@Spicy_Kannamma
என்னோட காதல் கடிதம் சசி மேம் @smteam உங்களுக்கு தான்.. நல்ல ஃபீலிங்கா இருக்கனும்னு நீ வா போ –னு எழுதிருப்பேன்.. அதுக்கு மன்னிச்சுசுசுசு….. ப்ளிஸ்..?
கவிதைக்கு ஓர் காதல் மடல்..
என் கவிதை சசிமாவுக்கு ஓர் காதல் மடல்..
என் தொடுதிரையை நான் தட்டும் நாட்களெல்லாம் FB, Twitter, Instagram என சுற்றி வந்துக் கொண்டிருந்தேன்..
காரணம் ஒன்றி, காலதாமதமின்றி
காதல் Cupid என் இதய கதவை தட்டி தட்டி அலைத்தான்..
உன்னவளின் அரண்மனை இதோ இருக்கிறது அங்கு செல் என கட்டளை விதித்தான்..
அவன் வசனம் ஏதும் கேட்டிடாத நான், கட்டளையை மட்டும் ஏற்று உள்ளே வந்தேன். smtamilnovels என்று இருந்தது.
வந்த வேலை என்ன என்பதை என் எட்டாம் அறிவு எனக்கு சொல்லவில்லை..
இதை அறியாத நான், எனக்கு ஏழாம் அறிவு இருக்கிறதென பீத்திக்கொண்டு சொந்த வேலையாய் கதை எழுதத் துவங்கிய அவலத்தை நான் என்னவென்று சொல்ல..?
என்னை உன் இடத்துக்கு அனுப்பி வைத்த காதல் Cupid திட்டியும் பார்த்திருக்கிறான், மண்டையில் கொட்டியும் பார்த்திருக்கிறான்..
பலனோ எருமை மாட்டின் மேல் பெய்த மழை தான்..!
கடிவாளம் கட்டிக் கொண்டு கதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த என்னிடத்தில் வந்து,
” உன் காதல் கதையை நான் எழுதிக் கொண்டிருக்க, நீ என்ன கதை எழுதுவதாய் பினாத்திக் கொண்டிருக்கிறாய்..?” என்ற காதல் Cupid உன் குறுஞ்செய்தியை என் முன் வைத்தான்.
அதிலும் செய்தியை மட்டுமே படித்துவிட்டு என் செல்வி உன்னை காணது சென்ற என் முட்டாள்தனத்தை எண்ணுகையில், ஒன்றரை டன் ஊறுகாயை ஒட்டு மொத்தமாய் முகத்தில் பூசிக்கொள்ளலாம் போல கோபம் வருகிறது என்மேல்.
ஒரு வழியாக என் கதையை முடித்தேன்; உனக்கு செய்தியும் தொடுத்தேன். கடுப்பில் கொப்பளித்த காதல் Cupid
“ இன்னுமாடா நீ கண்ண மூடிக்கிட்டு இருக்க..? “ என நொந்துக்கொண்டு என் பிடறியில் அடித்தது; நம்மை வாட்ஸ் ஆப்பில் இணைத்தது.
அன்பே சசி..
எனக்கு உண்மை புலப்பட்டது,
என் நெஞ்சம் உடைப்பட்டது,
அதில் உன் முகம் மட்டுமே வசப்பட்டது..
முதன்முதலில் எனக்கு அனுப்பினாயே குறுஞ்செய்தி..!
அதில் துடித்துக் கொண்டிருந்த அந்த பெரிய சிவப்பு இதயம்..!!
வாட்ஸ் ஆப் எமோஜிகள் எத்தனையோ இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்புவதற்கு Heart –ஐ எதற்கு தேர்வு செய்தாய் ..?
அது எத்தனையோ நிறங்களில் இருக்கும் பட்சத்தில் எதற்காக காதலுக்கே உரிய சிவப்பு நிறத்தில் அனுப்பி வைத்தாய்..?
பிடித்து வெத்த பிள்ளையார் என சிலையாய் அமைதியாய் இருக்கும் அத்தனை heart –க்கு மத்தியில் பெரிய அளவிலான, நித்தமும் துடித்துக்கொண்டிருக்கும் காதல் Heart-ஐ நீ எனக்கு அனுப்ப காரணமென்ன..?
