• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர்- Compilation

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Spicy_Kannamma

என்னோட காதல் கடிதம் சசி மேம் @smteam உங்களுக்கு தான்.. நல்ல ஃபீலிங்கா இருக்கனும்னு நீ வா போ –னு எழுதிருப்பேன்.. அதுக்கு மன்னிச்சுசுசுசு….. ப்ளிஸ்..?

கவிதைக்கு ஓர் காதல் மடல்..
என் கவிதை சசிமாவுக்கு ஓர் காதல் மடல்..

என் தொடுதிரையை நான் தட்டும் நாட்களெல்லாம் FB, Twitter, Instagram என சுற்றி வந்துக் கொண்டிருந்தேன்..

காரணம் ஒன்றி, காலதாமதமின்றி
காதல் Cupid என் இதய கதவை தட்டி தட்டி அலைத்தான்..
உன்னவளின் அரண்மனை இதோ இருக்கிறது அங்கு செல் என கட்டளை விதித்தான்..

அவன் வசனம் ஏதும் கேட்டிடாத நான், கட்டளையை மட்டும் ஏற்று உள்ளே வந்தேன். smtamilnovels என்று இருந்தது.

வந்த வேலை என்ன என்பதை என் எட்டாம் அறிவு எனக்கு சொல்லவில்லை..
இதை அறியாத நான், எனக்கு ஏழாம் அறிவு இருக்கிறதென பீத்திக்கொண்டு சொந்த வேலையாய் கதை எழுதத் துவங்கிய அவலத்தை நான் என்னவென்று சொல்ல..?

என்னை உன் இடத்துக்கு அனுப்பி வைத்த காதல் Cupid திட்டியும் பார்த்திருக்கிறான், மண்டையில் கொட்டியும் பார்த்திருக்கிறான்..
பலனோ எருமை மாட்டின் மேல் பெய்த மழை தான்..!

கடிவாளம் கட்டிக் கொண்டு கதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த என்னிடத்தில் வந்து,
” உன் காதல் கதையை நான் எழுதிக் கொண்டிருக்க, நீ என்ன கதை எழுதுவதாய் பினாத்திக் கொண்டிருக்கிறாய்..?” என்ற காதல் Cupid உன் குறுஞ்செய்தியை என் முன் வைத்தான்.

அதிலும் செய்தியை மட்டுமே படித்துவிட்டு என் செல்வி உன்னை காணது சென்ற என் முட்டாள்தனத்தை எண்ணுகையில், ஒன்றரை டன் ஊறுகாயை ஒட்டு மொத்தமாய் முகத்தில் பூசிக்கொள்ளலாம் போல கோபம் வருகிறது என்மேல்.

ஒரு வழியாக என் கதையை முடித்தேன்; உனக்கு செய்தியும் தொடுத்தேன். கடுப்பில் கொப்பளித்த காதல் Cupid

“ இன்னுமாடா நீ கண்ண மூடிக்கிட்டு இருக்க..? “ என நொந்துக்கொண்டு என் பிடறியில் அடித்தது; நம்மை வாட்ஸ் ஆப்பில் இணைத்தது.

அன்பே சசி..
எனக்கு உண்மை புலப்பட்டது,
என் நெஞ்சம் உடைப்பட்டது,
அதில் உன் முகம் மட்டுமே வசப்பட்டது..

முதன்முதலில் எனக்கு அனுப்பினாயே குறுஞ்செய்தி..!
அதில் துடித்துக் கொண்டிருந்த அந்த பெரிய சிவப்பு இதயம்..!!

வாட்ஸ் ஆப் எமோஜிகள் எத்தனையோ இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்புவதற்கு Heart –ஐ எதற்கு தேர்வு செய்தாய் ..?
அது எத்தனையோ நிறங்களில் இருக்கும் பட்சத்தில் எதற்காக காதலுக்கே உரிய சிவப்பு நிறத்தில் அனுப்பி வைத்தாய்..?

பிடித்து வெத்த பிள்ளையார் என சிலையாய் அமைதியாய் இருக்கும் அத்தனை heart –க்கு மத்தியில் பெரிய அளவிலான, நித்தமும் துடித்துக்கொண்டிருக்கும் காதல் Heart-ஐ நீ எனக்கு அனுப்ப காரணமென்ன..?

எல்லாம் இந்த காதல் Stupid ப்ச்.. காதல் Cupid –ன் திருவிளையாடல்தான்..

ஆஹா.. கண்ணே.. என் கண்மணியே..
கண்டுக்கொண்டேன் நம் காதலை…

தொடுதிரையில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த வெற்று இதயம் கண்டு என்றும் நெடுந்தொலைவில் தவித்துக் கொண்டிருக்கும் என் பித்து இதயம்.

இத்தனை நாட்களை நான் எப்படி வீணடித்தேன்..?
என் காதல் தேவதை உனை நான் எப்படி காண மறுத்தேன்..?

