- Joined
- Nov 1, 2021
- Messages
- 7
- Reaction score
- 8
ஹாய் நண்பர்களே நான் தான் உங்கள் அனாமிகா -22.
என் கதையை படித்து உங்கள் விமர்சன்ங்களைக் கொண்டு என்னை ஊக்குவிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் முதல் டீசரை வெளியிடுகிறேன்.
அது ஒரு கொலைக்களம் - எந்த மனிதனும் அங்கு சென்றால் இரத்தமும் சதையும் உறையும் அளவிற்கு குளிரும் இருட்டும்.
அதுமட்டுமல்லாது உறை நிலையில் பதபடுத்தி வைத்திருந்த மனித உடல்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.
மேலும் சிறு சிறு வட்ட வடிவ லேசர் ஒளிக்கதிர்கள் மாத்திரமே அந்த இருட்டு சாம்ராஜ்யத்தின் விளக்காய் இருந்தது.
அந்த இருளை கடந்து செல்கையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் வியப்பே வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருந்தது அந்த பளிங்கு மாளிகை.
அத்தனை அழகு மாளிகைக்கு முன் இவ்வளவு கோரமான முன் முற்றமா என்று பார்போரை நடுங்கி வியக்க வைக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்த சூழல் அவளையும் அவ்வாறே நடுங்கச் செய்தது.
கசாப்புக்கடையை தொழிலாய் நடத்தி வரும் கோகுலாவிற்கே அந்த வாசலின் ரெத்த வாடையை தாக்குபிடிக்க முடியாது வாந்தி எடுத்து விட்டாள்.
அவள் வாந்தி எடுத்த சத்தத்தை கேட்டு பருத்த உடம்புடன் முரட்டு தோற்றத்தோடு இருவர் " என்னடா சத்தம்..?? " என்று ஒருவருக் கொருவர் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு பதிலளித்த மற்றொருவன் "மச்சான் நம்மள யாரோ நோட்டம் விட வந்திருக்கான் போல.. வாடா யாரானாலும் விடக் கூடாது செதச்சிரணும்" என்று கூறி தங்களை மீறி புதியாய் வந்தது யார் என இருவரும் அக்ரோஷமாய் அந்த இருட்டில் தேட ஆரம்பித்தனர்.
ஆரம்பித்த சில நொடிகளில் நந்தா... அசோக்... என்று யாரோ கனத்த குரலில் கூப்பிடும் சத்தம் கேட்டது.
அந்த குரலுக்கு பெரும் மரியாதைக் கொடுத்து இரண்டு முரட்டு காளைகளும் கூப்பிட்ட குரலுக்கு ஓடினர்.
ஓடியவர்கள் " இது ஒருவழிப் பாதை எவன் வந்தாலும் வந்து வச்சுகலாம்" என்று கூறிக்கொண்டே ஒலித்த குரலின் திசை நோக்கி விரைந்தனர்.
கோகுலா தான் தைரியமான ஆள் ஆச்சே..! அதனால் தான் "இவனுங்க என்ன தான் பண்ணுறானுகணு பாப்போம்" என்று முணு முணுத்தவள் அவர்களை மறைந்து மறைந்து பின் தொடர்ந்தாள்.
அங்கு அவள் கண்ட காட்ச்சியோ அவளை அறியாமலே அவளது உடம்பு குப்பென்று வியர்த்து கைகால் நடுங்கியது.
பயந்து போய் சுவற்றில் ஒட்டி நின்றவள் ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்தது போல உணர்ந்தாள். மறு நிமிடம் மயங்கி கீழே விழுந்து விட்டாள்.
டீசர் எப்படி இருக்கு என்று கீழே கமேண்ட் பண்ணுங்க டியர்..!!