- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
வராகம் என்பது விஷ்ணு எடுத்த வராக அவதாரத்தைக் குறிக்கும். 24000 பாடல்களை உடைய முதல் வராக புராணம் இழக்கப்பெற்றதால், அந்த இடத்தை நிரப்ப 10,000 பாடல்களுடன் இப்போது காணப்படும் வராக புராணம் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவாக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பற்றியே கூறுவதாகவும், விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒரு கையேடாகவும் அமைந்துள்ளது. மற்றைய புராணங்களில் காணப்படும் புராணத்திற்குரிய ஐந்து இலக்கணங்கள் இப்புராணத்தில் இல்லை. பாஞ்சராத்ரா ஆகமத்தை விரிவாகப் பேசும் இப்புராணம் அதை மிக உயர்த்திக் கூறி அதில் சொல்லப்பட்ட முறையில் விஷ்ணு வெளிப் பட்டால் மிக உயர்ந்த நற்பயன்களை அடையலாம் என்று சொல்கிறது. வராக புராணத்தில் விஷ்ணு என்ற பெயருக்கு பதிலாக நாராயணன் என்ற பெயரே வழங்கப் படுகிறது.
அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். தர்மம் தறிகெட்டு, அதர்மம் மேலோங்கும் பொழுது கடவுள் மனித அல்லது விலங்கு அவதாரம் எடுக்கிறார். அந்த அவதாரத்தின் நோக்கம் தர்மத்தை நிலைநிறுத்த வருவதாகும். அவதாரங்கள் இரண்டு வகைப்படும். பரசுராமன் போன்றவர்களை அம்சாவதாரம் என்று கூறுவர். இந்த அவதாரங்கள் அபார சக்தி உடையவை ஆயினும், பூரண அவதாரங்கள் ஆகமாட்டா. இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்றவை பூரண அவதாரங்களாகும். பூரண அவதாரங்கள் பதினாறு வகையான பண்புகளைப் பெற்றிருக்கும் ஐம்பொறி புலன்களோடு வாழ்வது முதல் ஐந்து பகுதியாகும். மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற நான்குடன் வாழ்வதும், ஏனைய மனிதர்களோடு ஒன்றாக உள்ளவை. எஞ்சியுள்ள ஏழு பகுதிகளும் மனிதனுக்கப்பாற்பட்ட பகுதிகளாகும். 1) கருணை-தக்கவர்கள் உரிய முறையில் கடமையைச் செய்தாலும் அதற்குரிய பலன் அவர்களுக்குக் கிட்டாத பொழுது கடவுளின் கருணை அளவு நிறைவு செய்கிறது. 2) அனுக்கிரகம்-கருணையைப் பெறுகின்றவர்கள் தகுதியுடையவர்கள் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரப்படுவது அனுக்கிரக மாகும். 3) புதிய நடைமுறையை உருவாக்குதல்சமூகத்திலும் தனிமனிதனிடத்திலும் பழைய எண்ண 4) நன்மை தளர்ச்சியுற்று தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் தள்ளாடும் பொழுது அதற்கு உதவி செய்து, அதை நிலைநிறுத்துவது 5) தீமையை அழிக்கின்ற சக்தி 5 பக்தர்கள் மனத்தில் எந்த அவதார வடிவை தியானிக்கின்றார்களோ அந்த வடிவத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனத்தில் காட்சி தருதல் 7) இந்தப் பேராற்றலை வழங்கும் மந்திரமாக உள்ள ஒரு பெயரை ஏற்றுக் கொள்ளுதல். இந்த ஏழு பண்புகளும் அவதாரங்கள் மானிடர்களாக வடிவெடுத்தாலும் ஏனைய மாந்தர்களிடத்து இல்லாததும் அவதாரங்களுக்கே உரியதும் ஆன பண்புகளாகும்.
அவதாரங்கள் பகவான் என்று குறிக்கப்படுகின்றன. இச் சொல்லில் உள்ள 'பக' என்ற பகுதிக்கு ஆறு பண்புகள் உண்டு. அவையாவன : சிரியை; யக்ஷா; ஐஸ்வர்யா; வீர்யா; ஞானம்; வைராக்கியம் ஆகியவை யாகும.
வராகம் என்ற சொல்லை வரா என்றும் அக என்றும் பிரித்துக் காட்டுகிறது வராக புராணம். வரா என்றால் போர்த்துபவர் என்பது பொருளாகும். அகா என்றால் முடிவில்லாப் பொருளுக்கு ஒரு முடிவை கற்பிப்பவர் எனப் பொருள்படும். அப்படியானால் வராக என்ற சொல்லுக்கும் அனைத்தையும் போர்த்துபவன் என்ற பொருளும், எல்லையில்லாப் பொருளுக்கு ஒரு எல்லை கற்பிப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். வராக அவதாரத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முற்பட்ட குழப்பமான காலத்தில் இருளில் கிடந்த பூமியைத் தூக்கி நிறுத்துபவ ராகும்.
