- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
11
எங்கெங்கோ தொலைந்து போன
எல்லா தேடல்களை விடவும்
உன்னைத் தேடுவதில் மட்டுமே
மும்முரமாய் எனது விழிகளும் எதிர்பார்ப்புகளும் !
உன் நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு
காதல் சிறையில் இருப்பதால்
அனைத்தையும் பழகிக்கொள்கிறேன்
காலையிலேயே வந்து நின்றிருந்த பாஸ்கரையும் சசியையும் பார்த்த மல்லிகா, அவர்களை வரவேற்க கூடத் தோன்றாமல் குழம்பி நிற்க,
"அத்தை... காபி போட்டுட்டேன்... சூடா இருக்கு... ஆறிப் போயிடும்... சீக்கிரம் வாங்க..." என்ற ஷிவானியின் குரல் வரவும், பரிதாபமாக உள்ளே எட்டிப் பார்த்தவர்களை கண்ட மல்லிகாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க, அப்பொழுது தான் அவர்கள் வெளியில் நிற்பதும் உறைக்க,
"என்ன சம்பந்தி? இங்கயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க..." என்று மல்லிகா அழைக்கவும், உள்ளே சென்றவர்களைப் பார்த்த ஷிவானி,
"ஹய்... அம்மா... அப்பா..." என்று கூவ, சசி அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்ன இது சசியோட லுக்கு ரொம்ப பாசமா இருக்கே... என்ன விஷயமா இருக்கும்? ஒருவேளை நான் சமயல் செய்து கொடுமை படுத்தறேன்னு அத்தை போன் செய்து சொல்லி இருப்பாங்களோ? ச்சே... ச்சே... அத்தை ரொம்ப நல்லவங்க... இந்த இனியன் சொல்லி இருப்பாரோ? இருக்கும் இருக்கும்... அதனால தான் இப்படி காலையிலயே வந்து நிக்கறாங்க... எப்படி சிவா சமாளிக்க போற? வேணா அவங்களுக்கு உப்புமா கிண்டி கொடுத்திரு... வாயே திறக்க முடியாம உன்னைத் திட்ட மாட்டாங்க...” என்று அவள் தனது மனதிலேயே வாதப் பிரதிவாதங்கள் செய்துக் கொண்டிருக்க,
"உன் செல் எங்கம்மா?" என்று பாஸ்கர் பரிதாபமாகக் கேட்க, அவரை ஒரு மாதிரிப் பார்த்தவள்,
"ஏன்? இங்க தானே இருக்கு..." என்றபடி அதைத் தேடத் தொடங்க, சசி அவளை மேலும் முறைத்துக் கொண்டிருந்தார்.
“ஹையோ... அம்மா ஓவரா முறைக்கிறாங்க... நாம என்ன தப்பு செய்தோம்?” என்று மூளையைத் தட்டிக் கொண்டே அவள் தனது மொபைலைத் தேட, அவளைப் பார்த்து கடுப்பான சசி,
"தேடுடி தேடு... அது ஆஃப் ஆகிக் கிடக்குது" என்று சொல்லவும்,
“ஹையோ... ஆஃப் ஆகிப் போச்சா? என் செல்லம் சோறு தண்ணி இல்லாம என்ன கஷ்டப்பட்டதோ?” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டே, வேக வேகமாகத் தேட, இறுதியாக ஒரு வழியாக தேடிக் கண்டுபிடித்து, எடுத்துக் கொண்டு வந்தவள், அதை முதலில் சார்ஜில் போட்டுவிட்டு,
“அம்மா பத்ரகாளி போல இருக்காங்க... சிவா... அப்படியே பாவமா லுக்கை மாத்து...” என்று தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொண்டவள், மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் சசியின் அருகே அமர்ந்தாள்.
"ஒண்ணும் என் பக்கம் வர வேண்டாம்... போய் உன் வேலையைப் பாரு..." நொடித்துக் கொண்டவரைப் பார்த்த மல்லிகாவிற்கு சிரிப்பு பொங்க,
“அம்மா...” ஷிவானி பாவமாக அழைக்க, அவளைப் பார்த்த மல்லிகா,
"சிவா... நீ காபி போட்டு எடுத்துட்டு வா..." என்று சொல்லவும், தயக்கமாக தனது பெற்றவர்களைப் பார்த்துக் கொண்டே ஷிவானி அடுப்பங்கரைக்குச் செல்ல, மல்லிகா சசியின் அருகே சென்று அமர்ந்தார்.
"சசி நீங்க அவ மேல கோபமா இருக்கீங்கன்னு புரியுது... அவளைக் கோவிச்சிக்காதீங்க... என்கூட வீட்டை சுத்தம் பண்றேன்னு எனக்கு உதவி பண்ணிட்டு இருந்தா? அதுலப் போனை கவனிக்காம இருந்திருப்பா... அவ உங்களுக்கு போன் செய்யாம இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கள... இல்லன்னா நானே சொல்லி இருப்பேன்..." என்று மல்லிகா சமாதானம் சொல்லவும்,
"கோபம் எல்லாம் இல்லைங்க... மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... எங்களுக்கு அவ ஒருத்தி தானே இருக்கா... அவளை விட்டுட்டு இருக்கறதே எங்களுக்கு பெரிய கஷ்டம் தான்... இதுல இந்த பொண்ணு ரெண்டு நாளா போன் கூட செய்யாம, நாங்க போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தா நாங்க என்ன ஆகறது? மாப்பிள்ளைக்கு கூப்பிட்டோம்... அவரு சொல்றேன்னு சொன்னார்... ஆனா இவ கிட்ட இருந்து போனைக் காணும்... உங்க நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்ன்னே வந்தது...
உங்களுக்கும் பொண்ணு இருக்கு இல்ல... என்னோட வருத்தம் என்னன்னு உங்களுக்கும் புரியுது தானே..." கலக்கமாகச் சொன்னவரைப் பார்த்த மல்லிகா, புரிந்தது என்பது போல சசியின் கையை அழுத்தினார்.
"அவ என் பொண்ணு மாதிரி சசி... உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்... புதுசா இந்த வீட்ல செட் ஆகணும், நல்ல பேர் எடுக்கணும்கற பரபரப்பு... தன் புருஷனுக்கு வாய்க்கு ருசியா செய்து கொடுக்கனுங்கற ஒரு ஆசை... அதெல்லாம் தான் இப்போ அவ மனசுல ஓடுது... அவங்க ரூமையும் வீட்டையும் எப்படி மாத்தி வச்சிருக்கா பாருங்க..." என்று ஷிவானிக்கு பரிந்து பேசவும், அப்பொழுது தான் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டிய சசி, தன் மகளை நினைத்து வியந்துக் கொண்டிருக்க, காபிக் கப்புகளுடன் வந்த ஷிவானி சசியை பெருமையாகப் பார்த்தாள்.
"நான் போட்ட காபியை குடிச்சுப் பாருங்க... அப்படியே கொஞ்சம் வெயிட் பண்ணினா டிபனும் பண்றேன் அதையும் சாப்பிட்டு பாருங்க..." பெருமை மிளிர சொன்ன மகளைப் பார்த்த சசியின் மனதில் வருத்தத்தை மீறிய நிம்மதி வந்தது.
"இல்லடி நான் அங்க மாவு அரைச்சு வச்சிருக்கேன்..." சசி தயங்க,
"உங்க பொண்ணோட கைப் பக்குவத்தை சாப்பிட்டுத் தான் பாருங்களேன்... இன்னைக்கு இங்க காலையில இட்லி சாம்பார் தான்... அதுக்குத் தான் அவ ரெடி பண்ணிட்டு இருந்தா..." மல்லிகாவின் குரலில் நிறைவு தெரிய, தன் மகள் புகுந்த வீட்டில் நல்ல பெயரோடு இடம் பிடித்ததை எண்ணி சசியும் பாஸ்கரும் மகிழ்ந்தனர்.
"சரி செய்... என்ன தான் செய்யறன்னு பார்ப்போம்... ஏதோ எங்க வயிறு நல்லா இருந்தா சரி..." என்று சசி கிண்டலாக சம்மதம் சொல்லவும், பாஸ்கர் அமைதியாக ஷிவானியின் மாற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
"என்னப்பா காபி நல்லா இல்லையா?" ஷிவானி கேட்டு முடிப்பதற்குள்,
"ரொம்ப நல்லா இருக்கு ஷிவா... நீயாடா இப்படி வேலை செய்யற?" வியந்து அவர் கேட்கவும், ஷிவானியைப் பார்த்து நக்கலாக சிரித்த சசி,
“அது தான் என்னாலேயே நம்ப முடியல... என்னவோ போங்க... எல்லாம் கனவு மாதிரி இருக்கு...” என்றபடியே, தன் கையில் இருந்த காபியை உறிஞ்ச, ஷிவானி அவரை முறைத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சுக்களுக்கு இடையே ஷிவானி காலை உணவை தயாரிக்க, "சிவா..." அறையில் இருந்தே புகழின் குரல் கேட்கவும்,
"அத்தை... இதை ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்க... நான் வரேன்... அவர் கூப்பிடற மாதிரி இருக்கு..." என்று ஆவலும் நாணமும் போட்டிப் போட சென்ற மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனம் நிறைந்தது.
"என்னங்க... அப்பா அம்மா வந்திருக்காங்க" என்று சொன்னவளை இழுத்து அணைத்தவன்,
"ஹ்ம்ம்... பொண்ணை பார்க்காம இருக்க முடியலையாக்கும்? அதுவும் என்ன இவ்வளவு காலையிலேயே அவங்க செல்ல பொண்ணைப் பார்க்க வந்திருக்காங்க? பாப்பா ஒழுங்கா இருக்காளான்னு பார்க்க வந்தாங்களா?" என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே, அவளது கழுத்து வளைவில் இதழ் பதிக்க,
"என்ன இன்னைக்கு புதுசா?" என்று சிணுங்கியவளின் இதழ்களை நெருங்கியவன்,
"சும்மா...:" என்று ராகம் பாடிக் கொண்டே, அவளை நெருங்கினான்.
அவனது இதழ் தீண்டல்களையும், எதிர்பாராத விதமாக அவனது இந்த அணைப்பையும் ரசித்தவள், "போதும்ங்க... வெளிய வாங்க... இன்னைக்கு தான் அப்படியே உங்களுக்கு கொஞ்ச எல்லாம் தோணும்..." என்று சிணுங்கிக் கொண்டே, விலகிச் சென்றவளுடன் சிரிப்புடன் வெளியில் சென்றவன்,
"வாங்க மாமா... வாங்க அத்தை..." என்று வரவேற்க, சசியோ ஷிவானியின் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
“என்ன உனக்கு சிரிப்பு?” என்று ஷிவானி அவரிடம் கடுகடுக்க,
“இல்ல... சும்மா...” என்றபடி புகழைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி, சசியைப் பார்த்து முறைத்தாள்.
“இப்போ தான் எழுந்து வரீங்களா?” பாஸ்கர் சம்பந்தமில்லாமல் கேட்க,
“ஆமா... மாமா...” என்றவனிடம்,
“சிவா நல்லா காபி போடறா...” என்று பாஸ்கர் ஷிவானியை ஸ்லாகித்து புகழைப் பார்க்க, ஷிவானி அவனுக்கான காபியை கொடுக்கவும், புகழ் பாஸ்கரைப் பார்த்து புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
அவனது தொழில் சம்பந்தமாக பாஸ்கர் பேசத் துவங்கவும், அவன் அதற்கு பதில்களை ஒற்றை வரியில் சொல்லிக் கொண்டிருக்க, காலை உணவை ஷிவானி அவசரமாக தயாரிக்க, “சிவா... சாயந்திரம் ரெடியா இரு... நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்...” என்று புகழ் சொல்லவும், ஷிவானி மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.
இருந்தாலும் அவனது வேலைப் பளுவையும், அவனது புது தொழிலின் ஆரம்ப கட்ட வேலைகளில் அவன் மும்மரமாக இருப்பதை ஒருமுறை அவன் சொல்லக் கேட்டு அறிந்திருந்தவள்,
“உங்களுக்கு டைம் இல்லன்னா வேண்டாம் இனியன்... இப்போ கடை போடற வேலை எல்லாம் இருக்கே... நாம சனி ஞாயிறு அந்த மாதிரி போகலாம்...” என்று அவள் சொல்லவும், அவளது அருகே வந்தவன்,
“எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல சிவா... கொஞ்ச நேரம் விக்ரமை பார்த்துக்க சொல்லிட்டு வந்துடுவேன்... ஒரு ஆறரை போல ரெடியா இரு... நான் வந்த உடனே கிளம்பிடலாம்...” என்று புகழ் சொல்ல, ஷிவானி வேக வேகமாக மண்டையை உருட்டினாள்.
“சரிங்க மாமா... நான் கடைக்கு கிளம்பறேன்... அப்போ தான் வேலை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வர முடியும்...” என்று காலை உணவு முடிந்த பிறகு புகழ் விடைப்பெற்று கிளம்ப, அன்றைய நாள் புகழுடன் வெளியில் செல்லும் பரபரப்பு ஷிவானியை அப்பொழுதிருந்தே தொற்றிக்கொண்டது.
புகழ் கிளம்பிச் செல்லவும், முகம் மலர்ந்து விகாசிக்க, தன் அருகே வந்த ஷிவானியைக் கண்ட சசிக்கு, இருந்த கோபம் எல்லாம் மறைந்து போக, “சிவா... நீ நல்ல பேர் எடுக்கறது எல்லாம் சரி தாண்டா... ஆனா... தினமும் அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசிடு... ஒரு ரெண்டு நிமிஷம்... உன் குரல் கேட்டாலே போதுமே...” என்ன முயன்றும், சசியின் குரலில் ஆதங்கம் வெளிப்பட, கண்ணீரும் மெல்ல எட்டிப் பார்த்தது.
“சாரிம்மா... நிஜமாவே ரொம்ப சாரி... இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்... நீ தானே நல்ல பிள்ளையா இருக்கணும்... நல்ல பேர் எடுக்கனும்னு சொன்ன... அதுக்குத் தான்ம்மா... ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் நல்லதா கொடுக்கணும் இல்ல...” மன்னிப்பை கேட்டவள், அவரது தோளில் சாய்ந்துக் கொண்டு செல்லம் கொஞ்ச, சசி அவளது தலையைத் தடவிக் கொடுத்தார்.
“நீ எப்பவுமே நல்ல சுட்டி பொண்ணு தான் ஷிவா...” என்று மல்லிகாவும் சொல்லவும், சசியைப் பார்த்து இல்லாத காலரை உயர்த்தியவள், அவரிடமும் செல்லம் கொஞ்சத் துவங்க, அவர்களுக்கு தனிமை அளித்து மல்லிகா வெளியில் கிளம்ப, ஷிவானி பதைபதைப்புடன்,
“எங்க அத்தை?” என்று எழ,
“கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரலாம்ன்னு இருக்கேன்ம்மா... நீ அப்பா அம்மா கூட பேசிட்டு இரு...” என்று அவர் நகர்ந்து சென்று விட, அவரது நாகரீகம், மூவரையும் அசைத்துப் பார்த்தது.
அவர் சென்றவுடன், தான் மல்லிகாவிடம் கற்றுக் கொண்டவற்றை எல்லாம் ஷிவானி வேகமாக சொல்லி முடிக்க, “ஏண்டி... இதைத் தானே நானும் செய்ன்னு சொல்லுவேன்... என்னைக்காவது செய்து இருக்கியாடி நீ?” என்று சசி சண்டைக்கு வரவும்,
“அது அம்மா வீடு... அங்க நான் எப்படி வேணா இருக்கலாம்... ஆனா இங்க அப்படி இருக்கக் கூடாது இல்லம்மா... அப்பறம் உன்னைத் தானே குத்தம் சொல்லுவாங்க...” என்று சொன்ன மகளின் நெற்றியில் இதழ் ஒற்றியவர், அந்த கடந்த ஐந்து நாட்களின் கதையை அளக்கத் துவங்கினர்.
சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்ப, “கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்களேன் சசி... ஷிவானி கூட இருந்தா மாதிரி இருக்கும்...” என்று மல்லிகா சொல்லவும்,
“இல்லைங்க அண்ணி... காலையில போட்டது எல்லாம் போட்டபடி வந்திருக்கேன்... போய் எல்லாம் சரி பண்ணிட்டு தான் சமையல் வேலையைப் பார்க்கணும்... இவருக்கும் வேலைக்கு போக நேரமாகிடுச்சு...” என்று சசி கிளம்ப எத்தனிக்க,
“நாளைக்கு வீட்டுக்கு ஷிவானியை அனுப்பறீங்களா? கொஞ்சம் நேரம் அங்க வந்து இருந்துட்டு திரும்ப வந்துடட்டும்... அங்க அவ இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி இருக்கு...” பாஸ்கர் மல்லிகாவிடம் அனுமதி கேட்கவும், மல்லிகாவிற்கு ஒரு மாதிரி ஆனது.
“என்னங்க இப்படி அனுமதி கேட்கறீங்க? நாளைக்கு அவளை வான்னு சொல்லிட்டு போங்க... நான் அனுப்பி வைக்கிறேன்... இப்படி எல்லாம் கேட்காதீங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று மல்லிகா சொல்லவும்,
“தேங்க்ஸ்ங்க...” என்ற பாஸ்கர், விடைப்பெற்றுக் கிளம்ப, மல்லிகா ஷிவானியை நோக்கித் திரும்பினார்.
“இங்க பாரு சிவா... எக்காரணம் கொண்டும் பெத்தவங்களை கலங்க வைக்கக் கூடாது... தினமும் பேசிடணும்... நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு ஷிவா... நீ இப்படி பேசமா இருந்தா அவங்க மனசு என்ன பாடு பட்டு இருக்கும்... தினமும் எவ்வவு வேலை இருந்தாலும் அவங்க கிட்ட பேச மறக்காதே... அதே போல...
உங்க ரெண்டு பேருக்கும் சண்டைன்னா கூட அது அந்த நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும்... அனாவசியமா பெத்தவங்க வரைப் போய் அவங்களை கவலைப் படுத்தக் கூடாது... என்கிட்டையும் தான் சொல்றேன்... நீங்களே எல்லாத்தையும் சரி பண்ணிக்கணும்...” என்று சிறிது கண்டிப்புடன் சொல்ல, ஷிவானி சரி என்று தலையசைத்து கேட்டுக் கொண்டு, அமைதியாக அமர்ந்தாள்.
