- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
இப்புராணம் பற்றி…..
பதினெண் புராணங்களுள் இப்புராணம் மிகவும் முக்கியமானதென்று வைணவர்கள் கூறுவர். இந்தப் புராணத்திலும், பின்னர் வரும் பாகவத புராணத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு மிக விரிவாகப் பேசப் படுகிறது. ஆதிசங்கர பகவத் பாதாள் தம்முடைய மஹாபாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிவாகும். எனவே இந்தப் புராணம் அவரது காலத்துக்கு முன்னரே அதாவது 5, 6ஆம் நூற்றாண்டு களில் மக்களிடையே நன்கு பரவி இருக்க வேண்டும். 5, 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்ற காரணத்தால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்துக்குத் தடை ஏதுமில்லை.
இப்பொழுது கிடைக்கின்ற முறையில் இப்புராணம் 6,000 பாடல்களைக் கொண்டதாகும். இப்புராணம் வியாச பகவானின் மகனாகிய பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும். மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டுத் தோற்றம் பற்றிக் கேட்க, பராசரர் விடை சொல்வதுபோல் அமைந்துள்ளது இப் புராணம்.
இப்புராணம் ஆறு பகுதிகளாகவும், 126 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாலாவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டுப் பழங்கால மன்னர்களின் வம்சாவளி பற்றிக் கூறுவதாகும் அது.
ஒரு புராணத்திற்குரிய ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுவதுமாக அமைந்துள்ளன. முதற் பகுதி- பிரபஞ்சம் தோற்றம் பற்றியதாகும். இரண்டாம் பகுதி- இந்நாட்டுப் புவியியல் பற்றியும், வானியல் பற்றியும் கூறுவது மூன்றாவது பகுதி- மன்வந்திரங்கள், யுகங்கள் பற்றிய விளக்கமாகும். இதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு, நால்வகை வர்ணம் ஆகியவை பற்றியும் பேசப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சூரிய, சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் கிருஷ்ணனுடைய வரலாற்றுப் பகுதியும் குப்த மன்னர்கள் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது.
ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது.
பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார். மைத்ரேயர் பராசரரைப் பார்த்து, 'படைப்பு எப்படித் தொடங்கிற்று என்பதைத் தாங்கள் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். பராசரர் பதில் கூறத் துவங்கினார். தொடக்கத்தில் எங்கும் நீரே நிரம்பி இருந்தது. அதில் ஒரு பெரிய முட்டை இருந்து கொண்டிருந்தது. முட்டையினுள் இந்த உலகத்தில் நாம் காண்கிற சர, அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார். வெளியே ஆகாயம், காற்று முதலிய ஐந்தும் இருந்தன. பூமி நீருக்கடியில் பாதாள லோகத்தோடு சேர்ந்து இருந்தது. பூமியை மேலே கொண்டுவர விரும்பிய விஷ்ணு வராக வடிவம் எடுத்துப் பாதாளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டது. பூமியை எடுத்துத் தனது இரண்டு தந்தங்களின் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு, பூமியை நீரில் மிதக்க விட்டார். நீரில் மிதந்து கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்ற பெயர் பெற்ற விஷ்ணு, பிரம்மன் வடிவைத் தாங்கி உலகத்து உயிர்களை எல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும், விலாவிலிருந்து வந்த பிறர்களும் ஆவர். படைக்கப்பட்ட யட்சர்கள் படைத்தவனாகிய பிரம்மனையே தின்ன முற்பட்டனர். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என்று ராட்சதர்கள் தடுத்தனர். இதன்பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் உண்டாகினர். பிரம்மனின் நெஞ்சிலிருந்து செம்மறி ஆடுகளும், வாயிலிருந்து வெள்ளாடுகளும், வயிற்றி லிருந்து கால்நடைகளும், பாதத்திலிருந்து யானை, குதிரை, மான், ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின.