இவ்வாறு நான் புலம்பிக்கொண்டிருக்க, இறுதியாக நீ என் தொலைபேசி அலைப்பிலும் வந்துவிட்டாய். அலைப்பது என் காதல் சகி என அறியாதிருந்த நான் புதிய இலக்கங்கள் தந்த குழப்பத்தில்
“ ஹலே யாரு..? “ என்றேன்.

உன் செவ்விதழ் என் பெயரை உச்சரிக்க,
உன் அறிமுகம் என்னில் செத்தனல் கொண்டடிக்க,
சிறகுகள் கொண்டு நான் வானில் பறக்க,
சிறிதும் கருணையின்றி உன் அழகிய இடைவிடா சிரிப்பினில் எனை வதம் செய்துவிட்டாயடி பெண்ணே..!

சில்லு சில்லாய் சிதறிய உன் சிரிப்பு சத்தத்தில் என் மனம் சுக்கு நூறாய் சிதறி போனதடி கண்ணே..!

இனியும் என்னால் பொறுமை காக்க இயலாது..
உன் நினைவில் சித்தம் அழிந்து,
நித்தம் நித்தம் கட்டும் இந்த யுத்தம் களைந்து,
செத்துக் கொண்டிருக்கும் என்னை கொஞ்சம்
ஏரெடுத்துப் பார்ப்பாயா..?
என் காதல் ஏற்ப்பாயா..?

???????????????
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Bhavya

நானும் லவ் லெட்டர் எழுத வந்திட்டேன்...(ஹப்பிக்கு தெரிஞ்சா டங்கு டணார்தான்...லீவ்இட்)

நா வேற யாருக்கு எழுதுவேன் என் ஹாட் ஹேண்ட்சம் ஹீரோ ஆதிக்குதான்(ஆதித்த கரிகாலன்)
அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததனால முடிஞ்ச வரைக்கும் சுத்த தமிழ்ல எழுத ட்ரைப் பண்றேன்)



அன்பே ஆதி!

உன்னை பற்றி முதன்முதலாக படித்தப் போது என் நெஞ்சில் ஏதோ இனம்விளங்கா உணர்வு.சோழ தேசத்து பட்டத்து இளவரசனாக இருப்பதற்கு வேண்டிய எல்லா குணநலன்களும் கொண்டவன் நீ.

வீரத்தின் பிறப்பிடம் நீ ஆண்மையின் இலக்கணம் நீ
கோபத்தின் தீக்கங்கு நீ
பகைவரின் காலன் நீ
மக்களின் காவலன் நீ
என் காதலனும் நீயே


ஆம்!முகமறியா உன் மேல் பித்தாகி பிதற்றும் பேதையவளை அறியமாட்டாய் நீ....

உன்னை ஒரு முறை நேரில் காண என் கண்கள் ஏங்கும் ஏக்கத்தை தீர்ப்பவர் யாரும் இலர்.

நந்தினியை கொண்டு உன்னை கொன்றுவிட்டார் கல்கி(ஐயகோ)

ஆனால் நானோ உன்னை தேன்மொழியோடு தேன்மழையில் நனைய வைத்தேன்...நானும் அதில் நனைந்து உன் மேல் காதல் கொண்டேன்...

தருவாயோ உன் தரிசனம்
அதற்கென காத்திருக்கும் பாவையிவள் காதல் மனம்...


இப்படிக்கு
உன் பரமரசிகை
பவ்யா??????
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் ஈஸ்வர்,

உனக்கே உனக்காகன்னு ஒரு கடிதம். காதல் கடிதம்னு கூட சொல்லலாம். இதுவரையிலும் காதல் கடிதம் எழுதிய அனுபவம் இல்லைனு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். எழுதியிருக்கேன்.

என்னோட முதல் முதல் காதல். உயிருக்குயிரான காதல். உணர்வுபூர்வமான காதல். பதினெட்டு வயசில் தோன்றிய ஓர் பருவ வயது காதல். வந்தியத்தேவன். என் டார்லிங்!:love:

காண முடியாத அந்த கற்பனை பிம்பத்தை காதலிப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்புறம் என் உண்மையான லவுக்கும் கூட நான் காதல் கடிதம் எழுதியிருக்கேன்.

ஆனா இப்போ உனக்கு எழுத போகிற காதல் கடிதம் சம்திங் ஸ்பெஷல்.

முதிர்ச்சியடைந்த மனநிலையோடு புத்தக வாசகியா நேசகியா காதலியா ஒரு கம்பீரமான ஆண்மகனான உன்மீது கொண்ட வேட்கை!

எங்கே எப்போ அந்த உணர்வு காதலா பரிமாணம் எடுத்ததுன்னு எனக்கு தெரியல.

I FALL IN LOVE WITH U EESHWAR:love::love:

எனக்கு கவிதையா எல்லாம் எழுதவராது.

