hiii dolis...happy reading
18
சென்னையில்…
தன்னை பார்க்க வந்திருக்கும் இருவரையும் பார்த்தவுடன் படுக்கையிலிருந்து சிரமப்பட்டு எழுந்தமர்ந்தார் காசி. பாதி மனிதனாக ஆகியிருந்தார். நோய் தன் கோர கரங்களை அவரை நோக்கி பாய்ச்சிருந்தது தெரிந்தது. தொடர் கதிரியக்க சிகிச்சையால் கன்னங்கள் இரண்டும் கருத்திருந்தது.
தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததற்கு அறிகுறியாக சிறிய ஓட்டை அதை சுற்றி துணி சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் வலி, ரகுவர கிருஷ்ணா மற்றும் விஸ்வநாதனை பார்த்ததும் சிறிது நேரம் ஒய்வு எடுக்க செல்ல,சிறிது ஒளி தெரிந்தது.
காசியின் அருகில் அமர்ந்த விஸ்வநாதன் "டேய் நீ ஏன் சிரமப்படுற? படு" என்க, அந்த அறையிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தார் ரகுவர கிருஷ்ணா.
காசியை பார்த்து சிறிது வருத்தமாக இருந்தது. எப்படி இருந்த மனிதன் இப்படி ஒளியிழந்து களையிழந்து இருக்கிறாரே என்று.
அவரை பார்த்து மெதுவாக சிரித்தார் காசி. அதற்கு மறுமொழியாக தலையசைத்த ரகுவரன், "எப்படி இருக்கு இப்ப?" என்று கேட்க, அந்த கேள்வியாகவே காந்திருந்தவர் போல்,
"ஷாக்கு மட்டும் ஏதாவது வழி பார்த்து விட்டுடேனா நிம்மதியா செத்து போயிருவேன். செஞ்ச பாவம் எல்லாம் சும்மா விடாதுனு சொல்றது சரி தான் போல… வலி கொன்னுக்கிட்டு இருக்கு…" என்று தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ஓட்டை இருப்பதால் காற்று போன்ற குரலில், இத்தனை வலியிலும் இயலாமையிலும் ஏதோ காமெடி சொல்வது போல் சிரித்துக்கொண்டே இலகுவாக கூறினார்.
ஷாவின் எந்த சூழ்நிலையையும் பதட்டமில்லாமல் கையாளும் திறன் யாரிடமிருந்து வந்தது என்று ரகுவரனுக்கு புரிந்தது.
"லூசு பையலே, அதெல்லாம் ஒன்னு இல்லை. நீ என்ன பாவம் பண்ண? எல்லாம் அறியாமையால் நீ பண்ணது. எல்லாரும் எல்லா சூழ்நிலையிலும் நல்லவங்களா இருக்க முடியாது" என்று விஸ்வநாதன் காசியை அதட்ட காசி சிரித்தார்.
உடல் வலியோ, மன வலியோ எப்படியோ வலியுடன் சிரிப்பவரின் கண்கள் பேசும் மொழி மிகவும் உருக்கமானது. அதை பார்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அப்படி பட்ட கண்கள் ஏதோ உன் மனதிற்குள் விதைக்க விளையும். ஒரு அழும் குழந்தையினை கை கொண்டு தூக்கி சமாதானப்படுத்த முடியாத தாயின் நிலையை போல் இருக்கும்.
"பாரு சொல்ல வந்ததை மறந்துட்டு என்னென்னமோ பேசிட்டு திரியுறோம். ஆருஷாவும் யாதவும் ஒண்ணா சேர்த்துட்டாங்க. கொஞ்ச நாளுல கல்யாணம் பண்ணி வச்சுரலாம். அதை சொல்ல தான் வந்தோம்" என்று விஸ்வநாதன் கூற, இவர் சொல்வதெல்லாம் உண்மையா என்பது போல் காசி ரகுவரனை பார்த்தார்.
"ஆமாம் காசி உண்மை தான்" என்று ரகுவரன் சொல்ல,
"ஷா கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டாளே… ஏதோ இருக்கு... இவ்வளவு சீக்கிரம்… முடியாது..." என்று தனது மகளை நன்கு அறிந்திருந்த தந்தையாக காசி கூற,
"என் பையனை பத்தி உனக்கு தெரியாதே காசி… காதல், கல்யாணம் இதெல்லாம் இல்லாம அவன் ஒரு பொண்ணு கூட இப்படி மாட்டான். கண்டிப்பா உன் பொண்ணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு கல்யாணம் பண்ணி உனக்கு மாப்பிள்ளையா வருவான் பாரு" தன் மகனின் குணமறிந்து தந்தையாக கூறினார் ரகுவரன்.