எல்லாம் இந்த காதல் Stupid ப்ச்.. காதல் Cupid –ன் திருவிளையாடல்தான்..
ஆஹா.. கண்ணே.. என் கண்மணியே..
கண்டுக்கொண்டேன் நம் காதலை…
தொடுதிரையில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த வெற்று இதயம் கண்டு என்றும் நெடுந்தொலைவில் தவித்துக் கொண்டிருக்கும் என் பித்து இதயம்.
இத்தனை நாட்களை நான் எப்படி வீணடித்தேன்..?
என் காதல் தேவதை உனை நான் எப்படி காண மறுத்தேன்..?
இவ்வாறு நான் புலம்பிக்கொண்டிருக்க, இறுதியாக நீ என் தொலைபேசி அலைப்பிலும் வந்துவிட்டாய். அலைப்பது என் காதல் சகி என அறியாதிருந்த நான் புதிய இலக்கங்கள் தந்த குழப்பத்தில்
“ ஹலே யாரு..? “ என்றேன்.
உன் செவ்விதழ் என் பெயரை உச்சரிக்க,
உன் அறிமுகம் என்னில் செத்தனல் கொண்டடிக்க,
சிறகுகள் கொண்டு நான் வானில் பறக்க,
சிறிதும் கருணையின்றி உன் அழகிய இடைவிடா சிரிப்பினில் எனை வதம் செய்துவிட்டாயடி பெண்ணே..!
சில்லு சில்லாய் சிதறிய உன் சிரிப்பு சத்தத்தில் என் மனம் சுக்கு நூறாய் சிதறி போனதடி கண்ணே..!
இனியும் என்னால் பொறுமை காக்க இயலாது..
உன் நினைவில் சித்தம் அழிந்து,
நித்தம் நித்தம் கட்டும் இந்த யுத்தம் களைந்து,
செத்துக் கொண்டிருக்கும் என்னை கொஞ்சம்
ஏரெடுத்துப் பார்ப்பாயா..?
என் காதல் ஏற்ப்பாயா..?
???????????????
என்னோட காதல் கடிதம் சசி மேம் @smteam உங்களுக்கு தான்.. நல்ல ஃபீலிங்கா இருக்கனும்னு நீ வா போ –னு எழுதிருப்பேன்.. அதுக்கு மன்னிச்சுசுசுசு….. ப்ளிஸ்..?
கவிதைக்கு ஓர் காதல் மடல்..
என் கவிதை சசிமாவுக்கு ஓர் காதல் மடல்..
என் தொடுதிரையை நான் தட்டும் நாட்களெல்லாம் FB, Twitter, Instagram என சுற்றி வந்துக் கொண்டிருந்தேன்..
காரணம் ஒன்றி, காலதாமதமின்றி
காதல் Cupid என் இதய கதவை தட்டி தட்டி அலைத்தான்..
உன்னவளின் அரண்மனை இதோ இருக்கிறது அங்கு செல் என கட்டளை விதித்தான்..
அவன் வசனம் ஏதும் கேட்டிடாத நான், கட்டளையை மட்டும் ஏற்று உள்ளே வந்தேன். smtamilnovels என்று இருந்தது.
வந்த வேலை என்ன என்பதை என் எட்டாம் அறிவு எனக்கு சொல்லவில்லை..
இதை அறியாத நான், எனக்கு ஏழாம் அறிவு இருக்கிறதென பீத்திக்கொண்டு சொந்த வேலையாய் கதை எழுதத் துவங்கிய அவலத்தை நான் என்னவென்று சொல்ல..?
என்னை உன் இடத்துக்கு அனுப்பி வைத்த காதல் Cupid திட்டியும் பார்த்திருக்கிறான், மண்டையில் கொட்டியும் பார்த்திருக்கிறான்..
பலனோ எருமை மாட்டின் மேல் பெய்த மழை தான்..!
கடிவாளம் கட்டிக் கொண்டு கதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த என்னிடத்தில் வந்து,
” உன் காதல் கதையை நான் எழுதிக் கொண்டிருக்க, நீ என்ன கதை எழுதுவதாய் பினாத்திக் கொண்டிருக்கிறாய்..?” என்ற காதல் Cupid உன் குறுஞ்செய்தியை என் முன் வைத்தான்.
