Rishi Lib
#போட்டிக்கதை
#அனாமிகா_47
முள்ளோடு முத்தாட வா!
ஹீரோ : அர்ஜுன்
ஹீரோயின் : பாரதி
அழகான காதல் கதை...
காளையவனின் அகம்பாவம் சரியுமிடம் அவளாக!
காரிகையவளின் திமிர் பணியுமிடம் அவனாக!
வீறு கொண்ட சிங்கத்திடம் விரும்பியே மாட்டிக் கொண்ட புள்ள மானாய் பாரதி கண்ட புதுமைப் பெண்!
மனிதர்களையே எட்ட நிறுத்துபவன் பாவையிடம் மட்டும் பனியும் மாயம் என்னவோ?
இறுக்கப் பூட்டியிருந்த மனக் கதவை அன்பெனும் சாவி கொண்டு திறந்து விட்டவளுக்கு மணாளனின் கண்களே கடவுளாய்!
திருமண பந்தத்தில் மாதுவை இழுத்து வைத்தவன் அறியவில்லை அவள் அகம் நுழைந்து நாட்களானதை!
வெற்றியில் சிகரம் தொட்டு வா காதலை தருகிறேன் என்றவளுக்கு அவன் காதலே பரிசாய் முள்ளோடு முத்தாடுதலாய்!
போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.
ரிஷி.
04-02-2022.
———————————————————
கதை அருமை.
பாரதியாரை எனக்கும் பிடிக்கும்னாலும் அவ்வளவு ஆழமா ரசிச்சு வரிகளை உள்வாங்குனதில்ல…
இடத்திற்கு தகுந்தா மாதிரி இருந்த பாரதியாரோட ஒவ்வொரு வரிகளையும் அவ்வளவு ரசிச்சு வாசிச்சேனுங்கறது தான் உண்மை.
கதை கொண்டு போன விதம் கூட ரொம்ப அழகா இருந்துது. ரசிக்க வெச்சுட்டீங்க… அய்யோ முடிஞ்சிடுச்சான்னு தான் இருந்தது வாசிச்சு முடிஞ்சதும்.
அவனோட ஆளுமை அழகுன்னா அவளோட அழுத்தம் இன்னொரு அழகு.
இடையில உங்க வார்த்தை பிரயோகங்கள் கூட சில இடங்கள்ல ஆழமா பொருந்தி இருந்துது.
அருண் வர்ற இடங்களெல்லாம் கலக்கல்
சிரிச்சுகிட்டே இருக்க வெச்சுட்டீங்க
அதுலயும் லாஸ்ட் ‘சைத்தான் ஜெராக்ஸ் கடையில தான் பிள்ளைய பெத்துக்கும் போல’ இந்த கவுண்டர் என்னால சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடில
ரொம்ப நன்றி
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
பாரதியாரோட விசிறியாவே மாத்திட்டீங்க என்னை!