சசியின் கண்ணீர் அவள் மனதை கனக்கச் செய்ய, மீண்டும் அவருக்கு போன் செய்தவள், சிறிது நேரம் பேசி, வம்பு செய்துவிட்டே போனை வைக்க, அவளது மனது நிம்மதியாக ஆனது.
“அத்தை... சாயந்திரம் கோவிலுக்கு புடவை கட்டவா... இல்ல சுடிதார்ல போகவா?” மதிய உணவை வாயில் திணித்துக் கொண்டே ஷிவானி கேட்க,
“ஹ்ம்ம் புடவையே கட்டிட்டு வா...” என்று புகழின் குரல் அருகே கேட்கவும், ஷிவானி துள்ளிக் குத்திக்காத குறையாக,
“இனியன்... நீங்க வந்தாச்சா... சீக்கிரம் வாங்க சாப்பிடுங்க...” என்று sசந்தோஷமாக அவள் எழப் போக, அவளை பிடித்து அமர வைத்தவன்,
“நீ சாப்பிடு நானும் வரேன்...” என்று அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தனக்கும் உணவை பரிமாறிக் கொண்டு sஉண்ணத் துவங்கியவன், வேகமாக பசிக்கு எதையோ உண்டு முடிக்க,
“இதுக்கு நீங்க சாப்பிடாமலே இருந்திருக்கலாம்... என்ன அவசரமோ?” என்று ஷிவானி முணுமுணுக்க,
“என்ன செய்யறதும்மா... இப்போ ஒரு கடை பார்க்க போறோம்... நல்லா இருந்தா பேசி முடிக்கணும்... அந்த கடை ஓனர் மதியத்துக்கு மேல தான் வருவாராம்...” என்று புகழ் சொல்லவும்,
“ஹ்ம்ம்...” என்று கேட்டுக் கொண்டவள்,
“அப்போ சரி... சீக்கிரம் போய் பார்த்து பேசிட்டு வாங்க... நான் சாயந்திரம் ரெடியா இருக்கேன்...” என்று ஷிவானி சந்தோஷமாகச் சொல்லவும், ஒரு புன்னகையுடன் விடைப்பெற்றவன், பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறிது நேரம் டிவி பார்த்தவள், அதற்கு மேல் புகழுடன் வெளியில் செல்லப் போகும் மகழ்ச்சி தாளாமல், ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்த மல்லிகா...
“எல்லாமே நல்லா இருக்கு ஷிவானி உனக்கு...” என்று சொல்லவும்,
“இதுல எது பெஸ்ட்ன்னு சொல்லுங்க அத்தை...” என்று கேட்க, மல்லிகா தேர்வு செய்து கொடுத்த புடவையை எடுத்து வைத்தவள்,
“நிஜமாவே சூப்பர் செலெக்ஷன் தான் அத்தை... அவருக்கும் அதே கலர்ல சட்டை இருக்கான்னு பார்க்கறேன்...” என்று அவனது அலமாரியில் இருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு சட்டையை எடுத்து வைக்க, மல்லிகா அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாலை ஐந்து மணிக்கே தயாராகத் தொடங்கியவளைப் பார்த்த மல்லிகா, அவளது தலைக்கு வைத்துக் கொள்ள மல்லிகைப் பூவை வாங்கி வைத்து விட, “இது தான் எங்க அத்தை...” என்று ஸ்லாகித்து, அந்த புடவைக்கு தோதான செட் நகைகளை அணிந்து, சந்தோஷமாக வெளியில் வந்தவளைப் பார்த்த மல்லிகா, கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
“அப்படியே ஹோட்டல் போய் சாப்பிட்டு வாங்க... அவன் வரட்டும் சொல்றேன்...” என்று மல்லிகா சொல்லவும், ஷிவானியின் மகழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
“சூப்பர் ஐடியா அத்தை... ஆனா... நீங்க? நீங்களும் எங்க கூட வாங்க...” தங்கள் வீட்டு நினைவில் அவள் அழைக்க,
“சும்மா நான் எதுக்கும்மா? நீங்க போயிட்டு வாங்க... நான் ஒருத்தி வரேங்கறதுக்காக காரை எடுக்கணும்...” நாசுக்காக அவர் விலக,
“அவர் வரட்டும்... அவரையே கூப்பிடச் சொல்றேன்...” என்று நினைத்துக் கொண்டவள், புகழின் வரவுக்காக காத்திருந்தாள்.
கடிகாரம் தனது வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருக்க, மணி ஆறு மணியைக் கடந்து, ஏழைத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில்,
“அவன் கிளம்பிட்டானான்னு கொஞ்சம் போன் செய்து கேளேன்... எப்போ போயிட்டு எப்போ வர்ரது?” என்று மல்லிகா சொல்லவும், புகழுக்கு அழைத்த ஷிவானிக்கு, ஸ்விட்ச் ஆஃப் என்ற பதிலே வந்தது.
“ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது அத்தை... ஒருவேளை சார்ஜ் போயிருக்குமோ?” என்று அவள் யோசனையுடன் சொல்ல,
“இரு நான் என்னோட செல்லுல இருந்து விக்ரம்க்கு கூப்பிடறேன்...” என்று ஷிவானியிடம் சொன்ன மல்லிகா, விக்ரமிற்கு அழைக்க, அவனது செல்போனும் அதே பதிலைத் தந்தது.
புகழின் தோழர்கள் அனைவருக்கும் அழைத்தவருக்கு அதே பதிலே வர, ஷிவானியைப் பரிதாபமாகப் பார்க்க, ஷிவானியின் முகம் வாடத் துவங்கியது.
“இன்னைக்கு அந்த கடை ஓனர் கிட்ட பேசப் போறேன்னு சொன்னாங்க இல்ல அத்தை... அது பேசற போது டிஸ்டர்ப் ஆகக் கூடாதுன்னு ஆஃப் பண்ணி இருப்பாங்களா இருக்கும்...” என்று அவள் சமாதானம் சொல்லி,
“இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அத்தை...” என்று மீண்டும் அவனுக்காக காத்திருக்கத் துவங்கினாள்.
எங்கெங்கோ தொலைந்து போன
எல்லா தேடல்களை விடவும்
உன்னைத் தேடுவதில் மட்டுமே
மும்முரமாய் எனது விழிகளும் எதிர்பார்ப்புகளும் !
உன் நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு
காதல் சிறையில் இருப்பதால்
அனைத்தையும் பழகிக்கொள்கிறேன்
காலையிலேயே வந்து நின்றிருந்த பாஸ்கரையும் சசியையும் பார்த்த மல்லிகா, அவர்களை வரவேற்க கூடத் தோன்றாமல் குழம்பி நிற்க,
"அத்தை... காபி போட்டுட்டேன்... சூடா இருக்கு... ஆறிப் போயிடும்... சீக்கிரம் வாங்க..." என்ற ஷிவானியின் குரல் வரவும், பரிதாபமாக உள்ளே எட்டிப் பார்த்தவர்களை கண்ட மல்லிகாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க, அப்பொழுது தான் அவர்கள் வெளியில் நிற்பதும் உறைக்க,
"என்ன சம்பந்தி? இங்கயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க..." என்று மல்லிகா அழைக்கவும், உள்ளே சென்றவர்களைப் பார்த்த ஷிவானி,
"ஹய்... அம்மா... அப்பா..." என்று கூவ, சசி அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்ன இது சசியோட லுக்கு ரொம்ப பாசமா இருக்கே... என்ன விஷயமா இருக்கும்? ஒருவேளை நான் சமயல் செய்து கொடுமை படுத்தறேன்னு அத்தை போன் செய்து சொல்லி இருப்பாங்களோ? ச்சே... ச்சே... அத்தை ரொம்ப நல்லவங்க... இந்த இனியன் சொல்லி இருப்பாரோ? இருக்கும் இருக்கும்... அதனால தான் இப்படி காலையிலயே வந்து நிக்கறாங்க... எப்படி சிவா சமாளிக்க போற? வேணா அவங்களுக்கு உப்புமா கிண்டி கொடுத்திரு... வாயே திறக்க முடியாம உன்னைத் திட்ட மாட்டாங்க...” என்று அவள் தனது மனதிலேயே வாதப் பிரதிவாதங்கள் செய்துக் கொண்டிருக்க,
"உன் செல் எங்கம்மா?" என்று பாஸ்கர் பரிதாபமாகக் கேட்க, அவரை ஒரு மாதிரிப் பார்த்தவள்,
"ஏன்? இங்க தானே இருக்கு..." என்றபடி அதைத் தேடத் தொடங்க, சசி அவளை மேலும் முறைத்துக் கொண்டிருந்தார்.
“ஹையோ... அம்மா ஓவரா முறைக்கிறாங்க... நாம என்ன தப்பு செய்தோம்?” என்று மூளையைத் தட்டிக் கொண்டே அவள் தனது மொபைலைத் தேட, அவளைப் பார்த்து கடுப்பான சசி,
"தேடுடி தேடு... அது ஆஃப் ஆகிக் கிடக்குது" என்று சொல்லவும்,
“ஹையோ... ஆஃப் ஆகிப் போச்சா? என் செல்லம் சோறு தண்ணி இல்லாம என்ன கஷ்டப்பட்டதோ?” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டே, வேக வேகமாகத் தேட, இறுதியாக ஒரு வழியாக தேடிக் கண்டுபிடித்து, எடுத்துக் கொண்டு வந்தவள், அதை முதலில் சார்ஜில் போட்டுவிட்டு,
“அம்மா பத்ரகாளி போல இருக்காங்க... சிவா... அப்படியே பாவமா லுக்கை மாத்து...” என்று தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொண்டவள், மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் சசியின் அருகே அமர்ந்தாள்.
"ஒண்ணும் என் பக்கம் வர வேண்டாம்... போய் உன் வேலையைப் பாரு..." நொடித்துக் கொண்டவரைப் பார்த்த மல்லிகாவிற்கு சிரிப்பு பொங்க,
“அம்மா...” ஷிவானி பாவமாக அழைக்க, அவளைப் பார்த்த மல்லிகா,
"சிவா... நீ காபி போட்டு எடுத்துட்டு வா..." என்று சொல்லவும், தயக்கமாக தனது பெற்றவர்களைப் பார்த்துக் கொண்டே ஷிவானி அடுப்பங்கரைக்குச் செல்ல, மல்லிகா சசியின் அருகே சென்று அமர்ந்தார்.
"சசி நீங்க அவ மேல கோபமா இருக்கீங்கன்னு புரியுது... அவளைக் கோவிச்சிக்காதீங்க... என்கூட வீட்டை சுத்தம் பண்றேன்னு எனக்கு உதவி பண்ணிட்டு இருந்தா? அதுலப் போனை கவனிக்காம இருந்திருப்பா... அவ உங்களுக்கு போன் செய்யாம இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கள... இல்லன்னா நானே சொல்லி இருப்பேன்..." என்று மல்லிகா சமாதானம் சொல்லவும்,
"கோபம் எல்லாம் இல்லைங்க... மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... எங்களுக்கு அவ ஒருத்தி தானே இருக்கா... அவளை விட்டுட்டு இருக்கறதே எங்களுக்கு பெரிய கஷ்டம் தான்... இதுல இந்த பொண்ணு ரெண்டு நாளா போன் கூட செய்யாம, நாங்க போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தா நாங்க என்ன ஆகறது? மாப்பிள்ளைக்கு கூப்பிட்டோம்... அவரு சொல்றேன்னு சொன்னார்... ஆனா இவ கிட்ட இருந்து போனைக் காணும்... உங்க நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்ன்னே வந்தது...
உங்களுக்கும் பொண்ணு இருக்கு இல்ல... என்னோட வருத்தம் என்னன்னு உங்களுக்கும் புரியுது தானே..." கலக்கமாகச் சொன்னவரைப் பார்த்த மல்லிகா, புரிந்தது என்பது போல சசியின் கையை அழுத்தினார்.
"அவ என் பொண்ணு மாதிரி சசி... உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்... புதுசா இந்த வீட்ல செட் ஆகணும், நல்ல பேர் எடுக்கணும்கற பரபரப்பு... தன் புருஷனுக்கு வாய்க்கு ருசியா செய்து கொடுக்கனுங்கற ஒரு ஆசை... அதெல்லாம் தான் இப்போ அவ மனசுல ஓடுது... அவங்க ரூமையும் வீட்டையும் எப்படி மாத்தி வச்சிருக்கா பாருங்க..." என்று ஷிவானிக்கு பரிந்து பேசவும், அப்பொழுது தான் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டிய சசி, தன் மகளை நினைத்து வியந்துக் கொண்டிருக்க, காபிக் கப்புகளுடன் வந்த ஷிவானி சசியை பெருமையாகப் பார்த்தாள்.
"நான் போட்ட காபியை குடிச்சுப் பாருங்க... அப்படியே கொஞ்சம் வெயிட் பண்ணினா டிபனும் பண்றேன் அதையும் சாப்பிட்டு பாருங்க..." பெருமை மிளிர சொன்ன மகளைப் பார்த்த சசியின் மனதில் வருத்தத்தை மீறிய நிம்மதி வந்தது.
"இல்லடி நான் அங்க மாவு அரைச்சு வச்சிருக்கேன்..." சசி தயங்க,
"உங்க பொண்ணோட கைப் பக்குவத்தை சாப்பிட்டுத் தான் பாருங்களேன்... இன்னைக்கு இங்க காலையில இட்லி சாம்பார் தான்... அதுக்குத் தான் அவ ரெடி பண்ணிட்டு இருந்தா..." மல்லிகாவின் குரலில் நிறைவு தெரிய, தன் மகள் புகுந்த வீட்டில் நல்ல பெயரோடு இடம் பிடித்ததை எண்ணி சசியும் பாஸ்கரும் மகிழ்ந்தனர்.
"சரி செய்... என்ன தான் செய்யறன்னு பார்ப்போம்... ஏதோ எங்க வயிறு நல்லா இருந்தா சரி..." என்று சசி கிண்டலாக சம்மதம் சொல்லவும், பாஸ்கர் அமைதியாக ஷிவானியின் மாற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
"என்னப்பா காபி நல்லா இல்லையா?" ஷிவானி கேட்டு முடிப்பதற்குள்,
"ரொம்ப நல்லா இருக்கு ஷிவா... நீயாடா இப்படி வேலை செய்யற?" வியந்து அவர் கேட்கவும், ஷிவானியைப் பார்த்து நக்கலாக சிரித்த சசி,
“அது தான் என்னாலேயே நம்ப முடியல... என்னவோ போங்க... எல்லாம் கனவு மாதிரி இருக்கு...” என்றபடியே, தன் கையில் இருந்த காபியை உறிஞ்ச, ஷிவானி அவரை முறைத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சுக்களுக்கு இடையே ஷிவானி காலை உணவை தயாரிக்க, "சிவா..." அறையில் இருந்தே புகழின் குரல் கேட்கவும்,
"அத்தை... இதை ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்க... நான் வரேன்... அவர் கூப்பிடற மாதிரி இருக்கு..." என்று ஆவலும் நாணமும் போட்டிப் போட சென்ற மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனம் நிறைந்தது.
"என்னங்க... அப்பா அம்மா வந்திருக்காங்க" என்று சொன்னவளை இழுத்து அணைத்தவன்,
"ஹ்ம்ம்... பொண்ணை பார்க்காம இருக்க முடியலையாக்கும்? அதுவும் என்ன இவ்வளவு காலையிலேயே அவங்க செல்ல பொண்ணைப் பார்க்க வந்திருக்காங்க? பாப்பா ஒழுங்கா இருக்காளான்னு பார்க்க வந்தாங்களா?" என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே, அவளது கழுத்து வளைவில் இதழ் பதிக்க,
"என்ன இன்னைக்கு புதுசா?" என்று சிணுங்கியவளின் இதழ்களை நெருங்கியவன்,
"சும்மா...:" என்று ராகம் பாடிக் கொண்டே, அவளை நெருங்கினான்.
அவனது இதழ் தீண்டல்களையும், எதிர்பாராத விதமாக அவனது இந்த அணைப்பையும் ரசித்தவள், "போதும்ங்க... வெளிய வாங்க... இன்னைக்கு தான் அப்படியே உங்களுக்கு கொஞ்ச எல்லாம் தோணும்..." என்று சிணுங்கிக் கொண்டே, விலகிச் சென்றவளுடன் சிரிப்புடன் வெளியில் சென்றவன்,
"வாங்க மாமா... வாங்க அத்தை..." என்று வரவேற்க, சசியோ ஷிவானியின் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
“என்ன உனக்கு சிரிப்பு?” என்று ஷிவானி அவரிடம் கடுகடுக்க,
“இல்ல... சும்மா...” என்றபடி புகழைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி, சசியைப் பார்த்து முறைத்தாள்.
“இப்போ தான் எழுந்து வரீங்களா?” பாஸ்கர் சம்பந்தமில்லாமல் கேட்க,
“ஆமா... மாமா...” என்றவனிடம்,
“சிவா நல்லா காபி போடறா...” என்று பாஸ்கர் ஷிவானியை ஸ்லாகித்து புகழைப் பார்க்க, ஷிவானி அவனுக்கான காபியை கொடுக்கவும், புகழ் பாஸ்கரைப் பார்த்து புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
அவனது தொழில் சம்பந்தமாக பாஸ்கர் பேசத் துவங்கவும், அவன் அதற்கு பதில்களை ஒற்றை வரியில் சொல்லிக் கொண்டிருக்க, காலை உணவை ஷிவானி அவசரமாக தயாரிக்க, “சிவா... சாயந்திரம் ரெடியா இரு... நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்...” என்று புகழ் சொல்லவும், ஷிவானி மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.
இருந்தாலும் அவனது வேலைப் பளுவையும், அவனது புது தொழிலின் ஆரம்ப கட்ட வேலைகளில் அவன் மும்மரமாக இருப்பதை ஒருமுறை அவன் சொல்லக் கேட்டு அறிந்திருந்தவள்,
“உங்களுக்கு டைம் இல்லன்னா வேண்டாம் இனியன்... இப்போ கடை போடற வேலை எல்லாம் இருக்கே... நாம சனி ஞாயிறு அந்த மாதிரி போகலாம்...” என்று அவள் சொல்லவும், அவளது அருகே வந்தவன்,
“எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல சிவா... கொஞ்ச நேரம் விக்ரமை பார்த்துக்க சொல்லிட்டு வந்துடுவேன்... ஒரு ஆறரை போல ரெடியா இரு... நான் வந்த உடனே கிளம்பிடலாம்...” என்று புகழ் சொல்ல, ஷிவானி வேக வேகமாக மண்டையை உருட்டினாள்.
