- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
புள்ளி கோபமாக ஷூமாசிச்சியைப் பார்த்தார். அவளது விரித்த குடையைத் தாண்டி அந்த மரத்தைப் பார்க்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.
ஷூமாசிச்சி நடனமாடிக்கொண்டே குடையைச் சுழலவிட்டு அங்குமிங்கும் நகர்த்தி - புள்ளியின் பார்வையை மறைத்துக் கொண்டேயிருந்தாள்.
கோபம் வந்தது புள்ளிக்கு ! பற்களை நறநறவென்று கடித்தார்.
அதே நேரம் ஷூமாசிச்சியின் காதில் மாட்டாவின் பதட்டக் குரல் விழுந்தது.
"ஷூமாசிச்சி! விடாதே! அவன் பார்வையைத் தடுத்துக் கொண்டே இரு! நமது ஆட்கள் அங்கே வந்துகொண்டிருக் கிறார்கள். அதுவரை சமாளி!"
பென்னட்டுக்கு இங்கே கோபம். "ஜார்ஜ்! அந்த ஆசாமி உன் பல்பைப் பார்க்க முடியாமல் கஷ்டப்படறான்! நீ விளக்கைப் போட்டுக்கிட்டு உயர எம்பிக் குதி! சீக்கிரம்! சீக்கிரம்!
பென்னட் அதைச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக அப்பால் செல்ல, ஏதோ ஒரு நெருடல் தோன்றி திரும்பிப் பார்த்தான்.
அவன் நினைத்தது சரியாக இருந்தது.
இரு கண்கள் அவனை ஒரு கோணத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன.
யார் அது! தெரிந்த முகம்தான். ஆமாம்; அந்த ஐஸ்கிரீம் பார்லரின் முதலாளி !
'களீர்' என்று ஒரு நாடி இழுத்தது.
'இவன் ஒற்றனா? அல்லது ஜப்பானிய ஒற்றனுக்கு உடந்தை ஆசாமியா?
சட்டென்று திரும்பி அந்த பார்லர் ஆசாமி நின்ற பக்கம் நெம்பிக் கொண்டு போக, பார்லர் ஆசாமி அங்கிருந்து அகல முயன்றார். தம் கையிலிருந்த பொய்த் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்!
வெறும் சத்தமும், புகையுமாய்க் கிளம்பினால் போதும்! அதற்குத்தான் அந்த முயற்சி! அந்த ஒற்றர் கும்பல்களுக்கிடையே எத்தனையோ சங்கேத சமிக்ஞைகள்.
இதற்குள் ஜார்ஜ் எம்பிக் குதிக்க, புள்ளி பல்பைப் பார்த்துவிட, பிரமுகர்களை நோக்கி அவர் காமிராவைத் திருப்பிவிட்டார்!
டக் டக் , டக் என்று விநாடிகள் பறக்க, இதோ ட்ரிகரை அழுத்தப் போகிறார் புள்ளி.
”யாவ்வ்வ்" என்று ஒரு கராத்தே கதறல் அந்தத் தேரையே உலுக்கியது!
பறந்து வந்த ஜப்பானிய ஒற்றன் ஒருவனுடைய கால் ராக்கெட் போல் வந்து அந்தக் காமிராவை உதைத்து ஆகாயத்தில் பறக்க விட்டது.
"அடேய் அநியாயக்காரா" என்று புள்ளி கூச்சல் போட, தேர்த்தட்டில் ஒரே களேபரம்!
அதே நேரம் அந்த மரத்தின் பக்கத்திலும் ஒரு பொய். வெடிச் சத்தம் கிளம்புவதைக் கேட்டு ஏராளமான ஜரூபானிய ஒற்றர்கள் ஏவுகணைகள் போல் வந்து குதித்தார்கள்!
திமிறிக் கொண்டு ஓடப் பார்த்த பென்னட்டையும், ஜார்ஜையும் எளிதாகப் பிடித்து அமுக்கிவிட்டார்கள்.
தேருக்கு வெளியே விழுந்த அந்தக் காமிராவைத் தூக்கி, புல்லட் வெளிவர முடியாத அளவுக்கு அதை ஒரு பைக்குள் போட்டு வெகு தூரம் கொண்டு போய்விட்டார்கள் சில ஜப்பானிய ஒற்றர்கள்.
எல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து போயிற்று.
சிலருக்குத்தான் ஏதோ 'கசமுசா' நடந்தது போல் லேசாகத் தெரிந்தது. ஆனாலும், என்னவென்று தெளிவாகப் புலப்பட வில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேருக்கு நடந்தது எதுவுமே தெரியவில்லை.
