ஹாய்,
இமையி அக்காவின் ஆதிரையன் கதையின் தலைப்பு என்னைக் கவர்ந்ததால் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடிதங்கள் வழியாக இரு உள்ளங்கள் இணைந்து, காதல் என்ற சுழலில் மாட்டுக் கொள்ளும் சமயம் விதி அவர்களை வேறு பாதையில் அழைக்க, அதை முறியடித்து ஆதிரையன் - அதிதீ இணைந்தார்களா என்பதுதான் கதை.
இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால், இதோ என்னுடைய ரிவ்யூ கவிதை வடிவில்...
இரு உள்ளங்கள் உறவாடிக் கொள்ள
பேப்பரும் பேனாவும்,
கொஞ்சம் தமிழும்,
கொஞ்சும் கவியும்
போதுமடி பெண்ணே...
முகம் அறியாத இருவரை
கடிதத்தின் வழியாக
இணைத்த தமிழன்னைக்கு
தெரியுமோ இது நீண்டகால
உறவென்பது!
ஆதியில் நீயோ என் கையில்
மழலையாய்...
திரையில் மறைவில் நின்று
என் இதயத்தில் தகிக்கும்
தீயாய் அறிமுகம் ஆனவளும் நீ...
என் தந்தை செய்த துரோகத்திற்கு
பழிவாங்க வந்து பலியாக
போவது தன்னவன் என்றவுடன்
அனைத்தையும் வேண்டாம்
என மறுக்கிறாய்...
கண்முன்னே தீயாய் நீயிருக்க...
உன்னை அடையாளம் அறியாமல்
உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கிப் போகிறேனே...
என் கவிப் பெண்ணோடு
கரம் கோர்க்க முடியவில்லை என்று...
உன்னை அறியாமல் நானும்...
உண்மை அறிந்த நீயும்...
ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நம் காதல் வலி கொண்டதை அறியாயோ?
உனக்கு சொந்தமானதை ஒப்படைத்து
நான் விலக நினைக்க
திருமணம் என்ற பந்தத்தில்
நம்மை இணைகிறது விதி...
விதியின் சதிராட்டத்தில் என்னவள்
நீயென உணர்ந்த தருணத்தில்
இருந்தே உன் கவிஞன் நான்
கரைகிறேன் பெண்ணே உன் மீது
கொண்ட உயிர் காதலாலே...
அன்னை தந்தை இருந்தும் மழலையாய்
என் கை சேர்ந்தவள்...
இன்று அனைத்தையும் இழந்து
என் கரம் பிடிக்க...
உனக்கு அனைத்தும் ஆனேனடி..
இந்த ஆதிரையன்...
கவிஞரே ஒரு முறை அழைத்து காதலை
சொல்லிவிட்டாய்...
உனக்கு தமிழைக் கற்பித்த நானோ
வார்த்தைகளைத் தவிக்கிறேன்
என் தீ பெண்ணே...
தமிழும், கவியும் போல
நம் மனமும்
என்றும் இணைந்திருக்கும்...
வாழ்த்துகள் இமையி அக்கா.
வாசகியாக
சந்தியா ஸ்ரீ
இமையி அக்காவின் ஆதிரையன் கதையின் தலைப்பு என்னைக் கவர்ந்ததால் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடிதங்கள் வழியாக இரு உள்ளங்கள் இணைந்து, காதல் என்ற சுழலில் மாட்டுக் கொள்ளும் சமயம் விதி அவர்களை வேறு பாதையில் அழைக்க, அதை முறியடித்து ஆதிரையன் - அதிதீ இணைந்தார்களா என்பதுதான் கதை.
இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால், இதோ என்னுடைய ரிவ்யூ கவிதை வடிவில்...
இரு உள்ளங்கள் உறவாடிக் கொள்ள
பேப்பரும் பேனாவும்,
கொஞ்சம் தமிழும்,
கொஞ்சும் கவியும்
போதுமடி பெண்ணே...
முகம் அறியாத இருவரை
கடிதத்தின் வழியாக
இணைத்த தமிழன்னைக்கு
தெரியுமோ இது நீண்டகால
உறவென்பது!
ஆதியில் நீயோ என் கையில்
மழலையாய்...
திரையில் மறைவில் நின்று
என் இதயத்தில் தகிக்கும்
தீயாய் அறிமுகம் ஆனவளும் நீ...
என் தந்தை செய்த துரோகத்திற்கு
பழிவாங்க வந்து பலியாக
போவது தன்னவன் என்றவுடன்
அனைத்தையும் வேண்டாம்
என மறுக்கிறாய்...
கண்முன்னே தீயாய் நீயிருக்க...
உன்னை அடையாளம் அறியாமல்
உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கிப் போகிறேனே...
என் கவிப் பெண்ணோடு
கரம் கோர்க்க முடியவில்லை என்று...
உன்னை அறியாமல் நானும்...
உண்மை அறிந்த நீயும்...
ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நம் காதல் வலி கொண்டதை அறியாயோ?
உனக்கு சொந்தமானதை ஒப்படைத்து
நான் விலக நினைக்க
திருமணம் என்ற பந்தத்தில்
நம்மை இணைகிறது விதி...
விதியின் சதிராட்டத்தில் என்னவள்
நீயென உணர்ந்த தருணத்தில்
இருந்தே உன் கவிஞன் நான்
கரைகிறேன் பெண்ணே உன் மீது
கொண்ட உயிர் காதலாலே...
அன்னை தந்தை இருந்தும் மழலையாய்
என் கை சேர்ந்தவள்...
இன்று அனைத்தையும் இழந்து
என் கரம் பிடிக்க...
உனக்கு அனைத்தும் ஆனேனடி..
இந்த ஆதிரையன்...
கவிஞரே ஒரு முறை அழைத்து காதலை
சொல்லிவிட்டாய்...
உனக்கு தமிழைக் கற்பித்த நானோ
வார்த்தைகளைத் தவிக்கிறேன்
என் தீ பெண்ணே...
தமிழும், கவியும் போல
நம் மனமும்
என்றும் இணைந்திருக்கும்...
வாழ்த்துகள் இமையி அக்கா.
வாசகியாக
சந்தியா ஸ்ரீ
Last edited: