அத்தியாயம் 5
"அப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க..."என்று விஸ்வநாதன் கூறவும்...இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டவர்கள் முகத்தை சுளித்து ஒரே நேரத்தில் "வாட் தி ஹேக்..." "வாட் தி****"என்று கூவினர்…
இது தான் இன்றைக்கான ஆகச்சிறந்த அதிர்ச்சியாக இருக்கமுடியும்...நேற்று இரவு தான் இருவரும் முதன்முறையாக ஒருவர்க்கொருவர் சந்தித்துக்கொள்கின்றனர்…இருவரது முன்னாள் காதலர்களுக்கும் திருமணம்...அந்த வேதனை...அதைப் போக்க இருவரும் செய்தச் சிறிய செயல்... அது மிகப்பெரிய பூதாகரமாகி…இப்பொழுது இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கிறது...வாழ்கை நிச்சயமாக ஒரு பரபரப்பான அடுத்து வரும் நிகழ்வை கொஞ்சம் கூட யூகிக்க முடியாத மர்மநாவல் போன்றது தான் போலும்…
யாராவது முதல் நாள் மாலை வந்து இவர்கள் இருவரிடமும்...இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஒருவரை சந்திக்க போகிறீர்கள்...அவர்கள் உங்களது தற்காலிக காதலர்களாக இருப்பார்கள்...மறுநாள் உங்கள் பெற்றோர்களே அவர்களை திருமணம் செய்யச்சொல்லி உங்களை வற்புறுத்துவர் என்றுக் கூறியிருந்தால் இருவரும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்திருப்பர்...ஆனால் இன்றைய நிலைமையோ வேறு…
"என்னால இந்த ஆண்ட்டிகள் மனம் மயங்கும் ஹீரோவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது..."என்று ஷா யாதவை நோக்கி ஒரு நக்கல் பார்வையை வீசியவாறு கூறவும்...அவளின் வார்த்தைகளில் கோவம் கொப்பளித்துக்கொண்டுவர யாதவ் பற்களைக் கடித்துக்கொண்டு " கிர்ர்….என்னாலே எல்லாம் இந்த பஜாரியோட குடும்பம் நடந்த முடியாது..."
"எங்களுக்கு வேற வழியில்லை...உங்ககிட்ட நாங்க கல்யாணம் பண்ணிக்கிறிங்களானு அப்படினு கேட்கல...கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லுறோம் மிஸ் ஆருஷா..."என்று ரகுவரன் நாங்கள் சொல்வதே கேட்டாகணும் என்ற ரீதியில் கூறினார்…
அவர் மகன் கூறியப்பதில்லை அவர் ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளவில்லை...இப்பொழுது என்று இல்லை...எப்பொழுதுமே இப்படி தான்...
"ஏனோ...நாங்க நீங்க சொன்னதை கேட்கணும்...வெயிட்..வெயிட்...உங்க சீமந்த புத்திரன் வேணும்னா நீங்க சொல்லுறதை கேட்கலாம்...நான் ஏன் கேட்கணும்..."என்று ஷா கைகளைக் கட்டிக்கொண்டு அவரது முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்கவும்…
அவர் முகத்தில் சின்னதாக ஒரு மென்னகை வந்தது..."பிக்காஸ்...உங்களுக்கு வேற வழியில்லை...இப்ப வெளியேப் போய் என்ன சொல்லுவ நீ...குடிச்சுட்டு ஒரு நாள் ராத்திரி யாதவ் கிருஷ்ணாக்கு காதலியா இருந்தேனா...அது சொல்லறத்துக்கு உங்களுக்கு வேணும்னா நல்லதா இருக்கலாம்...ஆனால் என் ஸ்டேட்ஸ்க்கும்...என் குடும்பத்துக்கும் அது மிக பெரிய அசிங்கம்...நீங்க பண்ண தப்பை உங்களால திருத்த முடியாத பட்சத்தில் எங்க சொல்பேச்சு தான் கேட்கணும்...டூ யு கெட் தட்..."என்று ரகுவரன் தனக்கான ட்ரேட்மார்க் திமிருடன் ஷாவைப் பார்த்து கூறினார்…
"உங்ககிட்ட நாங்க சொன்னோமா...இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதுனு...நீங்களா இந்த சீன்க்குள்ள வந்துட்டு ஓவர் படம் காட்டுறிங்க...எப்படி இது உங்களுக்கு வந்த அசிங்கம்னு சொல்லுவீங்க...எனக்கு புரியல... மிஸ்டர் ரகுவரன்…"
"நேத்து உன்னோட தற்காலிக காதலனா இருந்த இந்த யாதவ் கிருஷ்ணா...தி கிரேட் ரகுவர கிருஷ்ணாவோட அதாவது என்னோட மகன்..."
