- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி….
வாயு புராணம், சிவ புராணம் என்றும் கூறப்பெறும். மிகப் பழைமையான புராணங்களில் இதுவும் ஒன்று. இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புராணமும் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகையில் ஆரம்பித்து, பரணியில் முடிகிறது. கி.மு. 550 இல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து, அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் பழக்கம் ஏற்பட்டதால், இப்புராணம் அதற்கு முற்பட்டது என நினைக்க இடமுண்டு. புராணங் களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது.
இப்புராணத்தில் காணப்படுகின்ற பல பாடல்கள் மார்க்கண்டேய புராணத்திலும் காணப்படுகின்றன. ஸ்காந்தம் இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று கூறினாலும், இப்பொழுது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12,000 பாடல்களே உள்ளன. இது நான்கு பெரும் பாகங்களையும், 112 அதிகாரங்களையும் கொண்டது.
பாசுபத யோகம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. இப்புராணத்தில், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே இருவருக்கும் மேலான தெய்வம் என்றும், அச் சிவனே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளார் என்றும், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும் விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் கூறுகிறது. மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளர் என்றும், சிவன் என்ற பெயருக்கு மங்களம், நன்மை செய்பவர் என்ற பொருளுண்டு என்றும் இப்புராணம் பேசுகிறது.
நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோமஹர்ஷனரைச் சந்தித்து, "முனிவரே! வேதவியாசரிடத்தில் நேரிடையாக புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையும், பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டுகிறது. சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று அவர்கள் கேட்டவுடன், லோமஹர்ஷனர் எனக்குத் தெரிந்த அனைத்தையும், ஒன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசத் துவங்கினார். வெகு காலத்திற்கு முன்னர் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தம் தந்தையைப் பார்த்து, சிவ பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரம்மன், நாரதருக்குக் கூறியதை இப்பொழுது அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்.
பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் விஷ்ணு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவர் தொப்புளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும் தாமரைத் தண்டு ஒன்று மிக உயர்ந்து நின்றது. ஆயிரக் கணக்கான இதழ்களை உடைய அத் தாமரையில் பிரம்மன் இருந்தான். அந்த பிரம்மன் தான் யார், எங்கிருக்கிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்ற சந்தேகங்களுடன் சுற்று முற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான். மெதுவாக அத் தாமரைத் தண்டைப் பிடித்துக் கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றி நூறு ஆண்டுகள் தேடினான். தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணமுடியவில்லை. இப்பொழுது தான் பிறந்த தாமரைப் பூவில் தான் பிறந்த நடுப்பகுதியைத் தேட முயன்றான். நூறு ஆண்டுகள் தேடியும் தான் புறப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை. களைத்துப் போன பிரம்மன் ஒரு இடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டான். அப்பொழுது “பிரம்மனே! தவம் செய்” என்று ஒரு குரல் கேட்டது. யார் அக்குரலுக்குரியவர் என்று தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்தவுடன் விஷ்ணு எதிரே நின்றார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் நீ யார்? என்று கேட்டான். உடனே விஷ்ணு “என் கைகளைப் பார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரிய வில்லையா? நான்தான் விஷ்ணு. என்னுடைய உடம்பிலிருந்து தான் நீ தோன்றினாய்’ என்றார். அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன் விஷ்ணுவுடன் சண்டை போடத் துவங்கினான்.
