Chitrasaraswathi
முதலமைச்சர்
வா அருகே வா அகிலா கண்ணனின் கைவண்ணத்தில் ஒரு அழகிய கிராமத்து காதலுடன் தேசபக்தி உள்ள இளம் இராணுவ வீரன் கதை என்றும் சொல்லலாம். இராசி பற்றி பேசும் நமது சமுதாயத்தில் பிறக்கும் பொழுதே தாயையும், தந்தையின் மறுமணத்தால் தந்தையையும் இழந்த பூங்கோதையை தாய்மாமன் வீட்டினரே அவளது ராசியில் உள்ள நம்பிக்கையால் மாமன் மகனுக்கு திருமணம் செய்ய மறுக்கப்படும் சூழலில் அவளை விரும்பும் மிலிட்டரி திலக் அவளை மணம் செய்கிறான். அவளின் ராசி திலக்கை பாதித்ததா, இராணுவ வீரர்களின் மனைவி இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அழகாக வட்டார மொழியில் உரையாடல்களுடன் தன் வழக்கமான சரளமான உரையாடல்களுடன் தந்திருக்கிறார் அகிலா.