"ஹான்...இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் ரகுவர கிருஷ்ணாவோட மகன் தான் யாதவ் கிருஷ்ணானு தெரியாது...இந்த என்னோட தற்காலிக காதலரா இருந்த யதாவோட அப்பா தான் இந்த ரகுவர கிருஷ்ணானு தெரியும்...உங்களோட அந்த சோ கால்டு கிருஷ்ணா பின்பெயர் இல்லாமயே இந்த யாதவை இரண்டு வயசு குழந்தைல இருந்து அறுவது வயசு கிழவி வரைக்கும் தெரியும்... இவனா இவனோட அடையாளத்தை உருவாக்கியிருக்கான்...மே பி...அவனோட முதல் வாய்ப்பு கிடைக்குறதுக்கு வேணும்னா இந்த கிருஷ்ணான்ற பேர் உதவி இருக்கலாம்...ஆனால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வரதுக்கு அவனோட திறமை மட்டும் தான் காரணம்...”
“அப்புறம் நான் யாரு..எந்த வீட்டு பொண்ணுன்னு யாருக்கும் தெரிச்சுருக்க வாய்ப்பில்லை ...சோ உங்களோட ஸெல்ப் obsessionஐ கொஞ்சம் கொறைச்சுகிட்டா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்..."
"அப்படி போடு டி என் பஜாரி...நிஜமாவே இவளை கல்யாணம் பண்ணிக்குவோமா...எங்க அப்பனை இந்த வாங்கு வாங்குறா...” என்று மனதினுள் நினைத்தவன்... நொடிப்பொழுதில் தான் நினைத்ததை உணர்ந்து அதிர்ந்தவன்...
ச்சி ச்சி,...யாதவ் உனக்கு ஏன் டா இப்படி புத்தி புல் மேயப்போது...யாருன்னே தெரியாத மனுஷனையே இந்த வாங்கு வாங்குனா...இவளுக்கு புருஷனாக வர போறவனை என்ன கதிக்கு ஆக்குவா... நாம உடம்பு எல்லாம் பித்து உடம்பு... அடி தாங்க மாட்டோம்..தூக்கி விட்டுரும்...."என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருவருக்கும் நடக்கும் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தான் யாதவ்...
"நேத்து என் கூட இருந்தது உங்க மகன் தானே..."
"ஏய்ய்...என்ன டி மொட்டையா உன் கூட இருந்ததுன்னு சொல்லுற...சும்மா இருந்தேன்னு சொல்லு டி...என் கற்பை நான் ஒன்னும் பண்ணாமலே கலங்க படுத்திருவா போலயே…."
“அவனும் நானும் இந்த பிரச்சனையே எப்படி தீர்க்குறது...ப்ரெஸ்க்கு என்ன பதில் சொல்லுறதுனு நாங்க பார்த்துக்குறோம்...நீங்க கொஞ்சம்..." என்று ரகுவரனுக்கு நன்றாக புரியும்படி கூறியவள்
"ஏய்..வாடா என்கூட..."என்று யாதவை அழைத்தவள்...அவன் வருவதற்குள் இவளே அவனின் அருகில் சென்றுக் கையை பிடித்துக்கொண்டு இல்லை இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற கதவை திறந்தாள்…
கதவை திறந்தவள் வெளியே செல்லாமல் ரகுவரனை திரும்பிப்பார்த்து "நீங்க சொல்லுற சோ கால்டு ஸ்டேட்டஸை வைச்சு சமூக வலைதளத்தில் பரவிக்கிட்டு இருக்க எங்க விடியோஸ் போட்டோசை எடுங்க...அப்ப தான் நீங்க பெரிய ப....பணக்காரர்னு ஒத்துக்குவேன்..”