இலிங்கத் தோற்றம்
பிரம்மனும் விஷ்ணுவும் தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது. பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் சண்டையை நிறுத்திக் கொண்டு, இடையே வந்தது யார் என்று நினைத்தனர். அந்த ஜோதி ஸ்வரூபம் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்தும், மிகக் கீழே சென்றும் காட்சி அளித்தது. அதைப் பார்த்த விஷ்ணு, பிரம்மனே! நம்முடைய சண்டையை நிறுத்திக் கொள்வோம். இந்த வடிவத்தின் ஆதியையும், அந்தத்தையும் நாம் காணவேண்டும். நான் காட்டுப் பன்றி வடிவெடுத்து இதன் அடியைக் காண விரும்புகிறேன். நீ அன்னப் பறவை வடிவெடுத்து, இதன் முடி எங்கிருக்கிறதென்று பார்த்து வா என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் உடனே அன்னப் பறவையாக மாறி மேலே மேலே பறந்து சென்றான். விஷ்ணு, ஆண்பன்றி வடிவாகி பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார். 4000 ஆண்டுகள் அவர்கள் இருவரும் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தின் அடி முடியைத் தேட முடியவில்லை. பிறகு இருவரும் பழைய இடத்திற்கு வந்து சிவனைத் துதித்தனர். அப்பொழுது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார். இவர்களைப் பார்த்து, "பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் இருவரும் என்னில் ஒவ்வொரு பகுதியாவீர்கள். நாம் மூவரும் ஒன்றுதான். பிரம்மனாகிய உனக்குப் படைக்கும் தொழில், விஷ்ணுவாகிய உனக்குக் காக்கும் தொழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்கிறேன். என்னிடத்திலிருந்து 'ருத்ரன்' என்பவன் தோன்றுவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும், ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்” என்றார்.
பிரபஞ்சத் தோற்றம்
எங்கும் நிரம்பி இருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார். பிறகு விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அந்த முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாகவே கர்தமன், தட்சன், மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான். மரீச்சியின் பிள்ளை காசிபன் தட்சனின் 60 பெண்களுள் 13 பேரை மணந்து கொண்டான். காசிபனின் பிள்ளைகளும், தட்சனின் மற்றப் பெண்களும், ஆதித்தர்களாகவும், தைத்தியர்களாகவும், தானவர்களாகவும், மரங்களாகவும், பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர்.
ருத்ரன் என்ற பெயரில் சிவனே பிரம்மாவினின்று தோன்றினான். இந்த ருத்ரன் தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் ருத்ரனும் தட்சனும் ஒருவரையொருவர் வெறுத்தனர். ருத்ரனைத் தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்று ஏற்பாடு செய்தான். சதியை அழைக்காவிடினும், அவள் சென்று அதில் கலந்து கொண்டாள். தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள். இதனால் கோபமுற்ற ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனுடைய யாகத்தை அழித்து அவனையும் கொன்று வருமாறு கட்டளையிட்டான். தட்சன் யாகம் அழிக்கப்பட்டு அங்கு வந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் ருத்ரன் கோபம் தணிக்கப்பட்டு தேவர்கள் பிழைக்கச் செய்யப் பெற்றனர். சதிஇமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்தாள். மறுபடியும் சிவபெருமானை மணந்தாள்.
தாரகாசுரன் கதை
தாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக!' என்று வேண்டினர்.
அவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைபாடிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர்.
சிவபிரான், "அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம்.
பார்வதியின் தவம்
சிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, "அம்மா! நான்முகனும், விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி
உடுத்தி கெளரிசிகரம் என்ற மலை உச்சி சென்று கடும் தவம் இயற்றினாள். வெயில், மழை, குளிர், பனி போன்ற எதைக் கண்டும் துவளாமல் தவத்தை மேற் கொண்டாள். அவளுடைய தவத்திற்கு அஞ்சிக் கொடிய விலங்குகளும் அப்பால் சென்றுவிட்டன. தேவர்கள் அனைவரும் கூடி சிவபெருமானிடம் சென்று, ‘ஐயனே! பார்வதியின் கடுந் தவத்திற்குப் பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினர். அதற் கிணங்கிய சிவன், கிழட்டு அந்தணர் வேடம் பூண்டு பார்வதி தேவியின் பர்ணசாலை சென்றார். அந்தணரைக் கண்ட பார்வதி அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழிபட்டாள். அந்த வேதியர், 'அம்மா, நீ எதற்குத் தவம் செய்கிறாய்? என்று கேட்டார். பார்வதி தன் கருத்தைக் கூறியதும், 'அம்மா நீ பெருந்தவறு செய்துவிட்டாய். சிவபிரான் ஒரு பைத்தியக்காரன். ஐந்து முகங்களும், சாம்பல் பூசிய உடம்பும், ஜடா முடியும், பாம்பை அணிந்தவனுமாகிய அவனை மணக்க நினைப்பது முட்டாள்தனம்’ என்று கூறினார். கடும் கோபம் கொண்ட பார்வதி, கிழட்டுப் பிராமணரே, நீர்தான் முட்டாள். சிவபிரானின் பெருமை தெரியாமல் உளருகின்ற உம்மைப் பெரியவர் என்று மதித்து மலரிட்டு வணங்கியது என் தவறு. உம்முடைய முகத்தில் விழிப்பதே பாவம். நான் வெளியே போய் விடுகிறேன் என்றாள். அவள் திரும்பியதும் சிவபிரான் தம்முடைய உண்மையான வடிவத்தைப் பெற்றுக்கொண்டு. “பார்வதி, திரும்பிப்பார். நீ யாரை நினைத்துத் தவம் செய்தாயோ, நானே வந்திருக்கிறேன்” என்றதும், பார்வதி திரும்பிப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். சிவன் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, பார்வதி, எல்லார் எதிரிலும் என்னை மணக்க வேண்டும்’ என்றாள். சிவபெருமான் அதனை ஏற்றுக் கொண்டார்.
சிவ - பார்வதி திருமணம்
கைலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என்று சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து, இமவானிடம் சென்று அவனுடைய மகளான பார்வதியைத் தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானைக் கண்டு சொல்ல, அவனும் பெரு மகிழ்ச்சி கொண்டான். திருமணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், தேவர்கள், திக்பாலர்கள் ஆகியவர்களும் திருமால், நாரதர், பிரம்மன் ஆகியவர்களும் வந்து கூடினர். பார்வதியின் தாயாகிய மேனகைக்குத் தன் மருமகனாகிய சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். அப்போது ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன்தான் மருமகன் என்று நினைத்தாள். நாரதர் இல்லை என்றவுடன் அவனை விட அழகான குபேரனைப் பார்த்தாள். அழகில் ஒருவரை ஒருவர் விஞ்சும்படியாக இருந்த வருணன், அக்னி, இந்திரன், சத்திரன், சூரியன், பிரம்மன், பிரகஸ்பதி, விஷ்ணு ஆகியோரை ஒவ்வொருவராகப் பார்த்து ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதால் இவர்கள்தான் மாப்பிள்ளையோ என்று சந்தேகப்பட்டாள். நாரதர், இவர்கள் அனைவரும் சிவனுடைய பணியாட்கள். அதோபார் சிவபிரான் வருகிறார்’ என்றார். மேனகை திரும்பிப் பார்த்தாள். என்ன கொடுமை, ஒரே பிசாசுக் கூட்டங்கள். எல்லாம் கறுப்பு நிறம். அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளுடனும், பத்துக் கைகளுடனும் ஒரு வடிவம். அந்த வடிவமெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் எலும்பு மாலை, பாம்புகள் இடுப்பில் புலித்தோல், தலையில் சடைஇவர்தான் மாப்பிள்ளை என்று நாரதர் சொல்லியவுடன், மேனகை மயங்கியே விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், “என்ன ஆனாலும் சரி, இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இந்திரன் முதலிய யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லை என்றால் அவளை விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுவேன். என்ன ஆனாலும் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறினாள். இதைக் கேட்ட நாரதர் சிவபிரானிடம் சென்று மிக்க பணிவோடு, 'ஐயனே! தயவு செய்து தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டார். ஒரு விநாடி நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார், சிவபிரான். அழகே வடிவாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரம்மன் சடங்குகள் செய்ய சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது.
திரிபுரத்தின் அழிவு
தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுன்மாலி, தாரகாட்சன், வீர்யவனா ஆகிய மூவரும் கடும் தவம் புரிந்தனர். ஒரே காலில் நின்றும், நீரில் இருந்தும், தலைகீழாக நின்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்தனர். தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர். அப்படி ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றலில்லை என்று பிரம்மன் கூறியவுடன், அப்படியானால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று பெரிய கோட்டைகளை அமைத்துக்கொண்டு தாங்கள் ஆயிரம் வருடங்கள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும், அதன்பின் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டனர். மேலும் யாராவது தன்னை அழிக்க வந்தால் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின்படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் அவற்றுள் வாழ வழிசெய்தனர். பல்லாண்டுகள் கழித்தவுடன் அவர்கள் சிவபூசை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் செல்ல முற்பட்டனர். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகிய அனைவரும் சிவனிடம் சென்று முறை யிட்டனர். கடவுள் வழிபாட்டை மறந்து தவறான வழிகளில் செல்லும் அவர்களை அழிக்க சிவன் ஒத்துக்கொண்டார். விஸ்வகர்மா முழுதும் தங்கத்தால் ஆன தேரைத் தயாரித்தான். பிரம்மனே சாரதியாக இருந்து தேரை இயக்க முன்வந்தான். திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து பாசுபதம்’ என்ற ஒரே அஸ்திரத்தை செலுத்தவே திரிபுரம் எரிந்து சாம்பலாயிற்று.
சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ
லோமஹர்ஷ்ன முனிவர் உடனிருந்த முனிவர்களுக்குச் சிவ புராணத்தைச் சொல்லிக்கொண்டு வருகையில் பெருமானைத் திருப்தி அடையச் செய்வது மிகமிக எளிது. சம்பங்கிப் பூவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்” என்று கூறினார். முனிவர்கள், “அது ஏன் சம்பங்கிப் பூவை சிவன் ஏற்பதில்லை?” என்று கேட்டார்கள். அதற்குரிய நிகழ்ச்சியை லோமஹர்ஷனர் பின்வருமாறு கூறினார்.
இராம, இலக்குவர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்தனர். அவர்கள் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்துபோன செய்தி அவர்களை எட்டிற்று. உடனே இராமன் இலக்குவனைப் பார்த்து அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்யும் பொருள்களைப் பெற்றுவா என்று கூறினார். இலக்குவன் சென்று நெடுநேரம் ஆகிவிட்டபடியாலும், உச்சி நேரத்திற்கு முன், சிரார்த்தத்தைச் செய்து முடிக்க வேண்டும் ஆதலாலும், இராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். நெடுநேரம் அவனும் வராமையால் உச்சிக்காலம் நெருங்குவதை அறிந்து சீதாவே சிரார்த்தத்தைச் செய்து முடிக்கச் சென்றாள். பால்கு நதியில் குளித்து விட்டு ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியில் இருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள். சிரார்த்தத்தின் முடிவில் ஆகாயத்தில் இரண்டு கைகள் மட்டும் தோன்றி அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன. அசரீரி, "சீதா! நான் மகிழ்ச்சி அடைந்தேன். உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறிற்று. சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தக் கைகளையும், அசரீரியையும் பார்த்து, “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?’ என்றாள். அசரீரி, 'மருமகளே! நான்தான் உன் மாமனார். நீ சிரத்தையுடன் செய்த இறுதிச் சடங்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்’ என்று கூறிற்று. உடனே சீதை, "என் கணவரும், என் மைத்துனரும் இதை நம்ப மாட்டார்களே” என்று கூறினாள். அதற்கு அசரீரி, 'கவலை வேண்டாம். இந்த நதி, இந்த விளக்கில் உள்ள சுடர், சம்பங்கிப்பூ பக்கத்தில் நிற்கின்ற பசு ஆகிய நான்கும் இது நடந்தது என்பதற்கு சான்று கூறும், என்று கூறி மறைந்து விட்டது.
வாயு புராணம், சிவ புராணம் என்றும் கூறப்பெறும். மிகப் பழைமையான புராணங்களில் இதுவும் ஒன்று. இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புராணமும் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகையில் ஆரம்பித்து, பரணியில் முடிகிறது. கி.மு. 550 இல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து, அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் பழக்கம் ஏற்பட்டதால், இப்புராணம் அதற்கு முற்பட்டது என நினைக்க இடமுண்டு. புராணங் களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது.
இப்புராணத்தில் காணப்படுகின்ற பல பாடல்கள் மார்க்கண்டேய புராணத்திலும் காணப்படுகின்றன. ஸ்காந்தம் இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று கூறினாலும், இப்பொழுது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12,000 பாடல்களே உள்ளன. இது நான்கு பெரும் பாகங்களையும், 112 அதிகாரங்களையும் கொண்டது.
பாசுபத யோகம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. இப்புராணத்தில், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே இருவருக்கும் மேலான தெய்வம் என்றும், அச் சிவனே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளார் என்றும், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும் விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் கூறுகிறது. மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளர் என்றும், சிவன் என்ற பெயருக்கு மங்களம், நன்மை செய்பவர் என்ற பொருளுண்டு என்றும் இப்புராணம் பேசுகிறது.
நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோமஹர்ஷனரைச் சந்தித்து, "முனிவரே! வேதவியாசரிடத்தில் நேரிடையாக புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையும், பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டுகிறது. சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று அவர்கள் கேட்டவுடன், லோமஹர்ஷனர் எனக்குத் தெரிந்த அனைத்தையும், ஒன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசத் துவங்கினார். வெகு காலத்திற்கு முன்னர் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தம் தந்தையைப் பார்த்து, சிவ பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரம்மன், நாரதருக்குக் கூறியதை இப்பொழுது அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்.
பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் விஷ்ணு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவர் தொப்புளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும் தாமரைத் தண்டு ஒன்று மிக உயர்ந்து நின்றது. ஆயிரக் கணக்கான இதழ்களை உடைய அத் தாமரையில் பிரம்மன் இருந்தான். அந்த பிரம்மன் தான் யார், எங்கிருக்கிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்ற சந்தேகங்களுடன் சுற்று முற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான். மெதுவாக அத் தாமரைத் தண்டைப் பிடித்துக் கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றி நூறு ஆண்டுகள் தேடினான். தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணமுடியவில்லை. இப்பொழுது தான் பிறந்த தாமரைப் பூவில் தான் பிறந்த நடுப்பகுதியைத் தேட முயன்றான். நூறு ஆண்டுகள் தேடியும் தான் புறப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை. களைத்துப் போன பிரம்மன் ஒரு இடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டான். அப்பொழுது “பிரம்மனே! தவம் செய்” என்று ஒரு குரல் கேட்டது. யார் அக்குரலுக்குரியவர் என்று தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்தவுடன் விஷ்ணு எதிரே நின்றார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் நீ யார்? என்று கேட்டான். உடனே விஷ்ணு “என் கைகளைப் பார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரிய வில்லையா? நான்தான் விஷ்ணு. என்னுடைய உடம்பிலிருந்து தான் நீ தோன்றினாய்’ என்றார். அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன் விஷ்ணுவுடன் சண்டை போடத் துவங்கினான்.
இலிங்கத் தோற்றம்
பிரம்மனும் விஷ்ணுவும் தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது. பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் சண்டையை நிறுத்திக் கொண்டு, இடையே வந்தது யார் என்று நினைத்தனர். அந்த ஜோதி ஸ்வரூபம் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்தும், மிகக் கீழே சென்றும் காட்சி அளித்தது. அதைப் பார்த்த விஷ்ணு, பிரம்மனே! நம்முடைய சண்டையை நிறுத்திக் கொள்வோம். இந்த வடிவத்தின் ஆதியையும், அந்தத்தையும் நாம் காணவேண்டும். நான் காட்டுப் பன்றி வடிவெடுத்து இதன் அடியைக் காண விரும்புகிறேன். நீ அன்னப் பறவை வடிவெடுத்து, இதன் முடி எங்கிருக்கிறதென்று பார்த்து வா என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் உடனே அன்னப் பறவையாக மாறி மேலே மேலே பறந்து சென்றான். விஷ்ணு, ஆண்பன்றி வடிவாகி பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார். 4000 ஆண்டுகள் அவர்கள் இருவரும் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தின் அடி முடியைத் தேட முடியவில்லை. பிறகு இருவரும் பழைய இடத்திற்கு வந்து சிவனைத் துதித்தனர். அப்பொழுது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார். இவர்களைப் பார்த்து, "பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் இருவரும் என்னில் ஒவ்வொரு பகுதியாவீர்கள். நாம் மூவரும் ஒன்றுதான். பிரம்மனாகிய உனக்குப் படைக்கும் தொழில், விஷ்ணுவாகிய உனக்குக் காக்கும் தொழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்கிறேன். என்னிடத்திலிருந்து 'ருத்ரன்' என்பவன் தோன்றுவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும், ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்” என்றார்.
