- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
பகுதி - 21
அன்று ஆதர்ஷ் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது நக்ஷத்ராவின் மொபைல் அடிக்கவும் எரிச்சலுற்றவன் “மாதுரி” என்று அவள் வாயசைத்துக் கூறி வெளியே எழுந்து சென்றதும் கோபம் மறந்து வகுப்பை தொடர்ந்தான்.
“எத்தர திவசம் ஆயி நின்னே கண்டுட்டு... எங்ஙனே இண்டு”
அரை வாயிலில் நின்றிருந்த மாதுரி தோழியை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்பதால் உற்சாக மிகுதியில் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“எவ்வடயா நிண்ட ஹீரோ?”
“ம்ம்கும்ம்... உள்ள பீட்டர் விடுறது எப்படின்னு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கான்”
“ஹான்?”
“நீ வா. நம்மளு சம்சாரிக்காம். செஷன் கழியான் சமயம் எடுக்கும்” என்ற நக்ஷத்ரா தன்னுடைய அறையில் வகுப்பு நடைபெறுவதால் மாதுரியை MD அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
“ஹே... இது ஆதர்ஷ்டே முரியல்லே?”
“சபரீஷிடையும்”
அவளை சந்தேகமாக பார்த்த மாதுரி “எந்தா? காரியம் பரா” என்றுக் கேட்க “ஒண்ணுமில்லா... நீ இரிக்கி” என்றவள் நேரே சென்று ஆதர்ஷின் இருக்கையில் அமர்ந்தாள்.
“ம்ம்.... இப்ப மனசிலாயி....”
“எந்தா?”
“வெறுதே டிராமா களிக்கறது மோளே... ஆரா ப்ரொபோஸ் செய்தது? அவனோ? அல்லா நீயோ? எனிக்கு நீயானுன்னா தோணுன்னு...”
“ஞான் அல்லா... அவன் சோய்ச்சதா”
“நீ ஓகே பரஞ்சு அல்லே?”
“ம்ம்” என்றவள் வெட்கப்பட்டு சிரிக்கையில் ஆதர்ஷும் சபரீஷும் உள்ளே நுழைந்தனர். சட்டென்று அவனுடைய இருக்கையிலிருந்து எழுந்து மாதுரியின் அருகில் சென்று நின்றாள்.
“ஹாய் மாதுரி. சாரி உங்கள இங்க கூப்பிட்டதுக்கு. நீங்க பிஸியா...”
“நோ ப்ராப்ளம் ஆதர்ஷ்”
புன்னகையுடன் அவள் அமர நக்ஷத்ரா அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
மாதுரி கிளம்பும்வரை தன்னையே அவ்வபோது குருகுருவென்றுப் பார்க்கும் அவன் பார்வையிலிருந்துத் தப்பிக்க தலை குனிந்து அமர வேண்டியதாயிற்று.
அவள் கிளம்பிச் சென்றப் பிறகு இருவரையும் ஒருமுறை பார்த்த சபரீஷ் “அப்பறம்? அவன் சேர்ல தான் உக்காருவீங்களோ?” என்றுக் கேட்க “ஐயோ இவனுக்குத் தெரியுமா? ச்ச... எப்படித் தெரியாம இருக்கும்? ஆதர்ஷ் சொல்லியிருப்பான்...” என்று நினைத்து அதிசயமாக அவனைப் பார்த்தாள்.
“என் சேர்ல தான உட்கார்ந்தா? பரவாயில்ல...”
“மச்சு... எனக்கு தெரியாம கம்பெனிய அவ பேருக்கு மாத்தி எழுதிட மாட்டியே??”
“வேலைய பாருடா. நீ போ. நான் உன்கிட்ட காலையில பேசுறேன்”
மூச்சை இழுத்துப் பிடித்து நின்றவள் விட்டால் போதுமென்று அவளுடைய அறைக்கு ஓடி வந்துவிட்டாள்.
