- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
வாமன புராணம் விஷ்ணு எடுத்த அவதாரத்தைப் பற்றிப் பேசுவதாகும். இது 6,000 பாடல்களை உடையது. இந்தப் புராணத்தில் பின்வரும் தலைப்புகள் விரிவாகப் பேசப்பெறுகின்றன. தட்ச யக்ஞம், இமவான் மகளாகப் பார்வதியின் தோற்றம், பார்வதியின் தவம், கணேசர் தோற்றம், கார்த்திகேயன் கதை, பிரகலாதன் நைமி சாரண்யத்திற்கு யாத்திரை சென்ற கதை குருகேத்திரச் சிறப்பு சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்புகள் பற்றிய கதை, மகிஷாசுரன் வதம், அந்தகன் கதை விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த கதை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஒருமுறை நாரதர் புலஸ்திய முனிவரிடம் சென்று வாமன புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினார். புலஸ்தியர் சொன்ன கதை வாமன புராணமாக வந்துள்ளது.
சிவ - பார்வதி
சிவபெருமானும், பார்வதியும் மந்தர மலையில் வசித்துக் கொண்டிருந்த பொழுது, கோடையின் வெம்மை தாங்காத பார்வதி, சிவனைப் பார்த்து, எப்படியாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு மற்றவர் போல நாமும் வாழக் கூடாதா என்றார். அதற்கு திறந்த வெளியில் வாழ்வதுதான் என்னுடைய முடிவு. நீ வெயில் கொடுமையில் அவதிப்படுகின்றாய் என்றால், காடுகளில் மரத்தடியில் சென்று வாழலாம் வா என்று கூறிப் பார்வதியை அழைத்துக் கொண்டு, மரங்களின் நிழலில் வாழத் தொடங்கினார்.
கோடை போய், மழைக் காலம் வந்தது. மேகங்கள், இடியையும், மின்னலையும் உண்டாக்கின. மயில்கள் ஆடத் தொடங்கின. சோவென்று பெய்த மழையில் மலை அருவிகள் வீழ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிற்று. இப்பொழுது பார்வதி சிவனைப் பார்த்து நாமும் எல்லோரையும் போல வாழ வேண்டாமா? அழகிய வீட்டைக் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் இந்த மழையில் நனைந்து குளிரில் வாடும் நிலைமை ஏற்படாதே’ என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட சிவன், “பார்வதி, நிலைமை புரியாமல் பேசுகிறாய். கட்டுவதற்கு ஒரு துணிகூட இல்லாமல் புலித்தோலை அணிந்திருக்கிறேன். பொன்நகை என்று சொல்வதற்கு எதுவு மில்லாமல் இந்தப் பாம்புகளை அணிந்திருக்கிறேன். இந்த நிலையில் வீடு கட்டப் பொருளுக்கு எங்கே போவது, வா! மழைக்காலம் முடியும் வரை மேகங்களில் சென்று வாழலாம்" என்று கூறிப் பார்வதியையும் அழைத்துக்கொண்டு மேகங்களில் வாழப் புறப்பட்டார். வடமொழியில் ஜீமுதா என்றால் மேகம் என்று பொருள்படும். மேகத்தில் வாழ்ந்ததால் சிவனுக்கு 'ஜீமுதகேது’ என்ற பெயர் வந்தது.
பிரம்மனின் வெற்றி
முன்னொரு காலத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன், சந்திரன் முதலிய எதுவுமில்லை. எங்கும் இருள். பூமியைத் தண்ணீர் மூடி இருந்தது. அத்தண்ணீரில் விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். ஒருவாறாக யுக முடிவில் விஷ்ணு கண் விழித்தார். பொழுது விடிந்ததைப் பாராட்ட தட்சன் ஒரு யாகம் செய்தான். சிவனைத் தவிர ஏனைய தேவர்கள் அனைவரையும் தட்சன் அழைத்திருந்தார். 'சிவனை ஏன் அழைக்கவில்லை? என்று நாரதர் கேட்க, அவர் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அழைக்கவில்லை என்று புலஸ்தியர் கூறினார். பிரம்மன் மண்டை ஓடு எப்படி சிவனிடம் வந்தது என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூறத் தொடங்கினார்.
பிரபஞ்ச உற்பத்திக்காக விஷ்ணு ஒருமுறை பிரம்மனைத் தோற்றுவித்தார். அவர் நான்கு வேதங்கள் கற்றவராகவும், ஐந்து தலை உடையவராகவும் இருந்தார். திடீரென்று அவர் எதிரே காளை வாகனத்தின் மேல் பார்வதியுடன் சிவன் வந்து தோன்றினார். சிவன் பிரம்மனைப் பார்த்து, நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டவுடன், பிரம்மன் படுகோபம் கொண்டு, சிவனைப் பார்த்து, “மூன்று கண்களை உடைய உன்னை எனக்குத் தெரியும். நீ
இருட்டில் வாழ்பவன். நான் யார் என்று தெரியவில்லையா? நான்தான் பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மன். இவ்வாறு பிரம்மன் கூறியதும், கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்டார். ஆனால் கிள்ளப்பட்ட தலை சிவன் கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. கோபம் கொண்ட பிரம்மன் நான்கு கைகளை உடைய ஒரு வீரனை உற்பத்தி செய்து சிவனைக் கொல்லுமாறு பணித்தார். சிவனும் பார்வதியும் விஷ்ணுவிடம் ஒடினர். சிவன் நடந்தவற்றைக் கூற விஷ்ணு, தன் இடக்கையை உயர்த்தி திரிசூலத்தால் அக்கையில் குத்துமாறு கூறினார். சிவன் அவ்வாறு செய்தார். அது திரிசூலமாகையால் விஷ்ணுவின் கையில் மூன்று காயங்கள் ஏற்பட்டு மூன்றிலிருந்தும் இரத்தம் கொட்டிற்று. முதல் காயத்தில் இருந்து சொரிந்த இரத்தம் நட்சத்திரங்களுடன் சென்று சேர்ந்து விட்டது. இரண்டாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் பூமியில் விழுந்ததால் அதிலிருந்து அத்ரி, துர்வாசர் தோன்றினர். அத் துர்வாசர் பிறந்த கதை மற்ற புராணங்களில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது, மூன்றாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் சிவனுடைய நெற்றியில் பட அங்கிருந்து ஒரு வீரன் தோன்றினான். கரிய நிறமுடைய அவ்வீரன் வில்லும் அம்பும் வைத்திருந்தான். அந்த வீரன் சிவனைப் பார்த்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். பிரம்மன் உண்டாக்கிய வீரனைக் கொல்வாயாக என்று சிவன் கட்டளை இட்டார். இருவரும் ஆயிரம் தேவருடன் போர் புரிந்தனர். இறுதியில் பிரம்மன் வீரன் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற அவன் சூரிய மண்டலத்தில் சென்று மறைந்து விட்டான். சிவன் வீரன் விஷ்ணுவின் விக்கிரகத்தில் கலந்து விட்டான்.
