பணமில்லாதவனின் ஆசையும்
சக்தியில்லாதவனுடைய கோபமும்
கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.
செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,
எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி
ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.
சக்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்
தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்
ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.
நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் தகுதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,
நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.
தானம் செய்யாத தனவானும்
தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்
கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.
பிறர் பொருளைக் கவர்தல்
பிறர் மனைவியை நேசித்தல்
நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்
ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.
நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.
அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.
இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.
செல்வத்தை விரும்புபவன் கீழ்க்கண்ட ஆறு தோஷங்களை விலக்க வேண்டும்.
1)அதிக தூக்கம்’
2) சோம்பல்
3) பயம்
4) கோபம்
5) முயற்சியின்மை
6) எந்தக் காரியத்தையும் தாமதமாகவே செய்தல்
1)சாஸ்திர அர்த்தங்களை நன்றாகச் சொல்லும் திறமையற்ற ஆசாரியனையும்,
2)அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும்,
3) குடி மக்களைக் காப்பாற்றாத அரசனையும்,
4)பிரியமில்லாது பேசுகின்ற மனைவியையும்,
5)காட்டிற்குச் சென்று ஆடு மாடுகளை மேய்க்காமல் கிராமத்திலேயே வசிக்க வேண்டுமென்று விரும்புகின்ற இடையனையும்,
6) கிராமத்தில் இருந்து தன் தொழிலைக் கவனிக்காமல் காட்டில் வசிக்க வேண்டுமென்று விரும்பும் நாவிதனையும்
ஒருவன் நம்பினால் ஓட்டைக் கப்பலில் ஏறி சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவனுக்கு ஏற்படும் கதியே அவனுக்கு ஏற்படும்.
ஒரு மனிதன் எந்தக் காலத்திலும் விடக் கூடாத ஆறு குணங்கள் இவையே:
உண்மை உரைத்தல் 2) ஈதல் 3) சோம்பலில்லாமை 4) பொறாமைப்படாமல் இருத்தல் 5) பொறுமை 6) தைரியம்
1)ஒவ்வொரு நாளும் பொருள் சேர்ந்து கொண்டே இருத்தல்,
2)நோயற்று இருத்தல்
3)அன்புடன் பேசும் மனைவி
4) பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி
5)தனக்கு அடங்கி இருக்கும் பிள்ளை
6) பணத்தைத் தரும் படிப்பு
ஆகிய இந்த ஆறும் ஒருவனுக்கு சுகத்தை இந்த உலகில் அளிக்கும் சாதனங்களாகும்.
நல்ல படிப்பு படித்தவுடன் ஏராளமான வருவாய் வரும் ஒரு வேலை,
உடனே தனக்குப் பிடித்த பெண்ணைக் கைப்பிடிக்கும் பாக்கியம்
தேவையான சமயங்களில் அந்த பிரிய நாயகியின் இனிமையான சொற்களைக் கேட்கும் பாக்கியம்
சரியான சமயத்தில் பிறந்த பிள்ளை
அவன் தான் சொன்னதைத் தட்டாமல் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பது
பல துறைகளின் வாயிலாகவும் தினமும் பணம் வந்து கொண்டே இருப்பது
இந்த ஆறும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் இதை விட இனிய சுகம் இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது?!
திருடர்கள் அஜாக்கிரதை உள்ளவினிடம் ஜீவிக்கிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகடம் ஜீவிக்கிறார்கள்.
பெண்கள் காமவசப்பட்டவர்களிடம் ஜீவிக்கிறா.ர்கள்
யாகம் செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
அரசன் வழக்காளிகளிடம் ஜீவிக்கிறான்.
பண்டிதர்கள் மூடர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
இந்த ஆறு பேரைத் தவிர ஏழாமவன் அறியப்படவில்லை.
வரம் பெறுதல்
அரசனாதல்
மகனைப் பெறுதல்
கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து விடுபடுதல்
இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.
(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)
அரசன் விலக்க வேண்டிய காரியங்கள் நான்கு.
புல்லறிவினர்
விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்
சோம்பேறிகள்
முகஸ்துதி செய்பவர்கள்
இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.
வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)
தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)
ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)
குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)
உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பதி (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.
தேவதைகளுடைய சங்கல்பம்
புத்திமான்களுடைய மகிமை
அறிஞர்களுடைய வினயம்
நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)
ஆகியவை உடனே பலன் அளிக்கும்.
அக்னிஹோத்ரம்
மௌனம்
அத்தியயனம்
யாகம்
ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.
இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.
எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்
தாய்
தந்தை
அக்னி
ஆத்மா
குரு
இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்
தேவர்கள்
பித்ருக்கள் (முன்னோர்)
பெரியோர்
சந்யாசிகள்
அதிதி (விருந்தினர்)
ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்
நண்பர்கள்
விரோதிகள்
நடு நிலைமையில் உள்ளவர்கள்
உன்னால் போற்றப்பட வேண்டிய குரு
உன்னை அண்டுகின்றவர்கள்
ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்) என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.
ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.
பசுக்கள்,
பிறரிடம் ஊழியம்
வேளாண்மைர்ப்பது
மனைவி
கல்வி
தனக்குச் சமமில்லாதவரின் நட்பு
ஆகிய இந்த ஆறும் இடைவிடாமல் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தவறினால் இவை நசித்து விடும்.
தொடரும்
சக்தியில்லாதவனுடைய கோபமும்
கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.
செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,
எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி
ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.
சக்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்
தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்
ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.
நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் தகுதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,
நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.
தானம் செய்யாத தனவானும்
தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்
கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.
பிறர் பொருளைக் கவர்தல்
பிறர் மனைவியை நேசித்தல்
நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்
ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.
நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.
அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.
இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.
செல்வத்தை விரும்புபவன் கீழ்க்கண்ட ஆறு தோஷங்களை விலக்க வேண்டும்.
1)அதிக தூக்கம்’
2) சோம்பல்
3) பயம்
4) கோபம்
5) முயற்சியின்மை
6) எந்தக் காரியத்தையும் தாமதமாகவே செய்தல்
1)சாஸ்திர அர்த்தங்களை நன்றாகச் சொல்லும் திறமையற்ற ஆசாரியனையும்,
2)அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும்,
3) குடி மக்களைக் காப்பாற்றாத அரசனையும்,
4)பிரியமில்லாது பேசுகின்ற மனைவியையும்,
5)காட்டிற்குச் சென்று ஆடு மாடுகளை மேய்க்காமல் கிராமத்திலேயே வசிக்க வேண்டுமென்று விரும்புகின்ற இடையனையும்,
6) கிராமத்தில் இருந்து தன் தொழிலைக் கவனிக்காமல் காட்டில் வசிக்க வேண்டுமென்று விரும்பும் நாவிதனையும்
ஒருவன் நம்பினால் ஓட்டைக் கப்பலில் ஏறி சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவனுக்கு ஏற்படும் கதியே அவனுக்கு ஏற்படும்.
ஒரு மனிதன் எந்தக் காலத்திலும் விடக் கூடாத ஆறு குணங்கள் இவையே:
உண்மை உரைத்தல் 2) ஈதல் 3) சோம்பலில்லாமை 4) பொறாமைப்படாமல் இருத்தல் 5) பொறுமை 6) தைரியம்
1)ஒவ்வொரு நாளும் பொருள் சேர்ந்து கொண்டே இருத்தல்,
2)நோயற்று இருத்தல்
3)அன்புடன் பேசும் மனைவி
4) பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி
5)தனக்கு அடங்கி இருக்கும் பிள்ளை
6) பணத்தைத் தரும் படிப்பு
ஆகிய இந்த ஆறும் ஒருவனுக்கு சுகத்தை இந்த உலகில் அளிக்கும் சாதனங்களாகும்.
நல்ல படிப்பு படித்தவுடன் ஏராளமான வருவாய் வரும் ஒரு வேலை,
உடனே தனக்குப் பிடித்த பெண்ணைக் கைப்பிடிக்கும் பாக்கியம்
தேவையான சமயங்களில் அந்த பிரிய நாயகியின் இனிமையான சொற்களைக் கேட்கும் பாக்கியம்
சரியான சமயத்தில் பிறந்த பிள்ளை
அவன் தான் சொன்னதைத் தட்டாமல் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பது
பல துறைகளின் வாயிலாகவும் தினமும் பணம் வந்து கொண்டே இருப்பது
இந்த ஆறும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் இதை விட இனிய சுகம் இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது?!
திருடர்கள் அஜாக்கிரதை உள்ளவினிடம் ஜீவிக்கிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகடம் ஜீவிக்கிறார்கள்.
பெண்கள் காமவசப்பட்டவர்களிடம் ஜீவிக்கிறா.ர்கள்
யாகம் செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
அரசன் வழக்காளிகளிடம் ஜீவிக்கிறான்.
பண்டிதர்கள் மூடர்களிடம் ஜீவிக்கிறார்கள்.
இந்த ஆறு பேரைத் தவிர ஏழாமவன் அறியப்படவில்லை.
வரம் பெறுதல்
அரசனாதல்
மகனைப் பெறுதல்
கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து விடுபடுதல்
இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.
(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)
அரசன் விலக்க வேண்டிய காரியங்கள் நான்கு.
புல்லறிவினர்
விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்
சோம்பேறிகள்
முகஸ்துதி செய்பவர்கள்
இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.
வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)
தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)
ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)
குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)
உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பதி (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.
தேவதைகளுடைய சங்கல்பம்
புத்திமான்களுடைய மகிமை
அறிஞர்களுடைய வினயம்
நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)
ஆகியவை உடனே பலன் அளிக்கும்.
அக்னிஹோத்ரம்
மௌனம்
அத்தியயனம்
யாகம்
ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.
இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.
எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்
தாய்
தந்தை
அக்னி
ஆத்மா
குரு
இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்
தேவர்கள்
பித்ருக்கள் (முன்னோர்)
பெரியோர்
சந்யாசிகள்
அதிதி (விருந்தினர்)
ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்
நண்பர்கள்
விரோதிகள்
நடு நிலைமையில் உள்ளவர்கள்
உன்னால் போற்றப்பட வேண்டிய குரு
உன்னை அண்டுகின்றவர்கள்
ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்) என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.
ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.
பசுக்கள்,
பிறரிடம் ஊழியம்
வேளாண்மைர்ப்பது
மனைவி
கல்வி
தனக்குச் சமமில்லாதவரின் நட்பு
ஆகிய இந்த ஆறும் இடைவிடாமல் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தவறினால் இவை நசித்து விடும்.
தொடரும்