Selvarani
3 December 2019
மின்மினியின் ஆசைகள்.
இந்த கதைதான் நான் முதலில் படிக்கும் சந்தியாவின் கதை.முதலில் பெயர் பொருத்தம் என்னை கவர்ந்தது.கார்மேகமும் மேக வர்ஷினியும்!இரண்டும் சேர்ந்தால் நமக்கு தண்ணீர்!ஆனால் மேகம் கரைந்ததும் மழை நின்று விடும்!ஒன்றுக்குள் ஒன்று!ஆனால் கதையில் இருவரும் பிரிவு என முடிவெடுக்கிறார்கள்.
எல்லாரும் சேர்த்து வைத்து முடிப்பார்கள்,இங்கு பிரிந்து போவதாக முடித்து இருக்காங்க.சில விஷயங்கள் நாம் மறக்க நினைத்தாலும் ஆழத்தில் புதைந்து இருக்கும்.பொய்யாய் அதெல்லாம் மறந்துட்டேன் என சொல்லிகிட்டாலும் அது மறக்காது!சில பொய்கள் வாழ்க்கைக்கு தேவைன்னு மனதை சமாதானப்படுத்திகிட்டு வாழ்பவர்கள் மத்தியில் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றதுக்கும் தைரியம் வேணும்!இது புதுசுதான்!மின்மினி பூச்சியின் ஆசைகள் யாரும் கேட்பதில்லை,அவங்க கேட்கும் போது அது உயிருடன் இருப்பதில்லை!இப்படி அழகான வசனங்கள்!வார்த்தை என்ற உளியில் அடித்து சிற்பமாக்கி விட்டு போய் விட்டாய்,உளியின் மீது உள்ள காதலால் தனிமையில் இருக்கிறேன்!அருமை!
இருவரும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்த போது அவர்கள் மனம் இணையவில்லை,பிரிந்தபின் இருவர் மனமும் ஒரே பாதையில் பயணிக்கிறது!
வித்தியாசமான கதை!
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அவள் மனம் உடைந்த நாளை குறிப்பிட்டு இருக்கலாம்,இது என் கருத்து