உருத்திரனின் தோற்றம்
ஒரு காலத்தில் பிரம்மன் தமக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் மடியில் அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கிடந்த குழந்தை ஒயாது அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அக்குழந்தை சொல்லிற்று. நான்முகன் அழுகின்ற குழந்தைக்கு 'ருத்திரன்' என்று பெயரிட்டார். சிலநேரம் மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கியது. நான்முகனால் அவ்வழுகையை நிறுத்த முடியவில்லை. முன்னமும் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றுதானே இந்தக் குழந்தை அழுதது. எனவே புதுப்புதுப் பெயராக பிரம்மன் பெயர் சூட்டினார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஏழாவது பெயர் சூட்டப்பட்டவுடன்தான் குழந்தையின் அழுகை நின்றது. பிரம்மன் ருத்திரனுக்கு சூட்டிய ஏழு பெயர்கள் வருமாறு:
பவ, சர்வ, மகேச, பசுபதி, பீம, உக்ர, மகாதேவ என்பனவாம். உருத்திரன், சதி என்பவளை மணந்து கொண்டான். சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் உருத்திரனை அவமானம் செய்ததால் சதி உயிரை விட்டு, மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள். அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார்.
இலக்குமியின் தோற்றம்
முன்னொரு காலத்தில் மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்தார். ஒருமுறை ஒரு அழகிய பெண், வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள். அம் மாலையில் விருப்பம் கொண்ட துர்வாசர் அம்மாலையைக் கேட்டார். அப்பெண் மகிழ்ச்சியுடன் அம்மாலையை துர்வாசருக்குத் தந்தாள். அவள் தந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார் துர்வாசர். ஒருமுறை தன்னுடைய யானையாகிய ஐராவதத்தில் எதிர்கொண்டு இந்திரன் ஊர்வலம் வந்தான். துர்வாசர் தன்னுடைய தலையில் இருந்த அந்த மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார். அதன் சிறப்பை அறியாத தேவர்கள் தலைவன், அந்த மாலையை வாங்கி ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்து விட்டான். அற்புதமான வாசனையைக் கண்ட ஐராவதம் மேலும் அந்த வாசனையை அனுபவிப்பதற்காக மாலையின் பக்கமாகத் தனது துதிக்கையை நீட்டிற்று. ஆனால் மாலை தவறிக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழுந்த மாலையைக் கண்ட துர்வாசர் மிக்க சினம் கொண்டார். இந்திரன் எவ்வளவு மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. இலட்சுமி உன்னை விட்டுப் போய்விடுவாள் என்று சாபமிட்டார். இந்திரன் அமராவதி திரும்பிச் சென்றவுடன் அந்நகரமே பாழ்பட்டுச் சீரழிந்து காணப்பட்டது. காரணம், இலக்குமி அதை விட்டுப் போய்விட்டதுதான். திகைத்துப் போன இந்திரன் தேவருடன் சேர்ந்து பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூறினான். நான்முகன் இது என்னால் தீர்த்து வைக்கப்படக் கூடியது அன்று. வாருங்கள். விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இந்திரன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஷ்ணு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்று கூறினார். அப்படியே செய்வதென்று முடிவாயிற்று. ஆனால் பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது. அசுரர்களின் உதவியும் தேவை. எனவே அசுரர்களை அழைத்து இதனைச் செய்தால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தருவதாக தேவர்கள் பொய் கூறினார்கள். இதை அறியாத அசுரர்கள் முயற்சியுடன் கைகொடுக்க முன்வந்தனர். மேரு மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி திருமால் கொண்ட மிகப் பெரிய