மறுநாள், பிரெஞ்ச் பிரசிடெண்ட் கொல்லப்பட இருந்ததையும், அவரைக் கொல்வதற்காக ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் ஜப்பானுக்கு வந்து ரகசிய வேலை செய்ததையும், கிஜிமா, ஷூமாசிச்சி, ஐஸ்க்ரீம் பார்லர் முதலாளி மூலமாக அதைத் துப்பறிந்து ஜப்பானிய அரசு ஒற்றர்கள் முறியடித்ததையும், தினசரி பத்திரிகைகளில் மக்கள் பக்கம் பக்கமாய்ப் படித்தார்கள்.
ஜார்ஜின் கவனப் பிசகினால் அவன் பார்லரில் மறந்து விட்டுப்போன டயரியை ஷாமா சிச்சி, பார்லர் முதலாளி, கிஜிமா மூவருமே படித்து விட்டிருந்தார்கள். எனினும், பிரெஞ்ச் பிரசிடெண்டை ஜார்ஜ் குழுவினர் எப்படிக் கொல்லப் போகிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் எல்லா விதமாகவும் யோசித்து அதற்குத் தக்கபடி திட்டமிட்டு வைத் திருந்தார்கள்! அவர்களது அசாத்தியமான திறமையும், எச்சரிக்கை உணர்வும், மதிநுட்பமும் கவனமும் தான் அந்தச் சூழ்நிலையை
முறியடித்தது.
ஜப்பானியப் போலீஸார் ஜார்ஜைக் கைது செய்து கொண்டு போகும்போது கிஜிமா தூரத்திலிருந்து கண்கலங்கிப் பார்த்தாள்.
அவள் முகத்தில் லேசான சோகம்!
நல்லவேளை! ஜார்ஜுடன் காதலில் மூழ்கித் தலைகால் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டாள்.
அப்படிப் போயிருந்தால் அவளால் அவளது நாட்டுக்கு ஒரு களங்கம் ஏற்பட்டிருக்குமே!
இப்போது நிம்மதியாகப் புன்முறுவல் பூத்தாள், நாட்டுக்காக ஒரு அரும்பும் காதலைத் தியாகம் செய்தோம் என்ற மனத்திருப்தியுடன்!
ஷூமாசிச்சி நடனமாடிக்கொண்டே குடையைச் சுழலவிட்டு அங்குமிங்கும் நகர்த்தி - புள்ளியின் பார்வையை மறைத்துக் கொண்டேயிருந்தாள்.
கோபம் வந்தது புள்ளிக்கு ! பற்களை நறநறவென்று கடித்தார்.
அதே நேரம் ஷூமாசிச்சியின் காதில் மாட்டாவின் பதட்டக் குரல் விழுந்தது.
"ஷூமாசிச்சி! விடாதே! அவன் பார்வையைத் தடுத்துக் கொண்டே இரு! நமது ஆட்கள் அங்கே வந்துகொண்டிருக் கிறார்கள். அதுவரை சமாளி!"
பென்னட்டுக்கு இங்கே கோபம். "ஜார்ஜ்! அந்த ஆசாமி உன் பல்பைப் பார்க்க முடியாமல் கஷ்டப்படறான்! நீ விளக்கைப் போட்டுக்கிட்டு உயர எம்பிக் குதி! சீக்கிரம்! சீக்கிரம்!
பென்னட் அதைச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக அப்பால் செல்ல, ஏதோ ஒரு நெருடல் தோன்றி திரும்பிப் பார்த்தான்.
அவன் நினைத்தது சரியாக இருந்தது.
இரு கண்கள் அவனை ஒரு கோணத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன.
யார் அது! தெரிந்த முகம்தான். ஆமாம்; அந்த ஐஸ்கிரீம் பார்லரின் முதலாளி !
'களீர்' என்று ஒரு நாடி இழுத்தது.
'இவன் ஒற்றனா? அல்லது ஜப்பானிய ஒற்றனுக்கு உடந்தை ஆசாமியா?
சட்டென்று திரும்பி அந்த பார்லர் ஆசாமி நின்ற பக்கம் நெம்பிக் கொண்டு போக, பார்லர் ஆசாமி அங்கிருந்து அகல முயன்றார். தம் கையிலிருந்த பொய்த் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்!