காலையில் பேசுகிறேன் என்று அவன் கூறியதாலோ என்னவோ காரில் அமர்ந்தப் பிறகு அவன் பக்கமே திரும்பாமல் இருந்தாள்.
“எங்க வீட்டுலேருந்து நாளைக்கு வராங்க”
“எல்லாரும் வராங்களா? அப்பா அம்மா? வினோ? அவளும் வராளா?”
“அவங்க வரதுல உனக்கென்ன இவ்வளோ சந்தோஷம்?”
“அவ்... அவங்க வரதுல எனக்கென்ன சந்தோஷம்? ஒண்ணுமில்லையே... வராங்களான்னுக் கேட்டேன். அவ்வளவுதான்”
“அத என் முகத்தப் பார்த்து சொல்லு. ஏன் மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் பேசுற?”
“இவ்வளவு நேரம் உன் முகத்தப் பார்த்துதான பேசுனேன்? நான் ஒண்ணும் மூஞ்சியத் திருப்பிக்கல...”
“இப்பயும் என்னைப் பார்த்து பேச மாட்டேங்குறியே... சிரிப்பு வருதா? நக்ஷத்ரா... என்னை பாரு... ஹேய் திரும்புடி...”
“இப்போ என்ன உனக்கு? ஆமா... அவங்க வரதுல எனக்கு சந்தோஷம். ரொம்ப சந்தோஷம் போதுமா?”
“ஏன்?”
“அது அப்படிதான்”
சட்டென்று காரை சாலையோரம் அவன் நிறுத்த புரியாமல் பார்த்தாள். அவள்புறம் திரும்பி அமர்ந்து “எதுக்கு சந்தோஷப்படுறன்னு சொல்லு” என்றான்.
“இது என்ன பிடிவாதம்? உங்க வீட்டுல எல்லாரயும் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? காரை எடு ஆதர்ஷ்”
“அவங்கள எதுக்கு நீ பார்க்கணும்”
“நான் வாழப்போற வீட்டுல யாரெல்லாம் இருக்காங்கன்னுத் தெரிஞ்சுக்க எனக்கு ஆசை இருக்காதா?”
“இதையும் என் முகத்தப் பார்த்து சொல்ல மாட்டியா?”
“மாட்டேன். நீ கார் ஸ்டார்ட் பண்ணு. லேட் ஆகுது ஆதர்ஷ்”
புடவையை விரலில் சுற்றி விளையாடியபடியே தலை குனிந்து அமர்ந்திருந்தவளை சில நொடிகள் புன்னகையுடன் ரசித்தவன் அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டான்.
மதியத்திற்கு மேல் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தான் சபரீஷ்.
“என்னடா அதிசயம்? தூங்கலையா?”
“தூக்கம் வரல மச்சு. ஒரு நாள் ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் சேர்ந்து வெளில டின்னர் போகலாமான்னுக் கேட்க வந்தேன். போலாமா?”
“இந்த வீக் முடியாதுடா. நெக்ஸ்ட் வீக் போகலாம். டீ குடிக்குறியா?”
“நீ டீ போடப் போறியா?”
“வேற யாரு இருக்கா? வேணுமா வேணாமா?”
“கொண்டு வா... தலையெழுத்துடா...”
“அப்படியெல்லாம் அலுத்துக்கிட்டு நீ ஒண்ணும் டீ குடிக்க வேண்டாம்”
“சரி சரி... குடிக்குறேன் எடுத்துட்டு வா”
ஆதர்ஷ் டீ எடுத்து வர சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றான் சபரீஷ். மோகனிற்கு அழைத்துக் கிளம்பிவிட்டார்களா என்றுக் கேட்டவன் காலை ஸ்டேஷன் வருவதாகக் கூறி வைத்தான்.
அன்று முழுவதும் அவன் தன்னிடம் ஏதாவது விபரம் கூறுவான் என்று எதஈர்ப்பார்த்து ஏமாந்துப் போனாள் நக்ஷத்ரா.