கூர்மம் (ஆமை) முதுகில் மேரு மலையை நிறுத்திக் கடைந்தார்கள். வாசுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். கயிறாகப் பயன்பட்டதால் வாசுகி பெருந்துன்பமுற்று விஷப் புகையைக் கக்கிற்று. அது ஆகாயத்தில் சென்று மழையாய்ப் பெய்தது. கடையும் பொழுது முதலில் சுரபியும் (பசு), அடுத்து வருணி என்ற தேவதையும், தொடர்ந்து பாரிஜாதமாயும் அடுத்து அப்ஸ்ரஸ்களும் அடுத்து சந்திரனும் வந்தான். இவற்றோடு பல தீய பொருட்கள் தோன்றின. இதன் பிறகு தன்வந்திரி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தான். தேவர்களும் அசுரர்களும் ஒருசேர மகிழ்ந்தனர். தன்வந்திரியை அடுத்து அழகிய தாமரைப்பூவில் ஒளி பொருந்திய இலக்குமி கையில் ஒரு தாமரை மலரை ஏந்திக்கொண்டு தோன்றினாள். திசை யானைகள் எட்டும் இலக்குமிக்கு அபிஷேகம் செய்தன. விஸ்வகர்மா இலக்குமிக்கு ஏற்ற ஆபரணங்களைச் செய்து வந்தார். இலக்குமி விஷ்ணுவைத் தழுவிக் கொண்டதாலும், தேவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புச் செய்ததாலும் இலக்குமி யின் கிருபை தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. இது நடை பெறுகின்ற நேரத்தில் தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டனர். ஒன்றும் செய்ய இயலாது தேவர்கள் கலங்கி நிற்கையில் விஷ்ணு ஒரு பெண் வடிவுடன் சென்று அசுரர்களை மயக்கி, அமுத கலசத்தைக் கொண்டு வந்து தேவர்கள் உண்ணுமாறு செய்தார். அமிர்தம் உண்ட தேவர்கள் அதிக பலம் பெற்று அசுரர்களை விரட்டியடித்தனர். பிறகு இலட்சுமியை வணங்கிய இந்திரன் சில வரங்களைப் பெற்றுக் கொண்டான். முதலாவது, இலக்குமி தேவருலகம் முதலியவற்றை விட்டுப் பிரியக் கூடாது. இரண்டாவது, யார் இலக்குமியைப் போற்றி வழிபட்டாலும் அவள் அவர்களுக்கு அருள் தர வேண்டும்.
துருவனின் கதை
பிரம்மாவின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர். மனு என்ற பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர். மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள் 'மானவர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்களுள் உத்தானபாதன் என்ற மன்னன் சுனிதி, சுருச்சி என்ற இரு மங்கையரை மணந்து ஆட்சி செலுத்தி வந்தான். இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன், அரசன் மடியில் அமர்ந்திருந்தான். மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தந்தையின் மடியில் அமர விரும்பினான். அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சி அவனைத் தடுத்துவிட்டாள். அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டும் என்றும், அடுத்தபடியாக ஆளப் போகிறவன் அவன்தான் என்றும் கூறினாள். மிக்க வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான். தாய் சுனிதி 'மகனே! இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. போன பிறப்பில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் இந்தப் பிறப்பில் நல்ல பதவிகளையும், செல்வாக்கையும் அடைகின்றனர். சுருச்சியும் அவள் மகன் உத்தமனும் போன பிறப்பில் புண்ணியம் செய்ததால் இப்பிறப்பில் இந்நிலையில் உள்ளனர். நானும் நீயும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இப்பொழுது நல்ல காரியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் நல்ல நிலையை அடையலாம் என்றாள். அதைக்கேட்ட துருவன் தவம் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். அங்கே சப்த ரிஷிகள் என்று சொல்லப்படும் முனிவர்களைச் சந்தித்தான். ஐந்து வயது பாலகனாகிய அவன் காட்டிற்குள் வந்ததைப் பார்த்து வியந்து அவன் வந்த காரணத்தை வினவினர். நடந்த காரியத்தைக் கூறிய துருவன், தான் தவம் செய்து உரிய இடத்தைப் பெறுவதற்கு வந்ததாகக் கூறினான். அவன் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த முனிவர்கள் உன் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நீ விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மந்திரத்தையும் உபதேசித்தனர். துருவன் ஓரிடத்தில் அமர்ந்து விஷ்ணுவையே தியானம் செய்து மந்திரத்தை ஜெபிக்கலானான். நாட்கள் நகர்ந்தன. துருவன் தவ வலிமை தேவர்களையும் அச்சம் கொள்ளச் செய்தது. அவன் ஒருவேளை இந்திரப் பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று
சந்தேகித்த தேவர்கள் அவன் தவத்தைக் கலைக்க அரும்பாடு பட்டனர். இவர்களையல்லாமல் அசுரர்களும் அவன் தவத்தைக் கலைக்க முயன்றனர். எதுவும் செய்ய முடியாத நிலையில் விஷ்ணு துருவன் முன் தோன்றினார். விஷ்ணுவை நேரே தரிசனம் செய்தான் துருவன். 'என்ன வரம் வேண்டும்?' என விஷ்ணு கேட்க, தங்களைத் தரிசித்ததே போதுமானது, இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டான் துருவன். இருந்தாலும் ஏதாவது ஒரு வரத்தைக் கேள் என்று விஷ்ணு கூற எவரும் அடைய முடியாத இடத்தை தான் அடைய வேண்டும் என்று துருவன் கேட்டான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் அசையாத துருவ நட்சத்திரமாக அவனை மாற்றி, சப்த ரிஷி மண்டலத்தின் அடியில் இருக்குமாறு வரம் தந்தார். சப்த ரிஷி மண்டலம் உட்பட எல்லா நட்சத்திரங்களும் இன்றும் துருவனைச் சுற்றி வருவதைக் காணலாம்.