"ஆப் கோர்ஸ் பேபி...உனக்கு இல்லாததா..."என்று ரகுவரன் கூறியதை நம்பமுடியாத ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் யாதவும்...உள்ளே இருந்த மூவரும்...ஷா பேசிய பேச்சுக்கு இவர் எப்படி எதிர்வினை ஆற்றுவரோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இவரின் மறுமொழி என்ன இது ரகுவரான இப்படி என்பதுபோல் இருந்தது...
யாதவோ ஒரு படி மேலேசென்று அவளது கரத்தில் இருந்து தனது கரத்தை உருகியவன் வேகமாக ரகுவரனை நெருங்கி அவரது இடது கையை பிடித்து இழுத்து உள்ளங்கையில் ஏதோ தேடியவன்...அவரை ஒரு மாதிரி மேலிருந்து கீழ்வரை பார்த்தான்…
"என்ன டா பண்ற..."என்று ஹரி வந்து யாதவின் காதிற்குள் கேட்கவும்…
"ஒன்னும் இல்லை டா...இது நம்ம அப்பா தானான்னு பாக்குறேன்...உள்ளங்கையில மச்சம் இருக்கு...அப்படி இருந்தும் எப்படி...இன்னியராம் ஷாவை பார்த்து உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிருவேன்...அப்படி இப்படினு தெலுங்கு படம் வில்லன் மாதிரில டயலாக் பேசணும்...ஏன் நம்ம தமிழ் படம் சரத்பாபு மாதிரி பேசுறாரு..."என்று யாதவும் அவன் அண்ணன் காதில் கூறினான்...
ஷாவோ சின்ன அதிர்ச்சியைக் கூட முகத்தில் காட்டாமல் அவரைப் பார்த்து உதட்டை சுழித்துவிட்டு யாதவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்…
உண்மையில் சொல்லப்போனால் ரகுவரனுக்கு ஆருஷாவை மிகவும் பிடித்துவிட்டது...இவரைப் பொறுத்தவரை யாதவ் வாழ்க்கையில் மிதமிச்சிய விளையாட்டுதனம் கொண்டவன்...ஒரு செயலைப் பொறுப்பாக எடுத்து செய்யும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லாதவன்...உணர்வுகளுக்கும்...உணர்ச்சிகளுக்கும் அடிமையானவன்...மொத்தத்தில் வளர்ந்த குழந்தை...அதே சமயத்தில் குழந்தை போன்றே தூயமனதையும் கொண்டவன்...தனக்கென்று கொள்கை...லட்சியம்...இல்லாதவன்…அதே குணங்களை கொண்டு...அதிகம் ஒரு குணமாக எடுப்பார் கைப்பிள்ளை குணம் கொண்டவள் தான் ஆராதனா...யாரோ அவளின் தோழி ஒருத்தி கனிஷ்கா மற்றும் யாதவை குறித்து தவறாக கூறியதால் இவனை ஒதுக்கியவள்...இவர் நினைத்திருந்தால் ஆராதனாவை யாதவ்விற்கே திருமணம் செய்து வைத்திருக்க முடியும்...அதனால் என்ன பயன்...இருவர் வாழ்க்கையையும் தான் கேள்விக்குறி… அதனால் தான் ஆராதனவிற்கு வேற இடத்தில் மாப்பிளை பார்த்தது….
அவருக்கு பொதுவாக இந்த ஹாஷினி டைப் பெண்களை கண்டாலே ஆகாது...ஆனால் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு தெரிந்தாள் ஆருஷா...தனது மகனை பார்த்துக்கொள்ள...வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டுச்செல்ல இவளே சரியான பெண் என்று நினைத்துக்கொண்டவர் மீதமிருந்த மூன்று பேற்றையும் பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டார்….
காசியும் விஸ்வநாதனும் ரகுவரனை பேச விட்டு பார்த்ததற்கு ஒரே காரணம் எப்படியாவது ஆருஷா திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தான்...அவர்களுக்கு நன்றாக தெரியும் ஷாவிற்கு திருமணம் குழந்தை குடும்பம் இதிலெல்லாம் ஈடுபாடு விருப்பம் என்று எதுவும் கிடையாது...அப்படி இருந்திருந்தால் சிவாவே இவளை மணந்திருப்பானே...அதனால் தான் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தனர்...அதுவும் இப்படி புஷ் ஆகி விட்டது...
"இப்ப என்ன பண்ணப் போறோம்..."என்று யாதவ் ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே...வேகமாக ஓடிவந்த கவி...அவனிடம் அலைபேசியை கொடுத்தாள்….
அலைபேசியை வாங்கியவன் "யார்..."என்பதுபோல் சைகையில் கேட்டான்..."களங்கம் ப்ரொடியூசர்..."என்று கவி வாயசைத்து கூறவும்…
"நீயே பேசி சமாளி..."என்று வாயசைத்தவாறு மீண்டும் அவளிடமே கொடுத்தான்…"காலைல இருந்து கூப்டுறார்...பேசுங்க..."என்று அவளும் வாயசைத்தவாறு மீண்டும் அவனிடமே கொடுத்தாள்…
இவர்களின் மௌனநாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஷா...கடுப்பாகி அவனின் கையிலிருந்த அலைப்பேசியை பறித்தவள் அதை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள்...
"இப்ப எதுக்கு டி... ஆப் பண்ண...அந்த ஆள் என்ன நினைப்பாரு…"
"அப்பறம் என்ன...இங்கே எவ்வளவு பெரிய பிரச்னை நடந்துட்டு இருக்கு...ரெண்டுபேரும் சின்னப்பிள்ளை தனமா விளையாண்டுட்டு இருக்கீங்க..."
"இந்த பிரச்சனைக்கு முழுமுதற் காரணமே நீ தான்... "நான் பேசாட்டி நிலாவைப் பார்த்து யேசுதாஸ் மாதிரி புலம்பிட்டு"
"அண்ணா சார்...அது தேவதாஸ்..."
"ஹான்...அவரு தான்...அவருமாதிரி பக்கத்துல ஒரு நாயை வைச்சுக்கிட்டு சரக்கு அடிச்சுட்டு நான் பாட்டுக்கு வீட்டுக்கு போயிருப்பேன்...ஆனால் நீ இடைல வந்து என் வயிறு மேலயே விழுந்து...விழுந்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காம என்னையவே பளிச்சுனு ஒரு அரை விட்டு...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்ற மாதிரி சரக்கடிக்க போலாமான்னு கூப்பிட்டுட்டு போய் எனக்கு லட்ச ரூபாய்க்கு மேல நஷ்டமாக்கி...என் பொண்டாட்டி பேரை ஆசையா குத்தவேண்டிய என் நெஞ்சுல...சுயநினைவு கூட இல்லாம உன் பேரை என் முதுகுல குத்தி அதையும் வீடியோ எடுத்து உலகமே பாக்குற மாதிரி பண்ணி...யார் முன்னாடி தலை குனிய கூடாதுனு நினைச்சேனோ...அந்த எங்க அப்பன் முன்னாடியே என்னை தலைகுனிச்சு நிக்கவைச்சு..கேவலம் ஒரு பிரெஸ்ஸை பாக்குறதுக்கு கூட பயப்படவைச்சு...கடைசியா யாருன்னே தெரியாத உன்னை நம்பி என்னை நிக்கவைச்சுட்டீல டி... "என்று அவன் மிகப்பெரிய வசனம் பேசிமுடித்தவேளையில் சரியாக அவன் ஷாவை நோக்கி நீட்டியிருந்த கையில் தண்ணீர் போத்தலை கொண்டுவந்து வைத்தாள் கவி....
"எனக்கே மூச்சு வாங்குது அண்ணா சார்...குடிங்க….குடிங்க..."என்றவள் யாதவ் குடிக்கபோவதற்கு முன்னால் அவளே அவனின் கையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று குடித்திருந்தாள் கவி...
