தேவையான பொருட்கள் :
ரவை - அரை கப்
மைதா - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - முக்கால் கப்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
வரமிளகாய் விதை (Chilli Flakes) - காரத்திற்கேற்ப
செய்முறை :
ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.....
ஓரளவு நன்றாக பொடிந்ததும் அதனுடன் மைதா மற்றும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.......
அரைத்த விழுதில் Chilli Flakes, சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறவும்.., ரொம்ப கெட்டியாக இருக்க கூடாது... கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்.....
பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீரூற்றி அதன் மேல் அலுமினிய சல்லடை அல்லது (நம்ம வீட்ல எவர்சில்வர் குடம், பானை லாம் வைக்கும் போது கீழ வட்டமா ஓரு பொருள் வைப்போமே அது பேரு தெரியலீங்கோ ) அது வைத்துக் கொள்ளுங்கள்... ஒரு குட்டி எவர்சில்வர் தட்டு எடுத்து (இது போல)
அதன் நடுவில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு எல்லா பக்கமும் பரப்பி விடுங்கள் .....
பின்பு நாம் வைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து இருபது முதல் முப்பது செகன்ட்ஸ் மட்டும் ஆவியில் வைத்திருக்கவும்......
ஒரு வாணலியில் தண்ணீர் சிறிது ஊற்றி வைத்துக் கொள்ளவும்.....
முப்பது செகன்ட் கழித்து நாம் வைத்த மாவு தட்டை எடுத்து வாணலியில் உள்ள தண்ணீரல் போட்டு ஒரு பத்து செகன்ட் வைத்திருந்து பின்பு எடுத்து அதன் ஓரங்களில் கத்தி அல்லது ஸ்பூனால் நன்கு ஓரங்களை மட்டும் எடுத்து விட்டு பின்பு மெதுவாக முழுவதையும் எடுக்க வேண்டும் அப்போது தான் முழுவதுமாக கிடைக்கும் இல்லையென்றால் அதன் வடிவம் வராது .....
இதே போல் எல்லா மாவையும் ஊற்றி எடுத்து ஓரு காட்டன் துணியில் வைத்து வீட்டின் உள்ளேயே வைப்பதென்றால் இரண்டு நாட்கள் fan -ல் வைத்திருக்கலாம்., அல்லது வெயிலில் ஒரு நாள் இருந்தால் போதுமானது......
அடுத்த நாள் பொரித்து சாப்பிடலாம் சுவையான ரவை வடகம் ரெடி.....
ரவை - அரை கப்
மைதா - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - முக்கால் கப்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
வரமிளகாய் விதை (Chilli Flakes) - காரத்திற்கேற்ப
செய்முறை :
ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.....
ஓரளவு நன்றாக பொடிந்ததும் அதனுடன் மைதா மற்றும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.......
அரைத்த விழுதில் Chilli Flakes, சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறவும்.., ரொம்ப கெட்டியாக இருக்க கூடாது... கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும்.....
பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீரூற்றி அதன் மேல் அலுமினிய சல்லடை அல்லது (நம்ம வீட்ல எவர்சில்வர் குடம், பானை லாம் வைக்கும் போது கீழ வட்டமா ஓரு பொருள் வைப்போமே அது பேரு தெரியலீங்கோ ) அது வைத்துக் கொள்ளுங்கள்... ஒரு குட்டி எவர்சில்வர் தட்டு எடுத்து (இது போல)
அதன் நடுவில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு எல்லா பக்கமும் பரப்பி விடுங்கள் .....
பின்பு நாம் வைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து இருபது முதல் முப்பது செகன்ட்ஸ் மட்டும் ஆவியில் வைத்திருக்கவும்......
ஒரு வாணலியில் தண்ணீர் சிறிது ஊற்றி வைத்துக் கொள்ளவும்.....
முப்பது செகன்ட் கழித்து நாம் வைத்த மாவு தட்டை எடுத்து வாணலியில் உள்ள தண்ணீரல் போட்டு ஒரு பத்து செகன்ட் வைத்திருந்து பின்பு எடுத்து அதன் ஓரங்களில் கத்தி அல்லது ஸ்பூனால் நன்கு ஓரங்களை மட்டும் எடுத்து விட்டு பின்பு மெதுவாக முழுவதையும் எடுக்க வேண்டும் அப்போது தான் முழுவதுமாக கிடைக்கும் இல்லையென்றால் அதன் வடிவம் வராது .....
இதே போல் எல்லா மாவையும் ஊற்றி எடுத்து ஓரு காட்டன் துணியில் வைத்து வீட்டின் உள்ளேயே வைப்பதென்றால் இரண்டு நாட்கள் fan -ல் வைத்திருக்கலாம்., அல்லது வெயிலில் ஒரு நாள் இருந்தால் போதுமானது......
அடுத்த நாள் பொரித்து சாப்பிடலாம் சுவையான ரவை வடகம் ரெடி.....