K
kavi sowmi
Guest
சும்மா கத்தாத பாப்பா. சமையற்கட்டுல சாப்பிட சினாக்ஸ் வாங்கி வச்சிருக்கறேன் எடுத்து சாப்பிடு. எனக்கு மனசு சரியில்லை. கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு.
ப்பா... நீங்க இல்லாம எப்போ தனியா சாப்பிட்டு இருக்கிறேன் கதவைத் திறக்க வைக்க...சத்தமிட்டு கொண்டிருந்தாள்.
பொய் சொல்லாத பாப்பா... மதியம் நான் இல்லாமதான அங்க சாப்பிட்ட... அது மாதிரி சாப்பிடு.
அப்பா வர வர ஓவர் ஸ்மார்ட் ஆகிட்டு வர்றிங்க இது தப்பு. நான் ஹால்ல உட்கார்ந்து இருக்கிறேன். ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வந்து சேருங்க .. ஹாலில் இருந்த ஷோபாவில் தஞ்சம் அடைந்தவள் நகம் கொறித்தபடி அடிக்கடி அவளது தந்தை அறையை பார்த்து கொண்டிருந்தாள். நேரம் பார்க்க அரை மணி நேரம் ஒடி இருந்தது. வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மலர் பேபி இந்த முறை செம கோபம் போலயே. வெளியே வர்ற ஐடியாவே இல்ல போல இருக்கு. இப்போ எப்படி சரிபண்ண... கையில் இருந்த பொபைலை சுத்தியபடி யோசித்து கொண்டிரூந்தாள். மேலும் பத்து நிமிடம் தாண்டி இருக்க கதவைத் திறந்தபடி வெளியில் வந்தார் மதுசூதனன்.
நகத்தை கொறிக்காதன்னா கேட்கவே மாட்டியா என்றபடி எதுவுமே நடக்காதது போல் சமையலறைக்கு சென்றவர் இரண்டு ஃபவுலில் ஐஸ்கிரீம் நிறைத்தவர் எடுத்து வந்து இவளுக்கு அருகில் ஓன்றை வைத்தவர் தனக்கும் ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
மலருக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. எப்போதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவர் எடுத்து கொண்டு வந்து இருவரும் இணைந்து சாப்பிடுவது ...இன்று இவர் இருக்கின்ற கோபத்திற்கு... ஐஸ்கிரீமா... என்னங்கடா நடக்குது.
ஓரு வேளை பையன் சரியில்லையோ...பொண்ணு தப்பிச்சிட்டா அப்படின்னு நினைக்கறாரோ... ஐஸ்கிரீமை உண்டபடி கடைகண்னால் அவரை பார்க்க முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது.
என்னடா... ஹேப்பியா தான் தெரியறாங்க. ப்பா... என்ன மேல கோபம் இல்லையே...
இல்லைடா... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
என்னபா விஷயம். ஏதாவது பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குதா..
ஆர்டர் தான் தினமும் கிடைக்குதே இது வேறமா. புரிஞ்சிக்கற மனுசங்க கிடைச்சா சந்தோஷம் தான...
யாருடா அது நம்மல விடவும் புரிஞ்சிகிட்டவங்க... மனதிற்குள் நினைத்தவள். யாரா இருந்தா என்ன நம்ம கிட்ட மாட்டாமலா போயிடுவாங்க. ஆளை பார்க்கும் போது தெரிஞ்சுக்கலாம்.
யார் என்பதை தெரிந்து கொள்ள அதிக சிரமப்பட தேவையில்லாமல் அடுத்த நாள் காலையில் முதுகில் சுமந்த டிராவல்ஸ் பேக்கோடு வாசலில் நின்றிருந்தான் அவளது நாயகன்..
உருகிடுமோ பனிமலர்!!
ப்பா... நீங்க இல்லாம எப்போ தனியா சாப்பிட்டு இருக்கிறேன் கதவைத் திறக்க வைக்க...சத்தமிட்டு கொண்டிருந்தாள்.
பொய் சொல்லாத பாப்பா... மதியம் நான் இல்லாமதான அங்க சாப்பிட்ட... அது மாதிரி சாப்பிடு.
அப்பா வர வர ஓவர் ஸ்மார்ட் ஆகிட்டு வர்றிங்க இது தப்பு. நான் ஹால்ல உட்கார்ந்து இருக்கிறேன். ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வந்து சேருங்க .. ஹாலில் இருந்த ஷோபாவில் தஞ்சம் அடைந்தவள் நகம் கொறித்தபடி அடிக்கடி அவளது தந்தை அறையை பார்த்து கொண்டிருந்தாள். நேரம் பார்க்க அரை மணி நேரம் ஒடி இருந்தது. வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மலர் பேபி இந்த முறை செம கோபம் போலயே. வெளியே வர்ற ஐடியாவே இல்ல போல இருக்கு. இப்போ எப்படி சரிபண்ண... கையில் இருந்த பொபைலை சுத்தியபடி யோசித்து கொண்டிரூந்தாள். மேலும் பத்து நிமிடம் தாண்டி இருக்க கதவைத் திறந்தபடி வெளியில் வந்தார் மதுசூதனன்.
நகத்தை கொறிக்காதன்னா கேட்கவே மாட்டியா என்றபடி எதுவுமே நடக்காதது போல் சமையலறைக்கு சென்றவர் இரண்டு ஃபவுலில் ஐஸ்கிரீம் நிறைத்தவர் எடுத்து வந்து இவளுக்கு அருகில் ஓன்றை வைத்தவர் தனக்கும் ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
மலருக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. எப்போதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவர் எடுத்து கொண்டு வந்து இருவரும் இணைந்து சாப்பிடுவது ...இன்று இவர் இருக்கின்ற கோபத்திற்கு... ஐஸ்கிரீமா... என்னங்கடா நடக்குது.
ஓரு வேளை பையன் சரியில்லையோ...பொண்ணு தப்பிச்சிட்டா அப்படின்னு நினைக்கறாரோ... ஐஸ்கிரீமை உண்டபடி கடைகண்னால் அவரை பார்க்க முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது.
என்னடா... ஹேப்பியா தான் தெரியறாங்க. ப்பா... என்ன மேல கோபம் இல்லையே...
இல்லைடா... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
என்னபா விஷயம். ஏதாவது பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குதா..
ஆர்டர் தான் தினமும் கிடைக்குதே இது வேறமா. புரிஞ்சிக்கற மனுசங்க கிடைச்சா சந்தோஷம் தான...
யாருடா அது நம்மல விடவும் புரிஞ்சிகிட்டவங்க... மனதிற்குள் நினைத்தவள். யாரா இருந்தா என்ன நம்ம கிட்ட மாட்டாமலா போயிடுவாங்க. ஆளை பார்க்கும் போது தெரிஞ்சுக்கலாம்.
யார் என்பதை தெரிந்து கொள்ள அதிக சிரமப்பட தேவையில்லாமல் அடுத்த நாள் காலையில் முதுகில் சுமந்த டிராவல்ஸ் பேக்கோடு வாசலில் நின்றிருந்தான் அவளது நாயகன்..
உருகிடுமோ பனிமலர்!!