உக்காந்தா இடத்தில இருந்து அடி வாங்க என்னென்ன பிளான் எல்லாம் podreenga ப்ரோRecommendation ku 2 per pothathu than innum konjam neraiya pera kootitu ponga sister
உக்காந்தா இடத்தில இருந்து அடி வாங்க என்னென்ன பிளான் எல்லாம் podreenga ப்ரோRecommendation ku 2 per pothathu than innum konjam neraiya pera kootitu ponga sister
Batting ku naa readyகிரிக்கெட் மட்டையும், stumbum ரெடியாக உள்ளது நம் பாசமலருக்கு என்றும் பொறுப்புடன் செயல்படுவோர் சங்கம்
நல்லாவும் இருக்கு....மனதுக்கு கஷ்டமாகவும் இருக்கு.ஒரு சாதாரண மனைவியின் காதல் கடிதம் இது:
எழுதுகிறேன் உனக்காய் ஒரு கடிதம்!
நான் உன்னை காதலிக்கிறேன் என்று பொய்யுரைக்க விருப்பமில்லை!
எனக்குள் காதல் முகிழ்ந்திருந்தால்,
அது உன்மேல் மட்டுமே என்பதில் பொய்யில்லை!
ஏனெனில், என் தந்தை, தம்பிக்கு பிறகு நான் பழகிய ஓரே ஆண்மகன் நீதான் என்பதை அறிவாயா?
ஒருவேளை,
என் பெண்மையை நீ மதித்திருந்தால்,
என் மென்மையை நீ பழிக்காது இருந்திருந்தால் உன்மீதெனக்கு காதல் பிறந்திருக்கும்!
இல்லையேல்,
மது போதையின் பிடியில் என் உடலையும் உள்ளத்தையும் காயப்படுத்தாமல் இருந்திருந்தால்,
கொச்சை வார்த்தைகளில் என்னை கொன்று சிதைக்காமல் இருந்திருந்தால், என் காதல் உனக்காய் மலர்ந்திருக்கும்!
சிறிதேனும்
இவள் பெண்ணென்ற இரக்கம் உனக்குள் இருந்திருந்தால்,
என்னை பெற்றவர்களிடம் இருந்து என்னை தள்ளி வைக்காமல் இருந்திருந்தால், எனக்குள்ளும் உன்மீது காதல் இருந்திருக்கும்!
உன் தேக பசிக்கு பலியாய்,
பிள்ளைபெறும் இயந்திரமாய், நீ என்னை நடத்தாமல் இருந்திருந்தால், எனக்கும் காதல் வந்திருக்கும்!
கூடும் சொந்தங்கள் முன்பு 'இவன் என் கணவன்' என்று என் தலை நிமிர்ந்து இருந்தால், நானும் காதல் கொண்டிருப்பேன் உன்னிடத்தில்!
என் பிள்ளைக்கு நல்ல தகப்பனாய், முன்னுதாரணமாய் நீ இருந்திருந்தால் நானும் உன்னை உயிரில் சுமந்திருப்பேன்!
உன் ஒருவனின் குணக்கேட்டை முழுவதும் கண்டதால், உலகத்து ஆண்களெல்லாம் உன்போல தான் என்று வெறுப்புறுகிறது என் நெஞ்சம்!
நீ எண்ணிக்கையற்று தந்த காயங்களை உடலிலும் உள்ளத்திலும் சுமந்தபடி கடைமைகாக நாட்களை நகர்த்தும் என் வரண்ட மனதில் காதல் என்ற உணர்வு எப்படி தோன்றும்?
வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் நம் காலங்கள் கடக்கவில்லை! இன்னும் உன் கரிசன பார்வைக்காக என் காதல் முகிழாமல் பத்திரமாக காத்திருக்கிறது!
இனியேனும் உன் தீய செயல்களை விட்டுவிட்டு, மனித மனம் கொண்டு என்னை ஏந்த வா!
இதோ நான் இன்னும் காத்திருக்கிறேன்
நரை கூடிய பின்னும்
உன் காதலுக்காக மட்டும்!
இப்படிக்கு,
உன் அன்பு மனைவி
(எல்லாரும் மணத்திற்கு முன்பான காதலை வேண்டி கடிதம் எழுதும்போது, திருமண வாழ்வில் தோற்றுப்போன ஒரு பெண்ணின் நிசர்சனமான காதல் கடிதத்தை இங்கே பதிவிட முயற்சித்தேன். எப்படி இருக்கு சொல்லுங்க ஃப்ரண்ஸ்???)
Innum எத்தன தடவ இந்த மாதிரி சொல்வீங்கஹைய்யோ ரொம்ப வெக்க வெக்கமா வருதே ????
இங்க இருக்கும் முரட்டு சிங்கில் கூட நம்பலாம் ஆனால் இந்த family bachelor னு சொல்லிகிட்டு இவங்க எழுதிய லவ் லெட்ரில் அப்படியே காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கிறதுகாலையிலிருந்து இதே டயலாக்தான்.. ஆனா அம்புட்டும் சொல்லியாச்சு
???? Thank you srikaWow... Wow... Simply super chellam ?????? arumaiya sollitta????
Athan CID kuda a duet pada letter potruken
அழகு மடல் bavya dear so niceநானும் லவ் லெட்டர் எழுத வந்திட்டேன்...(ஹப்பிக்கு தெரிஞ்சா டங்கு டணார்தான்...லீவ்இட்)
நா வேற யாருக்கு எழுதுவேன் என் ஹாட் ஹேண்ட்சம் ஹீரோ ஆதிக்குதான்(ஆதித்த கரிகாலன்)
அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததனால முடிஞ்ச வரைக்கும் சுத்த தமிழ்ல எழுத ட்ரைப் பண்றேன்)
அன்பே ஆதி!
உன்னை பற்றி முதன்முதலாக படித்தப் போது என் நெஞ்சில் ஏதோ இனம்விளங்கா உணர்வு.சோழ தேசத்து பட்டத்து இளவரசனாக இருப்பதற்கு வேண்டிய எல்லா குணநலன்களும் கொண்டவன் நீ.
வீரத்தின் பிறப்பிடம் நீ ஆண்மையின் இலக்கணம் நீ
கோபத்தின் தீக்கங்கு நீ
பகைவரின் காலன் நீ
மக்களின் காவலன் நீ
என் காதலனும் நீயே
ஆம்!முகமறியா உன் மேல் பித்தாகி பிதற்றும் பேதையவளை அறியமாட்டாய் நீ....
உன்னை ஒரு முறை நேரில் காண என் கண்கள் ஏங்கும் ஏக்கத்தை தீர்ப்பவர் யாரும் இலர்.
நந்தினியை கொண்டு உன்னை கொன்றுவிட்டார் கல்கி(ஐயகோ)
ஆனால் நானோ உன்னை தேன்மொழியோடு தேன்மழையில் நனைய வைத்தேன்...நானும் அதில் நனைந்து உன் மேல் காதல் கொண்டேன்...
தருவாயோ உன் தரிசனம்
அதற்கென காத்திருக்கும் பாவையிவள் காதல் மனம்...
இப்படிக்கு
உன் பரமரசிகை
பவ்யா??????
பார்ராஆஆஆ....பயபுள்ள ரொம்பதான் ஆட்டம் போடுது????Batting ku naa ready
bowling n fielding ku mattum aal serunga sister