ரட்சகியின் ராட்சசன்
கார் பார்க்கிங்கில் சரித்ராவின் காரில் சாய்ந்து நின்றுக்கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான் ஆதித் அனிருத்தன்.
"ஆண்டவா!! இவன வேற சமாளிக்கனுமே " என முணுமுணுத்தவள் அதை முகத்தில் காட்டாது அவனை நெருங்கினால் சரித்ரா. அவள் அருகில் வந்ததும் சரவெடிதான். மொத்த கோபத்தையும் வார்த்தையாய் கொட்டினான் ஆதித்.
" யாரை கேட்டு முடிவு பண்ண? ஹ்ம்ம்; சொல்லு! இந்த எக்ஸ்கவேஷன (அகழ்வாராய்ச்சி) என்னால கைட் பண்ண முடியாது. " அத்தனை உஷ்ணம் தெறித்தது.
"ஏன் முடியாது?" அதை விட உஷ்ணமாக வெளிவந்தது அவள் வார்த்தைகள்.
"உன்ன தனியா அனுப்பிட்டு என்னால இங்க இருக்க முடியாது. உன் கூட மோல்டீவ்ஸ் வரப்போறே ." என விளக்கத்துடன் காரணத்தையும் அவள் முகத்தை பார்த்து கூறினான்.
அப்பட்டமாக கோவத்தை முகத்தில் காட்டியவள் " இங்க பாரு ஆதித் ! ஃபர்ஸ்ட் நா உன்ன பொறுப்ப ஏத்திக்கிறியா? இல்லையானு ? பர்மிஷன் கேக்கல, உன்ன கைட் பண்ண சொல்லி ஓடர் பண்றேன். அப்பறம் உன்ன என் கூட வரவும் சொல்லல! ஒழுங்கா நா சொன்னத செய்." என கடுமையாக குரலில் விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவள் கூறிய விதத்திலும்,விடயத்திலும் சினம் ஏற அவளை விழிகளில் அனல் தெறிக்க முறைத்தவன் " முடியாதுனு சொன்னா என்ன செய்வ?" ஒற்றை புருவ உயர்த்தலுடன் கேட்டான்.
கண்களில் கோவம் மின்ன ஒரு ஏளனப்புன்னகையுடன் " நா உன்னோட ஹையர் ஆஃபிசர் மிஸ்டர் ஆதித் அனிருத்தன்."
"என்ன அதிகாரத்த காட்டிறியா ?"
ஏளனப்புன்னகை மேலும் விரிய. " இல்ல,
உனக்கு ஞாபகப்படுத்திறேன். இப்ப நடக்கிற எக்ஸ்கவேஷன்ல எனக்கடுத்த பொறுப்புல இருக்கிறது நீதான். அப்புறம் இந்த எக்ஸ்கவேஷன பத்தி ரீசர்ச் ( ஆய்வு )பண்ணதும் நம்மதான். நான் இல்லாட்டி நீதான் பாத்துக்கனும். எனக்கு எல்லா எக்ஸ்கவேஷனும், ரீசர்ச்சும் முக்கியம் புரிஞ்சிக்கோ. இப்பயும் முடியாதுனா! என்னோட அதிகார புத்திய காட்டவரும்.
நீ ஸ்மார்ட்டா ப்ளே பண்றேனு முட்டாள் தனமா வேலைய ரீசைன் பண்ணுரது , மோல்டீவ்ஸ்கு டூர்ங்கிற பேர்ல வாரதுனு நினைப்பிருந்தா அத குழி தொண்டி புதைச்சிரு.
நீ ஒன்னும் இங்க கூலி வேலைக்கு வரல. உடனே வேலைய விட்டு ஒட , உன்னோட பொசிஸனுக்கு உன்வேலைய ரீசைன் பண்றதுல நிறைய ப்ரோசிஜர்ஸ் இருக்கு. அதுக்கும் நீ என் கிட்ட வந்துதான் நிக்கனும். அப்புறம் மோல்டீவ்ஸ் ரீசர்ச் என்னோடது மட்டும்தான். அதனால ஒழுங்கா கோவில பத்தின எக்ஸ்கவேஷன பாரு." என அவன் திட்டங்கள் அனைத்தையும் படித்தவள் போல் கூறி அவற்றிற்கு கேட்டையும் போட்டு பெரிய பூட்டையும் பூட்டி "நான் உன் பெஸ்ட் ஃப்ரெண்டுடா. உன் புத்திய எனக்கு தெரியாதா ?" என கர்வமாக பார்த்தாள்.
எதுவும் செய்ய முடியாத இயலாமையும் புதிதாய் சேர்ந்து; அவன் கோவத்தை பல மடங்கு கூட்ட, கோவத்தை கட்டுப்படுத்த முயன்று வெற்றிகரமாக தோற்றவன் தன் கையை ஒங்கி காரில் அடித்தான்.
அந்த சத்தத்தில் அங்குள்ளவர்களின் பார்வை இவர்கள் மேல் பதியவும் சுதாகரித்தவன் அவள் கையில் இருந்த கார் சாவியை வெடுக்கென பிடிங்கி காரை ஸ்டார்ட் செய்தான். அவள் காரில் ஏறி அமர்ந்து கதவை முடிய நொடி அவன் கையில் கார் பறந்தது.
