ஒரு மணி நேரத்தில் பின் வரும் கதைக்களனுக்காக நான் எழுதிய கதை.
கதைக்களன்:
கதை நடைபெறும் இடம் - தமிழக கிராமம்
முக்கிய கருவில் மைக்கேல் ஜாக்சன் இடம் பெற வேண்டும்.
கதைத் தலைப்பு: *மைக்கேல் ஜாக்சன்*
பிரம்மாண்ட மேடை. நடனச் சூராவளி மைக்கேல் ஜாக்சனுக்கு விருது வழங்கும் விழா. விருது வழங்குபவர் நடனப்புயல் பிரபு தேவா. அரங்கமே அதிர மேடையேறி நான் பரிசை அவரிடம் இருந்துப் பெற்றுக் கொண்டேன். என் எத்தனை வருட உழைப்பு? கனவு? சும்மாவா? அலங்காநல்லூர் பக்கத்தில் இருக்கும் மாலைப்பட்டிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு இது எவ்வளவு பெரிய சாதனை? மேடையில் கண்மூடி நான் பூமழையில் நனைகிறேன். ஏன் முகத்தில் ஒரே ஈரமா… தண்ணீரா இருக்கு? பூவில் இருந்து வந்திருக்குமோ? இந்த மாதிரி விழாவில் காகிதப் பூ தானே போடுவாங்க? கண்ணைத் திறந்தால்… எதிரில் என் அப்பத்தா.
ச்சை… திரும்ப அதே பரிசு வாங்கும் கனவு. “ஏன் அப்பத்தா? என்னை எழுப்பின? அதுவும் மூஞ்சியில் தண்ணி தெளிச்சு எழுப்பின? நானே விடியக்காலையில் தானே வந்து தூங்கினேன். உனக்கே இது நல்லா இருக்கா?”
“அப்பா, என் ராசா மைக்கோலு… எத்தினி வாட்டி நான் உன்னை எழுப்ப? உன் அப்பனும் ஆத்தாலும் காலைக் கஞ்சி குடிக்கனும்ல? அதான் மூஞ்சியில் தண்ணீர் தெளிச்சு எழுப்பினேன் சாக்கி”.
நற நற… பற்கள் கடிபடும் சத்தம். “அப்பத்தா, எத்தன வாட்டி சொல்ல? ஒழுங்கா என் பேரைச் சொல்லுனு”
“நான் என்ன பேராண்டி செய்ய? வாய்க்குள்ள நுழையுற பேரை உன் ஆத்தாளும், அப்பனும் வச்சிருக்கனும். அத விட்டுபுட்டு, மைக்கோலு சாக்கு சனலுனு வச்சா என் வாய்குள்ள வரத தான கூப்பிட முடியும்? நான் ஆசையா என்ற வீட்டுக்காரரு பேரை வச்சு சோனைமுத்துனு கூப்பிட்டாலும் நீ கோபிச்சுக்கிற. சரி என் அய்யன் பேரை வச்சு வெள்ளைச்சாமினு கூப்பிட்டலும், என் மாமனார் பேரு மாயாண்டினு கூப்பிட்டாலும் நீ சாமியாடுற. நான் என்ன சாமி பண்ணட்டும்?”
“அப்பத்தா, நீ ஒண்ணும் சொல்லிக் கூப்பிட வேணாம். பேராண்டினு சொல்லு போதும். பேரைக் கொல்லாத அப்பத்தா. அதான் உனக்கு சொல்ல வரலைல… விடு. அப்பத்தா, அப்புறம் எதுக்கு இப்படி ஒரு பேரை உம் மவனை வைக்க விட்ட?”
“உன் அப்பனை அப்படி சொல்லாத ராசா. அவனுக்கு சாக்கிசான் சண்டைனா பிடிக்கும். உன் தாத்தங்கிட்ட பொய் சொல்லி காசு வாங்கி மதுரைக்கு போயி மாப்பிள்ளை விநாயகர் தேட்டரில் உன் அப்பன் படம் பார்த்துட்டு வந்து திட்டு வாங்குவான். உன் ஆத்தாவிற்கு கமல்னா உசிரு. அவ ‘மைக்கோல் மதன காம ராசு’ படம் பார்த்துட்டு வந்து உன்ன பெத்ததால மைக்கோலுனு வைக்க ஆசப்பட்டா. நீயும் நடிகனாட்டம் சிவப்பா அழகா இருக்கவும், உன் தாத்தனும் சரினு சொல்லிட்டாரு. அதான் அந்த பேர வைச்சோம் ராசா.”
