வாசக ரசிகர்களுக்கு அழகியின் வணக்கம்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகி உங்களைச் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி!
பல்லவன் கவிதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு மனதிற்கு வெகு திருப்தியாக இருக்கிறது. சரித்திர நாவல் என்பது எனது நீண்ட நாள் கனா. அதை நிறைவேற்றிக்கொள்ள மிகவும் முயன்று, என்னை நானே ஆயத்தம் செய்து, குறிப்புகள் எடுத்து... அப்பப்பா! அது ஒரு இன்பமான அனுபவம்தான்!
கல்கியோடும் சாண்டில்யனோடும் இன்பமாக ஒரு பயணம் போய் வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்!
பல்லவர் காலத்தில் இருந்த உண்மைக் கதாபாத்திரங்களோடு என் கற்பனையையும் கலந்து கொடுத்திருக்கிறேன். ஆனால், எங்கேயும் சரித்திரத்திலிருந்து நான் மாறுபடவில்லை. என் கைகளுக்குக் கிட்டிய வரலாற்று தடயங்களோடே பயணித்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இந்த கதைக்கு இத்தனை ஆதரவு இருக்கவில்லை, அப்போது லேசாக மனம் துவண்டது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த தருணங்களில் எல்லாம் நண்பர்களின் ஆதரவு மிகவும் உறுதுணையாக இருந்தது.
போகப்போக வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் ஆதரவில் நான் உண்மையாகவே மகிழ்ந்து போனேன். சில அன்பர்களின் கருத்துக்களைப் படிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, நன்றி!
கதை இன்னும் இரண்டொரு அத்தியாயங்களில் நிறைவு பெறும். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த கதைப் பற்றிய உங்கள் கருத்தை நான் வெகுவாக எதிர்பார்க்கிறேன்.
கதைக் குறித்து உங்களுக்கிருக்கும் நிறை குறைகள், ஆவல் எதுவாக இருந்தாலும் என்னோடு நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். கதையை நிறைவாக நிறைவு செய்ய எனக்கு அது உதவி புரியும்.
என் தமிழைப் பலர் பாராட்டி இருந்தீர்கள், மிக்க நன்றி! ஒரு சில குறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன, நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.
என்னோடு பேச விரும்புபவர்கள் என் தொலைபேசி எண்ணில் தாராளமாக தொடர்பு கொண்டு பேசலாம். உங்கள் கருத்தைச் சொல்லலாம். எண் இல்லாதவர்கள் இன்பாக்ஸில் அழையுங்கள், கொடுக்கிறேன்.
மனதிற்கு வெகு திருப்தியாக இருக்கிறது. உங்கள் ஆதரவிற்கு மீண்டுமொரு முறை நன்றி!
அன்புடன் அழகி!?
நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகி உங்களைச் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி!
பல்லவன் கவிதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு மனதிற்கு வெகு திருப்தியாக இருக்கிறது. சரித்திர நாவல் என்பது எனது நீண்ட நாள் கனா. அதை நிறைவேற்றிக்கொள்ள மிகவும் முயன்று, என்னை நானே ஆயத்தம் செய்து, குறிப்புகள் எடுத்து... அப்பப்பா! அது ஒரு இன்பமான அனுபவம்தான்!
கல்கியோடும் சாண்டில்யனோடும் இன்பமாக ஒரு பயணம் போய் வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்!
பல்லவர் காலத்தில் இருந்த உண்மைக் கதாபாத்திரங்களோடு என் கற்பனையையும் கலந்து கொடுத்திருக்கிறேன். ஆனால், எங்கேயும் சரித்திரத்திலிருந்து நான் மாறுபடவில்லை. என் கைகளுக்குக் கிட்டிய வரலாற்று தடயங்களோடே பயணித்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இந்த கதைக்கு இத்தனை ஆதரவு இருக்கவில்லை, அப்போது லேசாக மனம் துவண்டது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த தருணங்களில் எல்லாம் நண்பர்களின் ஆதரவு மிகவும் உறுதுணையாக இருந்தது.
போகப்போக வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் ஆதரவில் நான் உண்மையாகவே மகிழ்ந்து போனேன். சில அன்பர்களின் கருத்துக்களைப் படிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, நன்றி!
கதை இன்னும் இரண்டொரு அத்தியாயங்களில் நிறைவு பெறும். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த கதைப் பற்றிய உங்கள் கருத்தை நான் வெகுவாக எதிர்பார்க்கிறேன்.
கதைக் குறித்து உங்களுக்கிருக்கும் நிறை குறைகள், ஆவல் எதுவாக இருந்தாலும் என்னோடு நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். கதையை நிறைவாக நிறைவு செய்ய எனக்கு அது உதவி புரியும்.
என் தமிழைப் பலர் பாராட்டி இருந்தீர்கள், மிக்க நன்றி! ஒரு சில குறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன, நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.
என்னோடு பேச விரும்புபவர்கள் என் தொலைபேசி எண்ணில் தாராளமாக தொடர்பு கொண்டு பேசலாம். உங்கள் கருத்தைச் சொல்லலாம். எண் இல்லாதவர்கள் இன்பாக்ஸில் அழையுங்கள், கொடுக்கிறேன்.
மனதிற்கு வெகு திருப்தியாக இருக்கிறது. உங்கள் ஆதரவிற்கு மீண்டுமொரு முறை நன்றி!
அன்புடன் அழகி!?