“எப்போ வராங்க? எப்படி வராங்க? என்னை அவங்கள மீட் பண்ண வைப்பானா? ஒண்ணும் சொல்லல... ச்ச... இப்போ போய் கேட்டா ஏடாகூடமா கேள்விக் கேட்பான். பேசாம சபரீஷ்கிட்ட கேட்டா?? வேண்டாம். அது நல்லா இருக்காது...”
தனக்குள்ளே யோசித்துக் குழம்பியவள் அவன் முகத்தை திரும்பி திரும்பிப் பார்க்க அதை கண்டுக் கொள்ளாமல் அவள் வீட்டில் விட்டுச் சென்றான் ஆதர்ஷ்.
ஸ்டேஷனில் அவனைக் கண்டதும் அவன் பின்னால் தேடிய வினோதினி “என்னண்ணா... அண்ணிய ஸ்டேஷனுக்கே கூட்டிட்டு வந்து அப்பா அம்மா கால்ல விழ வைப்பன்னு நெனச்சேன்... கூட்டிட்டு வரலையா?” என்று சோகமாகக் கேட்டாள்.
“பேசாம வா வினோ... அப்பறம் பார்த்துக்கலாம்”
மோகன் காரில் பெட்டிகளை அடுக்க அவனருகில் வந்த சுஜா “போன வாரம் வீட்டுல அண்ணின்னு வினோ சொன்னதுக்கு அந்த குதி குதிச்ச... இப்போ என்னமோ அப்பறம் பார்த்துக்கலாம்னு சொல்லுற?” என்றுக் கேட்க “நீங்க உட்காருங்க மாம். வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று கார் கதவை திறந்து விட்டான்.
அப்போதும் அவர் அவனை கூர்ந்து கவனித்தபடியே அமர டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.
“நல்ல ஊரு...” என்று மோகன் கூற “ஆமாமா... சூப்பர் ஊரு டாடி” என்றாள் வினோ.
அவள் எதுவும் உளறிவிடுவாளோ என்ற பயத்திலேயே கெஸ்ட் ஹவுஸ் வரை வந்தவன் வீட்டிற்குள் செல்லும் முன் தந்தை கவனிக்காத சமயம் “தயவுசெஞ்சு உன் வாய வெச்சுக்கிட்டு சும்மா இரு. டாடிக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என்று எச்சரித்தான்.
“டாடிக்கு என்ன தெரிய வேண்டாம்? டேய்... நெஜமாவே லவ் பண்ணுறியா?”
“கத்தாதடி... உள்ள வா முதல்ல”
“அம்மாகிட்ட சொல்லிட்டியாடா?”
“இன்னும் இல்ல. சொல்லணும். மம்மி விடுற லுக்க பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு. கோபமா இருக்காங்களா வினோ?”
“அதெல்லாம் இல்லடா... நீ வீட்டுக்கு வந்தப்போ கேட்டாங்கல்ல... நீ உருப்படியா எதுவும் சொல்லலன்னு கொஞ்சம் காண்டு. அவ்வளவுதான். சமாளிச்சுடலாம்”
“என்ன அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் குசுகுசுன்னு?”
“சாக்லேட் கேட்டேன் மம்மி”
“வந்ததும் வராததுமா சாக்லேட்... இவன் உன்னையும் சேர்த்து கெடுக்குறான்”
அவர் எரிச்சலுடன் கூறி கிட்செனுள் செல்ல “சத்தியமா உள்குத்தோட தான் பேசுறாங்க. உனக்குதான் இப்போ திட்டு விழுந்துது” என்றாள் வினோ.
“புரியுது...” என்று முனுமுனுத்தவன் ஆழ மூச்சை எடுத்து சமையலறையுள் சென்றான்.