பிரபஞ்சத் தோற்றம்
எங்கும் நிரம்பி இருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார். பிறகு விஷ்ணு மிகப் பெரிய வடிவெடுத்து அந்த முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாகவே கர்தமன், தட்சன், மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான். மரீச்சியின் பிள்ளை காசிபன் தட்சனின் 60 பெண்களுள் 13 பேரை மணந்து கொண்டான். காசிபனின் பிள்ளைகளும், தட்சனின் மற்றப் பெண்களும், ஆதித்தர்களாகவும், தைத்தியர்களாகவும், தானவர்களாகவும், மரங்களாகவும், பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர்.
ருத்ரன் என்ற பெயரில் சிவனே பிரம்மாவினின்று தோன்றினான். இந்த ருத்ரன் தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் ருத்ரனும் தட்சனும் ஒருவரையொருவர் வெறுத்தனர். ருத்ரனைத் தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்று ஏற்பாடு செய்தான். சதியை அழைக்காவிடினும், அவள் சென்று அதில் கலந்து கொண்டாள். தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள். இதனால் கோபமுற்ற ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனுடைய யாகத்தை அழித்து அவனையும் கொன்று வருமாறு கட்டளையிட்டான். தட்சன் யாகம் அழிக்கப்பட்டு அங்கு வந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் ருத்ரன் கோபம் தணிக்கப்பட்டு தேவர்கள் பிழைக்கச் செய்யப் பெற்றனர். சதிஇமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்தாள். மறுபடியும் சிவபெருமானை மணந்தாள்.
தாரகாசுரன் கதை
தாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக!' என்று வேண்டினர்.
அவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைபாடிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர்.
சிவபிரான், "அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம்.
பார்வதியின் தவம்
சிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, "அம்மா! நான்முகனும், விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி
உடுத்தி கெளரிசிகரம் என்ற மலை உச்சி சென்று கடும் தவம் இயற்றினாள். வெயில், மழை, குளிர், பனி போன்ற எதைக் கண்டும் துவளாமல் தவத்தை மேற் கொண்டாள். அவளுடைய தவத்திற்கு அஞ்சிக் கொடிய விலங்குகளும் அப்பால் சென்றுவிட்டன. தேவர்கள் அனைவரும் கூடி சிவபெருமானிடம் சென்று, ‘ஐயனே! பார்வதியின் கடுந் தவத்திற்குப் பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினர். அதற் கிணங்கிய சிவன், கிழட்டு அந்தணர் வேடம் பூண்டு பார்வதி தேவியின் பர்ணசாலை சென்றார். அந்தணரைக் கண்ட பார்வதி அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழிபட்டாள். அந்த வேதியர், 'அம்மா, நீ எதற்குத் தவம் செய்கிறாய்? என்று கேட்டார். பார்வதி தன் கருத்தைக் கூறியதும், 'அம்மா நீ பெருந்தவறு செய்துவிட்டாய். சிவபிரான் ஒரு பைத்தியக்காரன். ஐந்து முகங்களும், சாம்பல் பூசிய உடம்பும், ஜடா முடியும், பாம்பை அணிந்தவனுமாகிய அவனை மணக்க நினைப்பது முட்டாள்தனம்’ என்று கூறினார். கடும் கோபம் கொண்ட பார்வதி, கிழட்டுப் பிராமணரே, நீர்தான் முட்டாள். சிவபிரானின் பெருமை தெரியாமல் உளருகின்ற உம்மைப் பெரியவர் என்று மதித்து மலரிட்டு வணங்கியது என் தவறு. உம்முடைய முகத்தில் விழிப்பதே பாவம். நான் வெளியே போய் விடுகிறேன் என்றாள். அவள் திரும்பியதும் சிவபிரான் தம்முடைய உண்மையான வடிவத்தைப் பெற்றுக்கொண்டு. “பார்வதி, திரும்பிப்பார். நீ யாரை நினைத்துத் தவம் செய்தாயோ, நானே வந்திருக்கிறேன்” என்றதும், பார்வதி திரும்பிப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். சிவன் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, பார்வதி, எல்லார் எதிரிலும் என்னை மணக்க வேண்டும்’ என்றாள். சிவபெருமான் அதனை ஏற்றுக் கொண்டார்.
