எல்லை இல்லா வானமாக
வெகு தூரத்தில் அவன்
பருஉடல் இருந்தாலும்...
உதயத்தில் மட்டுமல்லாது
உச்சி வானில் பகலவன்
இருக்கும் போதும்...
வரக்கூடிய
அத்துணை காலங்களிலும்
துணையாய்...
நல் இணையாய்...
வானவில்லாய் வாழ்வில்
வர இருக்கும் அவள்
வருகைக்காக
காதலோடு
காத்திருக்கும்
கண்ணியக்
காதலன்...!
காதலின் முகவரி
தெறியாத...
காதலின் அரிச்சுவடி
அறியாத...
காதலி...!
கடமைக்குள் கனவுகளை
விதைத்து
காரியமாக நனவுகளை
அறுவடை செய்யும்
காரியக்காரி..!
சாகசங்கள் நிறைந்த
உலகில்
சத்தமின்றி
சாதூர்யமாக
வாழத்தெரிந்தவள்...!
காதலை சந்தித்தும்
உணர்ந்து கொள்ளும்
ஆவலில்லாத
அழகி...!
காதல் கூடாரத்தின்
விலாசம் மறந்தவளை
விஷாலினி என்றும்
வானவில்லை இன்னும்
காணவில்லை என
காத்திருக்கும்
காதல் கண்ணனை
அரவிந்த் என்றும்
அழைப்போமா?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.