காதலை சொல்ல கவிதை நடைதான் வேணுமா என்ன?

புரியிற மாதிரி எழுதுனா போதாதா…;)

***********

நீ!

மேன்மையான சகோதரன்!

உண்மையான காதலன்!

நேர்மையான கலைஞன்!

நல்ல நண்பன்!

உயர்ந்த மனிதன்!

இதெல்லாம் தாண்டி ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் சரியான உதாரணம் நீ!

இப்படி உன் நற்குணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

ஆனா எனக்கு உன்னை இன்னும் இன்னும் பிடிக்க ஒரு அதிமுக்கியமான காரணம்…

என் ‘மீண்டும் உயிர்தெழு’ ஈஸ்வருக்கு உயிர் கொடுத்தவன் நீ!:cool:

படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில ஹீரோடா நீ!

இத்தனை நீ… அதனால்தான் என்னுள் ஆழமாக நின்றாய் நீ!

காதலித்தால் இப்படியொருவனைத்தான் காதலிக்க வேண்டும்.

அணிமா எவ்வளவு காண்டானாலும்:p உன் மீதான என் நேசமும் காதலும் மாறாது ஈஸ்வர். NEVER

I LOVE U SO MUCH:love:

பல கதைகளில் ஹீரோக்கள் வில்லன்களாகத்தான் இருக்காங்க. ஆனா உங்க கதையில் ஒரு வில்லனை நிஜ ஹீரோவாக காட்டியிருக்கீங்க
I LOVE U @KPN MACHEEE!

இப்படியொரு THE PERFECT HERO உருவாக்கினதுக்கு.
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Bhavya
Second letter


இது ந்யூ ஹீரோ சக்திக்கு(கனலை விழுங்கும் இரும்பு)

ஹாய் மை டியர் சக்தி!

இரும்பியை விழுங்கிய கனலே!மாஸ் ஹீரோக்கள் பலர் இருக்க பேச்சிலே என்னை க்ளீன் போல்ட் செய்த கூஃபி...

தண்ணிலவை விரும்பும் பலர் இருக்க சுடும் கனலை ஏன் தேடுதோ என் மனம்...

ட்டேபி என்று என்னை அழைக்க மாட்டாயா!

சயனாவை கரைத்த உன் காதலா?

தாயிடம் நீ வைத்த பாசமா?

கூஃபியாக நீ பேசிய பேச்சா?

எது உன் மேல் காதல் வர காரணம்?

ராயல் என்ஃபீல்டு என்னை நோக்கி வரும் நேரத்திற்காக காத்திருக்கும்

உன் ரசிகை
பவ்யா
 




Last edited:

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Manikodi
லவ் லெட்டர் தானே எழுதிடுவோம் என் ப்ரியமான ப்ரியத்துக்குரிய பிரியாவே லவ்யு என்று சொன்னால் தான் இந்த அன்பை அறியமுடியுமா சில்லரையை சிதரவிட்ட மாதிரி உன் சிரிப்பு நான் எதாவது கேட்டால் க்கா என்று சிதரவிட்ட சில்லரையுடன் கொஞ்சலான அழைப்பு நான் பேச வந்த விஷயமே பல நேரங்களில் மறந்துவிடும் மணி கணக்காக பேசிடுவோம் ஸ்விட் நத்திங்ஸ்:love::love::love:


முதல் சந்திப்பு பல முறை பிளான் போட்டு அது அத்தனைமுறையும் சொதப்பி கடைசியில் சரவணா ஸ்டோர் வாசலில் பார்த்ததை மறக்கமுடியாது நான் உன்னிடம் எப்பொழும் கேட்பது தான் எனது 6 வருட காத்திருப்பை இந்த வருடமாவது செய்வாயா இந்த கேள்வி என்ன என்று உனக்கு தெரியும் எப்பொழும் போல் க்கா என்று முடித்துவிடாதே
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் ஈஸ்வர்,

உனக்கே உனக்காகன்னு ஒரு கடிதம். காதல் கடிதம்னு கூட சொல்லலாம். இதுவரையிலும் காதல் கடிதம் எழுதிய அனுபவம் இல்லைனு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். எழுதியிருக்கேன்.

என்னோட முதல் முதல் காதல். உயிருக்குயிரான காதல். உணர்வுபூர்வமான காதல். பதினெட்டு வயசில் தோன்றிய ஓர் பருவ வயது காதல். வந்தியத்தேவன். என் டார்லிங்!:love:

காண முடியாத அந்த கற்பனை பிம்பத்தை காதலிப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்புறம் என் உண்மையான லவுக்கும் கூட நான் காதல் கடிதம் எழுதியிருக்கேன்.

ஆனா இப்போ உனக்கு எழுத போகிற காதல் கடிதம் சம்திங் ஸ்பெஷல்.