"அப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க..."என்று விஸ்வநாதன் கூறவும்...இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டவர்கள் முகத்தை சுளித்து ஒரே நேரத்தில் "வாட் தி ஹேக்..." "வாட் தி****"என்று கூவினர்…
இது தான் இன்றைக்கான ஆகச்சிறந்த அதிர்ச்சியாக இருக்கமுடியும்...நேற்று இரவு தான் இருவரும் முதன்முறையாக ஒருவர்க்கொருவர் சந்தித்துக்கொள்கின்றனர்…இருவரது முன்னாள் காதலர்களுக்கும் திருமணம்...அந்த வேதனை...அதைப் போக்க இருவரும் செய்தச் சிறிய செயல்... அது மிகப்பெரிய பூதாகரமாகி…இப்பொழுது இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கிறது...வாழ்கை நிச்சயமாக ஒரு பரபரப்பான அடுத்து வரும் நிகழ்வை கொஞ்சம் கூட யூகிக்க முடியாத மர்மநாவல் போன்றது தான் போலும்…
யாராவது முதல் நாள் மாலை வந்து இவர்கள் இருவரிடமும்...இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஒருவரை சந்திக்க போகிறீர்கள்...அவர்கள் உங்களது தற்காலிக காதலர்களாக இருப்பார்கள்...மறுநாள் உங்கள் பெற்றோர்களே அவர்களை திருமணம் செய்யச்சொல்லி உங்களை வற்புறுத்துவர் என்றுக் கூறியிருந்தால் இருவரும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்திருப்பர்...ஆனால் இன்றைய நிலைமையோ வேறு…
"என்னால இந்த ஆண்ட்டிகள் மனம் மயங்கும் ஹீரோவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது..."என்று ஷா யாதவை நோக்கி ஒரு நக்கல் பார்வையை வீசியவாறு கூறவும்...அவளின் வார்த்தைகளில் கோவம் கொப்பளித்துக்கொண்டுவர யாதவ் பற்களைக் கடித்துக்கொண்டு " கிர்ர்….என்னாலே எல்லாம் இந்த பஜாரியோட குடும்பம் நடந்த முடியாது..."
"எங்களுக்கு வேற வழியில்லை...உங்ககிட்ட நாங்க கல்யாணம் பண்ணிக்கிறிங்களானு அப்படினு கேட்கல...கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லுறோம் மிஸ் ஆருஷா..."என்று ரகுவரன் நாங்கள் சொல்வதே கேட்டாகணும் என்ற ரீதியில் கூறினார்…
அவர் மகன் கூறியப்பதில்லை அவர் ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளவில்லை...இப்பொழுது என்று இல்லை...எப்பொழுதுமே இப்படி தான்...
"ஏனோ...நாங்க நீங்க சொன்னதை கேட்கணும்...வெயிட்..வெயிட்...உங்க சீமந்த புத்திரன் வேணும்னா நீங்க சொல்லுறதை கேட்கலாம்...நான் ஏன் கேட்கணும்..."என்று ஷா கைகளைக் கட்டிக்கொண்டு அவரது முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்கவும்…
அவர் முகத்தில் சின்னதாக ஒரு மென்னகை வந்தது..."பிக்காஸ்...உங்களுக்கு வேற வழியில்லை...இப்ப வெளியேப் போய் என்ன சொல்லுவ நீ...குடிச்சுட்டு ஒரு நாள் ராத்திரி யாதவ் கிருஷ்ணாக்கு காதலியா இருந்தேனா...அது சொல்லறத்துக்கு உங்களுக்கு வேணும்னா நல்லதா இருக்கலாம்...ஆனால் என் ஸ்டேட்ஸ்க்கும்...என் குடும்பத்துக்கும் அது மிக பெரிய அசிங்கம்...நீங்க பண்ண தப்பை உங்களால திருத்த முடியாத பட்சத்தில் எங்க சொல்பேச்சு தான் கேட்கணும்...டூ யு கெட் தட்..."என்று ரகுவரன் தனக்கான ட்ரேட்மார்க் திமிருடன் ஷாவைப் பார்த்து கூறினார்…
"உங்ககிட்ட நாங்க சொன்னோமா...இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதுனு...நீங்களா இந்த சீன்க்குள்ள வந்துட்டு ஓவர் படம் காட்டுறிங்க...எப்படி இது உங்களுக்கு வந்த அசிங்கம்னு சொல்லுவீங்க...எனக்கு புரியல... மிஸ்டர் ரகுவரன்…"
"நேத்து உன்னோட தற்காலிக காதலனா இருந்த இந்த யாதவ் கிருஷ்ணா...தி கிரேட் ரகுவர கிருஷ்ணாவோட அதாவது என்னோட மகன்..."