பிரகலாதன் கதை
தைத்தியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன். மாபெரும் தவங்கள் செய்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியைப் பெற்றான். அன்றியும் இந்திரன், அக்னி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன் ஆகிய தெய்வங்களையெல்லாம் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான். அவர்கள் அனைவரும் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.
எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்ய கசிபு தனக்குமேல் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால் தைத்தியர்கள், தேவர்கள் ஆகிய அனைவரும் தன்னையே வணங்க வேண்டும், தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். மேலும் தைத்திய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டான். எனவே பகைவனின் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது ஹிரண்யனின் கட்டளை. இந்நிலையில் பிரகலாதன் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை ஒரளவு வளர்ந்தவுடன் ஒர் ஆசிரியனை நியமித்து அக்குழந்தைக்குக் கல்வி புகட்ட உத்தரவிட்டான். கல்வியைத் தொடங்கும் பொழுது விஷ்ணுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும், ஹிரண்யன் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார். ஆனால் பிரகலாதன் அதற்கு இசைய வில்லை. அவன் விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து மகனின் கல்வி வளர்ச்சி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய ஹிரண்யன் பிள்ளையையும், ஆசிரியரையும் வரவழைத்தான். மகனுடைய கல்வியைச் சோதிக்க எண்ணிய ஹிரண்யன் என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டான். பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவன் பெருமையைச் சொல்லத் துவங்கினான். எல்லையற்ற கோபம் கொண்ட ஹிரண்யன் 'யார் அந்த விஷ்ணு?’ என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! அந்த விஷ்ணு உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான். காணப்படுகின்ற எல்லாவற்றுக் குள்ளும் இருக்கிறான். என்று கூறினவுடன் எல்லையற்ற சினம் கொண்டான் ஹிரண்யன். தைத்திய சேனையை விட்டு இப்பிள்ளையைக் கொன்று விடுங்கள் என்றான். அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடைபெற வில்லை. ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுப் பிரகலாதனைக் கடிக்கச் செய்தார்கள். ஒன்றும் நடைபெற வில்லை. கையையும் காலையும் கட்டி அரண்மனையில் இருந்து கீழே எறிந்தார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியரை அழைத்து, 'மறுபடியும் இவனைக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள் என்று கூறினான். எவ்விதப் பயனும் விளையவில்லை. இம்முறை சுக்ர நியதியின்படி பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பித்தார்கள். பல நூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிள்ளையை வரவழைத்தான். இந்த முறை விஷ்ணுவைப் பற்றிப் பேச்செடுக்காமல் 'சுக்ரநீதியின்படி பகைவர்களை எவ்வாறு வெல்வது?’ என்று கேட்டான் ஹிரண்யன். அதற்குப் பிரகலாதன் "பகைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும்
பதினெண் புராணங்களுள் இப்புராணம் மிகவும் முக்கியமானதென்று வைணவர்கள் கூறுவர். இந்தப் புராணத்திலும், பின்னர் வரும் பாகவத புராணத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு மிக விரிவாகப் பேசப் படுகிறது. ஆதிசங்கர பகவத் பாதாள் தம்முடைய மஹாபாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிவாகும். எனவே இந்தப் புராணம் அவரது காலத்துக்கு முன்னரே அதாவது 5, 6ஆம் நூற்றாண்டு களில் மக்களிடையே நன்கு பரவி இருக்க வேண்டும். 5, 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்ற காரணத்தால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்துக்குத் தடை ஏதுமில்லை.