சிவ - பார்வதி திருமணம்
கைலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என்று சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து, இமவானிடம் சென்று அவனுடைய மகளான பார்வதியைத் தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானைக் கண்டு சொல்ல, அவனும் பெரு மகிழ்ச்சி கொண்டான். திருமணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், தேவர்கள், திக்பாலர்கள் ஆகியவர்களும் திருமால், நாரதர், பிரம்மன் ஆகியவர்களும் வந்து கூடினர். பார்வதியின் தாயாகிய மேனகைக்குத் தன் மருமகனாகிய சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். அப்போது ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன்தான் மருமகன் என்று நினைத்தாள். நாரதர் இல்லை என்றவுடன் அவனை விட அழகான குபேரனைப் பார்த்தாள். அழகில் ஒருவரை ஒருவர் விஞ்சும்படியாக இருந்த வருணன், அக்னி, இந்திரன், சத்திரன், சூரியன், பிரம்மன், பிரகஸ்பதி, விஷ்ணு ஆகியோரை ஒவ்வொருவராகப் பார்த்து ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதால் இவர்கள்தான் மாப்பிள்ளையோ என்று சந்தேகப்பட்டாள். நாரதர், இவர்கள் அனைவரும் சிவனுடைய பணியாட்கள். அதோபார் சிவபிரான் வருகிறார்’ என்றார். மேனகை திரும்பிப் பார்த்தாள். என்ன கொடுமை, ஒரே பிசாசுக் கூட்டங்கள். எல்லாம் கறுப்பு நிறம். அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளுடனும், பத்துக் கைகளுடனும் ஒரு வடிவம். அந்த வடிவமெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் எலும்பு மாலை, பாம்புகள் இடுப்பில் புலித்தோல், தலையில் சடைஇவர்தான் மாப்பிள்ளை என்று நாரதர் சொல்லியவுடன், மேனகை மயங்கியே விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், “என்ன ஆனாலும் சரி, இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இந்திரன் முதலிய யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லை என்றால் அவளை விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுவேன். என்ன ஆனாலும் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறினாள். இதைக் கேட்ட நாரதர் சிவபிரானிடம் சென்று மிக்க பணிவோடு, 'ஐயனே! தயவு செய்து தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டார். ஒரு விநாடி நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார், சிவபிரான். அழகே வடிவாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரம்மன் சடங்குகள் செய்ய சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது.