முந்தைய தினம் அவன் பிரிட்ஜில் வாங்கி வைத்திருந்த பாலை சுஜா காய்ச்சிக் கொண்டிருக்க “நான் டீ போடுறேன்மா. நீங்க போய் குளிங்க” என்றான்.
“தேவையில்ல. எந்த பழக்கத்தையும் மாத்த வேண்டாம். நீ டயர்டா இருப்ப... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போகணும்”
“போகலாம்மா. நீங்க போய் குளிங்க. நான் டீ போடுறேன்”
திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவர் டீ தூளை தேட டப்பாவை எடுத்து நீட்டியவன் “பேச மாட்டீங்களா மாம்?” என்றுக் கேட்டான்.
“பேசிட்டுதான இருக்கேன்?”
“இவங்க எனக்கு அம்மான்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணுறாங்க” என்று நினைத்தவன் அவர் கைகளை பற்றி “என்ன கோபம் சொல்லுங்க” என்றான்.
“உனக்கு நக்ஷத்ராவ பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் டாடிகிட்ட பேசணும்”
“தெரியுதுல்ல... நான் தான் உன் டாடிகிட்ட பேசணும்னு... அப்போ நீ ஒழுங்கா என்கிட்ட சொல்லி வெச்சாதான நான் நேரம் பார்த்து அவங்ககிட்ட பேச முடியும். அத விட்டுட்டு... எந்த அம்மாடா பையன்கிட்ட வந்து இவ்வளவு தூரம் கேட்பாங்க? நான் வந்து கேட்கவும் இளக்காரமா தெரியுதா? இப்போ வந்து கெஞ்சுற? எதுக்கு...”
“சாரி மாம். நீங்க கேட்டப்போ... எனக்குப் பிடிச்சிருந்துது. ஆனா எந்தளவுக்குன்னு சரியா தெரியல. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். சாரி... நெஜமா உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லம்மா. வேற யார்கிட்ட சொல்லப் போறேன்?”
“நக்ஷத்ராகிட்ட சொல்லிட்டியா?”
“...”
“திருட்டு முழி முழிக்குறதுலயே தெரியுது. போ... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போயிட்டு அப்பறமா அப்பாகிட்ட கேட்டுப் பார்க்குறேன்”
ஒரு நொடியும் தாமதிக்காமல் வெளியே வந்துவிட்டான்.
“ஷ்ஷ்ஷ்... அம்மாவ சமாளிக்குறது எவ்வளவு கஷ்டமா இருக்கு...”
“என்னண்ணா பேயறஞ்ச மாதிரி வர?”
“நீ போய் குளி போ”
“அப்பா குளிக்குறாங்க. எனக்கு அண்ணி நம்பர் குடுண்ணா. போன்லயாவது பேசுறேன். போட்டோ காமிச்சதோட சரி...”
“நம்பர் எல்லாம் தர முடியாது” என்றவன் “இதுக்கு மேல முழிச்சிருந்தா எல்லா பக்கமும் மாட்டிப்போம் போலயே” என்று நினைத்து அறைக்குள் ஓடிவிட்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு கண்களை திறந்து எடுத்துப் பார்த்தான். நக்ஷத்ரா அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்கும் முன் “ஆதர்ஷ்... சீக்கிரம் எழுந்துக் கிளம்பு. எவ்வளவு நேரமா எழுப்புறேன்... நாங்க எல்லாரும் ரெடி” என்று குரல் கொடுத்தார் சுஜா.
மணியை பார்த்தவன் அவசரமாக எழுந்து அழைப்பை ஏற்று “நான் வெளில கிளம்பிட்டு இருக்கேன் நக்ஷத்ரா. வீட்டுக்கு வரும்போது பேசுறேன்” என்றுக் கூறி வைத்துக் குளிக்கச் சென்றான்.
நக்ஷத்ராவின் தவிப்பு இரட்டிப்பானது. நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முயன்றாள்.