உதயகிரியில் உள்ள குகைக்கோயிலில் வராக அவதாரம், மனித உடலும், வராக முகமும் கொண்டுள்ள சிற்பம் உள்ளது. தாமரை மாலையும், இடுப்பில் வேட்டியும், உத்தரியமும் அணிந்துள்ளது. தன்னுடைய இடது காலைத் தூக்கி, நாகமாகிய சேஷன் தலையில் வைத்திருக்கிறது. வலப்புறக் கொம்பைப் பற்றிக் கொண்டு பூமிதேவி பெண்வடிவில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் கடலும், முனிவர்கள் முதலானோர் வராகத்தை வணங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
பாதாமியில் மேலைச் சாளுக்கியர்கள் வடிவமைப்பில் ஒரு வராக அவதாரச் சிற்பம் இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். வராக வடிவம் ஆபரணங்களை அணிந்த ஆண் வடிவில் வராகத்தின் தலை பொருந்தியது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வராக உருவத்திற்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் முறையே சங்கு சக்கரம் அமைந்துள்ளன. மூன்றாவது கை தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்காவது கை பூமிதேவியை தாங்கிக் கொண்டிருக்கிறது. சேஷன் வராகத்தின் பாதத்தில் அமர்ந்திருக்கிறது. இதே வடிவுடன் எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று எல்லோராவில் உள்ள தசாவதாரக் குகையில் அமைக்கப் பட்டுள்ளது.
விஹார என்னும் கிராமம், வடக்கு குஜராத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வராக சிற்பம் உள்ளது. இச் சிற்பம் மனித உடலைப் பெறாமல், ஒரு பன்றியின் உடலமைப்பையே பெற்றுள்ளது. வராக உருவம் பொருந்திய நாணயங்கள் பல இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
யக்ஞ வராகம் என்று ஒன்று உண்டு. பூமி, நாராயணன் பற்றிய மந்திரங்களைச் சொல்ல, பூமியைக் கடலினின்று காப்பாற்றிக் கொண்டுவர என்ன உருவம் எடுப்பது என்று விஷ்ணு யோசித்தார். முடிவில் யக்ஞ வராக உருவம் எடுக்க முடிவெடுத்தார். இந்த அவதாரம் பற்றி வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் குறிப்பிடு கின்றன. வராக புராணத்தில் இவை காணப்படவில்லை.
யக்ஞ வராகம் என்ற இந்தக் கருதுகோளில் யக்ஞம் என்ற சொல் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யும் மாபெரும் மூல ஆற்றலைக் குறிப்பதாகும். வராகம் என்பது குழப்பம், ஒழுங்கின்மை என்பவற்றிலிருந்து பூமியை வெளிக் கொணர்வது என்பதன் குறியீடாகும். யக்ஞம், வராகம் என்ற இரண்டு சொற்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்ற பொருளுடையதாகவும், ஒன்றில் ஒன்று கரைந்து ஒன்றாகி விடும் பொருளுடையதாகவும் இருப்பதை அறியலாம். முப்பத்தைந்து பல்வேறுபட்ட சொற்களால் யக்ஞ வராகம் அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்கள் அனைத்தும் யக்ஞத்தின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்ற சொற்களாகவும், வராகத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற சொற்களாகவும் இருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.
1) வேதபாதா: வராகத்தின் நான்கு பாதங்களும், நான்கு
2) யூபதம்ஷ்தரா: வராகத்தின் நீண்டிருக்கும் இரு கொம்புகளும் யாகத்தில் நடப்பட்டுள்ள யூபங்களாகும்.
3) கிரதுதந்தா: வராகத்தின் பற்கள் யாகத்தில் செய்யப்படும் 64 வகை பலிகளைக் குறிக்கும்.
4) சிட்டிமுகா: வராகத்தின் வாய் யாக குண்டமாகும்.
5) அக்னிஜிக்வா: வராகத்தின் நாக்கு குண்டத்தின் நெருப்பாகும்.
6) தர்ப்பலோமா: வராகத்தின் உடம்பில் உள்ள மயிர்கள் யாகசாலையில் உள்ள தர்பைப் புல்லாகும்.
7) பிரம்மசீர்ஷா: வராகத்தின் தலை பிரம்மனுக்கு ஒப்பாகும்.
8) அகோர திருக்ஷநாதரா: பகல் இரவு என்பவை வராகத்தின் இரு கண்களாகும்.
9) வேதாங்க சுருதிபூஷ்ணா: வேதத்தின் ஆறு அங்கங்கள், வராகத்தின் காதுகளில் உள்ள குண்டலங்களாகும்.
10) குஹ்ய உபநிஷதஆசன: வராகம் அமர்ந்திருக்கின்ற அமைப்பு, உபநிஷதங்களை ஆய்கின்றவர்கள் என்று கூறி அமர்ந்து சிந்திப்பது போல் உள்ளது. கூர்மையான அறிவு படைத்த ஒரு சிலர் மட்டுமே இதில் ஈடுபட முடியும்.
