Meena Vighneswar
புதிய முகம்
Short n sweet..
Nice daaa me too????“ரம்யா , உன் போன் நம்பர் தாயேன்”
அனைவருடத்திலும் வாங்கிய பின் அவளை பார்த்து கேட்க, உடனே எழுதி தந்தாள்.
பதிலுக்கு அவளின் கைப்புத்தகத்தில் அவள் கேட்காமலேயே அவனுடையதை எழுதியிருந்தான்.
ஐந்தாவது நொடியில் அவன் வீட்டு எண் இவளுக்கு மனப்பாடமாய்!
அவனை ஏனோ பிடித்திருந்தது, அதை எவரிடமும் சொல்லிவிடும் துணிவில்லை. ஆனாலும் கைபோன போக்கில் அவன் எண்ணை சில முறை அழைத்து பார்த்திருக்கிறாள். பேசும் தைரியம் மட்டும் இல்லை.
“ நேத்து சாயங்காலம் 6.30 க்கு என்
வீட்டுக்கு போன் செய்தது நீ தானே ரம்யா? மறைக்காம சொல்லு!”
அடுத்த நாள் கெமிஸ்டரி லேப்பில் மென்
குரலில் எங்கேயோ பார்த்தபடி அவன் கேட்டிட,மறுப்பு சொல்ல
தோன்றவில்லை!
“ எத்தனை நேரம் இந்த பிப்பெட்டை வச்சிகிட்டு சீன் போடுறது.சீக்கிரம் சொல்லு ரம்யா”
கண்ணுக்கு நேராக பார்த்து ஆம் என்றாள்.
“இன்னிக்கும் அதே டைம்ல கூப்பிடு. காத்திட்டிருப்பேன்!”
அவ்விடத்தை விட்டு போய்விட்டான்.
எப்போதடா அந்த 6.30 மணி வரும் என்று காத்திருந்தவளுக்கு அந்த மணியோடு நடுக்கமும் வந்தது. ‘செய்யத்தான் வேண்டுமா?’
ஒரு பக்கம் வேண்டாம் என்று தோன்ற, மறுபக்கமோ அவன் ஏக்க முகத்தை நினைவு படுத்தியது. அடுத்த நொடி அவன் குரல் போனின் வழியாய் கேட்ட பிறகு தான் ,அழைத்திருக்கிறாள் என்பதே தெரிந்தது.
“ நீ போன் பண்ண மாட்டியோன்னு நினைச்சிட்டேன்”
“ எதுக்கு கூப்பிட சொன்னே?”
“ நாளைக்கு ஸ்கூல் முடிச்சிட்டு மீட் பண்ணலாமா?”
“எதுக்கு?”
“அங்க வா சொல்றேன்! “
“ இல்லை முடியாது! அம்மா தேடுவாங்க”
“நீ வரே” வைத்துவிட்டான்.
மனசாட்சி என்கிற வேலைகாரன் மூளை என்னும் எஜமானியின் சொல்லை மீற வைத்திருந்தது. அவன் சொன்ன இடத்தில் காத்திருந்தாள்.காரில் வந்திருந்தான்.இவளும் முன் பக்கம் அமர வழி செய்த பின்,
“ உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைக்கிறேன் ரம்யா”
“நானும்...”
“சரி நீ முதலில் சொல்லு!”
“ இல்லை சொல்லமாட்டேன்!”
“ சொல்லு ப்ளீஸ்...”
ஆயிரம் முறை கெஞ்சியிருப்பான் கூறும்படி!
அவள் சொல்வதாயில்லை!
முடிவாய்,
“ சரி. நீ என்ன சொல்ல வந்தியோ அதுக்கு என் பதில் மீ...டூ!”