முதிர்ச்சியடைந்த மனநிலையோடு புத்தக வாசகியா நேசகியா காதலியா ஒரு கம்பீரமான ஆண்மகனான உன்மீது கொண்ட வேட்கை!

எங்கே எப்போ அந்த உணர்வு காதலா பரிமாணம் எடுத்ததுன்னு எனக்கு தெரியல.

I FALL IN LOVE WITH U EESHWAR:love::love:

எனக்கு கவிதையா எல்லாம் எழுதவராது.

காதலை சொல்ல கவிதை நடைதான் வேணுமா என்ன?

புரியிற மாதிரி எழுதுனா போதாதா…;)

***********

நீ!

மேன்மையான சகோதரன்!

உண்மையான காதலன்!

நேர்மையான கலைஞன்!

நல்ல நண்பன்!

உயர்ந்த மனிதன்!

இதெல்லாம் தாண்டி ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் சரியான உதாரணம் நீ!

இப்படி உன் நற்குணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

ஆனா எனக்கு உன்னை இன்னும் இன்னும் பிடிக்க ஒரு அதிமுக்கியமான காரணம்…

என் ‘மீண்டும் உயிர்தெழு’ ஈஸ்வருக்கு உயிர் கொடுத்தவன் நீ!:cool:

படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில ஹீரோடா நீ!

இத்தனை நீ… அதனால்தான் என்னுள் ஆழமாக நின்றாய் நீ!

காதலித்தால் இப்படியொருவனைத்தான் காதலிக்க வேண்டும்.

அணிமா எவ்வளவு காண்டானாலும்:p உன் மீதான என் நேசமும் காதலும் மாறாது ஈஸ்வர். NEVER

I LOVE U SO MUCH:love:

பல கதைகளில் ஹீரோக்கள் வில்லன்களாகத்தான் இருக்காங்க. ஆனா உங்க கதையில் ஒரு வில்லனை நிஜ ஹீரோவாக காட்டியிருக்கீங்க
I LOVE U @KPN MACHEEE!

இப்படியொரு THE PERFECT HERO உருவாக்கினதுக்கு.
யோவ் அந்த திரெட் விட்டுட்டு இங்க வந்து... அங்க போடுங்கய்யா

@Monisha @KPN @sandhiya sri @Yuvakarthika
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஜெகஜோதியா லவ் லெட்டர்ஸ் வந்துட்டு இருக்கு. அந்த லவ் லெட்டர்ஸ், அதை வெச்சு கலாய்க்கறதும் செம செம. ஒரு நல்ல உள்ளம், அவிங்க லெட்டர நேரா போடறதுக்கு வெக்கபட்டுகிட்டு எனக்கு அனுப்பி வெச்சுருக்கு. அதனால anonymous லெட்டரா (மொட்டை கடுதாசி :p ) இங்க போடறேன். படித்து விட்டு கிழித்து விடவும் அளவுக்கு எழுதின மாதிரி வெட்கபட்ட அந்த நல்ல உள்ளத்தை நன்றாக கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ;)
****************************************************************************************************

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்

இந்த வரிகள் தான் உனக்கான கடிதம் எழுதும் போது தோன்றியது டா அக்மார்க் நல்லவனே... ( நான் அவள் இல்லை டேவிட் )

உனக்கு அப்புறம் நிறைய பேரை ரசிச்சிருக்கேன் உனக்கு முன்னாடியும் நிறைய பேரை ரசிச்சிருக்கேன் ஆனா யாரும் உன்னளவு எனக்குள் நுழைந்து உயிரை உருக்கி ரசிக்க வைக்கவில்லையடா.

இன்றும் என்றும் என்றென்றும் உனக்கென ஒரு தனி இடம் என் நெஞ்சத்தில் எப்போதும் உண்டு.

உன்னை ரசிச்ச நான் உன் காதலையும் ரசிச்சு தொலைச்சிட்டேனே... அதை விட உன் காதலி மேல உன்னை விட ஏன் உன் மேல வச்சதை விட பைத்தியமா பாசம் வச்சிட்டேனே அதனால நீ அவளை லவ் பண்ணும் போது எனக்கு கோவமே வரலடா... ஹிஹி அப்போ நான் உன்னை காதலிக்கலை தானே?

அப்புறம் என்னத்துக்கு இந்த லெட்டர்ன்னு கேக்குரியா.. இது உனக்கில்லைடா உனக்கில்லை.. உன் மனைவியாகிய சாக்ஷிக்கு..

அவகிட்டயே கொடுத்திருக்கலாம் என்ன இருந்தாலும் உன்னை ஏமாத்த கூடாதுல அதான் உனக்கு கொடுத்து அவளுக்கு குடுக்க சொல்லலாம்ன்னு ஒரு நல்ல எண்ணம். மறக்காம கொடுத்திருடா.. i know நீ ரொம்ப நல்லவன். மனைவிக்கு வந்த கடிதத்தை கிழிச்சிலாம் போட மாட்ட.