சிவனும், விஷ்ணுவும்
துண்டிக்கப்பட்ட பிரம்மன் தலை, சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. பிரம்மன் பிராமணர் ஆகையினால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் வலுவாகப் பற்றிக் கொண்டது. சிவன் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று குளிக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாக தீர்த்தங்கள் வற்றி விட்டன. கடைசியாக விஷ்ணுவிடம் சென்று தன் குறையைச் சொன்னார் சிவன். வாரணா என்ற ஆறும், அசி என்ற ஆறும் சங்கமிக்கும் இடத்தில் வாரணாசி என்ற ஊர் உள்ளது. அதில் தச அஸ்வமேதா என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று நீ பிரார்த்தனை செய்தால் கபாலம் நீங்கும் என்று கூறினார். சிவன் அவ்வாறே செய்ய கபாலம் கையை விட்டு நீங்கியது. நீண்ட காலம் கபாலம் கையில் இருந்ததால் சிவனுக்குக் கபாலி என்றும், அந்த இடத்திற்குக் கபால மோட்சனா என்ற பெயரும் நிலைத்தது.
தட்சயக்ஞம் : புதிய கோணம்
(ஏனைய பல புராணங்களிலும் தட்சயக்ஞம் சொல்லப் பட்டிருப்பதால் அவற்றினின்று மாறுபடும் பகுதிகளை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.)
தட்சன் யக்ஞம் செய்வதையும், சிவன் அழைக்கப் படவில்லை என்பதையும், தட்சன் மகளும் சிவன் மனைவியுமாகிய சதி தன் தங்கை மகள் விஜயாவின் மூலம் அறிந்து அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அங்கிருந்த சிவனின் கோபத்தில் கரிய நிறமுடைய வீரபத்திரன் தோன்றினார். விஜயாவையும் சிவன் தோற்றுவித்தார். வீரபத்திரன், விஜயாவுடன் சேர்ந்து தட்சன் யாகசாலைக்குச் சென்று அதனை அழிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க வந்த விஷ்ணுவுடன் வீரபத்திரன் போர் செய்தார். விஷ்ணுவுடைய சக்கரம் வீர பத்திரனுடைய சூலாயுதத்தை எதிர்த்து நிற்க முடியாததால், விஷ்ணு வீரபத்திரனுடன் மற்போர் புரிந்தார். மற்போரில் விஷ்ணுவிடம் தோற்ற வீரபத்திரன் சிவனிடம் வந்தார். சிவன் விஷ்ணுவிடம் சண்டை போட விஷ்ணு தோற்று ஒடிவிட்டார். பிறகு அங்கிருந்த முனிவர்களை எல்லாம் வீரபத்திரன் தண்டித்தார். புஷா என்ற முனிவர் காலைப் பிடித்து ஆகாயத்தில் சுழற்றினார். புஷாவின் பற்களை எல்லாம் உடைத்தார்.
பகா என்ற முனிவரின் கண்களைத் தோண்டினார். யாகம் இப்படி முடிந்ததால் யாகமே ஒரு மான் வடிவெடுத்து ஆகாயத்தில் ஒடத் தொடங்கியது. யாக சாலையில் இருந்த சிவ உருவம் இரண்டாகப் பிளந்தது. ஜடாபாரத்தோடு கூடிய ஒரு பகுதியாக சாலையில் தங்கிவிட்டது. மறுபகுதி பாசுபதாஸ்திரம் பூட்டிய வில்லுடன் ஆகாயத்தில் செல்லும் மானைத் துரத்திச் சென்றது. ஆகாயத்தில் சென்ற சிவனது ஒரு பகுதி காலபுருஷ என்ற பெயருடன் ஆகாயத்தில் தங்கிவிட்டது. யாக சாலையில் தங்கிய பகுதி ஜடாதரா என்ற பெயரைப் பெற்றது.
வானத்தில் தங்கிய சிவனுடைய பாகம் மேஷத்தில் தலையும், ரிஷபத்தில் முகமும், மிதுனத்தில் தோள்களும், சிம்மத்தில் இதயமும், கடகத்தில் இரு பக்கங்களும், கன்னியின் வயிறும், துலாத்தில் கொப்பூழும், விருச்சிகத்தில் இடுப்பும், தனுசுவில் தொடையும், மகரத்தில் கால்களும், கும்பத்தில் கணுக்கால்களும், மீனத்தில் பாதங்களும் இடம் பெற்றன. இதுவே வான் மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு வீடுகளும் பிறந்த கதையாகும்.
மன்மத தகனம்
வெகு காலத்திற்கு முன்னர், நேர்மையான விவ்ரிசா என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அஹிம்சா என்ற மனைவியும், ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என்ற நான்கு மகன்களும் முனிவர்களாகி தவத்தில் ஈடுபட்டனர். இமயமலையில் உள்ள வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்துத் தவம் செய்தனர். இவர்கள் கடுமையாகத் தவம் செய்வதை அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரப்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா என்ற அப்ஸரஸையும், மதனா என்பவரையும் அனுப்பிவைத்தார்.
இவர்கள் இருவரும் வதரிகாசிரமம் அடைந்த பொழுது, அங்கு பருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. மலர்கள் மலர்ந்தன, கொடிகள் செழுமையாக வளர்ந்தன. தன் தவம் கலைந்த நாராயண முனிவர் வியப்புடன் இவற்றைப் பார்த்துவிட்டு, அனங்கனைப் பார்த்தார். அனங்கன் என்று சொன்னது யாரை?’ என்று நாரதர், புலஸ்தியரைக் கேட்க, அவன்தான் மதன் என்றும், காமன், கந்தர்வன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் காதலுக்குத் தேவனவன் என்று புலஸ்தியர் கூற, அனங்கன் என்று ஏன் பெயர் வந்தது என்று நாரதர் கேட்க, 'அவன் சிவனால் எரிக்கப்பட்டான்' என்று விடையளித்தான் புலஸ்தியன். சிவன் அவனை எரித்த வரலாற்றையும் கூறத் தொடங்கினார்.