அன்று ஆதர்ஷ் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது நக்ஷத்ராவின் மொபைல் அடிக்கவும் எரிச்சலுற்றவன் “மாதுரி” என்று அவள் வாயசைத்துக் கூறி வெளியே எழுந்து சென்றதும் கோபம் மறந்து வகுப்பை தொடர்ந்தான்.
“எத்தர திவசம் ஆயி நின்னே கண்டுட்டு... எங்ஙனே இண்டு”
அரை வாயிலில் நின்றிருந்த மாதுரி தோழியை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்பதால் உற்சாக மிகுதியில் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“எவ்வடயா நிண்ட ஹீரோ?”
“ம்ம்கும்ம்... உள்ள பீட்டர் விடுறது எப்படின்னு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கான்”
“ஹான்?”
“நீ வா. நம்மளு சம்சாரிக்காம். செஷன் கழியான் சமயம் எடுக்கும்” என்ற நக்ஷத்ரா தன்னுடைய அறையில் வகுப்பு நடைபெறுவதால் மாதுரியை MD அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
“ஹே... இது ஆதர்ஷ்டே முரியல்லே?”
“சபரீஷிடையும்”
அவளை சந்தேகமாக பார்த்த மாதுரி “எந்தா? காரியம் பரா” என்றுக் கேட்க “ஒண்ணுமில்லா... நீ இரிக்கி” என்றவள் நேரே சென்று ஆதர்ஷின் இருக்கையில் அமர்ந்தாள்.
“ம்ம்.... இப்ப மனசிலாயி....”
“எந்தா?”
“வெறுதே டிராமா களிக்கறது மோளே... ஆரா ப்ரொபோஸ் செய்தது? அவனோ? அல்லா நீயோ? எனிக்கு நீயானுன்னா தோணுன்னு...”
“ஞான் அல்லா... அவன் சோய்ச்சதா”
“நீ ஓகே பரஞ்சு அல்லே?”
“ம்ம்” என்றவள் வெட்கப்பட்டு சிரிக்கையில் ஆதர்ஷும் சபரீஷும் உள்ளே நுழைந்தனர். சட்டென்று அவனுடைய இருக்கையிலிருந்து எழுந்து மாதுரியின் அருகில் சென்று நின்றாள்.
“ஹாய் மாதுரி. சாரி உங்கள இங்க கூப்பிட்டதுக்கு. நீங்க பிஸியா...”
“நோ ப்ராப்ளம் ஆதர்ஷ்”
புன்னகையுடன் அவள் அமர நக்ஷத்ரா அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
மாதுரி கிளம்பும்வரை தன்னையே அவ்வபோது குருகுருவென்றுப் பார்க்கும் அவன் பார்வையிலிருந்துத் தப்பிக்க தலை குனிந்து அமர வேண்டியதாயிற்று.
அவள் கிளம்பிச் சென்றப் பிறகு இருவரையும் ஒருமுறை பார்த்த சபரீஷ் “அப்பறம்? அவன் சேர்ல தான் உக்காருவீங்களோ?” என்றுக் கேட்க “ஐயோ இவனுக்குத் தெரியுமா? ச்ச... எப்படித் தெரியாம இருக்கும்? ஆதர்ஷ் சொல்லியிருப்பான்...” என்று நினைத்து அதிசயமாக அவனைப் பார்த்தாள்.
“என் சேர்ல தான உட்கார்ந்தா? பரவாயில்ல...”
“மச்சு... எனக்கு தெரியாம கம்பெனிய அவ பேருக்கு மாத்தி எழுதிட மாட்டியே??”
“வேலைய பாருடா. நீ போ. நான் உன்கிட்ட காலையில பேசுறேன்”
மூச்சை இழுத்துப் பிடித்து நின்றவள் விட்டால் போதுமென்று அவளுடைய அறைக்கு ஓடி வந்துவிட்டாள்.