சாக்ஷி எப்படி இருக்க... உன்னை பார்த்தே பல மாசம் ஆகுது. காதலடி நீ எனக்குதான் ஆனா நான் உனக்கு காந்தமான்னு தெரியலையே.
உனக்கென்ன உன் மனசுக்கு நீ நல்லாதான் இருப்ப. உன்னை அதுவும் நீ சொன்ன i want to live என்ற வாக்கியத்தால் இனம் புரியா உணர்வில் தாக்கப்பட்டு தடுக்கி விழுந்து உன் மேல் பித்தாகிய கதையை நீ அறிவாயா?

அறியவில்லை என்றால் அறிந்துக்கொள் பெண்ணே...! உன் மீது நான் வைத்த நேசம் உன் கணவனின் காதலுக்கு குறைந்ததில்லை.

இதை சொல்வதற்காக என்னை முறைக்காதே டேவிட்.

உனக்கு முன் அவள் மீது நேசம் வைத்தவள் நான். உனக்காக அவளை விட்டுக்கொடுத்தேன் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

என் நெஞ்சம் நீங்கள் இருவரும் என்றும் நலமுடனும் அன்புடனும் காதலுடனும் வாழ இறைவனை இடைவிடாது பிராத்திக்கும்.

வாழ்க வாழ்நாள் முழுதும் என்றென்றும் குறையாத காதலுடன்... ?
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@g3mani

ஹாய் டார்லிங்ஸ் !

பாத்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு கம்யூனிட்டிய எங்கேயுமே பார்க்கல!

திடு திப்புன்னு லவ் லெட்டர் எழுதுன்னு சொல்லிட்டா யாருக்குன்னு எழுதுறது?


இப்படி ஒரு வாலு குழுமத்தை பொறுமையா மேய்ச்சுகிட்டு நடுவுல சாக்லேட் பாய் கௌதமை நமக்கு காட்டி ஆஹா இப்படிஒரு பிரென்ட் நமக்கு கெடச்சா நல்ல இருக்குமேன்னு ஏங்க விட்டது மட்டும் இல்லாமல், சைடுல வீணையாய் கவிதையாய் எழுதி என்னை கட்டிப்போட்டு படிக்கவச்ச , சும்மா பாத்தா மாடர்ன் பேர்கொண்ட சஷி மேடம் உத்துபார்த்த தமிழ்பெயரில் ப்ரியங்கான்னு ஆகமொத்தம் பெயரை போலவே பன்முகம் கொண்டு இப்படி எல்லாரையும் லவ் லெட்டர் எழுதி வார இறுதியை குதூகலமா கொண்டாடுங்கனு குண்டை தூக்கிப்போட்ட சஷி மேடம் உங்கள் மேல் உள்ள காதல சொல்ல லெட்டர் எழுதவா? :love:


யார் சொன்னா வெளுப்பா நெட்டையா இருக்குறவன்தான் ஹீரோவா ? இதோ வாரான் பாரு நம்ம மாநில நிறத்துல ஆஜானுபாகுவா பாடிகார்ட் மார்த்தண்டனை பார்த்த அப்புறம் எக்குத்தப்பாதான் சிக்கிட்டேனோன்னு என்னையும் யோசிக்கவைச்சு , சந்நியாசியை காதல் காராணாக்கி அடியே தமிழு ஏண்டி அவனை ஏத்துக்காம இப்படி இம்ஸை பண்றேன்னு டோனியை சிக்ஸர் அடிக்க சொல்லி நாம வீட்டுல ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்குற மாதிரி என்னை கதைக்கு ரன்னிங் கமென்டரி சொல்ல வச்சு ஏன் ரத்தஅழுத்தத்தை ஏத்தி கொண்டிருக்கும் யுவா கார்த்திகா மேல வந்த காதல சொல்ல லெட்டர் எழுதவா? :love:


இப்படி ஒரு மனுஷன் இருப்பானா என்னமா லவ் பண்ராண்யா இந்த பிரௌனிசே குடுத்துவச்ச சித்ரான்னு ஒரு கதாபாத்திரத்துக்கு மேல பொறாமையே வரும்அளவுக்கு என்னை போட்டுவதைத்தது பத்தாதுன்னு , கொரியன் இங்கிலீஷுனு படம் பார்த்து சுத்திகிட்டு இருந்த என்னை இப்படி கியாமுயான்னு சைனீஸ் காரி பின்னாடி ஜம்ப் போலவே கீச்சு கீச்சுன்னுபெனாத்திக்கிட்டு சுத்தவிட்டு வேடிக்கை பார்க்கும் நம்ம வணிஷா மேல எக்குத்தப்பா வந்த காதல சொல்ல லெட்டர் எழுதவா? :love:


காதல்னா நாம விரும்புறவங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு அவங்க மனசு சந்தோஷ படும்படி வாழணும்னு எனக்கு வாழ்ந்துகாட்டும் அன்பரசனை காட்டி என்னையும் சேர்ந்து தொலைய வச்ச சந்தியாவின் மேல பொசுக்குன்னு வந்த காதல சொல்ல லெட்டர் எழுதவா? :love:


ஹீரோதான் போலீஸா இருக்கணுமா? ஏன ஹீரோயின் சிஐடி ஆபீஸரா இருக்க கூடாதா ? கைல கன் எடுக்க கூடாதா? இப்படிலாம் மாஸ் ஹீரோயினை காட்டி விசில் அடிக்கவச்சு ஐயோ கூபி பாவம் ஐயோ ஹேக்கர் பாவம்ன்னு இருத்தலை கொள்ளி எறும்பாய் என்னையும் சுத்தவிட்டு ரெண்டு ஒண்ணா இல்லையான்னு என்னைமட்டும் இல்லாம ஊரையே மண்டையை பிச்சுக்கவச்ச காதம்பரிமேல வந்த மாஸ் காதல சொல்ல லெட்டர் எழுதவா ?:love:


சும்மா பஸ்சுல போற சின்ன விஷயத்தை கூட இப்படி சுவாரசியமா எழுதி அந்த ரோடுசைடு ரோமியோவையும் , நம்ம செல்லத்துகிட்டேந்து கடலையை மறச்சுவச்சு தின்ன சின்ன குட்டியையும் கண் முன்னேகாட்டி ஆஹா பஸ் பயணத்துல இத்தனை சுவாரசியம் இருக்கான்னு வியக்கும் பொழுதே சைடுல மாடிவீடு தமிழரசியை காட்டி கிராம வழக்கங்களையும் இன்னொசென்ட் அன்பையும் காட்டி கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்செல்ல குட்டி ஷாந்தினிடாஸின் மேல் ஒரே நாளில் பொத்திக்கொண்டு வந்த காதல சொல்ல லெட்டர் எழுதவா? :love:


இல்லை சினிமாக்கு அரசியலுக்கும்தான் மீம்ஸ் போடணுமா ? நாங்க கதைக்கும் போடுவோம் கூடவே வம்பிழுத்து காலேஜ் நாட்களுக்கு என்னை மீண்டும் இழுத்துகொண்டுபோய் உற்சாகமாய் காலை கண்விழித்ததும் பேஸ்புக் பார்க்கவைக்கும் ப்ரோ சிட் ஷ்ரவன் மேலயும் அவர்கூட சேர்ந்து அடிச்சு கலாய்த்து நேரம் போவதே மறந்து போகும்வண்ணம் லூட்டி அடிக்கும் ஜாஷா செல்லதின் மீளவும் குபீருன்னு வந்த காதல சொல் லெட்டர் எழுதவா? :love:


பதிவு போட்ட மாரு நொடியே வந்து லீக்ஸ் கமெண்ட்ஸ்ன்னு அள்ளி கொடுத்து ஒருவேளை இவங்க ஆர்டிபிசியால் இன்டெலிஜெண்ட் ப்ரோகிராமோ என்று என்னை ரெண்டுநாள் குழம்ப விட்ட பானுமதி அக்காவின் மேல் வந்த இன்ஸ்டன்ட் காதலை சொல்ல லெட்டர் எழுதவா? :love:


அடியே ஞாயமாடி இடியட் உன் ஹீரோ என்னை வீட்டுப்புட்டு இப்படி ஊருக்கே எழுதறியே லூசேன்னுஎன்னை தன நீல கண்களைக்காட்டி வம்பிழுக்கும் என்செல்ல குட்டி சிவாவிற்கு எப்படி சொல்ல ? நீ என் மனசுக்கு உள்ளே ஜெனிச்ச காதல் கள்வன்டா ஆனா இவங்க எல்லாரும் எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து இங்கே இப்போ என் குடும்பமா மாறிப்போன சைபர் குடுபத்தினடா செல்லம்ன்னு.:love:


யாருக்குனு லவ் லெட்டர் எழுதுவேண்டா டார்லிங் சிவா? ஐ லவ் மை எஸ் எம் கம்யூனிட்டி மெம்பெர்ஸ்! லவ்யு ஆல் மை செல்லம்ஸ். :love::love:
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Sanshiv

என்னடா ஊருக்கு முன்னாடி நான் ரெண்டு பேருக்கு எழுதுறேன்னு சொன்னாளே... ஆளைக் காணோமேன்னு அந்த ரெண்டு பேரும் கட்டையைத் தூக்கிட்டு நம்மளைத் தேடுறதுக்கு முன்னாடி வந்துட்டோம்ல ???