“சரிங்க மாமா... நான் கடைக்கு கிளம்பறேன்... அப்போ தான் வேலை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வர முடியும்...” என்று காலை உணவு முடிந்த பிறகு புகழ் விடைப்பெற்று கிளம்ப, அன்றைய நாள் புகழுடன் வெளியில் செல்லும் பரபரப்பு ஷிவானியை அப்பொழுதிருந்தே தொற்றிக்கொண்டது.
புகழ் கிளம்பிச் செல்லவும், முகம் மலர்ந்து விகாசிக்க, தன் அருகே வந்த ஷிவானியைக் கண்ட சசிக்கு, இருந்த கோபம் எல்லாம் மறைந்து போக, “சிவா... நீ நல்ல பேர் எடுக்கறது எல்லாம் சரி தாண்டா... ஆனா... தினமும் அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசிடு... ஒரு ரெண்டு நிமிஷம்... உன் குரல் கேட்டாலே போதுமே...” என்ன முயன்றும், சசியின் குரலில் ஆதங்கம் வெளிப்பட, கண்ணீரும் மெல்ல எட்டிப் பார்த்தது.
“சாரிம்மா... நிஜமாவே ரொம்ப சாரி... இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்... நீ தானே நல்ல பிள்ளையா இருக்கணும்... நல்ல பேர் எடுக்கனும்னு சொன்ன... அதுக்குத் தான்ம்மா... ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் நல்லதா கொடுக்கணும் இல்ல...” மன்னிப்பை கேட்டவள், அவரது தோளில் சாய்ந்துக் கொண்டு செல்லம் கொஞ்ச, சசி அவளது தலையைத் தடவிக் கொடுத்தார்.
“நீ எப்பவுமே நல்ல சுட்டி பொண்ணு தான் ஷிவா...” என்று மல்லிகாவும் சொல்லவும், சசியைப் பார்த்து இல்லாத காலரை உயர்த்தியவள், அவரிடமும் செல்லம் கொஞ்சத் துவங்க, அவர்களுக்கு தனிமை அளித்து மல்லிகா வெளியில் கிளம்ப, ஷிவானி பதைபதைப்புடன்,
“எங்க அத்தை?” என்று எழ,
“கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரலாம்ன்னு இருக்கேன்ம்மா... நீ அப்பா அம்மா கூட பேசிட்டு இரு...” என்று அவர் நகர்ந்து சென்று விட, அவரது நாகரீகம், மூவரையும் அசைத்துப் பார்த்தது.
அவர் சென்றவுடன், தான் மல்லிகாவிடம் கற்றுக் கொண்டவற்றை எல்லாம் ஷிவானி வேகமாக சொல்லி முடிக்க, “ஏண்டி... இதைத் தானே நானும் செய்ன்னு சொல்லுவேன்... என்னைக்காவது செய்து இருக்கியாடி நீ?” என்று சசி சண்டைக்கு வரவும்,
“அது அம்மா வீடு... அங்க நான் எப்படி வேணா இருக்கலாம்... ஆனா இங்க அப்படி இருக்கக் கூடாது இல்லம்மா... அப்பறம் உன்னைத் தானே குத்தம் சொல்லுவாங்க...” என்று சொன்ன மகளின் நெற்றியில் இதழ் ஒற்றியவர், அந்த கடந்த ஐந்து நாட்களின் கதையை அளக்கத் துவங்கினர்.
சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்ப, “கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்களேன் சசி... ஷிவானி கூட இருந்தா மாதிரி இருக்கும்...” என்று மல்லிகா சொல்லவும்,
“இல்லைங்க அண்ணி... காலையில போட்டது எல்லாம் போட்டபடி வந்திருக்கேன்... போய் எல்லாம் சரி பண்ணிட்டு தான் சமையல் வேலையைப் பார்க்கணும்... இவருக்கும் வேலைக்கு போக நேரமாகிடுச்சு...” என்று சசி கிளம்ப எத்தனிக்க,
“நாளைக்கு வீட்டுக்கு ஷிவானியை அனுப்பறீங்களா? கொஞ்சம் நேரம் அங்க வந்து இருந்துட்டு திரும்ப வந்துடட்டும்... அங்க அவ இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி இருக்கு...” பாஸ்கர் மல்லிகாவிடம் அனுமதி கேட்கவும், மல்லிகாவிற்கு ஒரு மாதிரி ஆனது.
“என்னங்க இப்படி அனுமதி கேட்கறீங்க? நாளைக்கு அவளை வான்னு சொல்லிட்டு போங்க... நான் அனுப்பி வைக்கிறேன்... இப்படி எல்லாம் கேட்காதீங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று மல்லிகா சொல்லவும்,
“தேங்க்ஸ்ங்க...” என்ற பாஸ்கர், விடைப்பெற்றுக் கிளம்ப, மல்லிகா ஷிவானியை நோக்கித் திரும்பினார்.
“இங்க பாரு சிவா... எக்காரணம் கொண்டும் பெத்தவங்களை கலங்க வைக்கக் கூடாது... தினமும் பேசிடணும்... நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு ஷிவா... நீ இப்படி பேசமா இருந்தா அவங்க மனசு என்ன பாடு பட்டு இருக்கும்... தினமும் எவ்வவு வேலை இருந்தாலும் அவங்க கிட்ட பேச மறக்காதே... அதே போல...
உங்க ரெண்டு பேருக்கும் சண்டைன்னா கூட அது அந்த நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும்... அனாவசியமா பெத்தவங்க வரைப் போய் அவங்களை கவலைப் படுத்தக் கூடாது... என்கிட்டையும் தான் சொல்றேன்... நீங்களே எல்லாத்தையும் சரி பண்ணிக்கணும்...” என்று சிறிது கண்டிப்புடன் சொல்ல, ஷிவானி சரி என்று தலையசைத்து கேட்டுக் கொண்டு, அமைதியாக அமர்ந்தாள்.
