இளமதி புறப்பட்டுச் சென்றான்.
கேகே நகர்….
அடுத்த நாள் காலை… கேகே நகர் வீட்டில்
“ஸ்டேஷன்ல இருந்து வரச் சொன்னாங்க” என்றார் அந்தப் பெண்ணின் தாத்தா.
அவள் அவரைப் பார்த்தாள்.
“நான் போல… நீயும் கூப்பிட்டா போகாத... ” என்றார்.
"இல்ல.." என்று ஏதோ ஆரம்பித்தாள்.
“போதும்மா…. நீ கவலப்படாத…தாத்தாவுக்கு வயசாயிருச்சி.. உன்ன யார் கைலயாவது புடிச்சுக் கொடுக்கனும்” என்று ஏதேதோ புலம்பிய படியே அழுதார்.
அவளும் கண்ணீர் மல்க நின்றாள். ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் வந்தவளைப் பார்த்து…
“நான் சொல்றத மட்டும் கேளும்மா ” என்று சொல்லி எழுந்துச் சென்று விட்டார்.
ஆணையர் அலுவலகம்.
இள வெயில் சூழ்ந்த மாலை நேரம்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாக வளாகத்தின் உள்ளே வந்தாள். அவளுக்கு யாரிடம் என்ன கேட்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பயத்தில் உடலெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியது.
“நீங்களா” என்ற குரலைக் கேட்டு பயந்தபடியேத் திரும்பினாள். அங்கே ஆரின்பன் நின்றான்.
“இங்கேயேன் வந்தீங்க.. உங்க ஏரியா ஸ்டேஷன்ல தான ஃபார்மாலிட்டீஸ் பண்ணனும் “
“அங்க போக பயமா இருக்கு… தனியா வேற போனும்… அதான் இங்கே வந்தேன்”
அவன் அவளின் பின்னே யாரவது இருக்காங்களா எனப் பார்த்தான்.
“என்ன “ என்றாள்.
“இல்ல, இங்கயும் தனியாதான வந்திருக்கீங்க”
“ஆமாங்க “
“பயமில்லயா”
அவள் சில வினாடிகள் யோசித்த பின் “இல்ல “ என்றாள் உறுதியாக.
மென் முறுவல் தந்து “சரி சரி.. வாங்க “என்றான்.
அவன் பின்னேயே நடந்தாள்.
“காலைல சீக்கிரமாகவே வந்திருக்கலாம்ல ஏன் லேட்டு”
“ ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் இருந்திச்சு… அத முடிச்சிட்டு வர்றதுக்கு லேட் ஆயிடுச்சு”
“ஓ.. ஏங்க.. கொஞ்சம் கூடயே நடந்து வர்ரீங்களா”
“ஏன் “
“பின்னாடி திரும்பிப் பார்த்துப் பேச கஷ்டமா இருக்கு “
சரியெனச் சொல்லி அவன் கூடயே நடந்தாள். ஆனால் அதற்கப்புறம் அவன் எதுவும் பேசவில்லை.
ஒரு அறையின் அருகே வந்து உள்ளே போங்க என்பது போல் கை காட்டினான். உள்ளே சென்றாள். அங்கு இளமதி அமர்ந்திருந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார் “என்றான் இன்பன்.
தலையை நிமிர்ந்து பார்த்த மதி, இவன் ஏன் இவளக் கூட்டிட்டு வந்திருக்கான் என்று நினைத்தான்.
இன்பனும் உள்ளே வந்து மேஜையின் மீது ஏறி அமர்ந்தான்.
“நீ ஏன் இங்க வந்த… ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளைன்ட் பண்ணு”என்றான் மதி அந்தப் பெண்ணைப் பார்த்து.
“எனக்கு அது சரியாத் தெரியாது சார்…. அதனால தான் இங்க வந்தேன்”
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்… ஸ்டேஷனுக்குப் போ… அங்க அவங்க பார்த்துப்பாங்க”
அவள் சிறிது நேரம் முழித்துக் கொண்டிருந்தாள். பின் எழுந்து நடக்கத் தொடங்கும் போது,
“எதுக்கு இன்பன்.. “ என மதி பேசும்போது…
இடையிலே… “ஒரு நிமிஷம் இருங்க” என்றான் இன்பன். பின் வெளியே சென்று யாருக்கோ போன் பண்ணினான்.
“நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன்… நாளைக்கு ஸ்டேஷன் போக மட்டும் செய்ங்க.. போதும் “
அமைதியாக நின்றாள்.
“என்னங்க”
“தண்ணீ வேணும்…”
“இருங்க “என தண்ணீர் எடுக்கத் திரும்பினான் இன்பன் .
“டேய்.. பிடிடா… மயங்கி விழுப் போறா” என்று மதி கத்தினான்.
அதற்குள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள். இன்பன் அவளைத் தூக்கி ஒரு நாற்காலியில் அமரச் செய்தான். அவள் மயக்கத்திலே இருந்தாள்.
“மதி.. என்னடா இப்படி ஆயிருச்சு”
“இந்தததத மயக்கும்…. இந்தப்ப்ப் பொண்ணு.. அந்தததத ஸ்டேஷனில் போட்டிருக்க வேண்டியது… இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த”
“ நான் எங்க கூட்டிட்டு வந்தேன்… அவ தான் வந்தா “
“முதல எழுப்பி வெளியில போச்சொல்லு”
“மயக்கத்தில இருக்காடா… இப்போ எப்படி சொல்ல.. “
“என்னமோ பண்ணு… நான் கிளம்புறேன் “ என்று மதி கிளம்பி விட்டான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் முன் இன்பன் அமர்ந்திருந்தான். யாரும் இல்லையா என்பது போல் தலையை இருபுறமும் திருப்பிப் பார்த்தாள்.
“யாரும் இல்ல… ஆனா பயப்படாதீங்க.... நம்மளும் கிளம்பலாமா”
“அந்த ஸ்டேஷன்ல என்ன பண்ணனும்னு சொல்ல முடியுமா “
“அப்பவே சொன்னேன்ல.. இப்ப ஸ்டேஷன் போனாலும் நீங்க பார்க்க வேண்டியவங்க இருக்க மாட்டாங்க…அதனால வீட்டுக்குப் போங்க” என்று சொன்னான்.
இருவரும் வெளியே வந்தனர்.
“உங்க பேரு என்னங்க… “என்று அவன் பேச்சை ஆரம்பித்தான்.
“அனலிக்கா”...
“உங்க பேரு “
“ஆரின்பன்”
அவள் வாய்மூடிச் சிரித்தாள்.
“ஹலோ .. எதுக்குச் சிரிக்கிறீங்க”
“இல்ல… இந்தக் காலத்திலயும் இன்சியலோட பேரச் சொல்றீங்க.. அதான் “
இன்சியலா என யோசித்தான்.. “ஏங்க, ஆரின்பன் “
“ம்ம்.. R இன்பன் “ என அவள் பிரித்துக் கூறினாள்.
அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
“பென் இருக்காங்க “
இதோ என கைப்பையில் இருந்து பேனாவை எடுத்து நீட்டினாள்.
“கைய நீட்டுங்க “
எதுக்கு என்பது போல் யோசித்தாள்.
“அட.. நீட்டுங்க”
நீட்டினாள். அவள் உள்ளங்கையில் அவன் பேரை ‘ஆரின்பன்‘ என எழுதினான்.
பார்த்தவுடன் “ஸ்ஸ்.. ஸாரிங்க.. உங்கள, உள்ள இருந்த போலிஸ் இன்பன்னு கூப்பிட்டாறா.. அதான்.. ஸாரி “
“ம்ம்ம்.. பரவால்லீங்க.. எப்படி வீட்டுக்குப் போறீங்க.. “
“கார்ல”
“ஓஓ.. கார்லாம் ஓட்டத் தெரியுமா “
“ம்ம்ம், தாத்தாதான் சொல்லிக் கொடுத்தாரு”
“அவரு உங்க தாத்தாவா”
அவள் ஆமாம் என்பது போல் புன்னகையைப் பதிலாக தந்தாள்.
“ம்ம்... இப்பதான மயக்கம் போட்டீங்க.. ஸோ நீங்க டிரைவ் பண்ண வேண்டாம்… நானே என் ஜீப்ல டிராப் பண்றேன் “
அவள் யோசித்தாள்.
“என்ன யோசிக்கிறீங்க “
“போலிஸ் ஜீப்னா பயம்”
இது வேறயா என்று நினைத்தபடி”சரி உங்க கார்ல டிராப் பண்றேன் “
தலையை நன்றாக ஆட்டினாள்.