மிக்க நன்றிஅருமையான கவிதை மா...
மிக்க நன்றிஅருமையான கவிதை மா...
ThanksVery nice poem.
Thanks kasuper ka
அருமை வேண்டும் .. வேண்டும் .. இன்னும் வேண்டும்.. உங்கள் கவிதை வேண்டும்??????????????நெடுஞ்சாலை விளக்குக் கம்பத்தின்
தனிமை வேண்டும்!
ஆதாரில் அடங்கா அடையாளம்
தேட வேண்டும்!
அரிதாரம் பூசிக் கொள்ளா அகங்கள்
காண வேண்டும்!
மணித்துளிகள் கணக்கிடா பயணம்
போக வேண்டும்!
மௌனத்தை உடுத்திக்கொள்ளா
ஊடல்கள் வேண்டும்!
திறமையின் பிடியில் புகழ்ச்சி
நிற்க வேண்டும்!
தேர்தலில் தோற்காத மக்களின்
வாக்கு வேண்டும்!
விழிப்பு மணி ஓசை இல்லா
விடியல்கள் வேண்டும்!
விரும்பியோர் துரோகத்திலும் உறுதி
காக்க வேண்டும்!
ஒற்றை சிறகின் அடர்த்தி கொண்ட
சிக்கல் வேண்டும்!
மதங்களை அறியா மறுபிறவி வேண்டும்!
மரணத்தின் பயமில்லா பிணிகள் வேண்டும்!
வேண்டுவன கிட்டா பொழுதிலும்
விரக்தியின் விளிம்பு செல்லா
வாழ்க்கை வாழ வேண்டும்!!!
நிச்சயம் ??அருமை வேண்டும் .. வேண்டும் .. இன்னும் வேண்டும்.. உங்கள் கவிதை வேண்டும்??????????????