காலையில் பேசுகிறேன் என்று அவன் கூறியதாலோ என்னவோ காரில் அமர்ந்தப் பிறகு அவன் பக்கமே திரும்பாமல் இருந்தாள்.
“எங்க வீட்டுலேருந்து நாளைக்கு வராங்க”
“எல்லாரும் வராங்களா? அப்பா அம்மா? வினோ? அவளும் வராளா?”
“அவங்க வரதுல உனக்கென்ன இவ்வளோ சந்தோஷம்?”
“அவ்... அவங்க வரதுல எனக்கென்ன சந்தோஷம்? ஒண்ணுமில்லையே... வராங்களான்னுக் கேட்டேன். அவ்வளவுதான்”
“அத என் முகத்தப் பார்த்து சொல்லு. ஏன் மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் பேசுற?”
“இவ்வளவு நேரம் உன் முகத்தப் பார்த்துதான பேசுனேன்? நான் ஒண்ணும் மூஞ்சியத் திருப்பிக்கல...”
“இப்பயும் என்னைப் பார்த்து பேச மாட்டேங்குறியே... சிரிப்பு வருதா? நக்ஷத்ரா... என்னை பாரு... ஹேய் திரும்புடி...”
“இப்போ என்ன உனக்கு? ஆமா... அவங்க வரதுல எனக்கு சந்தோஷம். ரொம்ப சந்தோஷம் போதுமா?”
“ஏன்?”
“அது அப்படிதான்”
சட்டென்று காரை சாலையோரம் அவன் நிறுத்த புரியாமல் பார்த்தாள். அவள்புறம் திரும்பி அமர்ந்து “எதுக்கு சந்தோஷப்படுறன்னு சொல்லு” என்றான்.
“இது என்ன பிடிவாதம்? உங்க வீட்டுல எல்லாரயும் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? காரை எடு ஆதர்ஷ்”
“அவங்கள எதுக்கு நீ பார்க்கணும்”
“நான் வாழப்போற வீட்டுல யாரெல்லாம் இருக்காங்கன்னுத் தெரிஞ்சுக்க எனக்கு ஆசை இருக்காதா?”
“இதையும் என் முகத்தப் பார்த்து சொல்ல மாட்டியா?”
“மாட்டேன். நீ கார் ஸ்டார்ட் பண்ணு. லேட் ஆகுது ஆதர்ஷ்”
புடவையை விரலில் சுற்றி விளையாடியபடியே தலை குனிந்து அமர்ந்திருந்தவளை சில நொடிகள் புன்னகையுடன் ரசித்தவன் அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டான்.
மதியத்திற்கு மேல் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தான் சபரீஷ்.
“என்னடா அதிசயம்? தூங்கலையா?”
“தூக்கம் வரல மச்சு. ஒரு நாள் ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் சேர்ந்து வெளில டின்னர் போகலாமான்னுக் கேட்க வந்தேன். போலாமா?”
“இந்த வீக் முடியாதுடா. நெக்ஸ்ட் வீக் போகலாம். டீ குடிக்குறியா?”
“நீ டீ போடப் போறியா?”
“வேற யாரு இருக்கா? வேணுமா வேணாமா?”
“கொண்டு வா... தலையெழுத்துடா...”
“அப்படியெல்லாம் அலுத்துக்கிட்டு நீ ஒண்ணும் டீ குடிக்க வேண்டாம்”
“சரி சரி... குடிக்குறேன் எடுத்துட்டு வா”
ஆதர்ஷ் டீ எடுத்து வர சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றான் சபரீஷ். மோகனிற்கு அழைத்துக் கிளம்பிவிட்டார்களா என்றுக் கேட்டவன் காலை ஸ்டேஷன் வருவதாகக் கூறி வைத்தான்.
அன்று முழுவதும் அவன் தன்னிடம் ஏதாவது விபரம் கூறுவான் என்று எதஈர்ப்பார்த்து ஏமாந்துப் போனாள் நக்ஷத்ரா.
