வசப்பட்டதே என் வானம்.7.2
அவள் சிரித்துக்கொண்டே ,பரவால்ல சார் இப்பவாவது சரியா புரிஞ்சிகிட்டீங்களே !அதுவே சந்தோஷம் என்றாள்.
இருவரும் எதை எதையோ பேசிக்கொண்டே உண்டனர்.அவள் கடந்த காலத்தில் கடந்து வந்த கஷ்டங்களை கேள்விப்பட்டபோது
, வாழ்க்கை எல்லோருக்கும் எளிதாக அமைவதில்லை அதற்கு எத்தனையோ போராட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.
சாப்பிட்டு முடித்ததும்,தன் வைத்திருந்த வாட்டர் பாட்டில் நீரால் கையை கழுவிவிட்டு, அவளுக்கும் கொடுத்தான் அவள் கைகளை கழுவிகொண்டு இருக்கும்
போது வீசிய காற்றில், அவள் துப்பட்டா பறந்து சென்றது!
அவன் அதை பிடித்து, கைகளில் சுருட்டி அப்படியே அவளிடம் கொடுக்க வந்தான், அப்போதுதான் அந்த துப்பட்டா கிழிந்து இருந்ததை பார்த்தான், இந்த கிராமத்தில் துப்பட்டா கிழிந்ததை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டார்களோ?, என எண்ணியவன், திடீரென ஏதோ தோன்ற, தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தி இருந்த துணியை எடுத்தான்,
அது அருவிக்கரையில் தன்னை காப்பாற்றியவர்,அவனுக்கு காயத்தில் கட்டியிருந்த துணி, கிழிசல் இருந்த இடத்தில் அந்த துணியை வைத்து பார்த்தான் அது சரியாக பொருந்தியது!
அருவிக்கரையில் தன் உயிரை காப்பாற்றியது செம்பா தான் என்பதைஉறுதிப்படுத்திக்
கொண்டவன், உணர்ச்சி மேலிட அவளை திரும்பிப் பார்த்தான்.
நெருப்பின் ஒளியில் அவளது முகம் நிச்சலனமாக தெரிந்தது!
பார்த்தபோது, சண்டையிட்டு பார்க்கக்கூடாது என நினைத்த ஒரு கோப முகம்!
பார்க்காமலேயே ,பார்க்க வேண்டும் என ஆசைபட்ட ஒரு பாச முகம்!,
உயிரைக் காப்பாற்றி மறுஜென்மம் தந்து மறைந்து போன ஒரு மாய முகம்!
என மூன்று முகங்களும், ஒரு முகமாக,அழகு திருமுகமாக,வானில் தெரியும் பௌர்ணமி மதிமுகமாக தன் எதிரே நிற்க….
வார்த்தைகள் ஊமையாகி, கண்கள் கலங்கி, மதிமயங்கி செய்வதறியாது சிலையாக நின்றான் மதிமுகிலன்!
அவன் எதிரில் இருந்த அந்த மதிமுகம்
அவள் சிரித்துக்கொண்டே ,பரவால்ல சார் இப்பவாவது சரியா புரிஞ்சிகிட்டீங்களே !அதுவே சந்தோஷம் என்றாள்.
இருவரும் எதை எதையோ பேசிக்கொண்டே உண்டனர்.அவள் கடந்த காலத்தில் கடந்து வந்த கஷ்டங்களை கேள்விப்பட்டபோது
, வாழ்க்கை எல்லோருக்கும் எளிதாக அமைவதில்லை அதற்கு எத்தனையோ போராட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.
சாப்பிட்டு முடித்ததும்,தன் வைத்திருந்த வாட்டர் பாட்டில் நீரால் கையை கழுவிவிட்டு, அவளுக்கும் கொடுத்தான் அவள் கைகளை கழுவிகொண்டு இருக்கும்
போது வீசிய காற்றில், அவள் துப்பட்டா பறந்து சென்றது!
அவன் அதை பிடித்து, கைகளில் சுருட்டி அப்படியே அவளிடம் கொடுக்க வந்தான், அப்போதுதான் அந்த துப்பட்டா கிழிந்து இருந்ததை பார்த்தான், இந்த கிராமத்தில் துப்பட்டா கிழிந்ததை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டார்களோ?, என எண்ணியவன், திடீரென ஏதோ தோன்ற, தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தி இருந்த துணியை எடுத்தான்,
அது அருவிக்கரையில் தன்னை காப்பாற்றியவர்,அவனுக்கு காயத்தில் கட்டியிருந்த துணி, கிழிசல் இருந்த இடத்தில் அந்த துணியை வைத்து பார்த்தான் அது சரியாக பொருந்தியது!
அருவிக்கரையில் தன் உயிரை காப்பாற்றியது செம்பா தான் என்பதைஉறுதிப்படுத்திக்
கொண்டவன், உணர்ச்சி மேலிட அவளை திரும்பிப் பார்த்தான்.
நெருப்பின் ஒளியில் அவளது முகம் நிச்சலனமாக தெரிந்தது!
பார்த்தபோது, சண்டையிட்டு பார்க்கக்கூடாது என நினைத்த ஒரு கோப முகம்!
பார்க்காமலேயே ,பார்க்க வேண்டும் என ஆசைபட்ட ஒரு பாச முகம்!,
உயிரைக் காப்பாற்றி மறுஜென்மம் தந்து மறைந்து போன ஒரு மாய முகம்!
என மூன்று முகங்களும், ஒரு முகமாக,அழகு திருமுகமாக,வானில் தெரியும் பௌர்ணமி மதிமுகமாக தன் எதிரே நிற்க….
வார்த்தைகள் ஊமையாகி, கண்கள் கலங்கி, மதிமயங்கி செய்வதறியாது சிலையாக நின்றான் மதிமுகிலன்!
அவன் எதிரில் இருந்த அந்த மதிமுகம்
Attachments
-
145.5 KB Views: 3