வெறும் சத்தமும், புகையுமாய்க் கிளம்பினால் போதும்! அதற்குத்தான் அந்த முயற்சி! அந்த ஒற்றர் கும்பல்களுக்கிடையே எத்தனையோ சங்கேத சமிக்ஞைகள்.
இதற்குள் ஜார்ஜ் எம்பிக் குதிக்க, புள்ளி பல்பைப் பார்த்துவிட, பிரமுகர்களை நோக்கி அவர் காமிராவைத் திருப்பிவிட்டார்!
டக் டக் , டக் என்று விநாடிகள் பறக்க, இதோ ட்ரிகரை அழுத்தப் போகிறார் புள்ளி.
”யாவ்வ்வ்" என்று ஒரு கராத்தே கதறல் அந்தத் தேரையே உலுக்கியது!
பறந்து வந்த ஜப்பானிய ஒற்றன் ஒருவனுடைய கால் ராக்கெட் போல் வந்து அந்தக் காமிராவை உதைத்து ஆகாயத்தில் பறக்க விட்டது.
"அடேய் அநியாயக்காரா" என்று புள்ளி கூச்சல் போட, தேர்த்தட்டில் ஒரே களேபரம்!
அதே நேரம் அந்த மரத்தின் பக்கத்திலும் ஒரு பொய். வெடிச் சத்தம் கிளம்புவதைக் கேட்டு ஏராளமான ஜரூபானிய ஒற்றர்கள் ஏவுகணைகள் போல் வந்து குதித்தார்கள்!
திமிறிக் கொண்டு ஓடப் பார்த்த பென்னட்டையும், ஜார்ஜையும் எளிதாகப் பிடித்து அமுக்கிவிட்டார்கள்.
தேருக்கு வெளியே விழுந்த அந்தக் காமிராவைத் தூக்கி, புல்லட் வெளிவர முடியாத அளவுக்கு அதை ஒரு பைக்குள் போட்டு வெகு தூரம் கொண்டு போய்விட்டார்கள் சில ஜப்பானிய ஒற்றர்கள்.
எல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து போயிற்று.
சிலருக்குத்தான் ஏதோ 'கசமுசா' நடந்தது போல் லேசாகத் தெரிந்தது. ஆனாலும், என்னவென்று தெளிவாகப் புலப்பட வில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேருக்கு நடந்தது எதுவுமே தெரியவில்லை.
மறுநாள், பிரெஞ்ச் பிரசிடெண்ட் கொல்லப்பட இருந்ததையும், அவரைக் கொல்வதற்காக ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் ஜப்பானுக்கு வந்து ரகசிய வேலை செய்ததையும், கிஜிமா, ஷூமாசிச்சி, ஐஸ்க்ரீம் பார்லர் முதலாளி மூலமாக அதைத் துப்பறிந்து ஜப்பானிய அரசு ஒற்றர்கள் முறியடித்ததையும், தினசரி பத்திரிகைகளில் மக்கள் பக்கம் பக்கமாய்ப் படித்தார்கள்.
ஜார்ஜின் கவனப் பிசகினால் அவன் பார்லரில் மறந்து விட்டுப்போன டயரியை ஷாமா சிச்சி, பார்லர் முதலாளி, கிஜிமா மூவருமே படித்து விட்டிருந்தார்கள். எனினும், பிரெஞ்ச் பிரசிடெண்டை ஜார்ஜ் குழுவினர் எப்படிக் கொல்லப் போகிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் எல்லா விதமாகவும் யோசித்து அதற்குத் தக்கபடி திட்டமிட்டு வைத் திருந்தார்கள்! அவர்களது அசாத்தியமான திறமையும், எச்சரிக்கை உணர்வும், மதிநுட்பமும் கவனமும் தான் அந்தச் சூழ்நிலையை
முறியடித்தது.
ஜப்பானியப் போலீஸார் ஜார்ஜைக் கைது செய்து கொண்டு போகும்போது கிஜிமா தூரத்திலிருந்து கண்கலங்கிப் பார்த்தாள்.
அவள் முகத்தில் லேசான சோகம்!
நல்லவேளை! ஜார்ஜுடன் காதலில் மூழ்கித் தலைகால் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டாள்.
அப்படிப் போயிருந்தால் அவளால் அவளது நாட்டுக்கு ஒரு களங்கம் ஏற்பட்டிருக்குமே!
இப்போது நிம்மதியாகப் புன்முறுவல் பூத்தாள், நாட்டுக்காக ஒரு அரும்பும் காதலைத் தியாகம் செய்தோம் என்ற மனத்திருப்தியுடன்!