“எப்போ வராங்க? எப்படி வராங்க? என்னை அவங்கள மீட் பண்ண வைப்பானா? ஒண்ணும் சொல்லல... ச்ச... இப்போ போய் கேட்டா ஏடாகூடமா கேள்விக் கேட்பான். பேசாம சபரீஷ்கிட்ட கேட்டா?? வேண்டாம். அது நல்லா இருக்காது...”
தனக்குள்ளே யோசித்துக் குழம்பியவள் அவன் முகத்தை திரும்பி திரும்பிப் பார்க்க அதை கண்டுக் கொள்ளாமல் அவள் வீட்டில் விட்டுச் சென்றான் ஆதர்ஷ்.
ஸ்டேஷனில் அவனைக் கண்டதும் அவன் பின்னால் தேடிய வினோதினி “என்னண்ணா... அண்ணிய ஸ்டேஷனுக்கே கூட்டிட்டு வந்து அப்பா அம்மா கால்ல விழ வைப்பன்னு நெனச்சேன்... கூட்டிட்டு வரலையா?” என்று சோகமாகக் கேட்டாள்.
“பேசாம வா வினோ... அப்பறம் பார்த்துக்கலாம்”
மோகன் காரில் பெட்டிகளை அடுக்க அவனருகில் வந்த சுஜா “போன வாரம் வீட்டுல அண்ணின்னு வினோ சொன்னதுக்கு அந்த குதி குதிச்ச... இப்போ என்னமோ அப்பறம் பார்த்துக்கலாம்னு சொல்லுற?” என்றுக் கேட்க “நீங்க உட்காருங்க மாம். வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று கார் கதவை திறந்து விட்டான்.
அப்போதும் அவர் அவனை கூர்ந்து கவனித்தபடியே அமர டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.
“நல்ல ஊரு...” என்று மோகன் கூற “ஆமாமா... சூப்பர் ஊரு டாடி” என்றாள் வினோ.
அவள் எதுவும் உளறிவிடுவாளோ என்ற பயத்திலேயே கெஸ்ட் ஹவுஸ் வரை வந்தவன் வீட்டிற்குள் செல்லும் முன் தந்தை கவனிக்காத சமயம் “தயவுசெஞ்சு உன் வாய வெச்சுக்கிட்டு சும்மா இரு. டாடிக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என்று எச்சரித்தான்.
“டாடிக்கு என்ன தெரிய வேண்டாம்? டேய்... நெஜமாவே லவ் பண்ணுறியா?”
“கத்தாதடி... உள்ள வா முதல்ல”
“அம்மாகிட்ட சொல்லிட்டியாடா?”
“இன்னும் இல்ல. சொல்லணும். மம்மி விடுற லுக்க பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு. கோபமா இருக்காங்களா வினோ?”
“அதெல்லாம் இல்லடா... நீ வீட்டுக்கு வந்தப்போ கேட்டாங்கல்ல... நீ உருப்படியா எதுவும் சொல்லலன்னு கொஞ்சம் காண்டு. அவ்வளவுதான். சமாளிச்சுடலாம்”
“என்ன அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் குசுகுசுன்னு?”
“சாக்லேட் கேட்டேன் மம்மி”
“வந்ததும் வராததுமா சாக்லேட்... இவன் உன்னையும் சேர்த்து கெடுக்குறான்”
அவர் எரிச்சலுடன் கூறி கிட்செனுள் செல்ல “சத்தியமா உள்குத்தோட தான் பேசுறாங்க. உனக்குதான் இப்போ திட்டு விழுந்துது” என்றாள் வினோ.
“புரியுது...” என்று முனுமுனுத்தவன் ஆழ மூச்சை எடுத்து சமையலறையுள் சென்றான்.
முந்தைய தினம் அவன் பிரிட்ஜில் வாங்கி வைத்திருந்த பாலை சுஜா காய்ச்சிக் கொண்டிருக்க “நான் டீ போடுறேன்மா. நீங்க போய் குளிங்க” என்றான்.
“தேவையில்ல. எந்த பழக்கத்தையும் மாத்த வேண்டாம். நீ டயர்டா இருப்ப... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போகணும்”
“போகலாம்மா. நீங்க போய் குளிங்க. நான் டீ போடுறேன்”
திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவர் டீ தூளை தேட டப்பாவை எடுத்து நீட்டியவன் “பேச மாட்டீங்களா மாம்?” என்றுக் கேட்டான்.
“பேசிட்டுதான இருக்கேன்?”
“இவங்க எனக்கு அம்மான்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணுறாங்க” என்று நினைத்தவன் அவர் கைகளை பற்றி “என்ன கோபம் சொல்லுங்க” என்றான்.
“உனக்கு நக்ஷத்ராவ பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கதான் டாடிகிட்ட பேசணும்”
“தெரியுதுல்ல... நான் தான் உன் டாடிகிட்ட பேசணும்னு... அப்போ நீ ஒழுங்கா என்கிட்ட சொல்லி வெச்சாதான நான் நேரம் பார்த்து அவங்ககிட்ட பேச முடியும். அத விட்டுட்டு... எந்த அம்மாடா பையன்கிட்ட வந்து இவ்வளவு தூரம் கேட்பாங்க? நான் வந்து கேட்கவும் இளக்காரமா தெரியுதா? இப்போ வந்து கெஞ்சுற? எதுக்கு...”
“சாரி மாம். நீங்க கேட்டப்போ... எனக்குப் பிடிச்சிருந்துது. ஆனா எந்தளவுக்குன்னு சரியா தெரியல. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். சாரி... நெஜமா உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லம்மா. வேற யார்கிட்ட சொல்லப் போறேன்?”
“நக்ஷத்ராகிட்ட சொல்லிட்டியா?”
“...”
“திருட்டு முழி முழிக்குறதுலயே தெரியுது. போ... போய் தூங்கு. ஈவ்னிங் சபரீஷ் வீட்டுக்குப் போயிட்டு அப்பறமா அப்பாகிட்ட கேட்டுப் பார்க்குறேன்”
ஒரு நொடியும் தாமதிக்காமல் வெளியே வந்துவிட்டான்.
“ஷ்ஷ்ஷ்... அம்மாவ சமாளிக்குறது எவ்வளவு கஷ்டமா இருக்கு...”
“என்னண்ணா பேயறஞ்ச மாதிரி வர?”
“நீ போய் குளி போ”
“அப்பா குளிக்குறாங்க. எனக்கு அண்ணி நம்பர் குடுண்ணா. போன்லயாவது பேசுறேன். போட்டோ காமிச்சதோட சரி...”
“நம்பர் எல்லாம் தர முடியாது” என்றவன் “இதுக்கு மேல முழிச்சிருந்தா எல்லா பக்கமும் மாட்டிப்போம் போலயே” என்று நினைத்து அறைக்குள் ஓடிவிட்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனது மொபைல் அடிக்க சிரமப்பட்டு கண்களை திறந்து எடுத்துப் பார்த்தான். நக்ஷத்ரா அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்கும் முன் “ஆதர்ஷ்... சீக்கிரம் எழுந்துக் கிளம்பு. எவ்வளவு நேரமா எழுப்புறேன்... நாங்க எல்லாரும் ரெடி” என்று குரல் கொடுத்தார் சுஜா.
மணியை பார்த்தவன் அவசரமாக எழுந்து அழைப்பை ஏற்று “நான் வெளில கிளம்பிட்டு இருக்கேன் நக்ஷத்ரா. வீட்டுக்கு வரும்போது பேசுறேன்” என்றுக் கூறி வைத்துக் குளிக்கச் சென்றான்.
நக்ஷத்ராவின் தவிப்பு இரட்டிப்பானது. நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க முயன்றாள்.