லாஜிக் இல்லா மேஜிக் - காயத்ரி மணிகண்டன்
ஹாய் நட்பூஸ்,
ரொம்ப நாளுக்கு பிறகு மீண்டும் ஒரு கதையின் ரிவ்யூவுடன் உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன். லாஜிக் இல்லா மேஜிக் என்பது எவ்வளவு உண்மையான வரிகள் என்று கதை படிச்சபிறகு தெளிவாக புரிஞ்சிகிட்டேன்.
நிரஞ்சன் கதையின் ஹீரோ. அவன் வாயை திறந்து எது சொன்னாலும் அது பொய்தான். அதே அளவு அவன் தன் தொழிலை உயிராக நேசிப்பவன். அதில் லட்சியத்தை அடைய காதல் கல்யாணம் எல்லாம் வேண்டாமென்று நினைப்பவன்.
நந்தனா கதையின் ஹீரோயின். அவன் பொய் பேசுகிறானா இல்லை உண்மை பேசுகிறானா? என்ற கேள்வியுடன் கடைசி நிமிடம் வரை மனதில் ரன்னிங் கமிட்ரி கொடுத்து கனவில் காதல் செய்து அவள் பண்ணும் வேலைகள் ஏராளம்.
பொய்யில் ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்ததா என்பது தான் கதை. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அருமை.
அவங்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவங்க பொய்யை நம்பி இவர்களுக்கு கல்யாண ஏற்பாடு செய்வதும், அதில் மற்ற இரண்டு ஜோடிகள் ஜோடி சேர்வது என்று கதையின் இறுதிவரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த எழுத்தாளரை பாராட்டியே ஆகணும்.
கதையில் இருந்த டைமிங் அண்ட் ரைமிங் வசனங்களும், நந்தனாவின் மைண்ட் வாய்ஸ் எல்லாமே அருமை எழுத்தாளரே. உங்களுக்கு அழகு சேர்ப்பதே உங்களின் வசனங்கள் தான்.
லாஜிக் பார்க்க கூடாதென்று எழுத்தாளர் முதலிலேயே சொன்னதால் நானும் கவனிக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது என்னவோ உண்மை.
“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ இந்த பாடலை எழுத்தாளரான காயத்ரி அக்காவுக்கு என்று டெடிக்கேட் பண்றேன்.
இந்த காலகட்டத்தில் செல்போன், முகநூல், வாட்ஸ் ஆப் என்று இன்டர்நெட்டில் இருந்து மனம் இறுகி கிடக்கும் மனிதர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு சிறந்த மருந்து என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் ஒரே விஷயம் தினமும் 20 நிமிடங்கள் சிரிக்க சொல்கிறார்கள்.
அந்த அருமருந்து உங்களின் எழுத்தில் இருக்கு அக்கா. உங்களின் ஜெர்னர் இதுதான் நீங்கள் காமெடி நாவல்கள் அதிகம் எழுத என் வாழ்த்துக்கள் அக்கா
என்றும் பிரியமுடன்,
சந்தியா ஸ்ரீ.