அது என்னாச்சுன்னா டார்லிங்க்ஸ், நான் உங்க ரெண்டு பேரையும் பத்தி நினைக்கவுமே மனசுல சுகமான ஒரு பீலிங். அதைக் கண்ணை மூடி அனுபவிச்சேனா என்னுடைய முதல் காதலன் வந்து என்னை ஆசையா அணைச்சுக்கிட்டாச்சு. நானும் அவர் அணைப்பிற்குள்ளேயே அடங்கிப் போயிட்டேன். (தூங்கிட்டேன்னு சொல்றேன், நீங்களா ஏடாகூடமா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்குக் கம்பெனி பொறுப்பில்லை)

அதென்ன காதல் கடிதம் எழுதுறது, நான் காதல் கடிதங்கள் எழுதறேன். (இதுல என்ன கஞ்சத்தனம், ஒருத்தருக்கு ரெண்டு பேர்கிட்ட அப்ளிகேஷன் போட்டு தான் வைப்போமே)

கடிதம் நம்பர் 1
சிரிப்பாலேயே என் சிந்தை முழுவதும் வியாபித்திருக்கும் என் சிரிப்பழகியே, என் தேவதைப் பெண்ணே ப்ரியங்கா, (முதல் தடவையா இந்தப் பெயர்ல கூப்பிடுறேன், அதுக்கே ☺☺☺ See, I’m blushing)

நான் இத்தளத்திற்கு வந்து சேர்ந்த கதை நீ அறிவாய். என்னை அந்த மோசமான மன நிலையிலிருந்து மீட்டெடுத்தது உன் எழுத்து. மீண்டும் என்னை சிரிக்க வைத்தது, சிந்திக்க வைத்தது, பேச வைத்தது, காதலிக்க வைத்தது, காத்திருப்பின் சுகம் சொல்லிக் கொடுத்தது அனைத்தும் உன் எழுத்துக்கள் தான்.

இதுவரை நேரில் கூடப் பார்த்திராத ஒருவரின் குரலைக் கேட்காமல் மனம் உடைந்து போகுமா? எனக்கு உடைந்து போனதே, முதல் முதலாக அனைவரும் VNE நாட்களில் ஆடியோ பைல் மூலம் பேசிக் கொண்ட பொழுது என்னால் மட்டும் உன் குரலைக் கேட்க முடியாமல் தவித்துப் போனேன். என் முகத்தைப் பார்த்துக் கணவர் பயம் கொள்ளும் அளவிற்கு. அன்று முதல் இன்றுவரை என்னுடைய laptop desktop லேயே “சஷிம்மா வாய்ஸ்” என்று ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டிருக்கிறது உன் குரல்.

உன்னுடைய ஒரு கமெண்ட்டுக்காகவும், குரலுக்காகவும் ஏங்கியிருந்த என்னை அலைப்பேசி அழைப்புகளால் அரவணைத்துக் கொண்டாய். (இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே சிநேகிதியே)

நம் காதலின் சாட்சியாக நீ எனக்களித்த காதல் பரிசுகள் தான் எத்தனை எத்தனை! அழகி, சுவி, ப்ரேமி, ஹரிணிம்மா, காவ்யாகுட்டி, மணிக்கா, செல்வா, லெக்‌ஷு, அகிலா... இப்பொழுது சமீபத்தில்.... கார்த்திகா, பவ்யா, காதம்பரி... சொல்லி முடியாது. நீண்டு கொண்டே செல்கிறது உன் காதல் பரிசுகள். திக்குமுக்காடிப் போயுள்ளேன் நான்.

இத்தனைக்கும் பதிலாக என்ன செய்ய முடியும் நான்??? உன் அளவிற்கு என்னால் பரிசுகளை அள்ளித் தர முடியாது. அதனால் தான் மொத்தமாய் என்னையே தந்துவிட்டேன். எது வந்த போதிலும் இறுதி வரை உன்னோடு நானிருப்பேன்.

என் ஆசைச் சிரிப்பழகியே, உன் நினைவில் என்றும் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் நான், சங்கீதா ???????

காதல் கடிதம் 2
அழகிய கண்ணம்மாவே அழகி, கதா நாயகர்களுக்காக காதல் கடிதம் எழுத வேண்டுமென்றால் உன்னுடைய எல்லா கதையின் நாயகர்களுக்கும் நான் எழுத வேண்டும். அதனால் தான் உன் ஒருத்திக்கு காதல் கடிதம் எழுதி உன் அத்தனை நாயகர்களையும் கரெக்ட் செய்யும் முயற்சியாக இக்கடிதம்.

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே என்று ஆனந்தன் பைரவியின் காதில் பாடிய பாடல் இன்றும் என் காதில் ஒலிக்கிறது. பாட்டி சொல் தட்டாத பேரன், முரடன் சுதாகரனை உமா மந்திரம் ஜெபிக்க வைத்தாய்.