இப்பொழுது கிடைக்கின்ற முறையில் இப்புராணம் 6,000 பாடல்களைக் கொண்டதாகும். இப்புராணம் வியாச பகவானின் மகனாகிய பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும். மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டுத் தோற்றம் பற்றிக் கேட்க, பராசரர் விடை சொல்வதுபோல் அமைந்துள்ளது இப் புராணம்.
இப்புராணம் ஆறு பகுதிகளாகவும், 126 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாலாவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டுப் பழங்கால மன்னர்களின் வம்சாவளி பற்றிக் கூறுவதாகும் அது.
ஒரு புராணத்திற்குரிய ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுவதுமாக அமைந்துள்ளன. முதற் பகுதி- பிரபஞ்சம் தோற்றம் பற்றியதாகும். இரண்டாம் பகுதி- இந்நாட்டுப் புவியியல் பற்றியும், வானியல் பற்றியும் கூறுவது மூன்றாவது பகுதி- மன்வந்திரங்கள், யுகங்கள் பற்றிய விளக்கமாகும். இதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு, நால்வகை வர்ணம் ஆகியவை பற்றியும் பேசப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சூரிய, சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் கிருஷ்ணனுடைய வரலாற்றுப் பகுதியும் குப்த மன்னர்கள் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது.
ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது.
பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார். மைத்ரேயர் பராசரரைப் பார்த்து, 'படைப்பு எப்படித் தொடங்கிற்று என்பதைத் தாங்கள் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். பராசரர் பதில் கூறத் துவங்கினார். தொடக்கத்தில் எங்கும் நீரே நிரம்பி இருந்தது. அதில் ஒரு பெரிய முட்டை இருந்து கொண்டிருந்தது. முட்டையினுள் இந்த உலகத்தில் நாம் காண்கிற சர, அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார். வெளியே ஆகாயம், காற்று முதலிய ஐந்தும் இருந்தன. பூமி நீருக்கடியில் பாதாள லோகத்தோடு சேர்ந்து இருந்தது. பூமியை மேலே கொண்டுவர விரும்பிய விஷ்ணு வராக வடிவம் எடுத்துப் பாதாளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டது. பூமியை எடுத்துத் தனது இரண்டு தந்தங்களின் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு, பூமியை நீரில் மிதக்க விட்டார். நீரில் மிதந்து கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்ற பெயர் பெற்ற விஷ்ணு, பிரம்மன் வடிவைத் தாங்கி உலகத்து உயிர்களை எல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும், விலாவிலிருந்து வந்த பிறர்களும் ஆவர். படைக்கப்பட்ட யட்சர்கள் படைத்தவனாகிய பிரம்மனையே தின்ன முற்பட்டனர். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என்று ராட்சதர்கள் தடுத்தனர். இதன்பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் உண்டாகினர். பிரம்மனின் நெஞ்சிலிருந்து செம்மறி ஆடுகளும், வாயிலிருந்து வெள்ளாடுகளும், வயிற்றி லிருந்து கால்நடைகளும், பாதத்திலிருந்து யானை, குதிரை, மான், ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின.