“சரி, சரி, நானும் இத தெனமும் கேட்குறேன் நீயும் சளைக்காம சொல்லுற. நான் வெரசா குளிச்சுட்டு வாரேன். அப்பனும், ஆத்தாலும் களத்து மேட்டுக் காட்டுல வயல் வேலை பார்த்து களைச்சுப் போயிருப்பாக. நான் போய் மாத்தி விடுறேன் அப்பத்தா.”
மைக்கேல் ஜாக்சன், சோப்பு போட்டு குளிக்கும் போது, அவனுக்குள் அவன் எப்பவும் கேட்கும் அதேக் கேள்வி மனதில். “ஏன், எனக்கு அந்தக் கனவு நிதமும் வருது? ஆடத் தெரியாத எனக்கு எதுக்கு நடன சூறாவளி விருது? அதுவும் பிரபு தேவா கையில் இருந்து. மைக்கேல் ஜாக்சன்னு பேரு இருந்தா நான் நடனம் ஆடிடுவேனா? கனவுனாலும் ஒரு பொறுத்தம் வேணாம்? என்னைக் காத்து கறுப்பு அடிச்சிருக்குமோ? என்னவா இருக்கும்? சரி. பேரோட மகிமையா இருக்குமோ?”
ஆடத்தெரியாத தினமும் விருது வாங்கும் மைக்கேல் ஜாக்சன் உலகத்துல நான் ஒருத்தனா தான் இருப்பேன். இன்னைக்கி நேத்தா இந்தக் கனவு வருது? நினைவு தெரிஞ்ச நாளா வருது. பெயர் ரொம்ப வலிமை வாய்ந்தது தானோ? நம்ம பிள்ளைக்காவது பொருத்தமான நம்ம ஊரு பெயரா வைக்கனும். நினைப்பு பாட்டுக்கு இப்படி இருக்க, குளித்து, சாப்பிட்டு, வயல் வந்து சேர்ந்தது பழகிய உடம்பு. மைக்கேல் சாக்சன், தன் எண்ணத்தைக் களைந்து, வயலைக் களை எடுக்க ஆரம்பித்தான்.
- அனிராஜி AniRaje Dec 2, 2020 10:35-11:35 PM
கதைக்களன்:
கதை நடைபெறும் இடம் - தமிழக கிராமம்
முக்கிய கருவில் மைக்கேல் ஜாக்சன் இடம் பெற வேண்டும்.
கதைத் தலைப்பு: *மைக்கேல் ஜாக்சன்*
பிரம்மாண்ட மேடை. நடனச் சூராவளி மைக்கேல் ஜாக்சனுக்கு விருது வழங்கும் விழா. விருது வழங்குபவர் நடனப்புயல் பிரபு தேவா. அரங்கமே அதிர மேடையேறி நான் பரிசை அவரிடம் இருந்துப் பெற்றுக் கொண்டேன். என் எத்தனை வருட உழைப்பு? கனவு? சும்மாவா? அலங்காநல்லூர் பக்கத்தில் இருக்கும் மாலைப்பட்டிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு இது எவ்வளவு பெரிய சாதனை? மேடையில் கண்மூடி நான் பூமழையில் நனைகிறேன். ஏன் முகத்தில் ஒரே ஈரமா… தண்ணீரா இருக்கு? பூவில் இருந்து வந்திருக்குமோ? இந்த மாதிரி விழாவில் காகிதப் பூ தானே போடுவாங்க? கண்ணைத் திறந்தால்… எதிரில் என் அப்பத்தா.
ச்சை… திரும்ப அதே பரிசு வாங்கும் கனவு. “ஏன் அப்பத்தா? என்னை எழுப்பின? அதுவும் மூஞ்சியில் தண்ணி தெளிச்சு எழுப்பின? நானே விடியக்காலையில் தானே வந்து தூங்கினேன். உனக்கே இது நல்லா இருக்கா?”
“அப்பா, என் ராசா மைக்கோலு… எத்தினி வாட்டி நான் உன்னை எழுப்ப? உன் அப்பனும் ஆத்தாலும் காலைக் கஞ்சி குடிக்கனும்ல? அதான் மூஞ்சியில் தண்ணீர் தெளிச்சு எழுப்பினேன் சாக்கி”.