(இந்த வராக கற்பனை தோன்றுவதற்கு ஆகாயத்தில் உள்ள மிருக சீரிஷம் என்ற தட்சத்திரக் கூட்டம் இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு வராகம் போல் இருப்பது காரணமாய் இருந்திருக்கலாம் என ரிக்வேதம் பேசுகிறது).
முதலில் நாம் அனைவரும் விஷ்ணுவை வணங்குவோ மாக.
முன்னொரு காலத்தில் பிருத்வி ஆனவள் விஷ்ணுவிடம் சென்று வணங்கி, பின்வருமாறு பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்ப முடிவிலும் என்னைக் காப்பாற்றுகின்றவர் மச்சமாகவும், ஆமையாகவும், வராகமாகவும், மாறிமாறி வந்து என்னைக் காப்பாற்றி நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமாறு செய்கின்றவர் தாங்களே ஆவீர். இப்படி எங்களுடைய அறிவுக்குப் புலப்படாத வகையில் பலவற்றிலும் ஊடுருவி நிற்கும் தங்களை நாங்கள் கண்டுகொள்வது எளிதன்று. தங்களுடைய முழுவன்மை என்ன என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. தங்களின் உண்மை சொரூபம் என்ன? தங்களை அடைதற்குரிய உண்மையான வழி யாது? பிரபஞ்சப் படைப்பு என்பது எவ்வாறு ஆரம்பித்து- எவ்வாறு முடிகிறது? நாலு யுகங்கள் என்று சொல்லப்படுபவற்றின் உண்மையான இயல்புகள் யாவை?
பிருத்வியின் இந்த வினாக்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வராகம் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தது. அந்த வராகத்தின் வயிற்றில் பிரபஞ்ச உற்பத்தியில் காணப்படும் முட்டை இருந்தது. அம்முட்டைக்குள் இனி அடுத்த கல்பத்தில் தோன்ற வேண்டிய உயிர்கள் அனைத்தும் இருந்ததைப் பிருத்வி கண்டது. வராகத்தின் வயிற்றுள்ளும் அடுத்த கல்பத்தில் வெளிவரவேண்டிய பொருள்கள் அனைத்தும், தொடக்கப் பருவத்தில் இருந்ததைப் பிருத்வி கண்டாள்.
பூமியின் இந்தக் கேள்விகளையும், கேள்விகளைக் கேட்ட பிருத்வியின் மனத் தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றையும் நன்கறிந்திருந்த வராகம் அவள் வினாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விடை கூறத் துவங்கியது. அந்த வினாவும் விடையும்தான் வராக புராணம் எனப் பேசப்படுகிறது.
ஏனைய புராணங்களைப் போலவே, வராக புராணமும் பிரபஞ்சப் படைப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தப் படைப்பின் பின்னணியில் நம் நினைவுக்கப்பாற்பட்ட பரப்பிரம்மம் உள்ளது. இந்தப் பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததாய், எவ்வித மாற்றமும் இன்றி எங்கும் நிறைந் துள்ளதாய் உள்ளது. அப் பரப்பிரம்மம் படைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட மாத்திரையில், வெவ்வேறு பொருள்களாகப் பரிணமிக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான மூன்று குணங்களும் வெவ்வெறு அளவுகளில் தங்கியுள்ளன. அவை சத்வம், ராஜசம், தாமசம் என்று கூறப்படும்.
ஆதியில் எங்கும் சூனியம். அந்தச் சூனியத்திலிருந்து ஆதி நாதம் தோன்றியது. நாதத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்தினின்று காற்று, காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி முதலியவை தோன்றின. இந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் எல்லா உயிர்களும் வாழும் எல்லா வகை உடம்புகளும் படைக்கப்பட்டன. இந்த உயிர்கள் அனைத்தும் வாழக்கூடிய இடமாக பூமியை ஏற்பாடு செய்து, அந்த பூமியை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார் விஷ்ணு. இதையே மகாபிரளயம் என்று கூறலாம். ஏனைய புராணங்கள் இந்த மகாபிரளயம் பற்றியோ, இதன் முடிவில் பரப்பிரம்மமோ, பொருள்களைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ, மும்மூர்த்திகளைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் புராணங்கள் சொல்லும் பிரளயம் பிரம்மனுடைய ஒரு பகல் முடிந்து இரவு வரும்பொழுது ஏற்படுகின்ற சாதாரணப் பிரளயம் பற்றியதாகும். அந்தப் பிரளயத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந் திருக்கும். நாராயணன் உறங்குவார்.
