முன்குறிப்பு: பின்குறிப்பைப் படிக்கவும்!
வயிற்றெரிச்சல்
(நேரிசை ஆசிரியப்பா)
குண்டுச் சட்டிக் குதிரை வீரர்
‘பெண்டுகள் எழுத்து பெயர்பெறு தே’என
கண்டு வயிற்றில் கரியடுப் பேற்றிக்
கொண்டு புலம்பிக் குமைகின் றனரே,
முகநூல் நிலையில் முழுநே ரத்தொழில்
இதுவே என்ன இறங்கிவிட் டாரே,
’இதுதான் இலக்கியம்’ என்றுதன் குண்டுச்
சட்டியைக் கொண்டு தானே வகுத்த
பட்டியல் மீறும் படைப்புகள் கண்டு
மேட்டிமை யோடவர் விமர்சித் தாலும்
‘உப்புமா கதை’என உமிழ்ந்திட் டாலும்
தப்பலில் லாதவை தரவரி சையிலே
முதன்மை பெற்றே முன்னேறு கின்றன,
அன்போ(டு) அவற்றை வாங்கிப் படிக்க
கிண்டலில் ஆயிரம் கிளைஞர் உண்டே!
இலக்கியத் தரத்தில் இவர்கிறுக் குவனவோ
விலைக்குத வாது விற்றலில் லாது
வீணாய்ப் போகும் வெறுப்பினை உமிழ
‘பேனா பிடித்தாள் பெண்’எனச் சாடும்
மானமில் லாத மடையர்காள் கேளும்:
பலவா யிரநல் ஆண்டுகள் பாரில்
நிலையாய் நிற்கும் நேரிய தமிழில்
‘இலக்கியம்’ என்பதன் இலக்கணம் மக்கள்
விழைவிற் குட்படும் மேன்மை மட்டுமே,
தாளம் போட்டுத் தலையாட் டிடுமடி
யாளுடைத் திமிரால் ஆக்குவ தெல்லாம்
சீரிய நூலெனச் சிந்தனை உச்சம்
வீரியத் தோடுநீர் எய்திடல் அன்று,
உம்மால் இயன்றால் இம்மாய வலையில்
அற்பரே உமதுநூல் களையும்
விற்கப் பாரும் வெறும்பேச் சொழித்தே!
பின்குறிப்பு: பொதுவாகவே பெண் எழுத்தாளர், குடும்ப நாவல் ஆகியவற்றைக் கண்டால் சிலருக்குப் பிடிப்பதில்லை (அல்லது, பிடிக்கவில்லை என்று காட்டிக்கொள்கின்றனர்! அறைக்கதவை சாத்திக்கொண்டு அரவமில்லாமல் இவற்றை விரும்பிப் படிக்கும் சிலரையும் நான் அறிவேன்!)
அண்மையில் கிண்டலின் முதல் 100 நூல்கள் பட்டியலில் பெரும்பான்மை பெண் எழுத்தாளர்களின் நாவல்களே இடம்பெற்றுள்ளன. நமது தளத்தைச் சேர்ந்த பலரது நூல்களும் கூட அந்தப் பட்டியலில் இருக்கின்றன. அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
ஆனால், இதைப் பொறுக்க முடியாத சில “இலக்கிய”வியாதிகள் இவ்வெழுத்தாளர்களை அவதூறாகப் பேசியும் முகநூலில் பதிவிட்டும் உள்ளனர். அது குறித்த விவாதங்களும் கண்டனங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுக்கு எனது பதிலாக / மறுமொழியாக இக்கவிதை.
பாரதியின் பேத்திகளுக்கு எனது வாழ்த்தும் வணக்கங்களும்...
அன்புடன்,
--வி
வயிற்றெரிச்சல்
(நேரிசை ஆசிரியப்பா)
குண்டுச் சட்டிக் குதிரை வீரர்
‘பெண்டுகள் எழுத்து பெயர்பெறு தே’என
கண்டு வயிற்றில் கரியடுப் பேற்றிக்
கொண்டு புலம்பிக் குமைகின் றனரே,
முகநூல் நிலையில் முழுநே ரத்தொழில்
இதுவே என்ன இறங்கிவிட் டாரே,
’இதுதான் இலக்கியம்’ என்றுதன் குண்டுச்
சட்டியைக் கொண்டு தானே வகுத்த
பட்டியல் மீறும் படைப்புகள் கண்டு
மேட்டிமை யோடவர் விமர்சித் தாலும்
‘உப்புமா கதை’என உமிழ்ந்திட் டாலும்
தப்பலில் லாதவை தரவரி சையிலே
முதன்மை பெற்றே முன்னேறு கின்றன,
அன்போ(டு) அவற்றை வாங்கிப் படிக்க
கிண்டலில் ஆயிரம் கிளைஞர் உண்டே!
இலக்கியத் தரத்தில் இவர்கிறுக் குவனவோ
விலைக்குத வாது விற்றலில் லாது
வீணாய்ப் போகும் வெறுப்பினை உமிழ
‘பேனா பிடித்தாள் பெண்’எனச் சாடும்
மானமில் லாத மடையர்காள் கேளும்:
பலவா யிரநல் ஆண்டுகள் பாரில்
நிலையாய் நிற்கும் நேரிய தமிழில்
‘இலக்கியம்’ என்பதன் இலக்கணம் மக்கள்
விழைவிற் குட்படும் மேன்மை மட்டுமே,
தாளம் போட்டுத் தலையாட் டிடுமடி
யாளுடைத் திமிரால் ஆக்குவ தெல்லாம்
சீரிய நூலெனச் சிந்தனை உச்சம்
வீரியத் தோடுநீர் எய்திடல் அன்று,
உம்மால் இயன்றால் இம்மாய வலையில்
அற்பரே உமதுநூல் களையும்
விற்கப் பாரும் வெறும்பேச் சொழித்தே!
பின்குறிப்பு: பொதுவாகவே பெண் எழுத்தாளர், குடும்ப நாவல் ஆகியவற்றைக் கண்டால் சிலருக்குப் பிடிப்பதில்லை (அல்லது, பிடிக்கவில்லை என்று காட்டிக்கொள்கின்றனர்! அறைக்கதவை சாத்திக்கொண்டு அரவமில்லாமல் இவற்றை விரும்பிப் படிக்கும் சிலரையும் நான் அறிவேன்!)
அண்மையில் கிண்டலின் முதல் 100 நூல்கள் பட்டியலில் பெரும்பான்மை பெண் எழுத்தாளர்களின் நாவல்களே இடம்பெற்றுள்ளன. நமது தளத்தைச் சேர்ந்த பலரது நூல்களும் கூட அந்தப் பட்டியலில் இருக்கின்றன. அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
ஆனால், இதைப் பொறுக்க முடியாத சில “இலக்கிய”வியாதிகள் இவ்வெழுத்தாளர்களை அவதூறாகப் பேசியும் முகநூலில் பதிவிட்டும் உள்ளனர். அது குறித்த விவாதங்களும் கண்டனங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுக்கு எனது பதிலாக / மறுமொழியாக இக்கவிதை.
பாரதியின் பேத்திகளுக்கு எனது வாழ்த்தும் வணக்கங்களும்...
அன்புடன்,
--வி