அதிலும் செய்தியை மட்டுமே படித்துவிட்டு என் செல்வி உன்னை காணது சென்ற என் முட்டாள்தனத்தை எண்ணுகையில், ஒன்றரை டன் ஊறுகாயை ஒட்டு மொத்தமாய் முகத்தில் பூசிக்கொள்ளலாம் போல கோபம் வருகிறது என்மேல்.
ஒரு வழியாக என் கதையை முடித்தேன்; உனக்கு செய்தியும் தொடுத்தேன். கடுப்பில் கொப்பளித்த காதல் Cupid
“ இன்னுமாடா நீ கண்ண மூடிக்கிட்டு இருக்க..? “ என நொந்துக்கொண்டு என் பிடறியில் அடித்தது; நம்மை வாட்ஸ் ஆப்பில் இணைத்தது.
அன்பே சசி..
எனக்கு உண்மை புலப்பட்டது,
என் நெஞ்சம் உடைப்பட்டது,
அதில் உன் முகம் மட்டுமே வசப்பட்டது..
முதன்முதலில் எனக்கு அனுப்பினாயே குறுஞ்செய்தி..!
அதில் துடித்துக் கொண்டிருந்த அந்த பெரிய சிவப்பு இதயம்..!!
வாட்ஸ் ஆப் எமோஜிகள் எத்தனையோ இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்புவதற்கு Heart –ஐ எதற்கு தேர்வு செய்தாய் ..?
அது எத்தனையோ நிறங்களில் இருக்கும் பட்சத்தில் எதற்காக காதலுக்கே உரிய சிவப்பு நிறத்தில் அனுப்பி வைத்தாய்..?
பிடித்து வெத்த பிள்ளையார் என சிலையாய் அமைதியாய் இருக்கும் அத்தனை heart –க்கு மத்தியில் பெரிய அளவிலான, நித்தமும் துடித்துக்கொண்டிருக்கும் காதல் Heart-ஐ நீ எனக்கு அனுப்ப காரணமென்ன..?
எல்லாம் இந்த காதல் Stupid ப்ச்.. காதல் Cupid –ன் திருவிளையாடல்தான்..
ஆஹா.. கண்ணே.. என் கண்மணியே..
கண்டுக்கொண்டேன் நம் காதலை…
தொடுதிரையில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த வெற்று இதயம் கண்டு என்றும் நெடுந்தொலைவில் தவித்துக் கொண்டிருக்கும் என் பித்து இதயம்.
இத்தனை நாட்களை நான் எப்படி வீணடித்தேன்..?
என் காதல் தேவதை உனை நான் எப்படி காண மறுத்தேன்..?
இவ்வாறு நான் புலம்பிக்கொண்டிருக்க, இறுதியாக நீ என் தொலைபேசி அலைப்பிலும் வந்துவிட்டாய். அலைப்பது என் காதல் சகி என அறியாதிருந்த நான் புதிய இலக்கங்கள் தந்த குழப்பத்தில்
“ ஹலே யாரு..? “ என்றேன்.
உன் செவ்விதழ் என் பெயரை உச்சரிக்க,
உன் அறிமுகம் என்னில் செத்தனல் கொண்டடிக்க,
சிறகுகள் கொண்டு நான் வானில் பறக்க,
சிறிதும் கருணையின்றி உன் அழகிய இடைவிடா சிரிப்பினில் எனை வதம் செய்துவிட்டாயடி பெண்ணே..!
சில்லு சில்லாய் சிதறிய உன் சிரிப்பு சத்தத்தில் என் மனம் சுக்கு நூறாய் சிதறி போனதடி கண்ணே..!
இனியும் என்னால் பொறுமை காக்க இயலாது..
உன் நினைவில் சித்தம் அழிந்து,
நித்தம் நித்தம் கட்டும் இந்த யுத்தம் களைந்து,
செத்துக் கொண்டிருக்கும் என்னை கொஞ்சம்
ஏரெடுத்துப் பார்ப்பாயா..?
என் காதல் ஏற்ப்பாயா..?
???????????????