தட்சயக்ளுத்தைக் கேள்விப்பட்டு சதி உயிரை விட்டதில் இருந்து சிவன், சதியைப் பிரிந்த துயரத்தில் மிகவும் ஆழ்ந்து போனார். சில நேரம் நாட்டியமாடியும், சில நேரம் ‘ஓ’ என்று குமுறியும் மனநிம்மதியின்றி அலைந்தார். பிரிவினால் ஏற்பட்ட துடு மிகுதிப்பட்டமையில் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று நீராடத் தொடங்கினார். காளிந்தி நதியில் அவர் நீராட இறங்கியதும் அந்த நதியின் நீரே கருமையாக மாறியது. அப்பொழுது முதல் சிவனுக்கு ஏப்பம் அதிக சப்தத்துடன் வரலாயிற்று. அதை அடக்க முடியாத சிவன் ஏப்பமிட்டுக் கொண்டே இங்குமங்கும் அலைந்தார். வழியில் குபேரன் மகனாகிய பாஞ்சலிகாவைக் கண்டு, என்னுடைய ஏப்பத்தை நீ வாங்கிக் கொண்டால் உன்னை வாழ்த்துவேன் என்றார். அவன் அதனை வாங்கிக் கொண்டதால் அவன் பாஞ்சாலேஸ்வரன் என்று வணங்கப்பட்டான். அதன் பிறகு சிவன் விந்திய மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தவம் செய்து கொண் டிருக்கும் பொழுது திடீரென்று அடி, முடி காண முடியாத லிங்க வடிவை எடுத்தார். அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியும், பூகம்பமும், மிகவும் அஞ்சத்தக்கனவாக இருந்தன. இதைக் கண்டு அஞ்சிய பிரம்மன் விஷ்ணுவிடம் சென்று அதிர்ச்சியின் காரணம் கேட்டார். விஷ்ணு, சிவன் விந்திய மலைப் பிரதேசத்தில் லிங்க வடிவெடுத்ததன் விளைவாகும் இது என்று கூறினார். இருவரும் விந்திய மலைக்கு வந்து சிவன் நின்ற காட்சி கண்டனர். லிங்கத்தின் முடி கற்பனைக்கடங்காத உயரத்தில்
இருந்தது. அப்படி யானால் அதனுடைய அடியும் வெகுதூரம் சென்றிருக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட பிரம்மா, விஷ்ணு இருவருமே எப்படியாவது லிங்கத்தின் அடியையும் முடியையும் கண்டு வரவேண்டும் என்று விரும்பினர். உடனே பிரம்மன் தன் வாகனமாகிய அன்னத்தின் மேல் ஏறிக் கொண்டு உயர உயரப் பறந்து சென்றார். விஷ்ணு தன் வாகனமாகிய கருடனில் ஏறிக்கொண்டு கீழ்லோகங்கள் சென்றார். எவ்வளவு உயர்ந்து பறந்தும், எவ்வளவு தாழ்ந்து கிடந்தும் இருவரும் லிங்கத்தின் முடியையோ, அடியையோ காண முடியவில்லை. வெற்றி அடையாத இருவரும் ஒன்று கூடி சிவனை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். சிவன் அங்கே தோன்றினார். இவர்களுக்குப் பின்னே கந்தர்ப்பன் என்று சொல்லப்படும் மன்மதனைப் பார்த்தார். உடனே அவனது வில்லை ஒடித்து அவனையும் அழித்து விட்டார். அவனது வடிவம் எரிக்கப் பட்டதால் வடிவமில்லாதவன் என்ற பொருளில் அனங்கன் என்ற பெயர் நிலைத்தது. உடனே சிவன் இமயத்திற்குச் சென்று தவம் செய்யப் போய்விட்டார்.
ஊர்வசி பிறந்த கதை
புலஸ்தியர் நாரதரைப் பார்த்து நர, நாராயணர் நாரத கதையை எங்கே விட்டேன் என்று நினைவுக்குக் கொண்டு வாரும். நர, நாராயணன் இருவரும் மிகத் தீவிரமான தவத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரம்பையும் மதனனும் இவர்கள் எதிரே வந்து நர, நாராயணர் தவத்தைக் கலைக்க நினைத்தனர். கண்விழித்த நாராயண முனிவர் ஒரே நொடியில் இவர்கள் யார் என்பதையும், எதற்காக வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொண்டார். சிரித்துக் கொண்டே மதனனைத் தன் பக்கத்தில் வருமாறு கூறினார். அவன் வந்து அமர்ந்தவுடன், அவனிடம் பேசிக் கொண்டே, ஒரு கொத்துப் பூவை எடுத்துத் தன் தொடையில் வைத்து திரித்தார். திரிக்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ரம்பையைத் தோற்றோடச் செய்யும் அழகே வடிவான ஒரு பெண் உருவானாள். மதனனைப் பார்த்து, 'ஊர்வசி என்ற இந்தப் பெண்ணுக்கு நிகராக உங்கள் தேவலோகத்தில் எந்த அப்ஸரஸும் இல்லை. இந்திரனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இந்தப் பெண்ணை அழைத்துச் செல் என்றார். பிரம்மன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை, கேவலம் பூங்கொத்துக்களில் இருந்தே நாராயண முனிவர் செய்ததைக் கண்ட காமன் பயந்து ஒடிச் சென்று நடந்தவற்றை விவரமாகக் கூறினான். இந்த விவரம் அறிந்த இந்திரன் அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்புவதையே விட்டு விட்டான்.
