[COLOR=rgb(85, 57, 130)][B]@Chitrasaraswathi சித்ரா அம்மா அவர்களின் விமர்சனம்[/B][/COLOR]
ஸ்ரீநவியின் பூந்தளிர் ஆட எனது பார்வையில். உயரம் காரணமாக முப்பது வயது வரை திருமணம் ஆகாது இருக்கும் அரவிந்த் மற்றும் கிருஷ்ணா திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்து நடக்கிறது. அரவிந்த் வளர்ந்து வரும் தொழிலதிபர். கிருஷ்ணா ஆசிரியர் பணியில் இருக்கிறாள். பொறுப்பான மகன் அரவிந்த் குடும்பத்தை கட்டிக் காத்து சிறந்த உறவாக அனைவருக்கும் இருப்பவன் மனைவிக்கும் சிறந்த கணவனாக இருக்கிறான். அவனது தம்பி ராம் வெளிநாட்டில் பணியாற்றுவதால் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் காலத்தில் கர்ப்பிணியாகும் அவளை மறுத்து குழந்தைகள் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறான். வெளிநாட்டில் இருந்து தன் இரட்டையருடன் பெற்றோரை பார்க்க வருபவளை அவளை மட்டும் ஏற்றுக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் ராம் வீட்டில் விட்டுவிட்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்கு வந்து சேர்ந்த இரட்டை குழந்தைகளை அரவிந்த் வீட்டில் எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் வீடு திரும்பும் ராமை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதையும் விறுவிறுப்பாக தந்திருக்கிறார் ஸ்ரீநவி. யதார்த்தமான குடும்ப நிகழ்வுகளை கதை முழுவதும் தந்திருக்கிறார். அரவிந்த் மற்றும் கிருஷ்ணா தம்பதிகள் அருமையான கதாபாத்திரங்கள். கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் வெளியே வேலைக்கு செல்பவர்கள் தங்களின் சுதந்திரத்தை நல்ல விதமாகவும் அதே சுதந்திரத்தை தங்கள் விருப்பப்படி வாழ்க்கை வாழ்வதால் ஏற்படும் பின்விளைவுகளையும் அழகாக தந்திருக்கிறார் ராம் மற்றும் ஹனியா கதாபாத்திரங்கள் மூலம். ஹனியாவின் கணவன் இம்ரான் நல்ல மனிதனாக மனைவியை அரவணைக்கிறான். ராமின் நிலையை காலத்தின் கையில் விட்டுவிடுகிறார். அரவிந்த் அம்மா பரிமளம் அத்தை, கிருஷ்ணா என்று பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீநவியின் பூந்தளிர் ஆட எனது பார்வையில். உயரம் காரணமாக முப்பது வயது வரை திருமணம் ஆகாது இருக்கும் அரவிந்த் மற்றும் கிருஷ்ணா திருமணம் பெரியோர்களால் நிச்சயம் செய்து நடக்கிறது. அரவிந்த் வளர்ந்து வரும் தொழிலதிபர். கிருஷ்ணா ஆசிரியர் பணியில் இருக்கிறாள். பொறுப்பான மகன் அரவிந்த் குடும்பத்தை கட்டிக் காத்து சிறந்த உறவாக அனைவருக்கும் இருப்பவன் மனைவிக்கும் சிறந்த கணவனாக இருக்கிறான். அவனது தம்பி ராம் வெளிநாட்டில் பணியாற்றுவதால் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் காலத்தில் கர்ப்பிணியாகும் அவளை மறுத்து குழந்தைகள் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறிவிடுகிறான். வெளிநாட்டில் இருந்து தன் இரட்டையருடன் பெற்றோரை பார்க்க வருபவளை அவளை மட்டும் ஏற்றுக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் ராம் வீட்டில் விட்டுவிட்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்கு வந்து சேர்ந்த இரட்டை குழந்தைகளை அரவிந்த் வீட்டில் எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் வீடு திரும்பும் ராமை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதையும் விறுவிறுப்பாக தந்திருக்கிறார் ஸ்ரீநவி. யதார்த்தமான குடும்ப நிகழ்வுகளை கதை முழுவதும் தந்திருக்கிறார். அரவிந்த் மற்றும் கிருஷ்ணா தம்பதிகள் அருமையான கதாபாத்திரங்கள். கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் வெளியே வேலைக்கு செல்பவர்கள் தங்களின் சுதந்திரத்தை நல்ல விதமாகவும் அதே சுதந்திரத்தை தங்கள் விருப்பப்படி வாழ்க்கை வாழ்வதால் ஏற்படும் பின்விளைவுகளையும் அழகாக தந்திருக்கிறார் ராம் மற்றும் ஹனியா கதாபாத்திரங்கள் மூலம். ஹனியாவின் கணவன் இம்ரான் நல்ல மனிதனாக மனைவியை அரவணைக்கிறான். ராமின் நிலையை காலத்தின் கையில் விட்டுவிடுகிறார். அரவிந்த் அம்மா பரிமளம் அத்தை, கிருஷ்ணா என்று பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
Last edited: