- Joined
- Nov 4, 2021
- Messages
- 408
- Reaction score
- 787
தோழி Zeenath Sabeeha அவர்களின் முகநூல் விமர்சனம்
#SMTamilNovels_Antihero_Thiruvizha போட்டிக் கதைகள் ..
Anamika 46 அவர்கள் எழுதிய
ஆண்மையெனப்படுவது யாதெனில்... (பேராண்மை)
இது எழுத்தாளரின் முதல் கதை என்றால் நம்ப முடியவில்லை... அவ்வளவு அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக கதையை சற்றும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார்
தேவா.. தன் தாயை பழித்து கூறி இவனுக்கு சினம் ஏற்றவே ஆண்மகன் தானா என்ற ஒரு நச்சுப் பெண்ணின் கேள்வியால் மூக்கு முட்ட குடித்து வீடு திரும்பும் இவனிடம் ...தன் மனதில் சலனத்தை ஏற்படுத்திய பெண்ணும் அதே கேள்வி கேட்டதால் மிருகமாக மாறி அவள் பெண்மையை காவு வாங்குகிறான்... தன் செயலால் தன்னை வெறுத்து தன்னை மறந்து இருக்கும் நிலையிலும் அவளிடம் மன்னிப்பை யாசிக்கிறான்... தன்னை ஒதுக்கி வைப்பதாக தாயின் மேல் தவறான புரிதல் கொண்டு அவரை இவன் ஒதுக்கிவைத்து தானும் வருந்தி அவரையும் வருந்தச் செய்கிறான்... கட்டப்பஞ்சாயத்து செய்த மக்களுக்கு நன்மை செய்யும் இவன் தன் தாய்க்கும் தாரத்திற்கும் நன்மை செய்தானா என்பது கதையில்...
வள்ளியம்மை... கிராமத்துப் பெண்ணாக அமைதியாக இருப்பாள் என்று நினைத்தால் அதிரடி சரவெடியாக மிளிர்கிறாள் இவளின் துடுக்குத் தனமும் நையாண்டி பேச்சும் வேற லெவல் தேவாவுடன் வாய்க்கு வாய் வழக்காடுவதும்... அவனின் புரிதலை மாற்றி சிந்திக்கத் தூண்டும் இவள் செயல்களும்... சகுந்தலா தேவியை இவள் கேள்வி கேட்கும் விதமும் அருமை
கதிரேசன் அருமையான கதாபாத்திரம்
இவரோடு தேவாவின் உரையாடலும் அந்த கிண்டல் பேச்சும் கவிதை
அருமையான குடும்ப கதை கிராமத்து மனிதர்களிடையே ஏற்படும் சிறுசிறு பொறாமைகளையும் உறவு முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அங்கங்கு எடுத்துக் காட்டி இருப்பது அருமை
துரைப்பாண்டி... அக்கால மனிதரின் சிந்தனையும் செயலும் தன் வாரிசுகளுக்கு புத்திக்கூர்மை யோடு இவர் எழுதி வைத்த உயிலும் வெகு சிறப்பு
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear
#SMTamilNovels_Antihero_Thiruvizha போட்டிக் கதைகள் ..
Anamika 46 அவர்கள் எழுதிய
ஆண்மையெனப்படுவது யாதெனில்... (பேராண்மை)
இது எழுத்தாளரின் முதல் கதை என்றால் நம்ப முடியவில்லை... அவ்வளவு அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக கதையை சற்றும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார்
தேவா.. தன் தாயை பழித்து கூறி இவனுக்கு சினம் ஏற்றவே ஆண்மகன் தானா என்ற ஒரு நச்சுப் பெண்ணின் கேள்வியால் மூக்கு முட்ட குடித்து வீடு திரும்பும் இவனிடம் ...தன் மனதில் சலனத்தை ஏற்படுத்திய பெண்ணும் அதே கேள்வி கேட்டதால் மிருகமாக மாறி அவள் பெண்மையை காவு வாங்குகிறான்... தன் செயலால் தன்னை வெறுத்து தன்னை மறந்து இருக்கும் நிலையிலும் அவளிடம் மன்னிப்பை யாசிக்கிறான்... தன்னை ஒதுக்கி வைப்பதாக தாயின் மேல் தவறான புரிதல் கொண்டு அவரை இவன் ஒதுக்கிவைத்து தானும் வருந்தி அவரையும் வருந்தச் செய்கிறான்... கட்டப்பஞ்சாயத்து செய்த மக்களுக்கு நன்மை செய்யும் இவன் தன் தாய்க்கும் தாரத்திற்கும் நன்மை செய்தானா என்பது கதையில்...
வள்ளியம்மை... கிராமத்துப் பெண்ணாக அமைதியாக இருப்பாள் என்று நினைத்தால் அதிரடி சரவெடியாக மிளிர்கிறாள் இவளின் துடுக்குத் தனமும் நையாண்டி பேச்சும் வேற லெவல் தேவாவுடன் வாய்க்கு வாய் வழக்காடுவதும்... அவனின் புரிதலை மாற்றி சிந்திக்கத் தூண்டும் இவள் செயல்களும்... சகுந்தலா தேவியை இவள் கேள்வி கேட்கும் விதமும் அருமை
கதிரேசன் அருமையான கதாபாத்திரம்
இவரோடு தேவாவின் உரையாடலும் அந்த கிண்டல் பேச்சும் கவிதை
அருமையான குடும்ப கதை கிராமத்து மனிதர்களிடையே ஏற்படும் சிறுசிறு பொறாமைகளையும் உறவு முறைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அங்கங்கு எடுத்துக் காட்டி இருப்பது அருமை
துரைப்பாண்டி... அக்கால மனிதரின் சிந்தனையும் செயலும் தன் வாரிசுகளுக்கு புத்திக்கூர்மை யோடு இவர் எழுதி வைத்த உயிலும் வெகு சிறப்பு
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear