- Joined
- Nov 15, 2021
- Messages
- 32
- Reaction score
- 39
வணக்கம் ப்ரெண்ட்ஸ்...
இது தான் கதையின் கடைசி டீசர். நெக்ஸ்ட் முதல் பதிவுல சந்திப்போம். கதையின் முதல் எபி அடுத்த வாரம் வரும்...
காலையில் இருந்து மாலை வரை எண்ணற்ற வேலைகள் வரிசை கட்டி நின்றிருந்தன. அவை அனைத்தையும் முடித்தவன் கடிகாரத்தைப் பார்க்க, ‘நேரம் ஆகிவிட்டது!’ என்று உரத்து கூறிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் வீட்டில் இருப்பவள் நினைவு வர, அவளை இன்றும் கலங்கடிப்போமா? என்று ஒரு கணம் நினைத்தான்.
‘நீ செய்வது எல்லாத்தையும் பொறுத்து தான் போறாளே ஒழிய, ஒரு ரியாக்ஷனும் காணோமே!’ என்று அவன் உள்மனம் கூற, ‘அடிமேல் அடி வைக்க அம்மியும் தேயுமாம். இவ தேய மாட்டாளா? அவ தீர்மானத்துல இருந்து மாறட்டும். அப்போ பார்த்துக்கறேன்’ என நினைத்தவன் முகத்திலோ விகாரமானதொரு புன்னகை.
அதே புன்னகையோடு இன்றும் அவளை குதறித் தள்ளும் நோக்கோடு வீட்டிற்கு விரைந்தான்.
அவன் மனதை இத்தனை நேரம் படுத்தி எடுத்தவளோ அவன் வரும் நேரம் பார்த்திருந்தாள். ‘இன்று என்ன யோசித்து வருகிறானோ?’ என எண்ணியவாறே தன் குழந்தையின் மீது கவனத்தை திருப்பினாள்.
அந்த கயவனுக்குள்ளும் சிறு ஈரம் உள்ளது போல. அதனால் மட்டுமே இங்கே இவளுக்கு வாழ்வதற்கு பிடிப்பாக இருக்கிறது அவள் பிள்ளை.
இதை அவள் யோசித்தவாறே அமர்ந்திருக்கும் நேரம் அவளை நோக்கி வந்தான் அவன்.
அவன் வந்ததை தன்னருகே கேட்ட அவனுக்கே உரிய பூட்ஸ் சத்தத்தை வைத்து கணித்தவள், தடதடக்கும் மனதோடு நின்றாள். தன் தாய் எழுவதைக் கண்ட பிஞ்சோ எதிரில் நின்றவனைக் கண்டு தாயின் கால்களை பிடிப்பெனப் பற்றி ஒளிந்துகொண்டது.
அதனை தன் கூரிய விழிகளால் அளவிட்டவனோ அவளிடம், “சீக்கிரம் தூங்க வெச்சிட்டு அங்க வா!” என்று ஓர் அறையைக் கைக்காட்டினான்.
அதைக் கண்டவுடனேயே இன்று என்ன நடக்கும் என்பதைப் புரிந்தவள், ‘ஈஸ்வரா!’ என்று மனதுக்குள்ளேயே அழுதாள்.
அன்று நள்ளிரவு சமயத்தில் அவ்வறையை விட்டு வெளியேறியவள் கண்களில் இருந்ததெல்லாம் வலி மட்டுமே!
கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் செய்த உள்ளங்களுக்கு நன்றிகள்... விரைவில் சந்திப்போம் பிரண்ட்ஸ்...
இது தான் கதையின் கடைசி டீசர். நெக்ஸ்ட் முதல் பதிவுல சந்திப்போம். கதையின் முதல் எபி அடுத்த வாரம் வரும்...
காலையில் இருந்து மாலை வரை எண்ணற்ற வேலைகள் வரிசை கட்டி நின்றிருந்தன. அவை அனைத்தையும் முடித்தவன் கடிகாரத்தைப் பார்க்க, ‘நேரம் ஆகிவிட்டது!’ என்று உரத்து கூறிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் வீட்டில் இருப்பவள் நினைவு வர, அவளை இன்றும் கலங்கடிப்போமா? என்று ஒரு கணம் நினைத்தான்.
‘நீ செய்வது எல்லாத்தையும் பொறுத்து தான் போறாளே ஒழிய, ஒரு ரியாக்ஷனும் காணோமே!’ என்று அவன் உள்மனம் கூற, ‘அடிமேல் அடி வைக்க அம்மியும் தேயுமாம். இவ தேய மாட்டாளா? அவ தீர்மானத்துல இருந்து மாறட்டும். அப்போ பார்த்துக்கறேன்’ என நினைத்தவன் முகத்திலோ விகாரமானதொரு புன்னகை.
அதே புன்னகையோடு இன்றும் அவளை குதறித் தள்ளும் நோக்கோடு வீட்டிற்கு விரைந்தான்.
அவன் மனதை இத்தனை நேரம் படுத்தி எடுத்தவளோ அவன் வரும் நேரம் பார்த்திருந்தாள். ‘இன்று என்ன யோசித்து வருகிறானோ?’ என எண்ணியவாறே தன் குழந்தையின் மீது கவனத்தை திருப்பினாள்.
அந்த கயவனுக்குள்ளும் சிறு ஈரம் உள்ளது போல. அதனால் மட்டுமே இங்கே இவளுக்கு வாழ்வதற்கு பிடிப்பாக இருக்கிறது அவள் பிள்ளை.
இதை அவள் யோசித்தவாறே அமர்ந்திருக்கும் நேரம் அவளை நோக்கி வந்தான் அவன்.
அவன் வந்ததை தன்னருகே கேட்ட அவனுக்கே உரிய பூட்ஸ் சத்தத்தை வைத்து கணித்தவள், தடதடக்கும் மனதோடு நின்றாள். தன் தாய் எழுவதைக் கண்ட பிஞ்சோ எதிரில் நின்றவனைக் கண்டு தாயின் கால்களை பிடிப்பெனப் பற்றி ஒளிந்துகொண்டது.
அதனை தன் கூரிய விழிகளால் அளவிட்டவனோ அவளிடம், “சீக்கிரம் தூங்க வெச்சிட்டு அங்க வா!” என்று ஓர் அறையைக் கைக்காட்டினான்.
அதைக் கண்டவுடனேயே இன்று என்ன நடக்கும் என்பதைப் புரிந்தவள், ‘ஈஸ்வரா!’ என்று மனதுக்குள்ளேயே அழுதாள்.
அன்று நள்ளிரவு சமயத்தில் அவ்வறையை விட்டு வெளியேறியவள் கண்களில் இருந்ததெல்லாம் வலி மட்டுமே!
கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் செய்த உள்ளங்களுக்கு நன்றிகள்... விரைவில் சந்திப்போம் பிரண்ட்ஸ்...