தலைப்பு:முள்ளோடு முத்தாட வா
தன்னை தீண்டுபவரையும் மண்டியிட்டு கைத்தாங்க செய்யும் முள் போல வசித்த என்னையும் மண்டியிட செய்த தங்கள் எழுத்தாளுமைக்கு என்னது வாழ்த்துக்கள்
. நான் மேற்கோள் காட்டிய தங்களின் வரிகளே கதையின் தலைப்பை விளக்கும் மணிமகுடம்.
கதாநாயகன்:
செல்வங்கள் பலகொண்ட
தனஞ்சயன் அவன்.எவராலும் வீழ்த்த முடியாத
விஜயன் அவன்.வெற்றிவாகை கொண்ட
கிரீடி அவன்.களத்தில் பிறர் வெறுக்கும் செயல்புரியா
பீபத்சு அவன்.பல ஆற்றல்கொண்ட
சவ்யசச்சின் அவன்.தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளை போல உலோக குதிரை கொண்ட
சுவேதவாகனன் அவன்.எவருக்கும் அடங்கா குணம் கொண்டு எதிரியை வீழ்த்தும்
ஜிஷ்ணு அவன்.கோபியர்சூழ்
கிருஷ்ணன் அவன்.அவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பரிசுத்தத்தை உணர்த்தும்
அர்ஜுன் என்னும் நாமம் கொண்டவன் இக்கதையின் நாயகன் .
கதாநாயகி:
தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ என்ற கூற்றுக்கிணங்க வீரச்சுட்டராய் விளங்கிய வீர பாவை அவள். உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று அச்சத்தை துச்சமாக கடந்த வீர மங்கை அவள்.பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வே னென்று நினைத்தாயோ? என்ற எதிரியை எதிர்க்கும் வீர நங்கை அவள். வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி என்று முழங்கிய
பாரதியின் நாமம் கொண்டு அக்கூற்றுக்கிணங்க வாழ்ந்தவள் அவள் இக்கதையின் நாயகி.
வில்லன்:
பாதம் தீண்டும் அலைகள் உனக்கு குழிபறிக்கின்றன என்ற கூற்றுக்கு சான்றானவன்.புராணங்களில் பெருந்துணிச்சல் மிக்கவன் என போற்றப்பட்ட சர்வதமனா சக்ரவர்த்தியின் மறுபெயரான பரத் என்னும் நாமம் கொண்டவன்.நம் நாயகன் அர்ஜுனின் மித்ரன் அவன்.
முத்தாரத்திலிருந்து சில முத்துக்கள்:
யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணி
என்ற வரிக்கேற்ப அர்ஜுனை வஞ்சத்தில் அழிக்க துடிக்கும் பரத்தின் சதியில் இருந்து
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
என்று அர்ஜுன் எவ்வாறு மீள்வான் ???
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!
என காதல் கொண்டு
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
என்று தான் கண்ணம்மாவை சரணடைவானா ??? அவள் அவனுக்கு துணை நிற்பாளா ???
இதுபோல பல தேடல்களுக்கு விடையாய்
முள்ளோடு முத்தாட வா...
கவித்துவமான கதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி
அனைவரும் வாசித்து மகிழுங்கள்
[விளக்கம் :
பெயர்-கதையின் நாயகன் அர்ஜுனின் குணங்களை மஹாபாரத அர்ஜுனனின் வேறு பெயர்கள் கொண்டும்;கதையின் நாயகி பாரதியின் குணங்களை மகாகவி பாரதியின் வரிகள் கொண்டும்; பரத்தின் பெயரை பரத பேரரசர் பெயரை கொண்டும் விலகி உள்ளேன்.
கதை-பரத்தின் வஞ்சத்தை பாஞ்சாலி சபதத்தில் கௌரவர்களின் வஞ்சத்தை குறிப்பிட்டுள்ள வரிகளுடன் ஒப்பிட்டுள்ளேன். (காரணம்:பாஞ்சாலி சபதத்தை நான் மஹாபாரத அர்ஜுனன் பற்றி மகாகவி பாரதியின் எழுத்தாக கருதியதால் இங்கு அவ்வரிகளை பயன்படுத்தி உள்ளேன்.) ]
இப்படிக்கு,
நுவலி