உருத்திரனின் தோற்றம்
ஒரு காலத்தில் பிரம்மன் தமக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் மடியில் அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கிடந்த குழந்தை ஒயாது அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அக்குழந்தை சொல்லிற்று. நான்முகன் அழுகின்ற குழந்தைக்கு 'ருத்திரன்' என்று பெயரிட்டார். சிலநேரம் மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கியது. நான்முகனால் அவ்வழுகையை நிறுத்த முடியவில்லை. முன்னமும் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றுதானே இந்தக் குழந்தை அழுதது. எனவே புதுப்புதுப் பெயராக பிரம்மன் பெயர் சூட்டினார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஏழாவது பெயர் சூட்டப்பட்டவுடன்தான் குழந்தையின் அழுகை நின்றது. பிரம்மன் ருத்திரனுக்கு சூட்டிய ஏழு பெயர்கள் வருமாறு:
பவ, சர்வ, மகேச, பசுபதி, பீம, உக்ர, மகாதேவ என்பனவாம். உருத்திரன், சதி என்பவளை மணந்து கொண்டான். சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் உருத்திரனை அவமானம் செய்ததால் சதி உயிரை விட்டு, மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள். அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார்.
இலக்குமியின் தோற்றம்
முன்னொரு காலத்தில் மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்தார். ஒருமுறை ஒரு அழகிய பெண், வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள். அம் மாலையில் விருப்பம் கொண்ட துர்வாசர் அம்மாலையைக் கேட்டார். அப்பெண் மகிழ்ச்சியுடன் அம்மாலையை துர்வாசருக்குத் தந்தாள். அவள் தந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார் துர்வாசர். ஒருமுறை தன்னுடைய யானையாகிய ஐராவதத்தில் எதிர்கொண்டு இந்திரன் ஊர்வலம் வந்தான். துர்வாசர் தன்னுடைய தலையில் இருந்த அந்த மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார். அதன் சிறப்பை அறியாத தேவர்கள் தலைவன், அந்த மாலையை வாங்கி ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்து விட்டான். அற்புதமான வாசனையைக் கண்ட ஐராவதம் மேலும் அந்த வாசனையை அனுபவிப்பதற்காக மாலையின் பக்கமாகத் தனது துதிக்கையை நீட்டிற்று. ஆனால் மாலை தவறிக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழுந்த மாலையைக் கண்ட துர்வாசர் மிக்க சினம் கொண்டார். இந்திரன் எவ்வளவு மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. இலட்சுமி உன்னை விட்டுப் போய்விடுவாள் என்று சாபமிட்டார். இந்திரன் அமராவதி திரும்பிச் சென்றவுடன் அந்நகரமே பாழ்பட்டுச் சீரழிந்து காணப்பட்டது. காரணம், இலக்குமி அதை விட்டுப் போய்விட்டதுதான். திகைத்துப் போன இந்திரன் தேவருடன் சேர்ந்து பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூறினான். நான்முகன் இது என்னால் தீர்த்து வைக்கப்படக் கூடியது அன்று. வாருங்கள். விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இந்திரன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஷ்ணு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்று கூறினார். அப்படியே செய்வதென்று முடிவாயிற்று. ஆனால் பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது. அசுரர்களின் உதவியும் தேவை. எனவே அசுரர்களை அழைத்து இதனைச் செய்தால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தருவதாக தேவர்கள் பொய் கூறினார்கள். இதை அறியாத அசுரர்கள் முயற்சியுடன் கைகொடுக்க முன்வந்தனர். மேரு மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி திருமால் கொண்ட மிகப் பெரிய