(இதை அடுத்து வராக புராணம், கல்பங்கள் பற்றியும், நில இயற்பொருள் இயங்கியற் பொருள், பிரம்மன் பிரபஞ்சம் படைத்த கதை ஆகியவை ஏற்கெனவே மற்றப் புராணங்களில் விவரிக்கப்பட்டிருப்பதால், இங்கு அதனைக் கூறவில்லை,)
நாரதர் கதை
முன்னொரு சமயம் பிரியவரதா என்ற மன்னனைக் காண நாரதர் புறப்பட்டார். அவரைக் கண்ட அரசன் ஒரு முனிவருக்குச் செய்ய வேண்டிய உபசரணைகள் செய்து முடித்த பின், “முனிவரே! தாங்கள் எல்லா உலகமும் போய் வருகிறவர். சாதாரணமாக அல்லாமல், மிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றனை எங்கும் கூற வேண்டுகிறேன்” என்று கேட்க, நாரதர் கூற ஆரம்பித்தார்.
ஸ்வேத துவீபம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒன்றைக் கூறப் போகிறேன். மிக அழகியதும், குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு ஏரி அங்கிருந்தது. ஏரி நிரம்ப தாமரை மலர்களும் இலைகளும் நிரம்பி இருந்தன. ஒரு தாமரை மலரின் பக்கத்தில் மிக அழகிய பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதைக் கண்ட நான், "அம்மா! நீ யார்? ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டேன். கேட்டவுடன் அப் பெண்ணிட மிருந்து மூன்று ஒளிக் கற்றைகள் தோன்றி மறைந்தன. வியப்பால் வாயடைத்து நின்ற நாரதனைப் பார்த்து, அப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். நாரதா! என் பெயர் சாவித்திரி என்பதாகும். நீ பார்த்த மூன்று ஒளிக் கற்றைகளும் மூன்று வேதங்கள். நீ என்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்கும்படி நாரதனாகிய உன்னுடைய ஞானத்தைக் கவர்ந்துகொண்டேன். என்னிடமிருந்து முதலில் புறப்பட்ட ஒளி ரிக்வேதமாகும். அதை வாய்விட்டுப் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவர். ரிக்வேதமே நாராயண சொரூபம் ஆகும். இரண்டாவதாக உள்ள யஜுர் வேதம் பிரம்ம சொரூபமே ஆகும். மூன்றாவது உள்ள சாமவேதம் சிவசொரூபம் ஆகும்.'
சாவித்திரி தேவதையைப் பார்த்து நாரதன், ‘என்னுடைய அறிவை எல்லாம் பறித்துக் கொண்டாயே, இழந்துவிட்ட அறிவை எப்படிப் பெறுவேன்’ என்று கேட்டவுடன் சாவித்திரி, 'இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ இழந்த அறிவைப் பெறுவாய், உன் போன ஜன்மம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார். உடனே நாரதரும் அவ்வாறே செய்தார்.
பழம்பிறப்பு பற்றிய விளக்கம் நாரதருக்குத் தோன்ற லாயிற்று. அந்தப் பிறப்பில் நாரதர் சரஸ்வதி பிராமணனாகப் பிறந்து வாழ்ந்தார். இந்த மானிடப் பிறப்பே வீண் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் என்பவை எல்லாம் மாயை என்றும் காட்டிற்குச் சென்று தவம் செய்வதுதான், செய்யப்பட வேண்டிய காரியம் என்றும் உணர்ந்தார். உடனே தன் சொத்து முழுவதையும் மகனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று தவம் புரியலானார். அவர் தவத்தை மெச்சி விஷ்ணு எதிரே வந்த பொழுது, நான் இந்த உடம்புடன் விஷ்ணுவிடம் கரைந்து விட வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். இந்த உடம்புடன் அத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று கூறியவர் அவருக்கு நாரதர் என்ற பெயரையும் கொடுத்து மறைந்தார். நாரதர் இந்த உலகத்தில் நெடுநாள் வாழட்டும், என்று கூறி விட்டு விஷ்ணு மறைந்து விட்டார்.
நீண்ட காலம் தவம் செய்து இறந்த பிறகு பிரம்மலோகம் சென்று அங்கு நீண்ட காலம் தங்கிவிட்டு, பிரம்மனுக்கு மகனாக நாரதர் என்ற பெயருடன் பிறந்தார்.
அடுத்தபடியாக நாரதர், பிரியவரதனை நோக்கி அரசே! அடியிற் கண்ட விஸ்வ மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப் போகிறேன். அதை நன்கு பயன்படுத்திக் கொள்வாயா என்று கூறி ஒரு பாடலைக் கூறினார்.
ஆயிரக்கணக்கான கண்கள், கைகள், கால்கள் உடைய பரம்பொருளே! உனக்கு வணக்கம், சூரியனையும், சந்திரனை யும் கண்களாக உடைய பரம்பொருளுக்கு வணக்கம். சத்திய யுகத்தில் வெள்ளை உடையும், திரேதா யுகத்தில் சிவப்பு உடையும், துவாபர யுகத்தில் மஞ்சள் உடையும், கலியுகத்தில் கறுப்பு உடையும் அணிந்து காட்சிதரும் பரம்பொருளே, உன்னை வணங்குகிறேன். கேடயம், வாள், கதாயுதம், தெய்வீகத் தாமரை ஆகியவற்றை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பவரே உனக்கு வணக்கம்.
வராகம் என்பது விஷ்ணு எடுத்த வராக அவதாரத்தைக் குறிக்கும். 24000 பாடல்களை உடைய முதல் வராக புராணம் இழக்கப்பெற்றதால், அந்த இடத்தை நிரப்ப 10,000 பாடல்களுடன் இப்போது காணப்படும் வராக புராணம் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவாக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பற்றியே கூறுவதாகவும், விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒரு கையேடாகவும் அமைந்துள்ளது. மற்றைய புராணங்களில் காணப்படும் புராணத்திற்குரிய ஐந்து இலக்கணங்கள் இப்புராணத்தில் இல்லை. பாஞ்சராத்ரா ஆகமத்தை விரிவாகப் பேசும் இப்புராணம் அதை மிக உயர்த்திக் கூறி அதில் சொல்லப்பட்ட முறையில் விஷ்ணு வெளிப் பட்டால் மிக உயர்ந்த நற்பயன்களை அடையலாம் என்று சொல்கிறது. வராக புராணத்தில் விஷ்ணு என்ற பெயருக்கு பதிலாக நாராயணன் என்ற பெயரே வழங்கப் படுகிறது.
அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். தர்மம் தறிகெட்டு, அதர்மம் மேலோங்கும் பொழுது கடவுள் மனித அல்லது விலங்கு அவதாரம் எடுக்கிறார். அந்த அவதாரத்தின் நோக்கம் தர்மத்தை நிலைநிறுத்த வருவதாகும். அவதாரங்கள் இரண்டு வகைப்படும். பரசுராமன் போன்றவர்களை அம்சாவதாரம் என்று கூறுவர். இந்த அவதாரங்கள் அபார சக்தி உடையவை ஆயினும், பூரண அவதாரங்கள் ஆகமாட்டா. இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்றவை பூரண அவதாரங்களாகும். பூரண அவதாரங்கள் பதினாறு வகையான பண்புகளைப் பெற்றிருக்கும் ஐம்பொறி புலன்களோடு வாழ்வது முதல் ஐந்து பகுதியாகும். மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற நான்குடன் வாழ்வதும், ஏனைய மனிதர்களோடு ஒன்றாக உள்ளவை. எஞ்சியுள்ள ஏழு பகுதிகளும் மனிதனுக்கப்பாற்பட்ட பகுதிகளாகும். 1) கருணை-தக்கவர்கள் உரிய முறையில் கடமையைச் செய்தாலும் அதற்குரிய பலன் அவர்களுக்குக் கிட்டாத பொழுது கடவுளின் கருணை அளவு நிறைவு செய்கிறது. 2) அனுக்கிரகம்-கருணையைப் பெறுகின்றவர்கள் தகுதியுடையவர்கள் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரப்படுவது அனுக்கிரக மாகும். 3) புதிய நடைமுறையை உருவாக்குதல்சமூகத்திலும் தனிமனிதனிடத்திலும் பழைய எண்ண 4) நன்மை தளர்ச்சியுற்று தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் தள்ளாடும் பொழுது அதற்கு உதவி செய்து, அதை நிலைநிறுத்துவது 5) தீமையை அழிக்கின்ற சக்தி 5 பக்தர்கள் மனத்தில் எந்த அவதார வடிவை தியானிக்கின்றார்களோ அந்த வடிவத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனத்தில் காட்சி தருதல் 7) இந்தப் பேராற்றலை வழங்கும் மந்திரமாக உள்ள ஒரு பெயரை ஏற்றுக் கொள்ளுதல். இந்த ஏழு பண்புகளும் அவதாரங்கள் மானிடர்களாக வடிவெடுத்தாலும் ஏனைய மாந்தர்களிடத்து இல்லாததும் அவதாரங்களுக்கே உரியதும் ஆன பண்புகளாகும்.
அவதாரங்கள் பகவான் என்று குறிக்கப்படுகின்றன. இச் சொல்லில் உள்ள 'பக' என்ற பகுதிக்கு ஆறு பண்புகள் உண்டு. அவையாவன : சிரியை; யக்ஷா; ஐஸ்வர்யா; வீர்யா; ஞானம்; வைராக்கியம் ஆகியவை யாகும.
வராகம் என்ற சொல்லை வரா என்றும் அக என்றும் பிரித்துக் காட்டுகிறது வராக புராணம். வரா என்றால் போர்த்துபவர் என்பது பொருளாகும். அகா என்றால் முடிவில்லாப் பொருளுக்கு ஒரு முடிவை கற்பிப்பவர் எனப் பொருள்படும். அப்படியானால் வராக என்ற சொல்லுக்கும் அனைத்தையும் போர்த்துபவன் என்ற பொருளும், எல்லையில்லாப் பொருளுக்கு ஒரு எல்லை கற்பிப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். வராக அவதாரத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முற்பட்ட குழப்பமான காலத்தில் இருளில் கிடந்த பூமியைத் தூக்கி நிறுத்துபவ ராகும்.
உதயகிரியில் உள்ள குகைக்கோயிலில் வராக அவதாரம், மனித உடலும், வராக முகமும் கொண்டுள்ள சிற்பம் உள்ளது. தாமரை மாலையும், இடுப்பில் வேட்டியும், உத்தரியமும் அணிந்துள்ளது. தன்னுடைய இடது காலைத் தூக்கி, நாகமாகிய சேஷன் தலையில் வைத்திருக்கிறது. வலப்புறக் கொம்பைப் பற்றிக் கொண்டு பூமிதேவி பெண்வடிவில் தொங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் கடலும், முனிவர்கள் முதலானோர் வராகத்தை வணங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
பாதாமியில் மேலைச் சாளுக்கியர்கள் வடிவமைப்பில் ஒரு வராக அவதாரச் சிற்பம் இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். வராக வடிவம் ஆபரணங்களை அணிந்த ஆண் வடிவில் வராகத்தின் தலை பொருந்தியது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வராக உருவத்திற்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் முறையே சங்கு சக்கரம் அமைந்துள்ளன. மூன்றாவது கை தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்காவது கை பூமிதேவியை தாங்கிக் கொண்டிருக்கிறது. சேஷன் வராகத்தின் பாதத்தில் அமர்ந்திருக்கிறது. இதே வடிவுடன் எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று எல்லோராவில் உள்ள தசாவதாரக் குகையில் அமைக்கப் பட்டுள்ளது.
விஹார என்னும் கிராமம், வடக்கு குஜராத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வராக சிற்பம் உள்ளது. இச் சிற்பம் மனித உடலைப் பெறாமல், ஒரு பன்றியின் உடலமைப்பையே பெற்றுள்ளது. வராக உருவம் பொருந்திய நாணயங்கள் பல இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
யக்ஞ வராகம் என்று ஒன்று உண்டு. பூமி, நாராயணன் பற்றிய மந்திரங்களைச் சொல்ல, பூமியைக் கடலினின்று காப்பாற்றிக் கொண்டுவர என்ன உருவம் எடுப்பது என்று விஷ்ணு யோசித்தார். முடிவில் யக்ஞ வராக உருவம் எடுக்க முடிவெடுத்தார். இந்த அவதாரம் பற்றி வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் குறிப்பிடு கின்றன. வராக புராணத்தில் இவை காணப்படவில்லை.
யக்ஞ வராகம் என்ற இந்தக் கருதுகோளில் யக்ஞம் என்ற சொல் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யும் மாபெரும் மூல ஆற்றலைக் குறிப்பதாகும். வராகம் என்பது குழப்பம், ஒழுங்கின்மை என்பவற்றிலிருந்து பூமியை வெளிக் கொணர்வது என்பதன் குறியீடாகும். யக்ஞம், வராகம் என்ற இரண்டு சொற்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்ற பொருளுடையதாகவும், ஒன்றில் ஒன்று கரைந்து ஒன்றாகி விடும் பொருளுடையதாகவும் இருப்பதை அறியலாம். முப்பத்தைந்து பல்வேறுபட்ட சொற்களால் யக்ஞ வராகம் அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்கள் அனைத்தும் யக்ஞத்தின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்ற சொற்களாகவும், வராகத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற சொற்களாகவும் இருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.
1) வேதபாதா: வராகத்தின் நான்கு பாதங்களும், நான்கு
2) யூபதம்ஷ்தரா: வராகத்தின் நீண்டிருக்கும் இரு கொம்புகளும் யாகத்தில் நடப்பட்டுள்ள யூபங்களாகும்.
3) கிரதுதந்தா: வராகத்தின் பற்கள் யாகத்தில் செய்யப்படும் 64 வகை பலிகளைக் குறிக்கும்.
4) சிட்டிமுகா: வராகத்தின் வாய் யாக குண்டமாகும்.
5) அக்னிஜிக்வா: வராகத்தின் நாக்கு குண்டத்தின் நெருப்பாகும்.
6) தர்ப்பலோமா: வராகத்தின் உடம்பில் உள்ள மயிர்கள் யாகசாலையில் உள்ள தர்பைப் புல்லாகும்.
7) பிரம்மசீர்ஷா: வராகத்தின் தலை பிரம்மனுக்கு ஒப்பாகும்.
8) அகோர திருக்ஷநாதரா: பகல் இரவு என்பவை வராகத்தின் இரு கண்களாகும்.
9) வேதாங்க சுருதிபூஷ்ணா: வேதத்தின் ஆறு அங்கங்கள், வராகத்தின் காதுகளில் உள்ள குண்டலங்களாகும்.
10) குஹ்ய உபநிஷதஆசன: வராகம் அமர்ந்திருக்கின்ற அமைப்பு, உபநிஷதங்களை ஆய்கின்றவர்கள் என்று கூறி அமர்ந்து சிந்திப்பது போல் உள்ளது. கூர்மையான அறிவு படைத்த ஒரு சிலர் மட்டுமே இதில் ஈடுபட முடியும்.
(இந்த வராக கற்பனை தோன்றுவதற்கு ஆகாயத்தில் உள்ள மிருக சீரிஷம் என்ற தட்சத்திரக் கூட்டம் இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு வராகம் போல் இருப்பது காரணமாய் இருந்திருக்கலாம் என ரிக்வேதம் பேசுகிறது).
முதலில் நாம் அனைவரும் விஷ்ணுவை வணங்குவோ மாக.
முன்னொரு காலத்தில் பிருத்வி ஆனவள் விஷ்ணுவிடம் சென்று வணங்கி, பின்வருமாறு பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்ப முடிவிலும் என்னைக் காப்பாற்றுகின்றவர் மச்சமாகவும், ஆமையாகவும், வராகமாகவும், மாறிமாறி வந்து என்னைக் காப்பாற்றி நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமாறு செய்கின்றவர் தாங்களே ஆவீர். இப்படி எங்களுடைய அறிவுக்குப் புலப்படாத வகையில் பலவற்றிலும் ஊடுருவி நிற்கும் தங்களை நாங்கள் கண்டுகொள்வது எளிதன்று. தங்களுடைய முழுவன்மை என்ன என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. தங்களின் உண்மை சொரூபம் என்ன? தங்களை அடைதற்குரிய உண்மையான வழி யாது? பிரபஞ்சப் படைப்பு என்பது எவ்வாறு ஆரம்பித்து- எவ்வாறு முடிகிறது? நாலு யுகங்கள் என்று சொல்லப்படுபவற்றின் உண்மையான இயல்புகள் யாவை?
பிருத்வியின் இந்த வினாக்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வராகம் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தது. அந்த வராகத்தின் வயிற்றில் பிரபஞ்ச உற்பத்தியில் காணப்படும் முட்டை இருந்தது. அம்முட்டைக்குள் இனி அடுத்த கல்பத்தில் தோன்ற வேண்டிய உயிர்கள் அனைத்தும் இருந்ததைப் பிருத்வி கண்டது. வராகத்தின் வயிற்றுள்ளும் அடுத்த கல்பத்தில் வெளிவரவேண்டிய பொருள்கள் அனைத்தும், தொடக்கப் பருவத்தில் இருந்ததைப் பிருத்வி கண்டாள்.
பூமியின் இந்தக் கேள்விகளையும், கேள்விகளைக் கேட்ட பிருத்வியின் மனத் தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றையும் நன்கறிந்திருந்த வராகம் அவள் வினாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விடை கூறத் துவங்கியது. அந்த வினாவும் விடையும்தான் வராக புராணம் எனப் பேசப்படுகிறது.
ஏனைய புராணங்களைப் போலவே, வராக புராணமும் பிரபஞ்சப் படைப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தப் படைப்பின் பின்னணியில் நம் நினைவுக்கப்பாற்பட்ட பரப்பிரம்மம் உள்ளது. இந்தப் பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததாய், எவ்வித மாற்றமும் இன்றி எங்கும் நிறைந் துள்ளதாய் உள்ளது. அப் பரப்பிரம்மம் படைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட மாத்திரையில், வெவ்வேறு பொருள்களாகப் பரிணமிக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான மூன்று குணங்களும் வெவ்வெறு அளவுகளில் தங்கியுள்ளன. அவை சத்வம், ராஜசம், தாமசம் என்று கூறப்படும்.
ஆதியில் எங்கும் சூனியம். அந்தச் சூனியத்திலிருந்து ஆதி நாதம் தோன்றியது. நாதத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்தினின்று காற்று, காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி முதலியவை தோன்றின. இந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் எல்லா உயிர்களும் வாழும் எல்லா வகை உடம்புகளும் படைக்கப்பட்டன. இந்த உயிர்கள் அனைத்தும் வாழக்கூடிய இடமாக பூமியை ஏற்பாடு செய்து, அந்த பூமியை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார் விஷ்ணு. இதையே மகாபிரளயம் என்று கூறலாம். ஏனைய புராணங்கள் இந்த மகாபிரளயம் பற்றியோ, இதன் முடிவில் பரப்பிரம்மமோ, பொருள்களைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ, மும்மூர்த்திகளைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் புராணங்கள் சொல்லும் பிரளயம் பிரம்மனுடைய ஒரு பகல் முடிந்து இரவு வரும்பொழுது ஏற்படுகின்ற சாதாரணப் பிரளயம் பற்றியதாகும். அந்தப் பிரளயத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந் திருக்கும். நாராயணன் உறங்குவார்.
(இதை அடுத்து வராக புராணம், கல்பங்கள் பற்றியும், நில இயற்பொருள் இயங்கியற் பொருள், பிரம்மன் பிரபஞ்சம் படைத்த கதை ஆகியவை ஏற்கெனவே மற்றப் புராணங்களில் விவரிக்கப்பட்டிருப்பதால், இங்கு அதனைக் கூறவில்லை,)
நாரதர் கதை
முன்னொரு சமயம் பிரியவரதா என்ற மன்னனைக் காண நாரதர் புறப்பட்டார். அவரைக் கண்ட அரசன் ஒரு முனிவருக்குச் செய்ய வேண்டிய உபசரணைகள் செய்து முடித்த பின், “முனிவரே! தாங்கள் எல்லா உலகமும் போய் வருகிறவர். சாதாரணமாக அல்லாமல், மிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றனை எங்கும் கூற வேண்டுகிறேன்” என்று கேட்க, நாரதர் கூற ஆரம்பித்தார்.
ஸ்வேத துவீபம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒன்றைக் கூறப் போகிறேன். மிக அழகியதும், குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு ஏரி அங்கிருந்தது. ஏரி நிரம்ப தாமரை மலர்களும் இலைகளும் நிரம்பி இருந்தன. ஒரு தாமரை மலரின் பக்கத்தில் மிக அழகிய பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதைக் கண்ட நான், "அம்மா! நீ யார்? ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டேன். கேட்டவுடன் அப் பெண்ணிட மிருந்து மூன்று ஒளிக் கற்றைகள் தோன்றி மறைந்தன. வியப்பால் வாயடைத்து நின்ற நாரதனைப் பார்த்து, அப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். நாரதா! என் பெயர் சாவித்திரி என்பதாகும். நீ பார்த்த மூன்று ஒளிக் கற்றைகளும் மூன்று வேதங்கள். நீ என்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்கும்படி நாரதனாகிய உன்னுடைய ஞானத்தைக் கவர்ந்துகொண்டேன். என்னிடமிருந்து முதலில் புறப்பட்ட ஒளி ரிக்வேதமாகும். அதை வாய்விட்டுப் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவர். ரிக்வேதமே நாராயண சொரூபம் ஆகும். இரண்டாவதாக உள்ள யஜுர் வேதம் பிரம்ம சொரூபமே ஆகும். மூன்றாவது உள்ள சாமவேதம் சிவசொரூபம் ஆகும்.'
சாவித்திரி தேவதையைப் பார்த்து நாரதன், ‘என்னுடைய அறிவை எல்லாம் பறித்துக் கொண்டாயே, இழந்துவிட்ட அறிவை எப்படிப் பெறுவேன்’ என்று கேட்டவுடன் சாவித்திரி, 'இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ இழந்த அறிவைப் பெறுவாய், உன் போன ஜன்மம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார். உடனே நாரதரும் அவ்வாறே செய்தார்.
பழம்பிறப்பு பற்றிய விளக்கம் நாரதருக்குத் தோன்ற லாயிற்று. அந்தப் பிறப்பில் நாரதர் சரஸ்வதி பிராமணனாகப் பிறந்து வாழ்ந்தார். இந்த மானிடப் பிறப்பே வீண் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் என்பவை எல்லாம் மாயை என்றும் காட்டிற்குச் சென்று தவம் செய்வதுதான், செய்யப்பட வேண்டிய காரியம் என்றும் உணர்ந்தார். உடனே தன் சொத்து முழுவதையும் மகனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று தவம் புரியலானார். அவர் தவத்தை மெச்சி விஷ்ணு எதிரே வந்த பொழுது, நான் இந்த உடம்புடன் விஷ்ணுவிடம் கரைந்து விட வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். இந்த உடம்புடன் அத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று கூறியவர் அவருக்கு நாரதர் என்ற பெயரையும் கொடுத்து மறைந்தார். நாரதர் இந்த உலகத்தில் நெடுநாள் வாழட்டும், என்று கூறி விட்டு விஷ்ணு மறைந்து விட்டார்.
நீண்ட காலம் தவம் செய்து இறந்த பிறகு பிரம்மலோகம் சென்று அங்கு நீண்ட காலம் தங்கிவிட்டு, பிரம்மனுக்கு மகனாக நாரதர் என்ற பெயருடன் பிறந்தார்.
அடுத்தபடியாக நாரதர், பிரியவரதனை நோக்கி அரசே! அடியிற் கண்ட விஸ்வ மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப் போகிறேன். அதை நன்கு பயன்படுத்திக் கொள்வாயா என்று கூறி ஒரு பாடலைக் கூறினார்.
ஆயிரக்கணக்கான கண்கள், கைகள், கால்கள் உடைய பரம்பொருளே! உனக்கு வணக்கம், சூரியனையும், சந்திரனை யும் கண்களாக உடைய பரம்பொருளுக்கு வணக்கம். சத்திய யுகத்தில் வெள்ளை உடையும், திரேதா யுகத்தில் சிவப்பு உடையும், துவாபர யுகத்தில் மஞ்சள் உடையும், கலியுகத்தில் கறுப்பு உடையும் அணிந்து காட்சிதரும் பரம்பொருளே, உன்னை வணங்குகிறேன். கேடயம், வாள், கதாயுதம், தெய்வீகத் தாமரை ஆகியவற்றை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பவரே உனக்கு வணக்கம்.