திரிபுரத்தின் அழிவு
தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுன்மாலி, தாரகாட்சன், வீர்யவனா ஆகிய மூவரும் கடும் தவம் புரிந்தனர். ஒரே காலில் நின்றும், நீரில் இருந்தும், தலைகீழாக நின்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்தனர். தவத்தின் முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர். அப்படி ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றலில்லை என்று பிரம்மன் கூறியவுடன், அப்படியானால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று பெரிய கோட்டைகளை அமைத்துக்கொண்டு தாங்கள் ஆயிரம் வருடங்கள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும், அதன்பின் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டனர். மேலும் யாராவது தன்னை அழிக்க வந்தால் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின்படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் அவற்றுள் வாழ வழிசெய்தனர். பல்லாண்டுகள் கழித்தவுடன் அவர்கள் சிவபூசை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் செல்ல முற்பட்டனர். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகிய அனைவரும் சிவனிடம் சென்று முறை யிட்டனர். கடவுள் வழிபாட்டை மறந்து தவறான வழிகளில் செல்லும் அவர்களை அழிக்க சிவன் ஒத்துக்கொண்டார். விஸ்வகர்மா முழுதும் தங்கத்தால் ஆன தேரைத் தயாரித்தான். பிரம்மனே சாரதியாக இருந்து தேரை இயக்க முன்வந்தான். திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து பாசுபதம்’ என்ற ஒரே அஸ்திரத்தை செலுத்தவே திரிபுரம் எரிந்து சாம்பலாயிற்று.
சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ
லோமஹர்ஷ்ன முனிவர் உடனிருந்த முனிவர்களுக்குச் சிவ புராணத்தைச் சொல்லிக்கொண்டு வருகையில் பெருமானைத் திருப்தி அடையச் செய்வது மிகமிக எளிது. சம்பங்கிப் பூவைத் தவிர வேறு எந்தப் பூ கிடைத்தாலும் அதைச் சிவனுக்கு அர்ப்பணித்தால் அதை அவர் ஏற்று மகிழ்வார்” என்று கூறினார். முனிவர்கள், “அது ஏன் சம்பங்கிப் பூவை சிவன் ஏற்பதில்லை?” என்று கேட்டார்கள். அதற்குரிய நிகழ்ச்சியை லோமஹர்ஷனர் பின்வருமாறு கூறினார்.
இராம, இலக்குவர்கள் சீதையை அழைத்துக் கொண்டு வனவாசம் வந்தனர். அவர்கள் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்துபோன செய்தி அவர்களை எட்டிற்று. உடனே இராமன் இலக்குவனைப் பார்த்து அருகில் இருக்கும் கிராமம் சென்று சிரார்த்தம் செய்யும் பொருள்களைப் பெற்றுவா என்று கூறினார். இலக்குவன் சென்று நெடுநேரம் ஆகிவிட்டபடியாலும், உச்சி நேரத்திற்கு முன், சிரார்த்தத்தைச் செய்து முடிக்க வேண்டும் ஆதலாலும், இராமன் இலக்குவனைத் தேடிச் சென்றான். நெடுநேரம் அவனும் வராமையால் உச்சிக்காலம் நெருங்குவதை அறிந்து சீதாவே சிரார்த்தத்தைச் செய்து முடிக்கச் சென்றாள். பால்கு நதியில் குளித்து விட்டு ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் இருந்த சம்பங்கிச் செடியில் இருந்து பூக்களைப் பறித்து சிரார்த்தத்தை முடித்தாள். சிரார்த்தத்தின் முடிவில் ஆகாயத்தில் இரண்டு கைகள் மட்டும் தோன்றி அவள் அளித்த பூக்களை ஏற்றுக் கொண்டன. அசரீரி, "சீதா! நான் மகிழ்ச்சி அடைந்தேன். உன்னை வாழ்த்துகிறேன்” என்று கூறிற்று. சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அந்தக் கைகளையும், அசரீரியையும் பார்த்து, “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?’ என்றாள். அசரீரி, 'மருமகளே! நான்தான் உன் மாமனார். நீ சிரத்தையுடன் செய்த இறுதிச் சடங்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்’ என்று கூறிற்று. உடனே சீதை, "என் கணவரும், என் மைத்துனரும் இதை நம்ப மாட்டார்களே” என்று கூறினாள். அதற்கு அசரீரி, 'கவலை வேண்டாம். இந்த நதி, இந்த விளக்கில் உள்ள சுடர், சம்பங்கிப்பூ பக்கத்தில் நிற்கின்ற பசு ஆகிய நான்கும் இது நடந்தது என்பதற்கு சான்று கூறும், என்று கூறி மறைந்து விட்டது.