- Joined
- Nov 15, 2021
- Messages
- 32
- Reaction score
- 39
ஹாய் டியர்ஸ்...
நான் உங்க அனாமிகா 78. ஸ்டோரி ஸ்டார்ட் செய்யறதுக்கு முன்னே முன்னோட்டம் மட்டும் இப்போ தரேன்.
இதோ...
முன்னோட்டம்:
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த கனலிக்கு தலை வலித்தது. ‘என்ன இது! இப்படி வலிக்குது?’ என்று நினைத்தவாறே தன்னை சமன்படுத்தியவளுக்கு அப்போதுதான் தனக்கு பரிச்சயமற்ற இடத்தில் இருப்பது உரைத்தது. சட்டென சுற்றும் முற்றும் பார்த்தால், அது அவள் இருப்பிடமில்லை.
‘எங்கே இருக்கேன்? என்ன நடந்தது?’ என்று பயந்தவள், தன்னை ஆராய, எதுவும் மாற்றம் தெரியவில்லை.
“தேங்க் காட்!” என்றவள் ஆசுவாசப்படுத்தி எதிரில் இருந்த கதவை திறக்க முயற்சித்தாள். முடிந்தால் தானே! வெளிப்பக்கமாக தாளிட்டிருந்தது.
“ஹெல்ப்! யாராவது இருக்கீங்களா! கதவ திறந்து விடுங்க!” என்றவள் தட்டி கையும் தொண்டையும் சோர்ந்தது தான் மிச்சம்.
வேறு மார்க்கம் தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தவாறே மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்தாள். அறையின் நீள அகலங்களை அவள் அளந்து கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒற்றைக் கதவு திறந்து, அதை அடைத்தவாறு உள்ளே நுழைந்தான் அவன்.
அவனைக் கண்டதும் அதிர்ந்தவள், “நீயா?” என்று கேட்க, அவள் அதிர்வை உள்வாங்கியவாறே நுழைந்தான் அவன்.
“ஆமாம். நானே தான்!” என்றவன், “ரொம்ப கத்திருப்ப. இந்த ஜூசைக் குடி!” என்று அவன் கையில் இருந்த பழரசத்தைத் தர,
‘அட சண்டாளா! நான் கத்துறத கேட்டுட்டே தான் இருந்தியா நீ?’ என அவனை வசைபாடியவாறே வேண்டாம் என மறுத்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“போராட ரொம்ப பலம் வேணும் பேபி! குடி. அப்புறம் நீ மயங்கிட்டா நான் என்ன செய்ய?” என்று அவன் சிறிது சிரிப்புடன் கூற, அதில் அவள் உடலில் நடுக்கம் ஓடியது.
அவன் பார்வையில் தான் ஏன் பட்டோமோ என்று நினைத்து மறுகினாள் பெண்.
அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு, “ப்ளீஸ்! என்னை விட்டுரு! என் புருஷன் என்னை தேடுவாரு. என் குழந்தை என்னை விட்டுட்டு இருக்க மாட்டான்!” என்றிட,
“ஐ டோன்ட் கேர் எபவுட் எனிதிங்” என்றவன், பழரசத்தை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளை நெருங்கினான்.
நான் உங்க அனாமிகா 78. ஸ்டோரி ஸ்டார்ட் செய்யறதுக்கு முன்னே முன்னோட்டம் மட்டும் இப்போ தரேன்.
இதோ...
முன்னோட்டம்:
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த கனலிக்கு தலை வலித்தது. ‘என்ன இது! இப்படி வலிக்குது?’ என்று நினைத்தவாறே தன்னை சமன்படுத்தியவளுக்கு அப்போதுதான் தனக்கு பரிச்சயமற்ற இடத்தில் இருப்பது உரைத்தது. சட்டென சுற்றும் முற்றும் பார்த்தால், அது அவள் இருப்பிடமில்லை.
‘எங்கே இருக்கேன்? என்ன நடந்தது?’ என்று பயந்தவள், தன்னை ஆராய, எதுவும் மாற்றம் தெரியவில்லை.
“தேங்க் காட்!” என்றவள் ஆசுவாசப்படுத்தி எதிரில் இருந்த கதவை திறக்க முயற்சித்தாள். முடிந்தால் தானே! வெளிப்பக்கமாக தாளிட்டிருந்தது.
“ஹெல்ப்! யாராவது இருக்கீங்களா! கதவ திறந்து விடுங்க!” என்றவள் தட்டி கையும் தொண்டையும் சோர்ந்தது தான் மிச்சம்.
வேறு மார்க்கம் தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தவாறே மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்தாள். அறையின் நீள அகலங்களை அவள் அளந்து கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒற்றைக் கதவு திறந்து, அதை அடைத்தவாறு உள்ளே நுழைந்தான் அவன்.
அவனைக் கண்டதும் அதிர்ந்தவள், “நீயா?” என்று கேட்க, அவள் அதிர்வை உள்வாங்கியவாறே நுழைந்தான் அவன்.
“ஆமாம். நானே தான்!” என்றவன், “ரொம்ப கத்திருப்ப. இந்த ஜூசைக் குடி!” என்று அவன் கையில் இருந்த பழரசத்தைத் தர,
‘அட சண்டாளா! நான் கத்துறத கேட்டுட்டே தான் இருந்தியா நீ?’ என அவனை வசைபாடியவாறே வேண்டாம் என மறுத்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“போராட ரொம்ப பலம் வேணும் பேபி! குடி. அப்புறம் நீ மயங்கிட்டா நான் என்ன செய்ய?” என்று அவன் சிறிது சிரிப்புடன் கூற, அதில் அவள் உடலில் நடுக்கம் ஓடியது.
அவன் பார்வையில் தான் ஏன் பட்டோமோ என்று நினைத்து மறுகினாள் பெண்.
அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு, “ப்ளீஸ்! என்னை விட்டுரு! என் புருஷன் என்னை தேடுவாரு. என் குழந்தை என்னை விட்டுட்டு இருக்க மாட்டான்!” என்றிட,
“ஐ டோன்ட் கேர் எபவுட் எனிதிங்” என்றவன், பழரசத்தை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளை நெருங்கினான்.