"ஹான்...இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் ரகுவர கிருஷ்ணாவோட மகன் தான் யாதவ் கிருஷ்ணானு தெரியாது...இந்த என்னோட தற்காலிக காதலரா இருந்த யதாவோட அப்பா தான் இந்த ரகுவர கிருஷ்ணானு தெரியும்...உங்களோட அந்த சோ கால்டு கிருஷ்ணா பின்பெயர் இல்லாமயே இந்த யாதவை இரண்டு வயசு குழந்தைல இருந்து அறுவது வயசு கிழவி வரைக்கும் தெரியும்... இவனா இவனோட அடையாளத்தை உருவாக்கியிருக்கான்...மே பி...அவனோட முதல் வாய்ப்பு கிடைக்குறதுக்கு வேணும்னா இந்த கிருஷ்ணான்ற பேர் உதவி இருக்கலாம்...ஆனால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வரதுக்கு அவனோட திறமை மட்டும் தான் காரணம்...”
“அப்புறம் நான் யாரு..எந்த வீட்டு பொண்ணுன்னு யாருக்கும் தெரிச்சுருக்க வாய்ப்பில்லை ...சோ உங்களோட ஸெல்ப் obsessionஐ கொஞ்சம் கொறைச்சுகிட்டா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்..."
"அப்படி போடு டி என் பஜாரி...நிஜமாவே இவளை கல்யாணம் பண்ணிக்குவோமா...எங்க அப்பனை இந்த வாங்கு வாங்குறா...” என்று மனதினுள் நினைத்தவன்... நொடிப்பொழுதில் தான் நினைத்ததை உணர்ந்து அதிர்ந்தவன்...
ச்சி ச்சி,...யாதவ் உனக்கு ஏன் டா இப்படி புத்தி புல் மேயப்போது...யாருன்னே தெரியாத மனுஷனையே இந்த வாங்கு வாங்குனா...இவளுக்கு புருஷனாக வர போறவனை என்ன கதிக்கு ஆக்குவா... நாம உடம்பு எல்லாம் பித்து உடம்பு... அடி தாங்க மாட்டோம்..தூக்கி விட்டுரும்...."என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருவருக்கும் நடக்கும் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தான் யாதவ்...
"நேத்து என் கூட இருந்தது உங்க மகன் தானே..."
"ஏய்ய்...என்ன டி மொட்டையா உன் கூட இருந்ததுன்னு சொல்லுற...சும்மா இருந்தேன்னு சொல்லு டி...என் கற்பை நான் ஒன்னும் பண்ணாமலே கலங்க படுத்திருவா போலயே…."
“அவனும் நானும் இந்த பிரச்சனையே எப்படி தீர்க்குறது...ப்ரெஸ்க்கு என்ன பதில் சொல்லுறதுனு நாங்க பார்த்துக்குறோம்...நீங்க கொஞ்சம்..." என்று ரகுவரனுக்கு நன்றாக புரியும்படி கூறியவள்
"ஏய்..வாடா என்கூட..."என்று யாதவை அழைத்தவள்...அவன் வருவதற்குள் இவளே அவனின் அருகில் சென்றுக் கையை பிடித்துக்கொண்டு இல்லை இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற கதவை திறந்தாள்…
கதவை திறந்தவள் வெளியே செல்லாமல் ரகுவரனை திரும்பிப்பார்த்து "நீங்க சொல்லுற சோ கால்டு ஸ்டேட்டஸை வைச்சு சமூக வலைதளத்தில் பரவிக்கிட்டு இருக்க எங்க விடியோஸ் போட்டோசை எடுங்க...அப்ப தான் நீங்க பெரிய ப....பணக்காரர்னு ஒத்துக்குவேன்..”
"ஆப் கோர்ஸ் பேபி...உனக்கு இல்லாததா..."என்று ரகுவரன் கூறியதை நம்பமுடியாத ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் யாதவும்...உள்ளே இருந்த மூவரும்...ஷா பேசிய பேச்சுக்கு இவர் எப்படி எதிர்வினை ஆற்றுவரோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இவரின் மறுமொழி என்ன இது ரகுவரான இப்படி என்பதுபோல் இருந்தது...
யாதவோ ஒரு படி மேலேசென்று அவளது கரத்தில் இருந்து தனது கரத்தை உருகியவன் வேகமாக ரகுவரனை நெருங்கி அவரது இடது கையை பிடித்து இழுத்து உள்ளங்கையில் ஏதோ தேடியவன்...அவரை ஒரு மாதிரி மேலிருந்து கீழ்வரை பார்த்தான்…
"என்ன டா பண்ற..."என்று ஹரி வந்து யாதவின் காதிற்குள் கேட்கவும்…
"ஒன்னும் இல்லை டா...இது நம்ம அப்பா தானான்னு பாக்குறேன்...உள்ளங்கையில மச்சம் இருக்கு...அப்படி இருந்தும் எப்படி...இன்னியராம் ஷாவை பார்த்து உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிருவேன்...அப்படி இப்படினு தெலுங்கு படம் வில்லன் மாதிரில டயலாக் பேசணும்...ஏன் நம்ம தமிழ் படம் சரத்பாபு மாதிரி பேசுறாரு..."என்று யாதவும் அவன் அண்ணன் காதில் கூறினான்...
ஷாவோ சின்ன அதிர்ச்சியைக் கூட முகத்தில் காட்டாமல் அவரைப் பார்த்து உதட்டை சுழித்துவிட்டு யாதவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்…
உண்மையில் சொல்லப்போனால் ரகுவரனுக்கு ஆருஷாவை மிகவும் பிடித்துவிட்டது...இவரைப் பொறுத்தவரை யாதவ் வாழ்க்கையில் மிதமிச்சிய விளையாட்டுதனம் கொண்டவன்...ஒரு செயலைப் பொறுப்பாக எடுத்து செய்யும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லாதவன்...உணர்வுகளுக்கும்...உணர்ச்சிகளுக்கும் அடிமையானவன்...மொத்தத்தில் வளர்ந்த குழந்தை...அதே சமயத்தில் குழந்தை போன்றே தூயமனதையும் கொண்டவன்...தனக்கென்று கொள்கை...லட்சியம்...இல்லாதவன்…அதே குணங்களை கொண்டு...அதிகம் ஒரு குணமாக எடுப்பார் கைப்பிள்ளை குணம் கொண்டவள் தான் ஆராதனா...யாரோ அவளின் தோழி ஒருத்தி கனிஷ்கா மற்றும் யாதவை குறித்து தவறாக கூறியதால் இவனை ஒதுக்கியவள்...இவர் நினைத்திருந்தால் ஆராதனாவை யாதவ்விற்கே திருமணம் செய்து வைத்திருக்க முடியும்...அதனால் என்ன பயன்...இருவர் வாழ்க்கையையும் தான் கேள்விக்குறி… அதனால் தான் ஆராதனவிற்கு வேற இடத்தில் மாப்பிளை பார்த்தது….
அவருக்கு பொதுவாக இந்த ஹாஷினி டைப் பெண்களை கண்டாலே ஆகாது...ஆனால் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு தெரிந்தாள் ஆருஷா...தனது மகனை பார்த்துக்கொள்ள...வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டுச்செல்ல இவளே சரியான பெண் என்று நினைத்துக்கொண்டவர் மீதமிருந்த மூன்று பேற்றையும் பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டார்….
காசியும் விஸ்வநாதனும் ரகுவரனை பேச விட்டு பார்த்ததற்கு ஒரே காரணம் எப்படியாவது ஆருஷா திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தான்...அவர்களுக்கு நன்றாக தெரியும் ஷாவிற்கு திருமணம் குழந்தை குடும்பம் இதிலெல்லாம் ஈடுபாடு விருப்பம் என்று எதுவும் கிடையாது...அப்படி இருந்திருந்தால் சிவாவே இவளை மணந்திருப்பானே...அதனால் தான் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தனர்...அதுவும் இப்படி புஷ் ஆகி விட்டது...
"இப்ப என்ன பண்ணப் போறோம்..."என்று யாதவ் ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே...வேகமாக ஓடிவந்த கவி...அவனிடம் அலைபேசியை கொடுத்தாள்….
அலைபேசியை வாங்கியவன் "யார்..."என்பதுபோல் சைகையில் கேட்டான்..."களங்கம் ப்ரொடியூசர்..."என்று கவி வாயசைத்து கூறவும்…
"நீயே பேசி சமாளி..."என்று வாயசைத்தவாறு மீண்டும் அவளிடமே கொடுத்தான்…"காலைல இருந்து கூப்டுறார்...பேசுங்க..."என்று அவளும் வாயசைத்தவாறு மீண்டும் அவனிடமே கொடுத்தாள்…
இவர்களின் மௌனநாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஷா...கடுப்பாகி அவனின் கையிலிருந்த அலைப்பேசியை பறித்தவள் அதை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள்...
"இப்ப எதுக்கு டி... ஆப் பண்ண...அந்த ஆள் என்ன நினைப்பாரு…"
"அப்பறம் என்ன...இங்கே எவ்வளவு பெரிய பிரச்னை நடந்துட்டு இருக்கு...ரெண்டுபேரும் சின்னப்பிள்ளை தனமா விளையாண்டுட்டு இருக்கீங்க..."
"இந்த பிரச்சனைக்கு முழுமுதற் காரணமே நீ தான்... "நான் பேசாட்டி நிலாவைப் பார்த்து யேசுதாஸ் மாதிரி புலம்பிட்டு"
"அண்ணா சார்...அது தேவதாஸ்..."
"ஹான்...அவரு தான்...அவருமாதிரி பக்கத்துல ஒரு நாயை வைச்சுக்கிட்டு சரக்கு அடிச்சுட்டு நான் பாட்டுக்கு வீட்டுக்கு போயிருப்பேன்...ஆனால் நீ இடைல வந்து என் வயிறு மேலயே விழுந்து...விழுந்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காம என்னையவே பளிச்சுனு ஒரு அரை விட்டு...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்ற மாதிரி சரக்கடிக்க போலாமான்னு கூப்பிட்டுட்டு போய் எனக்கு லட்ச ரூபாய்க்கு மேல நஷ்டமாக்கி...என் பொண்டாட்டி பேரை ஆசையா குத்தவேண்டிய என் நெஞ்சுல...சுயநினைவு கூட இல்லாம உன் பேரை என் முதுகுல குத்தி அதையும் வீடியோ எடுத்து உலகமே பாக்குற மாதிரி பண்ணி...யார் முன்னாடி தலை குனிய கூடாதுனு நினைச்சேனோ...அந்த எங்க அப்பன் முன்னாடியே என்னை தலைகுனிச்சு நிக்கவைச்சு..கேவலம் ஒரு பிரெஸ்ஸை பாக்குறதுக்கு கூட பயப்படவைச்சு...கடைசியா யாருன்னே தெரியாத உன்னை நம்பி என்னை நிக்கவைச்சுட்டீல டி... "என்று அவன் மிகப்பெரிய வசனம் பேசிமுடித்தவேளையில் சரியாக அவன் ஷாவை நோக்கி நீட்டியிருந்த கையில் தண்ணீர் போத்தலை கொண்டுவந்து வைத்தாள் கவி....
"எனக்கே மூச்சு வாங்குது அண்ணா சார்...குடிங்க….குடிங்க..."என்றவள் யாதவ் குடிக்கபோவதற்கு முன்னால் அவளே அவனின் கையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று குடித்திருந்தாள் கவி...