"நல்லதே நடக்கட்டும். ரொம்ப நன்றி சார்… என் பொண்ணை உங்க வீட்டு மருமகளா கொண்டு வரதுக்கு நீங்க இவ்வளவு மெனக்கிடுறிங்க…" என்று காசி நன்றியையும் கம்பிரகாமாவே கூறினார்.
"ஷா பத்தி இவன் நிறைய சொல்லிருக்கான்..." என்று தாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கும் விஸ்வநாதனை பார்த்து கூறியவர், "அவளோட passion வைராக்கியம், முதிர்ச்சியா யோசிக்கிறது, திமிர் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப வருஷமாவே எனக்கு யாதவ்க்கு ஷாவை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.”
“இடைல சிவாவும் ஷாவும் காதலிக்குறாங்க அப்படி இப்படினு இவன் சொல்லவும் யாதவ்க்கு கொடுத்து வைக்கல போல அப்படினு விட்டுட்டேன். அப்பறம் அவங்களுக்குள்ள ஒத்து வரல சிவாக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன் அப்படினு இவன் சொல்லவும் தான் என் தங்கச்சி பொண்ணை சிவாக்கு கொடுத்தது. அடுத்து ஷா யாதவ் கல்யாணமா தான் நினைச்சு இருந்தது. அதுக்குளையும் அவங்களே மீட் பண்ணி எல்லாத்தையும் சொதப்பவும், இதான் வாய்ப்புன்னு இடையில புகுந்து எப்படியாவது கல்யாணத்தை முடிச்சுரலாம்னு என்ன என்னமோ பண்ணேன். ஆனால் அதையும் ஷா எப்படி ஹாண்டில் பண்ணா பார்த்தியா? அதுக்கு அப்பறம் தான் யாதவ்க்கு ஷா தான் பொருத்தமான ஜோடினு முடிவே பண்ணிட்டேன்" என்று ரகுவரன் கூற விஸ்வநாதனும், காசியும் திறந்த வாய் மூடாமல் அவரையே பார்த்தனர்.
அவர் எண்ணங்களை எல்லாம் இதுவரை விஸ்வநாதனிடம் கூட அவர் சொன்னதில்லை. விஸ்வநாதனும் ஏன் இப்படி ஷாவையும் யாதவையும் இணைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறான் என்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு விடை இப்பொழுது கிடைத்திருக்கிறது.
"இப்ப ஒகே. ஆனால் ரெண்டு பெரும் பாக்குறதுக்கு முன்னாடி எப்படி ஷாவுக்கு யாதவையும், யாதவுக்கு ஷாவையும் பிடிக்கும்னு நீ எதிர்பார்த்த?" என்று 'உனக்கு பிடித்திருக்கின்ற ஒரே காரணத்துக்காக இருவரின் வாழ்க்கையில் நீ நினைத்ததை செய்வியா??' என்பது போல் விஸ்வநாதன் ரகுவரனிடம் கேட்டார்.
காசிக்கு புரிந்துவிட்டது. 'எப்படி ரகுவரன் இருவருக்கும் ஒத்துவரும்?' என்று நினைத்தார் என்று,
"சோ சிம்பிள், யாதவ் வந்து குழந்தை மாதிரி அவனுக்கு அதட்டி உருட்டி அம்மா ரோல் பண்ற பொண்ணு தான் சரியா வருவா. முதல் பிடிக்காத மாதிரி இருந்தாலும் அப்புறம் ரொம்ப விரும்ப ஆரம்பிச்சுருவான். யாதவ் எப்பயும் அடிமையா இருக்க தான் விரும்புவான். பத்தாததுக்கு ஷாக்கு கொஞ்சம் கரீனா கபூர் ஜாடை. சோ யாதவ் விழுத்துருவான்னு எனக்கு தெரியும்" என்று ரகுவரன் சிரிப்புடன் கூற, காசி ஷாவிற்கு எப்படி யாதவை பிடிக்கும் என்பதற்கான விளக்கத்தை கூறினார்.
"ஷாக்கு ஆளுமை அதிகம். அதுனால அவளுக்கு அவ சொல்றதை கேட்குற ஆளு தான் சரியா வருவான். அவளை ஒரே நேரத்துல தாயாவும், குழந்தையாவும் பாக்குற தன்மை யாதவ் கிட்ட தான் இருக்கு. சிவாக்கும் ஷாக்கும் ஒத்து வராததற்கு காரணம் இதான். ரெண்டுபேருமே ஆளுமை ஆனவங்க" என்று காசி கூறி முடிக்க, 'இத்தனை நாள் உங்க கூட தானே டா இருந்தேன்... என்னென்னமோ புதுசா சொல்லறீங்க…' என்பதுபோல் இருவரையும் பார்த்தார் விஸ்வநாதன்.
ஷில்லாங்…
ஷாவும் யாதவும் நடுவில் நிற்க, அவர்களுக்கு வலதுபுறம் சித் மற்றும் கனி அணைத்தவாறு சிறிது விலகியும் விலக்காதவரும் நின்றிருக்க, இடதுபுறம் கவி மற்றும் மாஹிர் கை கோர்த்து நின்றிருந்தனர். யாதவின் பார்வை முழுவதும் கோர்த்திருந்த இருவரது கைகளில் தான் இருந்தது.
ஷா தங்களுக்கு வலது புறமிருந்த சித் மற்றும் கனியிடம் "நீங்க ரெண்டு பேரும் எப்ப சேர்ந்திங்க..?"என்று கேட்க, அதே நேரத்தில் தங்களுக்கு இடது புறம் நின்றிருந்த கவியிடம்
"இவன் கூட நீ என்ன பண்ணிட்டு இருக்க.?" என்று அதட்டலாக கேட்டான் யாதவ்.
"அது...அது..அண்ணா சார்.." என்று கவி திணற, இடையில் புகுந்த மாஹிர் "ஹம் ரெண்டு பேரும் ஏக் துஸரே சே காதலிக்குறோம்..” (நாங்க ரெண்டு பேரும் நேசிக்குறோம்) என்று கூற, யாதவின் முகம் கடுமையாக மாறியது.
வலுக்கட்டாயமாக மாஹிரின் கரங்களிருந்து தனது கரத்தை உருவிய கவி "அண்ணா சார்.." என்று எதுவோ கூற முயற்சிக்க, அவளை நோக்கி வலக்கையை உயர்த்தி அவள் பேசுவதை நிறுத்தினான் யாதவ். அந்த இடைவேளையில் எப்படி என்று தெரியாமலே கவியின் கரத்தை மீண்டும் தனது கரத்துடன் பிணைத்திருந்தான் மாஹிர்.
அதில் இன்னும் கோவம் வரப்பெற்ற யாதவ் "எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இவளை லவ் பன்றேன்னு சொல்வ?" என்று மாஹிரின் சட்டையை யாதவ் பிடிக்க,
கவி, சித், கனி மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, யாதவின் கையில் சட்டென்று ஒரு அடியை போட்டாள் ஷா. அந்த எதிர்பாராத அடி வலிக்க மாஹிரின் சட்டையிலிருந்து கரங்களை விலக்கி ஷாவை பார்த்தான் யாதவ்.
மாஹிர் மற்றும் கவியை 'போங்கள்…' என்பது போல் கண்களால் சைகை செய்தாள் ஷா.
ஷாவை முறைத்த யாதவ், திரும்பி மாஹிர் மற்றும் கவியின் கோர்த்திருந்த கரங்களில் கோவமாக படிய, மாஹிரும் ஒரு ஏளனமான முறைப்புடன் கூடிய பார்வையை ஷாவின் கரத்துடன் பிணைந்திருந்த அவனது கரங்களின் மீது படரவிட்டான்.
அப்பொழுது தான் அதை உணர்ந்த யாதவ், 'நாம எப்ப இவை கையைப் பிடிச்சோம்? சரி ஒரு க்ரிப்புக்காக பிடிச்சுருப்போம்' என்று நினைத்தவாறு கரத்தை விலக்கினான்.
அந்த இடைவேளையில் மாஹிர் மற்றும் கவி இடத்தை காலி பண்ணிருக்க, ஷாவை முறைத்தான் யாதவ்.
"என்ன முறைப்பு..?"
"நான் பேசிட்டு இருக்கேன்ல. எதுக்கு அவங்களை அனுப்பி விட்ட?" என்று யாதவ் கேட்க, 'இவன் யாரு டா.? ஆக்ரோஷமாக பேச வேண்டிய டையலாக்கை ஆட்டுக்குட்டியை தடவி கொடுப்பது போல் பேசிட்டிருக்கான்' என்பது போல் யாதவை சித் மற்றும் கனி பார்த்தனர்.
"நீ பேசலை மேன். சண்டை போடுற. அது என்ன டா கேனைத்தனமான கேள்வி? உன் தங்கச்சியை லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம பக்கத்துக்கு வீட்டுகாரன்கிட்டயா போய் சொல்லுவான்?"
"எனக்கு புரியுது. மாஹிர் என்னை மாதிரி எல்லாம் கிடையாது. அவன் உண்மையா கவியை காதலிக்குறான். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவான். நீ தேவை இல்லாம ஒர்ரி பண்ணிக்காத" என்று ஷா கூற,
அவளை முறைத்த யாதவ், "என்ன உன்னை மாதிரி கிடையாது? பைத்தியம் மாதிரி பேசாதே. அவன் யாரு? எவன்னு அவன் பாக்ரௌண்ட் தெரியாம எப்படி கவி அவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் படுறா? அவ அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லை" என்று நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டு குழப்பத்துடன் கூறினான் யாதவ். அவன் இன்னும் மாஹிரை நம்பவில்லை.
"அவன் யாரோ இல்லை. மாஹிர் என் தம்பி" என்று ஷா அழுத்தமாக கூற,
எப்பொழுதும் போல சினிமாவிலே ஊறி ஈரம் பொதிந்திருந்த யாதவின் மூளை ஏடாகூடமாக யோசிக்க ஆரம்பித்து, வாய் வார்த்தையாகவும் வர ஆரம்பித்திருந்தது.
"யு மீன்…. உங்க அப்பாவோட பையனா…" என்று அவன் பேச ஆரம்பிக்க,
18
சென்னையில்…
தன்னை பார்க்க வந்திருக்கும் இருவரையும் பார்த்தவுடன் படுக்கையிலிருந்து சிரமப்பட்டு எழுந்தமர்ந்தார் காசி. பாதி மனிதனாக ஆகியிருந்தார். நோய் தன் கோர கரங்களை அவரை நோக்கி பாய்ச்சிருந்தது தெரிந்தது. தொடர் கதிரியக்க சிகிச்சையால் கன்னங்கள் இரண்டும் கருத்திருந்தது.
தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததற்கு அறிகுறியாக சிறிய ஓட்டை அதை சுற்றி துணி சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் வலி, ரகுவர கிருஷ்ணா மற்றும் விஸ்வநாதனை பார்த்ததும் சிறிது நேரம் ஒய்வு எடுக்க செல்ல,சிறிது ஒளி தெரிந்தது.
காசியின் அருகில் அமர்ந்த விஸ்வநாதன் "டேய் நீ ஏன் சிரமப்படுற? படு" என்க, அந்த அறையிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தார் ரகுவர கிருஷ்ணா.
காசியை பார்த்து சிறிது வருத்தமாக இருந்தது. எப்படி இருந்த மனிதன் இப்படி ஒளியிழந்து களையிழந்து இருக்கிறாரே என்று.
அவரை பார்த்து மெதுவாக சிரித்தார் காசி. அதற்கு மறுமொழியாக தலையசைத்த ரகுவரன், "எப்படி இருக்கு இப்ப?" என்று கேட்க, அந்த கேள்வியாகவே காந்திருந்தவர் போல்,
"ஷாக்கு மட்டும் ஏதாவது வழி பார்த்து விட்டுடேனா நிம்மதியா செத்து போயிருவேன். செஞ்ச பாவம் எல்லாம் சும்மா விடாதுனு சொல்றது சரி தான் போல… வலி கொன்னுக்கிட்டு இருக்கு…" என்று தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ஓட்டை இருப்பதால் காற்று போன்ற குரலில், இத்தனை வலியிலும் இயலாமையிலும் ஏதோ காமெடி சொல்வது போல் சிரித்துக்கொண்டே இலகுவாக கூறினார்.
ஷாவின் எந்த சூழ்நிலையையும் பதட்டமில்லாமல் கையாளும் திறன் யாரிடமிருந்து வந்தது என்று ரகுவரனுக்கு புரிந்தது.
"லூசு பையலே, அதெல்லாம் ஒன்னு இல்லை. நீ என்ன பாவம் பண்ண? எல்லாம் அறியாமையால் நீ பண்ணது. எல்லாரும் எல்லா சூழ்நிலையிலும் நல்லவங்களா இருக்க முடியாது" என்று விஸ்வநாதன் காசியை அதட்ட காசி சிரித்தார்.
உடல் வலியோ, மன வலியோ எப்படியோ வலியுடன் சிரிப்பவரின் கண்கள் பேசும் மொழி மிகவும் உருக்கமானது. அதை பார்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அப்படி பட்ட கண்கள் ஏதோ உன் மனதிற்குள் விதைக்க விளையும். ஒரு அழும் குழந்தையினை கை கொண்டு தூக்கி சமாதானப்படுத்த முடியாத தாயின் நிலையை போல் இருக்கும்.
"பாரு சொல்ல வந்ததை மறந்துட்டு என்னென்னமோ பேசிட்டு திரியுறோம். ஆருஷாவும் யாதவும் ஒண்ணா சேர்த்துட்டாங்க. கொஞ்ச நாளுல கல்யாணம் பண்ணி வச்சுரலாம். அதை சொல்ல தான் வந்தோம்" என்று விஸ்வநாதன் கூற, இவர் சொல்வதெல்லாம் உண்மையா என்பது போல் காசி ரகுவரனை பார்த்தார்.
"ஆமாம் காசி உண்மை தான்" என்று ரகுவரன் சொல்ல,
"ஷா கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டாளே… ஏதோ இருக்கு... இவ்வளவு சீக்கிரம்… முடியாது..." என்று தனது மகளை நன்கு அறிந்திருந்த தந்தையாக காசி கூற,
"என் பையனை பத்தி உனக்கு தெரியாதே காசி… காதல், கல்யாணம் இதெல்லாம் இல்லாம அவன் ஒரு பொண்ணு கூட இப்படி மாட்டான். கண்டிப்பா உன் பொண்ணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு கல்யாணம் பண்ணி உனக்கு மாப்பிள்ளையா வருவான் பாரு" தன் மகனின் குணமறிந்து தந்தையாக கூறினார் ரகுவரன்.
"நல்லதே நடக்கட்டும். ரொம்ப நன்றி சார்… என் பொண்ணை உங்க வீட்டு மருமகளா கொண்டு வரதுக்கு நீங்க இவ்வளவு மெனக்கிடுறிங்க…" என்று காசி நன்றியையும் கம்பிரகாமாவே கூறினார்.
"ஷா பத்தி இவன் நிறைய சொல்லிருக்கான்..." என்று தாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கும் விஸ்வநாதனை பார்த்து கூறியவர், "அவளோட passion வைராக்கியம், முதிர்ச்சியா யோசிக்கிறது, திமிர் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப வருஷமாவே எனக்கு யாதவ்க்கு ஷாவை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.”
“இடைல சிவாவும் ஷாவும் காதலிக்குறாங்க அப்படி இப்படினு இவன் சொல்லவும் யாதவ்க்கு கொடுத்து வைக்கல போல அப்படினு விட்டுட்டேன். அப்பறம் அவங்களுக்குள்ள ஒத்து வரல சிவாக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன் அப்படினு இவன் சொல்லவும் தான் என் தங்கச்சி பொண்ணை சிவாக்கு கொடுத்தது. அடுத்து ஷா யாதவ் கல்யாணமா தான் நினைச்சு இருந்தது. அதுக்குளையும் அவங்களே மீட் பண்ணி எல்லாத்தையும் சொதப்பவும், இதான் வாய்ப்புன்னு இடையில புகுந்து எப்படியாவது கல்யாணத்தை முடிச்சுரலாம்னு என்ன என்னமோ பண்ணேன். ஆனால் அதையும் ஷா எப்படி ஹாண்டில் பண்ணா பார்த்தியா? அதுக்கு அப்பறம் தான் யாதவ்க்கு ஷா தான் பொருத்தமான ஜோடினு முடிவே பண்ணிட்டேன்" என்று ரகுவரன் கூற விஸ்வநாதனும், காசியும் திறந்த வாய் மூடாமல் அவரையே பார்த்தனர்.
அவர் எண்ணங்களை எல்லாம் இதுவரை விஸ்வநாதனிடம் கூட அவர் சொன்னதில்லை. விஸ்வநாதனும் ஏன் இப்படி ஷாவையும் யாதவையும் இணைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறான் என்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு விடை இப்பொழுது கிடைத்திருக்கிறது.
"இப்ப ஒகே. ஆனால் ரெண்டு பெரும் பாக்குறதுக்கு முன்னாடி எப்படி ஷாவுக்கு யாதவையும், யாதவுக்கு ஷாவையும் பிடிக்கும்னு நீ எதிர்பார்த்த?" என்று 'உனக்கு பிடித்திருக்கின்ற ஒரே காரணத்துக்காக இருவரின் வாழ்க்கையில் நீ நினைத்ததை செய்வியா??' என்பது போல் விஸ்வநாதன் ரகுவரனிடம் கேட்டார்.
காசிக்கு புரிந்துவிட்டது. 'எப்படி ரகுவரன் இருவருக்கும் ஒத்துவரும்?' என்று நினைத்தார் என்று,
"சோ சிம்பிள், யாதவ் வந்து குழந்தை மாதிரி அவனுக்கு அதட்டி உருட்டி அம்மா ரோல் பண்ற பொண்ணு தான் சரியா வருவா. முதல் பிடிக்காத மாதிரி இருந்தாலும் அப்புறம் ரொம்ப விரும்ப ஆரம்பிச்சுருவான். யாதவ் எப்பயும் அடிமையா இருக்க தான் விரும்புவான். பத்தாததுக்கு ஷாக்கு கொஞ்சம் கரீனா கபூர் ஜாடை. சோ யாதவ் விழுத்துருவான்னு எனக்கு தெரியும்" என்று ரகுவரன் சிரிப்புடன் கூற, காசி ஷாவிற்கு எப்படி யாதவை பிடிக்கும் என்பதற்கான விளக்கத்தை கூறினார்.
"ஷாக்கு ஆளுமை அதிகம். அதுனால அவளுக்கு அவ சொல்றதை கேட்குற ஆளு தான் சரியா வருவான். அவளை ஒரே நேரத்துல தாயாவும், குழந்தையாவும் பாக்குற தன்மை யாதவ் கிட்ட தான் இருக்கு. சிவாக்கும் ஷாக்கும் ஒத்து வராததற்கு காரணம் இதான். ரெண்டுபேருமே ஆளுமை ஆனவங்க" என்று காசி கூறி முடிக்க, 'இத்தனை நாள் உங்க கூட தானே டா இருந்தேன்... என்னென்னமோ புதுசா சொல்லறீங்க…' என்பதுபோல் இருவரையும் பார்த்தார் விஸ்வநாதன்.
ஷில்லாங்…
ஷாவும் யாதவும் நடுவில் நிற்க, அவர்களுக்கு வலதுபுறம் சித் மற்றும் கனி அணைத்தவாறு சிறிது விலகியும் விலக்காதவரும் நின்றிருக்க, இடதுபுறம் கவி மற்றும் மாஹிர் கை கோர்த்து நின்றிருந்தனர். யாதவின் பார்வை முழுவதும் கோர்த்திருந்த இருவரது கைகளில் தான் இருந்தது.
ஷா தங்களுக்கு வலது புறமிருந்த சித் மற்றும் கனியிடம் "நீங்க ரெண்டு பேரும் எப்ப சேர்ந்திங்க..?"என்று கேட்க, அதே நேரத்தில் தங்களுக்கு இடது புறம் நின்றிருந்த கவியிடம்
"இவன் கூட நீ என்ன பண்ணிட்டு இருக்க.?" என்று அதட்டலாக கேட்டான் யாதவ்.
"அது...அது..அண்ணா சார்.." என்று கவி திணற, இடையில் புகுந்த மாஹிர் "ஹம் ரெண்டு பேரும் ஏக் துஸரே சே காதலிக்குறோம்..” (நாங்க ரெண்டு பேரும் நேசிக்குறோம்) என்று கூற, யாதவின் முகம் கடுமையாக மாறியது.