நற நற… பற்கள் கடிபடும் சத்தம். “அப்பத்தா, எத்தன வாட்டி சொல்ல? ஒழுங்கா என் பேரைச் சொல்லுனு”
“நான் என்ன பேராண்டி செய்ய? வாய்க்குள்ள நுழையுற பேரை உன் ஆத்தாளும், அப்பனும் வச்சிருக்கனும். அத விட்டுபுட்டு, மைக்கோலு சாக்கு சனலுனு வச்சா என் வாய்குள்ள வரத தான கூப்பிட முடியும்? நான் ஆசையா என்ற வீட்டுக்காரரு பேரை வச்சு சோனைமுத்துனு கூப்பிட்டாலும் நீ கோபிச்சுக்கிற. சரி என் அய்யன் பேரை வச்சு வெள்ளைச்சாமினு கூப்பிட்டலும், என் மாமனார் பேரு மாயாண்டினு கூப்பிட்டாலும் நீ சாமியாடுற. நான் என்ன சாமி பண்ணட்டும்?”
“அப்பத்தா, நீ ஒண்ணும் சொல்லிக் கூப்பிட வேணாம். பேராண்டினு சொல்லு போதும். பேரைக் கொல்லாத அப்பத்தா. அதான் உனக்கு சொல்ல வரலைல… விடு. அப்பத்தா, அப்புறம் எதுக்கு இப்படி ஒரு பேரை உம் மவனை வைக்க விட்ட?”
“உன் அப்பனை அப்படி சொல்லாத ராசா. அவனுக்கு சாக்கிசான் சண்டைனா பிடிக்கும். உன் தாத்தங்கிட்ட பொய் சொல்லி காசு வாங்கி மதுரைக்கு போயி மாப்பிள்ளை விநாயகர் தேட்டரில் உன் அப்பன் படம் பார்த்துட்டு வந்து திட்டு வாங்குவான். உன் ஆத்தாவிற்கு கமல்னா உசிரு. அவ ‘மைக்கோல் மதன காம ராசு’ படம் பார்த்துட்டு வந்து உன்ன பெத்ததால மைக்கோலுனு வைக்க ஆசப்பட்டா. நீயும் நடிகனாட்டம் சிவப்பா அழகா இருக்கவும், உன் தாத்தனும் சரினு சொல்லிட்டாரு. அதான் அந்த பேர வைச்சோம் ராசா.”
“சரி, சரி, நானும் இத தெனமும் கேட்குறேன் நீயும் சளைக்காம சொல்லுற. நான் வெரசா குளிச்சுட்டு வாரேன். அப்பனும், ஆத்தாலும் களத்து மேட்டுக் காட்டுல வயல் வேலை பார்த்து களைச்சுப் போயிருப்பாக. நான் போய் மாத்தி விடுறேன் அப்பத்தா.”
மைக்கேல் ஜாக்சன், சோப்பு போட்டு குளிக்கும் போது, அவனுக்குள் அவன் எப்பவும் கேட்கும் அதேக் கேள்வி மனதில். “ஏன், எனக்கு அந்தக் கனவு நிதமும் வருது? ஆடத் தெரியாத எனக்கு எதுக்கு நடன சூறாவளி விருது? அதுவும் பிரபு தேவா கையில் இருந்து. மைக்கேல் ஜாக்சன்னு பேரு இருந்தா நான் நடனம் ஆடிடுவேனா? கனவுனாலும் ஒரு பொறுத்தம் வேணாம்? என்னைக் காத்து கறுப்பு அடிச்சிருக்குமோ? என்னவா இருக்கும்? சரி. பேரோட மகிமையா இருக்குமோ?”
ஆடத்தெரியாத தினமும் விருது வாங்கும் மைக்கேல் ஜாக்சன் உலகத்துல நான் ஒருத்தனா தான் இருப்பேன். இன்னைக்கி நேத்தா இந்தக் கனவு வருது? நினைவு தெரிஞ்ச நாளா வருது. பெயர் ரொம்ப வலிமை வாய்ந்தது தானோ? நம்ம பிள்ளைக்காவது பொருத்தமான நம்ம ஊரு பெயரா வைக்கனும். நினைப்பு பாட்டுக்கு இப்படி இருக்க, குளித்து, சாப்பிட்டு, வயல் வந்து சேர்ந்தது பழகிய உடம்பு. மைக்கேல் சாக்சன், தன் எண்ணத்தைக் களைந்து, வயலைக் களை எடுக்க ஆரம்பித்தான்.
- அனிராஜி AniRaje Dec 2, 2020 10:35-11:35 PM