கூர்மம் (ஆமை) முதுகில் மேரு மலையை நிறுத்திக் கடைந்தார்கள். வாசுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். கயிறாகப் பயன்பட்டதால் வாசுகி பெருந்துன்பமுற்று விஷப் புகையைக் கக்கிற்று. அது ஆகாயத்தில் சென்று மழையாய்ப் பெய்தது. கடையும் பொழுது முதலில் சுரபியும் (பசு), அடுத்து வருணி என்ற தேவதையும், தொடர்ந்து பாரிஜாதமாயும் அடுத்து அப்ஸ்ரஸ்களும் அடுத்து சந்திரனும் வந்தான். இவற்றோடு பல தீய பொருட்கள் தோன்றின. இதன் பிறகு தன்வந்திரி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தான். தேவர்களும் அசுரர்களும் ஒருசேர மகிழ்ந்தனர். தன்வந்திரியை அடுத்து அழகிய தாமரைப்பூவில் ஒளி பொருந்திய இலக்குமி கையில் ஒரு தாமரை மலரை ஏந்திக்கொண்டு தோன்றினாள். திசை யானைகள் எட்டும் இலக்குமிக்கு அபிஷேகம் செய்தன. விஸ்வகர்மா இலக்குமிக்கு ஏற்ற ஆபரணங்களைச் செய்து வந்தார். இலக்குமி விஷ்ணுவைத் தழுவிக் கொண்டதாலும், தேவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புச் செய்ததாலும் இலக்குமி யின் கிருபை தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. இது நடை பெறுகின்ற நேரத்தில் தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டனர். ஒன்றும் செய்ய இயலாது தேவர்கள் கலங்கி நிற்கையில் விஷ்ணு ஒரு பெண் வடிவுடன் சென்று அசுரர்களை மயக்கி, அமுத கலசத்தைக் கொண்டு வந்து தேவர்கள் உண்ணுமாறு செய்தார். அமிர்தம் உண்ட தேவர்கள் அதிக பலம் பெற்று அசுரர்களை விரட்டியடித்தனர். பிறகு இலட்சுமியை வணங்கிய இந்திரன் சில வரங்களைப் பெற்றுக் கொண்டான். முதலாவது, இலக்குமி தேவருலகம் முதலியவற்றை விட்டுப் பிரியக் கூடாது. இரண்டாவது, யார் இலக்குமியைப் போற்றி வழிபட்டாலும் அவள் அவர்களுக்கு அருள் தர வேண்டும்.
துருவனின் கதை
பிரம்மாவின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர். மனு என்ற பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர். மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள் 'மானவர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்களுள் உத்தானபாதன் என்ற மன்னன் சுனிதி, சுருச்சி என்ற இரு மங்கையரை மணந்து ஆட்சி செலுத்தி வந்தான். இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன், அரசன் மடியில் அமர்ந்திருந்தான். மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தந்தையின் மடியில் அமர விரும்பினான். அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சி அவனைத் தடுத்துவிட்டாள். அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டும் என்றும், அடுத்தபடியாக ஆளப் போகிறவன் அவன்தான் என்றும் கூறினாள். மிக்க வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான். தாய் சுனிதி 'மகனே! இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. போன பிறப்பில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் இந்தப் பிறப்பில் நல்ல பதவிகளையும், செல்வாக்கையும் அடைகின்றனர். சுருச்சியும் அவள் மகன் உத்தமனும் போன பிறப்பில் புண்ணியம் செய்ததால் இப்பிறப்பில் இந்நிலையில் உள்ளனர். நானும் நீயும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இப்பொழுது நல்ல காரியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் நல்ல நிலையை அடையலாம் என்றாள். அதைக்கேட்ட துருவன் தவம் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். அங்கே சப்த ரிஷிகள் என்று சொல்லப்படும் முனிவர்களைச் சந்தித்தான். ஐந்து வயது பாலகனாகிய அவன் காட்டிற்குள் வந்ததைப் பார்த்து வியந்து அவன் வந்த காரணத்தை வினவினர். நடந்த காரியத்தைக் கூறிய துருவன், தான் தவம் செய்து உரிய இடத்தைப் பெறுவதற்கு வந்ததாகக் கூறினான். அவன் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த முனிவர்கள் உன் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நீ விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மந்திரத்தையும் உபதேசித்தனர். துருவன் ஓரிடத்தில் அமர்ந்து விஷ்ணுவையே தியானம் செய்து மந்திரத்தை ஜெபிக்கலானான். நாட்கள் நகர்ந்தன. துருவன் தவ வலிமை தேவர்களையும் அச்சம் கொள்ளச் செய்தது. அவன் ஒருவேளை இந்திரப் பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று