பிரகலாதன் கதை
ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் மகனாகிய பிரகலாதனுக்கு முடி சூட்டினார் விஷ்ணு. அவன் ஆட்சி செய்யும் காலத்தில், சாயாவனர் என்ற முனிவர், நகுலேஷ்வா தீர்த்தத்தில் நீராடப் போனார். அப்பொழுது ஒரு கரிய பாம்பு அவரைக் கடித்தது என்றாலும் அவர் விஷ்ணுவைத் தொழுது விஷத்திலிருந்து விடுபட்டார் என்றாலும் அந்தப் பாம்பு அவரைச் சுற்றி இழுத்துச் சென்று அரக்கர் லோகத்தில் ஆண்டுகொண்டிருந்த பிரகலாதன் முன் நிறுத்தியது. பிரகலாதன் அவரை வணங்கி "முனிவரே! மூன்றுலகிலும் தலைசிறந்து விளங்கும் தீர்த்தங்களில் நீராட விரும்புகிறேன்.” என்றான். அதற்கு முனிவர் “அரசே! மேலுலகத்தில் புஷ்கர தீர்த்தமும், பூலோகத்தில் நைமிச தீர்த்தமும், கீழ்லோகத்தில் சக்கர தீர்த்தமும் தலைமையானவையாகும்” என்று கூறிப் போனார்.
பிரகலாதன் தன்னுடைய படைகளுடன் நைமிச தீர்த்தத்தில் நீராடப் போனான். அங்கே அவனுக்கொரு அதிசயம் காத்திருந்தது. தீர்த்தக் கரையில் உள்ள பெரிய மரம் ஒன்று ஒரு எள்முனைகூட இடமில்லாமல் அடிமரத்திலிருந்து நுனி மரம் வரை அம்புகள் துளைக்கப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கான அம்புகள் ஒவ்வொரு பகுதியிலும் குத்திக்கொண்டு அப்படியே நின்றிருந்தன வியப்புத் தாங்காத பிரகலாதன், சுற்று முற்றும் பார்க்கையில், பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பதையும், இருவருடைய
பக்கத்திலும் இரு மிகப்பெரிய வில்களும் அம்புகள் நிறைந்த இரண்டு அம்பறாத்துணிகளும் இருக்கக் கண்டான். தவசிகள் வில்லையும், அம்பையும் வைத்திருப்பது பொருத்தமில்லாத செயல் என்று கருதினான் பிரகலாதன். எனவே அவர்களிடம் வந்தான். நாராயண முனிவரைப் பார்த்து, "அம்பையும், வில்லையும் வைத்திருக்கும் நீங்கள் போலித்துறவிகள் என்பதில் ஐயமில்லை. தவம் செய்கின்ற இடத்தில் வில்லுக்கும், அம்புக்கும் என்ன வேலை? நீங்கள் யார்?' என்று கேட்டான். முனிவர் அவனைப் பார்த்து, நாங்கள் யாராயிருந்தால் உனக்கென்ன? என்று கூற, பிரகலாதன் நான் அரசன், இப்படிப்பட்ட போலித் துறவிகளைத் தண்டிக்க வேண்டியது என் கடமை என்றான்.
உடனே நர முனிவர் வில்லை எடுக்க பெரும் போர் மூண்டது. பிரகலாதன் எய்த எல்லா பானங்களையும் நர முனிவரின் பாணங்கள் செயலிழக்கச் செய்தமையால், பிரகலாதன், இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர் என்று தெரிந்துகொண்டு சிறப்பு மிகுந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினான். நர முனிவர் மிக எளிதாக நாராயணாஸ்திரத்தை ஏவி அதனைத் தடை செய்தார். பிரகலாதன் அக்னியாஸ்திரத் தையும், முனிவர் மஹேஸ்வராஸ்திரத்தையும் பயன்படுத்தினர். மாலை ஆகிவிடவே முனிவர் பிரகலாதனைப் பார்த்து சூரியன் மறைந்த பிறகு சண்டை இடுவது தருமம் அன்று. நாளை பொழுது விடிந்தவுடன் போர் செய்யலாம் என்று கூற, பிரகலாதன் சென்று ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலை வந்தான். இப்பொழுது நாராயண முனிவர் போருக்கு வந்தார். ஆயுதங்கள் எதுவும் பயன்படாமல் போகவே, பிரகலாதன் கதாயுதத்தை எடுத்து நாராயண முனிவர் மண்டையில் அடித்தான். கதாயுதம் சுக்கு நூறாயிற்று. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதறிந்த பிரகலாதன் விஷ்ணுவை தியானிக்க, விஷ்ணு தோன்றினார்.
'நான் இவர்களை வெல்ல வேண்டும் என்று பிரகலாதன் கேட்க விஷ்ணு, இவர்களை யாரென்று நினைத்தாய். இவர்கள் என் அம்சமாவர். இவர்களை வெல்வது என்பது இயலாத காரியம் என்று கூறியவுடன், பிரகலாதன், "இவர்களை வெல்ல வேண்டுமென்று விரதம் பூண்டுள்ளேன். அது முடியாது என்றால் நான் என் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றான். அதுகேட்ட விஷ்ணு, "இவர்களை ஆயுத பலத்தால் வெல்ல முடியாது என்றுதான் சொன்னேன். ஆன்ம பலத்தாலும், பக்தியாலும் இவர்களை நீ உன்னிடம் வருமாறு செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
அதைக் கேட்ட பிரகலாதன் வில்லையும், அம்பையும் துர எறிந்துவிட்டு, நர, நாராயணர்களைப் பிரார்த்தனை செய்யத் துவங்கினான். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர் யார் என்று தெரியாமையால் அவரை ஏசியும், பாணத்தால் துன்புறுத்தியும் பல தவறுகளைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற நாராயண முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, உங்களையும் விஷ்ணுவையும் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று வேண்டினான். அங்ங்னமே ஆகட்டும்’ என்று முனிவர் கூறியவுடன் பிரகலாதன் தன் நாட்டிற்கு
யாத்திரைக்குப் புறப்படுமுன் அந்தகன் என்னும் அசுர னிடம் அரசை ஒப்படைத்துவிட்டுப் பிரகலாதன் புறப்பட்டிருந் தான் அல்லவா? இப்பொழுது அந்தகன் வந்து அரசை ஏற்று ஆள வேண்டும் என்று கூறியவுடன் பிரகலாதன் எந்தப் பகுதியிலும் எனக்கு இப்பொழுது விருப்பமில்லை. நீயே இதனை ஆள்வாயாக என்று அவனிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று விட்டான்.
வாமன புராணம் விஷ்ணு எடுத்த அவதாரத்தைப் பற்றிப் பேசுவதாகும். இது 6,000 பாடல்களை உடையது. இந்தப் புராணத்தில் பின்வரும் தலைப்புகள் விரிவாகப் பேசப்பெறுகின்றன. தட்ச யக்ஞம், இமவான் மகளாகப் பார்வதியின் தோற்றம், பார்வதியின் தவம், கணேசர் தோற்றம், கார்த்திகேயன் கதை, பிரகலாதன் நைமி சாரண்யத்திற்கு யாத்திரை சென்ற கதை குருகேத்திரச் சிறப்பு சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்புகள் பற்றிய கதை, மகிஷாசுரன் வதம், அந்தகன் கதை விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த கதை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஒருமுறை நாரதர் புலஸ்திய முனிவரிடம் சென்று வாமன புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினார். புலஸ்தியர் சொன்ன கதை வாமன புராணமாக வந்துள்ளது.
சிவ - பார்வதி
சிவபெருமானும், பார்வதியும் மந்தர மலையில் வசித்துக் கொண்டிருந்த பொழுது, கோடையின் வெம்மை தாங்காத பார்வதி, சிவனைப் பார்த்து, எப்படியாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு மற்றவர் போல நாமும் வாழக் கூடாதா என்றார். அதற்கு திறந்த வெளியில் வாழ்வதுதான் என்னுடைய முடிவு. நீ வெயில் கொடுமையில் அவதிப்படுகின்றாய் என்றால், காடுகளில் மரத்தடியில் சென்று வாழலாம் வா என்று கூறிப் பார்வதியை அழைத்துக் கொண்டு, மரங்களின் நிழலில் வாழத் தொடங்கினார்.
கோடை போய், மழைக் காலம் வந்தது. மேகங்கள், இடியையும், மின்னலையும் உண்டாக்கின. மயில்கள் ஆடத் தொடங்கின. சோவென்று பெய்த மழையில் மலை அருவிகள் வீழ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிற்று. இப்பொழுது பார்வதி சிவனைப் பார்த்து நாமும் எல்லோரையும் போல வாழ வேண்டாமா? அழகிய வீட்டைக் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் இந்த மழையில் நனைந்து குளிரில் வாடும் நிலைமை ஏற்படாதே’ என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட சிவன், “பார்வதி, நிலைமை புரியாமல் பேசுகிறாய். கட்டுவதற்கு ஒரு துணிகூட இல்லாமல் புலித்தோலை அணிந்திருக்கிறேன். பொன்நகை என்று சொல்வதற்கு எதுவு மில்லாமல் இந்தப் பாம்புகளை அணிந்திருக்கிறேன். இந்த நிலையில் வீடு கட்டப் பொருளுக்கு எங்கே போவது, வா! மழைக்காலம் முடியும் வரை மேகங்களில் சென்று வாழலாம்" என்று கூறிப் பார்வதியையும் அழைத்துக்கொண்டு மேகங்களில் வாழப் புறப்பட்டார். வடமொழியில் ஜீமுதா என்றால் மேகம் என்று பொருள்படும். மேகத்தில் வாழ்ந்ததால் சிவனுக்கு 'ஜீமுதகேது’ என்ற பெயர் வந்தது.
பிரம்மனின் வெற்றி
முன்னொரு காலத்தில் பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன், சந்திரன் முதலிய எதுவுமில்லை. எங்கும் இருள். பூமியைத் தண்ணீர் மூடி இருந்தது. அத்தண்ணீரில் விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். ஒருவாறாக யுக முடிவில் விஷ்ணு கண் விழித்தார். பொழுது விடிந்ததைப் பாராட்ட தட்சன் ஒரு யாகம் செய்தான். சிவனைத் தவிர ஏனைய தேவர்கள் அனைவரையும் தட்சன் அழைத்திருந்தார். 'சிவனை ஏன் அழைக்கவில்லை? என்று நாரதர் கேட்க, அவர் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அழைக்கவில்லை என்று புலஸ்தியர் கூறினார். பிரம்மன் மண்டை ஓடு எப்படி சிவனிடம் வந்தது என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூறத் தொடங்கினார்.
பிரபஞ்ச உற்பத்திக்காக விஷ்ணு ஒருமுறை பிரம்மனைத் தோற்றுவித்தார். அவர் நான்கு வேதங்கள் கற்றவராகவும், ஐந்து தலை உடையவராகவும் இருந்தார். திடீரென்று அவர் எதிரே காளை வாகனத்தின் மேல் பார்வதியுடன் சிவன் வந்து தோன்றினார். சிவன் பிரம்மனைப் பார்த்து, நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டவுடன், பிரம்மன் படுகோபம் கொண்டு, சிவனைப் பார்த்து, “மூன்று கண்களை உடைய உன்னை எனக்குத் தெரியும். நீ
இருட்டில் வாழ்பவன். நான் யார் என்று தெரியவில்லையா? நான்தான் பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மன். இவ்வாறு பிரம்மன் கூறியதும், கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்டார். ஆனால் கிள்ளப்பட்ட தலை சிவன் கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. கோபம் கொண்ட பிரம்மன் நான்கு கைகளை உடைய ஒரு வீரனை உற்பத்தி செய்து சிவனைக் கொல்லுமாறு பணித்தார். சிவனும் பார்வதியும் விஷ்ணுவிடம் ஒடினர். சிவன் நடந்தவற்றைக் கூற விஷ்ணு, தன் இடக்கையை உயர்த்தி திரிசூலத்தால் அக்கையில் குத்துமாறு கூறினார். சிவன் அவ்வாறு செய்தார். அது திரிசூலமாகையால் விஷ்ணுவின் கையில் மூன்று காயங்கள் ஏற்பட்டு மூன்றிலிருந்தும் இரத்தம் கொட்டிற்று. முதல் காயத்தில் இருந்து சொரிந்த இரத்தம் நட்சத்திரங்களுடன் சென்று சேர்ந்து விட்டது. இரண்டாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் பூமியில் விழுந்ததால் அதிலிருந்து அத்ரி, துர்வாசர் தோன்றினர். அத் துர்வாசர் பிறந்த கதை மற்ற புராணங்களில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது, மூன்றாவது காயத்தில் இருந்து வந்த இரத்தம் சிவனுடைய நெற்றியில் பட அங்கிருந்து ஒரு வீரன் தோன்றினான். கரிய நிறமுடைய அவ்வீரன் வில்லும் அம்பும் வைத்திருந்தான். அந்த வீரன் சிவனைப் பார்த்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். பிரம்மன் உண்டாக்கிய வீரனைக் கொல்வாயாக என்று சிவன் கட்டளை இட்டார். இருவரும் ஆயிரம் தேவருடன் போர் புரிந்தனர். இறுதியில் பிரம்மன் வீரன் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற அவன் சூரிய மண்டலத்தில் சென்று மறைந்து விட்டான். சிவன் வீரன் விஷ்ணுவின் விக்கிரகத்தில் கலந்து விட்டான்.
சிவனும், விஷ்ணுவும்
துண்டிக்கப்பட்ட பிரம்மன் தலை, சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. பிரம்மன் பிராமணர் ஆகையினால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் வலுவாகப் பற்றிக் கொண்டது. சிவன் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று குளிக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாக தீர்த்தங்கள் வற்றி விட்டன. கடைசியாக விஷ்ணுவிடம் சென்று தன் குறையைச் சொன்னார் சிவன். வாரணா என்ற ஆறும், அசி என்ற ஆறும் சங்கமிக்கும் இடத்தில் வாரணாசி என்ற ஊர் உள்ளது. அதில் தச அஸ்வமேதா என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று நீ பிரார்த்தனை செய்தால் கபாலம் நீங்கும் என்று கூறினார். சிவன் அவ்வாறே செய்ய கபாலம் கையை விட்டு நீங்கியது. நீண்ட காலம் கபாலம் கையில் இருந்ததால் சிவனுக்குக் கபாலி என்றும், அந்த இடத்திற்குக் கபால மோட்சனா என்ற பெயரும் நிலைத்தது.
தட்சயக்ஞம் : புதிய கோணம்
(ஏனைய பல புராணங்களிலும் தட்சயக்ஞம் சொல்லப் பட்டிருப்பதால் அவற்றினின்று மாறுபடும் பகுதிகளை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.)
தட்சன் யக்ஞம் செய்வதையும், சிவன் அழைக்கப் படவில்லை என்பதையும், தட்சன் மகளும் சிவன் மனைவியுமாகிய சதி தன் தங்கை மகள் விஜயாவின் மூலம் அறிந்து அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அங்கிருந்த சிவனின் கோபத்தில் கரிய நிறமுடைய வீரபத்திரன் தோன்றினார். விஜயாவையும் சிவன் தோற்றுவித்தார். வீரபத்திரன், விஜயாவுடன் சேர்ந்து தட்சன் யாகசாலைக்குச் சென்று அதனை அழிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க வந்த விஷ்ணுவுடன் வீரபத்திரன் போர் செய்தார். விஷ்ணுவுடைய சக்கரம் வீர பத்திரனுடைய சூலாயுதத்தை எதிர்த்து நிற்க முடியாததால், விஷ்ணு வீரபத்திரனுடன் மற்போர் புரிந்தார். மற்போரில் விஷ்ணுவிடம் தோற்ற வீரபத்திரன் சிவனிடம் வந்தார். சிவன் விஷ்ணுவிடம் சண்டை போட விஷ்ணு தோற்று ஒடிவிட்டார். பிறகு அங்கிருந்த முனிவர்களை எல்லாம் வீரபத்திரன் தண்டித்தார். புஷா என்ற முனிவர் காலைப் பிடித்து ஆகாயத்தில் சுழற்றினார். புஷாவின் பற்களை எல்லாம் உடைத்தார்.
பகா என்ற முனிவரின் கண்களைத் தோண்டினார். யாகம் இப்படி முடிந்ததால் யாகமே ஒரு மான் வடிவெடுத்து ஆகாயத்தில் ஒடத் தொடங்கியது. யாக சாலையில் இருந்த சிவ உருவம் இரண்டாகப் பிளந்தது. ஜடாபாரத்தோடு கூடிய ஒரு பகுதியாக சாலையில் தங்கிவிட்டது. மறுபகுதி பாசுபதாஸ்திரம் பூட்டிய வில்லுடன் ஆகாயத்தில் செல்லும் மானைத் துரத்திச் சென்றது. ஆகாயத்தில் சென்ற சிவனது ஒரு பகுதி காலபுருஷ என்ற பெயருடன் ஆகாயத்தில் தங்கிவிட்டது. யாக சாலையில் தங்கிய பகுதி ஜடாதரா என்ற பெயரைப் பெற்றது.
வானத்தில் தங்கிய சிவனுடைய பாகம் மேஷத்தில் தலையும், ரிஷபத்தில் முகமும், மிதுனத்தில் தோள்களும், சிம்மத்தில் இதயமும், கடகத்தில் இரு பக்கங்களும், கன்னியின் வயிறும், துலாத்தில் கொப்பூழும், விருச்சிகத்தில் இடுப்பும், தனுசுவில் தொடையும், மகரத்தில் கால்களும், கும்பத்தில் கணுக்கால்களும், மீனத்தில் பாதங்களும் இடம் பெற்றன. இதுவே வான் மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு வீடுகளும் பிறந்த கதையாகும்.
மன்மத தகனம்
வெகு காலத்திற்கு முன்னர், நேர்மையான விவ்ரிசா என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அஹிம்சா என்ற மனைவியும், ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என்ற நான்கு மகன்களும் முனிவர்களாகி தவத்தில் ஈடுபட்டனர். இமயமலையில் உள்ள வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்துத் தவம் செய்தனர். இவர்கள் கடுமையாகத் தவம் செய்வதை அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரப்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா என்ற அப்ஸரஸையும், மதனா என்பவரையும் அனுப்பிவைத்தார்.
இவர்கள் இருவரும் வதரிகாசிரமம் அடைந்த பொழுது, அங்கு பருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. மலர்கள் மலர்ந்தன, கொடிகள் செழுமையாக வளர்ந்தன. தன் தவம் கலைந்த நாராயண முனிவர் வியப்புடன் இவற்றைப் பார்த்துவிட்டு, அனங்கனைப் பார்த்தார். அனங்கன் என்று சொன்னது யாரை?’ என்று நாரதர், புலஸ்தியரைக் கேட்க, அவன்தான் மதன் என்றும், காமன், கந்தர்வன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் காதலுக்குத் தேவனவன் என்று புலஸ்தியர் கூற, அனங்கன் என்று ஏன் பெயர் வந்தது என்று நாரதர் கேட்க, 'அவன் சிவனால் எரிக்கப்பட்டான்' என்று விடையளித்தான் புலஸ்தியன். சிவன் அவனை எரித்த வரலாற்றையும் கூறத் தொடங்கினார்.
தட்சயக்ளுத்தைக் கேள்விப்பட்டு சதி உயிரை விட்டதில் இருந்து சிவன், சதியைப் பிரிந்த துயரத்தில் மிகவும் ஆழ்ந்து போனார். சில நேரம் நாட்டியமாடியும், சில நேரம் ‘ஓ’ என்று குமுறியும் மனநிம்மதியின்றி அலைந்தார். பிரிவினால் ஏற்பட்ட துடு மிகுதிப்பட்டமையில் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று நீராடத் தொடங்கினார். காளிந்தி நதியில் அவர் நீராட இறங்கியதும் அந்த நதியின் நீரே கருமையாக மாறியது. அப்பொழுது முதல் சிவனுக்கு ஏப்பம் அதிக சப்தத்துடன் வரலாயிற்று. அதை அடக்க முடியாத சிவன் ஏப்பமிட்டுக் கொண்டே இங்குமங்கும் அலைந்தார். வழியில் குபேரன் மகனாகிய பாஞ்சலிகாவைக் கண்டு, என்னுடைய ஏப்பத்தை நீ வாங்கிக் கொண்டால் உன்னை வாழ்த்துவேன் என்றார். அவன் அதனை வாங்கிக் கொண்டதால் அவன் பாஞ்சாலேஸ்வரன் என்று வணங்கப்பட்டான். அதன் பிறகு சிவன் விந்திய மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தவம் செய்து கொண் டிருக்கும் பொழுது திடீரென்று அடி, முடி காண முடியாத லிங்க வடிவை எடுத்தார். அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியும், பூகம்பமும், மிகவும் அஞ்சத்தக்கனவாக இருந்தன. இதைக் கண்டு அஞ்சிய பிரம்மன் விஷ்ணுவிடம் சென்று அதிர்ச்சியின் காரணம் கேட்டார். விஷ்ணு, சிவன் விந்திய மலைப் பிரதேசத்தில் லிங்க வடிவெடுத்ததன் விளைவாகும் இது என்று கூறினார். இருவரும் விந்திய மலைக்கு வந்து சிவன் நின்ற காட்சி கண்டனர். லிங்கத்தின் முடி கற்பனைக்கடங்காத உயரத்தில்
இருந்தது. அப்படி யானால் அதனுடைய அடியும் வெகுதூரம் சென்றிருக்க வேண்டும் என்று பேசிக் கொண்ட பிரம்மா, விஷ்ணு இருவருமே எப்படியாவது லிங்கத்தின் அடியையும் முடியையும் கண்டு வரவேண்டும் என்று விரும்பினர். உடனே பிரம்மன் தன் வாகனமாகிய அன்னத்தின் மேல் ஏறிக் கொண்டு உயர உயரப் பறந்து சென்றார். விஷ்ணு தன் வாகனமாகிய கருடனில் ஏறிக்கொண்டு கீழ்லோகங்கள் சென்றார். எவ்வளவு உயர்ந்து பறந்தும், எவ்வளவு தாழ்ந்து கிடந்தும் இருவரும் லிங்கத்தின் முடியையோ, அடியையோ காண முடியவில்லை. வெற்றி அடையாத இருவரும் ஒன்று கூடி சிவனை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். சிவன் அங்கே தோன்றினார். இவர்களுக்குப் பின்னே கந்தர்ப்பன் என்று சொல்லப்படும் மன்மதனைப் பார்த்தார். உடனே அவனது வில்லை ஒடித்து அவனையும் அழித்து விட்டார். அவனது வடிவம் எரிக்கப் பட்டதால் வடிவமில்லாதவன் என்ற பொருளில் அனங்கன் என்ற பெயர் நிலைத்தது. உடனே சிவன் இமயத்திற்குச் சென்று தவம் செய்யப் போய்விட்டார்.
ஊர்வசி பிறந்த கதை
புலஸ்தியர் நாரதரைப் பார்த்து நர, நாராயணர் நாரத கதையை எங்கே விட்டேன் என்று நினைவுக்குக் கொண்டு வாரும். நர, நாராயணன் இருவரும் மிகத் தீவிரமான தவத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரம்பையும் மதனனும் இவர்கள் எதிரே வந்து நர, நாராயணர் தவத்தைக் கலைக்க நினைத்தனர். கண்விழித்த நாராயண முனிவர் ஒரே நொடியில் இவர்கள் யார் என்பதையும், எதற்காக வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொண்டார். சிரித்துக் கொண்டே மதனனைத் தன் பக்கத்தில் வருமாறு கூறினார். அவன் வந்து அமர்ந்தவுடன், அவனிடம் பேசிக் கொண்டே, ஒரு கொத்துப் பூவை எடுத்துத் தன் தொடையில் வைத்து திரித்தார். திரிக்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ரம்பையைத் தோற்றோடச் செய்யும் அழகே வடிவான ஒரு பெண் உருவானாள். மதனனைப் பார்த்து, 'ஊர்வசி என்ற இந்தப் பெண்ணுக்கு நிகராக உங்கள் தேவலோகத்தில் எந்த அப்ஸரஸும் இல்லை. இந்திரனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இந்தப் பெண்ணை அழைத்துச் செல் என்றார். பிரம்மன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை, கேவலம் பூங்கொத்துக்களில் இருந்தே நாராயண முனிவர் செய்ததைக் கண்ட காமன் பயந்து ஒடிச் சென்று நடந்தவற்றை விவரமாகக் கூறினான். இந்த விவரம் அறிந்த இந்திரன் அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்புவதையே விட்டு விட்டான்.
பிரகலாதன் கதை
ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் மகனாகிய பிரகலாதனுக்கு முடி சூட்டினார் விஷ்ணு. அவன் ஆட்சி செய்யும் காலத்தில், சாயாவனர் என்ற முனிவர், நகுலேஷ்வா தீர்த்தத்தில் நீராடப் போனார். அப்பொழுது ஒரு கரிய பாம்பு அவரைக் கடித்தது என்றாலும் அவர் விஷ்ணுவைத் தொழுது விஷத்திலிருந்து விடுபட்டார் என்றாலும் அந்தப் பாம்பு அவரைச் சுற்றி இழுத்துச் சென்று அரக்கர் லோகத்தில் ஆண்டுகொண்டிருந்த பிரகலாதன் முன் நிறுத்தியது. பிரகலாதன் அவரை வணங்கி "முனிவரே! மூன்றுலகிலும் தலைசிறந்து விளங்கும் தீர்த்தங்களில் நீராட விரும்புகிறேன்.” என்றான். அதற்கு முனிவர் “அரசே! மேலுலகத்தில் புஷ்கர தீர்த்தமும், பூலோகத்தில் நைமிச தீர்த்தமும், கீழ்லோகத்தில் சக்கர தீர்த்தமும் தலைமையானவையாகும்” என்று கூறிப் போனார்.
பிரகலாதன் தன்னுடைய படைகளுடன் நைமிச தீர்த்தத்தில் நீராடப் போனான். அங்கே அவனுக்கொரு அதிசயம் காத்திருந்தது. தீர்த்தக் கரையில் உள்ள பெரிய மரம் ஒன்று ஒரு எள்முனைகூட இடமில்லாமல் அடிமரத்திலிருந்து நுனி மரம் வரை அம்புகள் துளைக்கப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கான அம்புகள் ஒவ்வொரு பகுதியிலும் குத்திக்கொண்டு அப்படியே நின்றிருந்தன வியப்புத் தாங்காத பிரகலாதன், சுற்று முற்றும் பார்க்கையில், பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பதையும், இருவருடைய
பக்கத்திலும் இரு மிகப்பெரிய வில்களும் அம்புகள் நிறைந்த இரண்டு அம்பறாத்துணிகளும் இருக்கக் கண்டான். தவசிகள் வில்லையும், அம்பையும் வைத்திருப்பது பொருத்தமில்லாத செயல் என்று கருதினான் பிரகலாதன். எனவே அவர்களிடம் வந்தான். நாராயண முனிவரைப் பார்த்து, "அம்பையும், வில்லையும் வைத்திருக்கும் நீங்கள் போலித்துறவிகள் என்பதில் ஐயமில்லை. தவம் செய்கின்ற இடத்தில் வில்லுக்கும், அம்புக்கும் என்ன வேலை? நீங்கள் யார்?' என்று கேட்டான். முனிவர் அவனைப் பார்த்து, நாங்கள் யாராயிருந்தால் உனக்கென்ன? என்று கூற, பிரகலாதன் நான் அரசன், இப்படிப்பட்ட போலித் துறவிகளைத் தண்டிக்க வேண்டியது என் கடமை என்றான்.
உடனே நர முனிவர் வில்லை எடுக்க பெரும் போர் மூண்டது. பிரகலாதன் எய்த எல்லா பானங்களையும் நர முனிவரின் பாணங்கள் செயலிழக்கச் செய்தமையால், பிரகலாதன், இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர் என்று தெரிந்துகொண்டு சிறப்பு மிகுந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினான். நர முனிவர் மிக எளிதாக நாராயணாஸ்திரத்தை ஏவி அதனைத் தடை செய்தார். பிரகலாதன் அக்னியாஸ்திரத் தையும், முனிவர் மஹேஸ்வராஸ்திரத்தையும் பயன்படுத்தினர். மாலை ஆகிவிடவே முனிவர் பிரகலாதனைப் பார்த்து சூரியன் மறைந்த பிறகு சண்டை இடுவது தருமம் அன்று. நாளை பொழுது விடிந்தவுடன் போர் செய்யலாம் என்று கூற, பிரகலாதன் சென்று ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலை வந்தான். இப்பொழுது நாராயண முனிவர் போருக்கு வந்தார். ஆயுதங்கள் எதுவும் பயன்படாமல் போகவே, பிரகலாதன் கதாயுதத்தை எடுத்து நாராயண முனிவர் மண்டையில் அடித்தான். கதாயுதம் சுக்கு நூறாயிற்று. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதறிந்த பிரகலாதன் விஷ்ணுவை தியானிக்க, விஷ்ணு தோன்றினார்.
'நான் இவர்களை வெல்ல வேண்டும் என்று பிரகலாதன் கேட்க விஷ்ணு, இவர்களை யாரென்று நினைத்தாய். இவர்கள் என் அம்சமாவர். இவர்களை வெல்வது என்பது இயலாத காரியம் என்று கூறியவுடன், பிரகலாதன், "இவர்களை வெல்ல வேண்டுமென்று விரதம் பூண்டுள்ளேன். அது முடியாது என்றால் நான் என் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றான். அதுகேட்ட விஷ்ணு, "இவர்களை ஆயுத பலத்தால் வெல்ல முடியாது என்றுதான் சொன்னேன். ஆன்ம பலத்தாலும், பக்தியாலும் இவர்களை நீ உன்னிடம் வருமாறு செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
அதைக் கேட்ட பிரகலாதன் வில்லையும், அம்பையும் துர எறிந்துவிட்டு, நர, நாராயணர்களைப் பிரார்த்தனை செய்யத் துவங்கினான். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர் யார் என்று தெரியாமையால் அவரை ஏசியும், பாணத்தால் துன்புறுத்தியும் பல தவறுகளைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற நாராயண முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, உங்களையும் விஷ்ணுவையும் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று வேண்டினான். அங்ங்னமே ஆகட்டும்’ என்று முனிவர் கூறியவுடன் பிரகலாதன் தன் நாட்டிற்கு
யாத்திரைக்குப் புறப்படுமுன் அந்தகன் என்னும் அசுர னிடம் அரசை ஒப்படைத்துவிட்டுப் பிரகலாதன் புறப்பட்டிருந் தான் அல்லவா? இப்பொழுது அந்தகன் வந்து அரசை ஏற்று ஆள வேண்டும் என்று கூறியவுடன் பிரகலாதன் எந்தப் பகுதியிலும் எனக்கு இப்பொழுது விருப்பமில்லை. நீயே இதனை ஆள்வாயாக என்று அவனிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்று விட்டான்.