Chitrasaraswathi
முதலமைச்சர்
எஸ்.எம். தளம் ஆன்டி ஹீரோ கதை அனாமிகா 47ன் முள்ளோடு முத்தாடவா எனது பார்வையில். பொதுவாக ஆன்டி ஹீரோ கதைக்கு விமர்சனம் எழுதக் கூடாது என்பது எனது முடிவு. அதனால் எழுத்தாளர் சகோதர, சகோதரிகள் தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் இந்தக் கதையின் நாயகனை அந்த விதத்தில் சேர்க்க முடியாது. அவன் பிடிவாதக் காரன், கர்வி என்பதை தவிர.சாதாரணமாக விபத்தால் கால்கள் நடக்க முடியாத அர்ஜுன் கவனித்துக் கொள்ள மருத்துவரான பாரதி செவிலியராக அவன் வீட்டிற்குள் வருகிறாள். இவன் மனதையும், உடலையும் குணப்படுத்தும் பாரதியை பிடிவாதமாக மணக்கிறான் அர்ஜுன். அவனின் விபத்திற்கான காரணம் என்ன, பாரதி ஏன் அவனை குணப்படுத்த வருகிறாள் என்பதை திருப்பங்களுடன் தந்திருக்கிறார் இந்த அனாமிகா.