" ஐயா கோவத்த காட்ராறாம்." என மனதில் எண்ணிக்கொண்டு வெளியில் கல்லு போல் அமர்ந்தாள்.
அப்படி கூட அவன் கோவத்தை காட்டவிடாமல் ஆப்பு வைத்தது வாகன நெரிசல். மீண்டும் அதே கையால் ஸ்டீயரிங்கை ஒங்கி குத்தியவன் கையை சரித்ரா பிடித்து பார்க்க கையை உதறினான். ஏற்கனவே தயாராக பையில் வைத்திருந்த ointment எடுத்து அவன் கையில் வீக்கமாகிய இடத்தில் பூசிவிட்டாள். அவன் குணமறிந்த தோழியாய்.
அவள் அன்பில் அலைகடலாக சீறியவன் பாட்டல் வாட்டராக அடங்கினான்.
கோபத்தை விட்டு " ஏன் பேபி இப்படி பண்ற ? பிளீஸ்டா புரிஞ்சிக்கோ! அந்த islands ல கால்வாசி மனிஷ கால் தடமே படாதது. நம்ப ஃபுல்லா ரீசர்ச் பண்ணல. என்ன ஆபத்திருக்கும்னே தெரியாது. நீ வேற ஒரு ஆர்வகோளாறு. சும்மா இருக்க மாட்ட. உன்ன தனியா அங்க விட்டிட்டு நா எப்படி நிம்மதியா இருக்கமுடியும் ?" என இறைஞ்சும் பார்வையுடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவளின் உணர்ச்சியற்ற முகமும் , இறுக்கமாக கட்டியிருந்த கைகளும் "என் முடிவு மாறாது " என்ற பிடிவாதத்தின் உறுதியை காட்ட கார் சீட்டில் தலையை சாய்த்து கண்களை முடுயவன் மொத்த சக்தியையும் இழந்தது போல் ஒரு பெரிய பெருமூச்சை விட்டவன் கண்களை திறந்து அவளை பார்த்தான்.
"வீட்டுக்கா போகனும்? "
அதே நிலையில் தலையை மறுப்பாக அசைத்தவள் " Anu clinic " என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
யோசனையாக பெருவிரலால் நெற்றியை தேய்த்தவன் "டூ டேய்ஸ்க்கு முன்னுக்கு போய்ருக்கனுமே? என கேட்க
"வேர்க் இருந்ததால இன்னைக்கு அப்போய்ன்மன்ட் ஃபிக்ஸ் பண்ணன்." என கூறி முடிய வாகன நெரிசலும் சரியானது.
காரை Anu clinic நோக்கி செலுத்தினான் ஆதித் அனிருத்தன்.காரை பார்க் செய்து விட்டு அவளுடன் நடந்தான்.
Anu clinic யில் ரீசப்சனிஸ்டிடம் கேட்டுவிட்டு அனுவின் அறைக்கு செல்லும் போது சரித்ராவின் கையை பிடுத்தவன் "நானும் உள்ள வரலாமா??" என அனுமதி வேண்டி நின்றான்.
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் "உன்கிட்ட மறைக்கிற அளவு என் பாஸ்ட்ல எந்த ரகசியமும் இல்ல பட்டு. நீ இப்பிடி என்கிட்ட கேட்காத பட்டு ."
என்றால் உயிர் வரை தீண்டும் ஆழமான அன்புடன்.
அவன் கண்கள் கலங்கியது. எத்தனை வருடம்!! எத்தனை வருடம் கழித்து இவ்வாறு அழைக்கிறாள். அவளின் தனக்குமட்டுமான பட்டு என்ற அழைப்பு. உலகில் உள்ள அத்தனை அன்பும் அதில் அடைக்கலம் என்பான்.
தன் தோழியை பழையப்படி மீட்கத்தானே அவனும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்துகிறான்.மடிந்து போனவன் அவள் சிரிப்பையும் எடுத்துச் சென்றான்.
என்ற எண்ணங்களுடனே ஹப்னாஸிஸ் ட்ரீட்மென்ட் அறையை அடைய முத்துப்பல் தெரிய சிரித்து வரவேற்றால் Dr அனுபல்லவி. மூவரிடையே சில பரஸ்பர கலந்துரையாடல் நிகழ்ந்தன.
☆☆___________________________☆☆
மேகப் பொதியில் படித்திருப்பது போல் உணர்ந்த சரித்ரா தலையை திருப்பி பார்த்தால்.சற்று தூரத்தில் சோபாவில் அமர்ந்திருந்தான் ஆதித். அனு அவள் கண்ணை பார்க்க கூறவும், அவள் கண்களை பார்த்தவள் அவள் சொல்வதை கேட்டவாறு அறிதுயில் நிலைக்கு சென்றாள்.
ரெகோடர் அவள் கூறுவதை சேமிக்க தயாராக ஆதித் சரித்ராவை சோபாவில் வாக்காக சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அனுபல்லவி கேள்விகள் மூலம் சரித்ராவின் கடந்த காலத்தை மீட்க ஆரம்பித்தாள்.
ராட்சசன் வருவான்.........