சசியின் கண்ணீர் அவள் மனதை கனக்கச் செய்ய, மீண்டும் அவருக்கு போன் செய்தவள், சிறிது நேரம் பேசி, வம்பு செய்துவிட்டே போனை வைக்க, அவளது மனது நிம்மதியாக ஆனது.
“அத்தை... சாயந்திரம் கோவிலுக்கு புடவை கட்டவா... இல்ல சுடிதார்ல போகவா?” மதிய உணவை வாயில் திணித்துக் கொண்டே ஷிவானி கேட்க,
“ஹ்ம்ம் புடவையே கட்டிட்டு வா...” என்று புகழின் குரல் அருகே கேட்கவும், ஷிவானி துள்ளிக் குத்திக்காத குறையாக,
“இனியன்... நீங்க வந்தாச்சா... சீக்கிரம் வாங்க சாப்பிடுங்க...” என்று sசந்தோஷமாக அவள் எழப் போக, அவளை பிடித்து அமர வைத்தவன்,
“நீ சாப்பிடு நானும் வரேன்...” என்று அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தனக்கும் உணவை பரிமாறிக் கொண்டு sஉண்ணத் துவங்கியவன், வேகமாக பசிக்கு எதையோ உண்டு முடிக்க,
“இதுக்கு நீங்க சாப்பிடாமலே இருந்திருக்கலாம்... என்ன அவசரமோ?” என்று ஷிவானி முணுமுணுக்க,
“என்ன செய்யறதும்மா... இப்போ ஒரு கடை பார்க்க போறோம்... நல்லா இருந்தா பேசி முடிக்கணும்... அந்த கடை ஓனர் மதியத்துக்கு மேல தான் வருவாராம்...” என்று புகழ் சொல்லவும்,
“ஹ்ம்ம்...” என்று கேட்டுக் கொண்டவள்,
“அப்போ சரி... சீக்கிரம் போய் பார்த்து பேசிட்டு வாங்க... நான் சாயந்திரம் ரெடியா இருக்கேன்...” என்று ஷிவானி சந்தோஷமாகச் சொல்லவும், ஒரு புன்னகையுடன் விடைப்பெற்றவன், பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறிது நேரம் டிவி பார்த்தவள், அதற்கு மேல் புகழுடன் வெளியில் செல்லப் போகும் மகழ்ச்சி தாளாமல், ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்த மல்லிகா...
“எல்லாமே நல்லா இருக்கு ஷிவானி உனக்கு...” என்று சொல்லவும்,
“இதுல எது பெஸ்ட்ன்னு சொல்லுங்க அத்தை...” என்று கேட்க, மல்லிகா தேர்வு செய்து கொடுத்த புடவையை எடுத்து வைத்தவள்,
“நிஜமாவே சூப்பர் செலெக்ஷன் தான் அத்தை... அவருக்கும் அதே கலர்ல சட்டை இருக்கான்னு பார்க்கறேன்...” என்று அவனது அலமாரியில் இருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு சட்டையை எடுத்து வைக்க, மல்லிகா அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாலை ஐந்து மணிக்கே தயாராகத் தொடங்கியவளைப் பார்த்த மல்லிகா, அவளது தலைக்கு வைத்துக் கொள்ள மல்லிகைப் பூவை வாங்கி வைத்து விட, “இது தான் எங்க அத்தை...” என்று ஸ்லாகித்து, அந்த புடவைக்கு தோதான செட் நகைகளை அணிந்து, சந்தோஷமாக வெளியில் வந்தவளைப் பார்த்த மல்லிகா, கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
“அப்படியே ஹோட்டல் போய் சாப்பிட்டு வாங்க... அவன் வரட்டும் சொல்றேன்...” என்று மல்லிகா சொல்லவும், ஷிவானியின் மகழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
“சூப்பர் ஐடியா அத்தை... ஆனா... நீங்க? நீங்களும் எங்க கூட வாங்க...” தங்கள் வீட்டு நினைவில் அவள் அழைக்க,
“சும்மா நான் எதுக்கும்மா? நீங்க போயிட்டு வாங்க... நான் ஒருத்தி வரேங்கறதுக்காக காரை எடுக்கணும்...” நாசுக்காக அவர் விலக,
“அவர் வரட்டும்... அவரையே கூப்பிடச் சொல்றேன்...” என்று நினைத்துக் கொண்டவள், புகழின் வரவுக்காக காத்திருந்தாள்.
கடிகாரம் தனது வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருக்க, மணி ஆறு மணியைக் கடந்து, ஏழைத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில்,
“அவன் கிளம்பிட்டானான்னு கொஞ்சம் போன் செய்து கேளேன்... எப்போ போயிட்டு எப்போ வர்ரது?” என்று மல்லிகா சொல்லவும், புகழுக்கு அழைத்த ஷிவானிக்கு, ஸ்விட்ச் ஆஃப் என்ற பதிலே வந்தது.
“ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது அத்தை... ஒருவேளை சார்ஜ் போயிருக்குமோ?” என்று அவள் யோசனையுடன் சொல்ல,
“இரு நான் என்னோட செல்லுல இருந்து விக்ரம்க்கு கூப்பிடறேன்...” என்று ஷிவானியிடம் சொன்ன மல்லிகா, விக்ரமிற்கு அழைக்க, அவனது செல்போனும் அதே பதிலைத் தந்தது.
புகழின் தோழர்கள் அனைவருக்கும் அழைத்தவருக்கு அதே பதிலே வர, ஷிவானியைப் பரிதாபமாகப் பார்க்க, ஷிவானியின் முகம் வாடத் துவங்கியது.
“இன்னைக்கு அந்த கடை ஓனர் கிட்ட பேசப் போறேன்னு சொன்னாங்க இல்ல அத்தை... அது பேசற போது டிஸ்டர்ப் ஆகக் கூடாதுன்னு ஆஃப் பண்ணி இருப்பாங்களா இருக்கும்...” என்று அவள் சமாதானம் சொல்லி,
“இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அத்தை...” என்று மீண்டும் அவனுக்காக காத்திருக்கத் துவங்கினாள்.