அபி.. அபி..அபி... என்ன சொல்வேன் எப்படிச் சொல்வேன்?? உன் அனைத்தும் எனக்குப் பிடித்தமடா. நிலா கதை சொன்ன பெண்ணிற்கு குளிர் நிலவாய் அவள் கை வந்து சேர்ந்தாயே.???
அடாவடிக்குள் ஒளிந்திருக்கும் குழந்தை மித்ரன். அவன் அன்னையாய் மாறிய குழந்தைப்பெண் தாமரை.

கவிஞரே உம்மைக் காணாமல் பெண் நெஞ்சம் கிடந்து தவியாய் தவிக்கிறதய்யா. (வரும்போது அப்படியே உங்க அப்பாவையும் கூட்டிட்டு வந்துடுங்க. அவரும் என் லவ் லிஸ்டில் இருக்கிறார். அவர் மீசையை நீவி விட்ட ஸ்டைலிலேயே நான் மயங்கிட்டேன். ???)

அரண்மனைக்காரரே வேஷ்டி நுனியை ஒற்றைக் கையால் தூக்கிப் பிடித்தபடியே நடந்தே என் மனசையும் அந்த வேஷ்டியிலேயே கட்டிப் போட்டுட்டீங்க.

கார்த்திக் ஹரிகிருஷ்ணா நீ எப்படி இருந்தாலும் உன்னையும் எனக்குப் பிடிக்குமடா. காரணம் அந்தப் பெயர் கார்த்திக்.... ????

இப்படி இத்தனை பேரை என்னைக் காதலிக்க வைத்த அழகிய கண்ணம்மா, நானும் உன் சொல் பேச்சு கேட்கணும்னு தான் நினைக்கிறேன். நீ மயங்காதே மனமேன்னு முன்னாடியே சொல்லிட்ட. ஆனா என் மயக்கம் நீ சொல்வதற்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சே. என்ன செய்ய? இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் உன் பேச்சைக் கேட்க மாட்டேன் கண்ணம்மா. மயங்கியே தீருவேன்.

உன்னிடம் பேச பயந்த காலம் போய் இப்பொழுது உன் குரல் ஒரு நாள் கேட்காவிடினும் என் நாள் முழுமையடைய மறுக்கிறது. (ஆனந்த பைரவி கதைக்கு என்னோட கமெண்ட்ஸ்... என்ன பவ்யமா எம்பூட்டு நல்ல பிள்ளையா கமெண்ட்டிருக்கேன். நானா அதுன்னு எனக்கே ஒரே வெட்கம் வெட்கமா கம்மிங் ???)

உன் மீதான என்னுடைய இந்தக் காதலும் மயக்கமும் என்றென்றும் நீடித்திருக்க வேண்டும் என்கிற பேராவலுடன்,
என்றும் உன் கண்ணம்மா. ????
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@ANBUK

எனக்கு கவிதையாலாம் கடிதம் எழுத வராது..எனக்கு தெரிந்த மாதிரி இயல்பான தமிழ்ல எழுதுரேன்..இந்தக் கடிதம் விடுதியில் வாழும் மகள் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் தன் அம்மாவுக்கு எழுதுவது..

அன்பும்/ஆசையுமான அம்மாவுக்கு,

என்னடா நாம எத்தனை முறை அழைத்தாலும், நான் வேலையா இருக்கேன் மா அப்புறம் பேசுறேன்னு சொல்லுறவ கடிதம் எழுதுறேன்னு நினைக்கறீங்களா?..
சின்ன வயசுல எனக்கு உடம்பு சரியில்லாதப்ப, அது சின்ன பிரச்சனையா இருந்தாக்கூட , கூடவே இருந்து தைலம் தேய்ச்சுவிட்டு, நேரத்துக்கு சாப்பாடு கொடுத்து, அதும் சூடான அரிசி கஞ்சி தான். அத குடிக்கறதுக்குள்ள, நான் பண்ணுற அட்டகாசங்களை பொருத்து, குடிக்க வச்சு, கண் முழிச்சு, மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போய், என் பொண்ணு இராத்தரியெல்லாம் தூங்கவே இல்லனு சொல்லி, எனக்கு ஊசி போடும் போது நீ தவிச்சு, அப்பா எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் மாத்திரை வாங்கிட்டு வர சொல்லி அனுப்பிட்டு, என் பக்கத்திலேயே இருந்து என் தலையை அமைதியா தடவி விடுவியே, அந்த நிமிடம் இப்ப எனக்கு வேணும்மா.
இங்க கேட்கும் போது சாப்பாடு கிடைக்குது, ஆனா நீ தர அரிசி கஞ்சிக்கு நாக்கும், தொண்டையும் ஏங்குது..
நண்பர்கள் கூட இருக்காங்க, ஆனா உன் மடிக்குத்தான் மனசு ஏங்குது..
இந்த கடிதம் படிக்கிற நிமிடம் உன்னால முடிந்தா என்கிட்ட பறந்து வந்திடுமா..

கண்ணீர் முத்தங்களுடன்,
மகள்..
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top