வலுக்கட்டாயமாக மாஹிரின் கரங்களிருந்து தனது கரத்தை உருவிய கவி "அண்ணா சார்.." என்று எதுவோ கூற முயற்சிக்க, அவளை நோக்கி வலக்கையை உயர்த்தி அவள் பேசுவதை நிறுத்தினான் யாதவ். அந்த இடைவேளையில் எப்படி என்று தெரியாமலே கவியின் கரத்தை மீண்டும் தனது கரத்துடன் பிணைத்திருந்தான் மாஹிர்.
அதில் இன்னும் கோவம் வரப்பெற்ற யாதவ் "எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இவளை லவ் பன்றேன்னு சொல்வ?" என்று மாஹிரின் சட்டையை யாதவ் பிடிக்க,
கவி, சித், கனி மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, யாதவின் கையில் சட்டென்று ஒரு அடியை போட்டாள் ஷா. அந்த எதிர்பாராத அடி வலிக்க மாஹிரின் சட்டையிலிருந்து கரங்களை விலக்கி ஷாவை பார்த்தான் யாதவ்.
மாஹிர் மற்றும் கவியை 'போங்கள்…' என்பது போல் கண்களால் சைகை செய்தாள் ஷா.
ஷாவை முறைத்த யாதவ், திரும்பி மாஹிர் மற்றும் கவியின் கோர்த்திருந்த கரங்களில் கோவமாக படிய, மாஹிரும் ஒரு ஏளனமான முறைப்புடன் கூடிய பார்வையை ஷாவின் கரத்துடன் பிணைந்திருந்த அவனது கரங்களின் மீது படரவிட்டான்.
அப்பொழுது தான் அதை உணர்ந்த யாதவ், 'நாம எப்ப இவை கையைப் பிடிச்சோம்? சரி ஒரு க்ரிப்புக்காக பிடிச்சுருப்போம்' என்று நினைத்தவாறு கரத்தை விலக்கினான்.
அந்த இடைவேளையில் மாஹிர் மற்றும் கவி இடத்தை காலி பண்ணிருக்க, ஷாவை முறைத்தான் யாதவ்.
"என்ன முறைப்பு..?"
"நான் பேசிட்டு இருக்கேன்ல. எதுக்கு அவங்களை அனுப்பி விட்ட?" என்று யாதவ் கேட்க, 'இவன் யாரு டா.? ஆக்ரோஷமாக பேச வேண்டிய டையலாக்கை ஆட்டுக்குட்டியை தடவி கொடுப்பது போல் பேசிட்டிருக்கான்' என்பது போல் யாதவை சித் மற்றும் கனி பார்த்தனர்.
"நீ பேசலை மேன். சண்டை போடுற. அது என்ன டா கேனைத்தனமான கேள்வி? உன் தங்கச்சியை லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம பக்கத்துக்கு வீட்டுகாரன்கிட்டயா போய் சொல்லுவான்?"
"எனக்கு புரியுது. மாஹிர் என்னை மாதிரி எல்லாம் கிடையாது. அவன் உண்மையா கவியை காதலிக்குறான். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவான். நீ தேவை இல்லாம ஒர்ரி பண்ணிக்காத" என்று ஷா கூற,
அவளை முறைத்த யாதவ், "என்ன உன்னை மாதிரி கிடையாது? பைத்தியம் மாதிரி பேசாதே. அவன் யாரு? எவன்னு அவன் பாக்ரௌண்ட் தெரியாம எப்படி கவி அவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் படுறா? அவ அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லை" என்று நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டு குழப்பத்துடன் கூறினான் யாதவ். அவன் இன்னும் மாஹிரை நம்பவில்லை.
"அவன் யாரோ இல்லை. மாஹிர் என் தம்பி" என்று ஷா அழுத்தமாக கூற,
எப்பொழுதும் போல சினிமாவிலே ஊறி ஈரம் பொதிந்திருந்த யாதவின் மூளை ஏடாகூடமாக யோசிக்க ஆரம்பித்து, வாய் வார்த்தையாகவும் வர ஆரம்பித்திருந்தது.
"யு மீன்…. உங்க அப்பாவோட பையனா…" என்று அவன் பேச ஆரம்பிக்க,