சந்தேகித்த தேவர்கள் அவன் தவத்தைக் கலைக்க அரும்பாடு பட்டனர். இவர்களையல்லாமல் அசுரர்களும் அவன் தவத்தைக் கலைக்க முயன்றனர். எதுவும் செய்ய முடியாத நிலையில் விஷ்ணு துருவன் முன் தோன்றினார். விஷ்ணுவை நேரே தரிசனம் செய்தான் துருவன். 'என்ன வரம் வேண்டும்?' என விஷ்ணு கேட்க, தங்களைத் தரிசித்ததே போதுமானது, இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டான் துருவன். இருந்தாலும் ஏதாவது ஒரு வரத்தைக் கேள் என்று விஷ்ணு கூற எவரும் அடைய முடியாத இடத்தை தான் அடைய வேண்டும் என்று துருவன் கேட்டான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் அசையாத துருவ நட்சத்திரமாக அவனை மாற்றி, சப்த ரிஷி மண்டலத்தின் அடியில் இருக்குமாறு வரம் தந்தார். சப்த ரிஷி மண்டலம் உட்பட எல்லா நட்சத்திரங்களும் இன்றும் துருவனைச் சுற்றி வருவதைக் காணலாம்.
பிரகலாதன் கதை
தைத்தியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன். மாபெரும் தவங்கள் செய்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியைப் பெற்றான். அன்றியும் இந்திரன், அக்னி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன் ஆகிய தெய்வங்களையெல்லாம் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான். அவர்கள் அனைவரும் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.
எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்ய கசிபு தனக்குமேல் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால் தைத்தியர்கள், தேவர்கள் ஆகிய அனைவரும் தன்னையே வணங்க வேண்டும், தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். மேலும் தைத்திய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டான். எனவே பகைவனின் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது ஹிரண்யனின் கட்டளை. இந்நிலையில் பிரகலாதன் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை ஒரளவு வளர்ந்தவுடன் ஒர் ஆசிரியனை நியமித்து அக்குழந்தைக்குக் கல்வி புகட்ட உத்தரவிட்டான். கல்வியைத் தொடங்கும் பொழுது விஷ்ணுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும், ஹிரண்யன் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார். ஆனால் பிரகலாதன் அதற்கு இசைய வில்லை. அவன் விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து மகனின் கல்வி வளர்ச்சி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய ஹிரண்யன் பிள்ளையையும், ஆசிரியரையும் வரவழைத்தான். மகனுடைய கல்வியைச் சோதிக்க எண்ணிய ஹிரண்யன் என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டான். பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவன் பெருமையைச் சொல்லத் துவங்கினான். எல்லையற்ற கோபம் கொண்ட ஹிரண்யன் 'யார் அந்த விஷ்ணு?’ என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! அந்த விஷ்ணு உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான். காணப்படுகின்ற எல்லாவற்றுக் குள்ளும் இருக்கிறான். என்று கூறினவுடன் எல்லையற்ற சினம் கொண்டான் ஹிரண்யன். தைத்திய சேனையை விட்டு இப்பிள்ளையைக் கொன்று விடுங்கள் என்றான். அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடைபெற வில்லை. ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுப் பிரகலாதனைக் கடிக்கச் செய்தார்கள். ஒன்றும் நடைபெற வில்லை. கையையும் காலையும் கட்டி அரண்மனையில் இருந்து கீழே எறிந்தார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியரை அழைத்து, 'மறுபடியும் இவனைக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள் என்று கூறினான். எவ்விதப் பயனும் விளையவில்லை. இம்முறை சுக்ர நியதியின்படி பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பித்தார்கள். பல நூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிள்ளையை வரவழைத்தான். இந்த முறை விஷ்ணுவைப் பற்றிப் பேச்செடுக்காமல் 'சுக்ரநீதியின்படி பகைவர்களை எவ்வாறு வெல்வது?’ என்று கேட்டான் ஹிரண்யன். அதற்குப் பிரகலாதன் "பகைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும்