K
kavi sowmi
Guest
தன் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து கொண்டு இருந்தார் மதுசூதனன். வீட்டுக்கு வா ... பார்த்து விட்டு மேற்கொண்டு பேசிக் கொள்ளலாம் என உரைத்தவர் தான். ஆனால் நடந்ததோ வேறு.. ஓரே ஆறுதல் அவன் தனது குடும்பத்தை அழைத்து வரவில்லை. வந்திருந்தால் இன்னும் மோசமாகி இருக்கும். குடும்பத்தோடு கூப்பிட்டு அசிங்க படுத்துகிறாயா என வேறுமாதிரி ஆகி இருக்கும்.
தனது மகள் பனிமலரை பெண் பார்க்க தனது நண்பனிடம் குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தார். கடைசி நேரத்தில் நண்பனின் தாயாருக்கு முடியாமல் போக தனது மகனை மட்டும் அனுப்பி இருந்தார். இவன் வருவதை கடைசி வரை சொல்லாமல்
இருந்தவர் காலையில் இவன் இங்கு வந்ததை போனில் சொல்ல அடுத்த நிமிடம் தனது பர்ஸை எடுத்துக் கொண்டு தனது அபிமான பெப்பில் கிளம்பி இருந்தாள் பனிமலர்.
புறப்பட்ட நேரத்திலேயே தனது தோழிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். குறிப்பிட்ட மாலிற்கு வரும்படி...அதே நேரத்தில் தகப்பனாறிற்கும் போனில் அழைத்தவள்.... அப்பா நான் முன்னமே உங்க கிட்ட சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு. நீங்க கொஞ்சம் கூட காதுல வாங்கவே இல்லை. எனக்கு பிடிக்கல. நான் யாரையும் பார்க்க விரும்பல..
பாப்பா இப்ப வந்திடுவாங்கம்மா...பாவமான குரலோடு சொல்லும் போது மனதை லேசாக அசைத்து தான் பார்த்தது. அதுவும் ஒரு நிமிடம் தான்...
அப்பா நீங்க தானே வர சொன்னிங்க. நீங்களே உட்கார வைச்சு பார்த்து அனுப்புங்க... எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. .அஞ்சு மணி இல்லாம வீட்டுக்கு வர மாட்டேன்.
எங்க பாப்பா இருக்கற...
ப்பா ... பாப்பா சொல்லாதிங்கன்னு எத்தனை தடவை சொல்லறது. இங்கே . இங்கே ப்ரோசோன் வந்து இருக்கிறேன் ப்ரெண்டுங்ககூட அஞ்சு மணிக்கு மேல் தான் வருவேன். நான் வர்றதுக்கு முன்னாடி அந்த மாப்பிள்ளையை சுத்தி சுத்தி நல்லா பார்த்துவிட்டு அனுப்பி வச்சிடுங்க... சரியா...இப்படி சொல்லியவளை இவனிடம் சொல்லவா முடியும்.
அங்கிள் என்ன ஆச்சு... சொன்னவனை திரும்பி பார்த்தவர். மெதுவாக ஆரம்பித்தார். பொண்ணு ஆரம்பத்தில் இருந்தே கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா... நான் கேட்கல... ஏதோ விளையாட்டுக்கு சொல்லறான்னு நினைச்சேன். அவ உண்மையாதான் சொல்லி இருக்கிறா...நீங்க வர்றது தெரியவும் சொல்லாம வெளிய கிளம்பி போயிட்டா..ஸாரி... அபி...
அபிநந்தன் நல்ல நிறம். அன்னாந்து பார்க்க கூடிய உயரம். காற்றில் கலைந்தாடும் தலை கொள்ளா கேசம்.
பேசும் கண்கள். எனக்கு கோபமே வராதே என்பது போல சிரிக்கும் உதடுகள்... இவனது குடும்பம் மொத்தமும் பெங்களூரில் இருக்க இவன் மும்பையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். திருமணம் வேண்டாம் என டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தவனை பாட்டியின்கடைசி ஆசை... உன் திருமணத்தை பார்ப்பது தான் என சொல்லி இம்முறை அழைத்து வந்திருந்தனர். இவனோடு கூட பிறந்த தங்கை ஒன்று. திருமணம் முடிந்து டெல்லியில் செட்டில் ஆகி இருந்தாள். மூன்று வயது பெண் குழந்தை ஓன்று இருந்தது.
பாதி நாட்கள் வேலை சம்மந்தமாக வெளிநாடுகளை சுற்றிக் கொண்டு இருந்தவன் ஓரு மாத விடுமுறையில் வர... இங்கே அனுப்பி இருந்தனர். ஏற்கனவே தனது தந்தையும் இவரும் பால்ய நண்பர்கள்
அதனால் பெரிதாக எதுவும் தோணவில்லை. வரும் போதே முடிவு செய்துதான் வந்திருந்தான். பாராத்ததும் பொண்ணு பிடிக்கலை... சொல்லிட்டு கிளம்பிடணும் இப்படி நினைத்து வர... இங்கே அப்படியே எதிர் பதமாய் நடந்து இருந்தது. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஓன்று ஈர்க்குதோ!!!
இப்போது அவளின் மேல் லேசாக ஆர்வம் துளிர்விட ஆரம்பித்து இருந்தது. ஏன் அங்கிள்... உங்க பொண்ணு வேறயாரையாவது விரும்பறாளா என்ன....
சே..சே அதெல்லாம் இல்லை அபி... அவளுக்கு என்னை விட்டுவிட்டு போக மாட்டாலாம். என் கூடதான் கடைசி வரைக்கும் இருப்பாளாம். நான் இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியலை.
அவர் பேச பேச ஹாலை சுற்றி பார்த்தவன் அங்கிள் உங்க பொண்ணு போட்டோ ஏதாவது இருக்கா... அவனும் அவளது புகைப்படத்தை பார்க்கவில்லை. இவனது செல்பேசிக்கு அணுப்பி இருக்க ஓபன் செய்து பார்க்காமலேயே டிலைட் செய்திருந்தான்.
இரு அபி ஆல்பம் இருக்கு எடுத்துட்டு வரேன் பாரு... தனது ரூம்பிற்கு சென்று ஆல்பம் எடுத்து வந்து இவனிடம் தர...ஏதோ பங்சனில் எடுத்து புகைப்படம் அது... ஆரஞ்சு நிற லெகன்காவில் இரு புறமும் தோள்வரையே வழிந்த கூந்தல்... . பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல பால் வெண்மை நிறம். குறை சொல்ல முடியாத அளவிற்கு நல்ல அழகி தான்.
அங்கிள் எனக்கு உங்க பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு...இங்கே தான் பார்க்கணும்ன்னு கட்டாயம் எதுவும் இல்லையே. .. எங்க போய் இருக்கறான்னு சொல்லுங்கள்... அங்கேயே போய் நான் பார்த்துக்கறேன்.
இப்படி கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது எனக்கு யோசித்தவர் கடைசி நிமிடத்தில்
யோசித்து அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு கூறினார். நல்ல பொண்ணு தான் அபி... பிடிவாதம் ஜாஸ்தி. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணில்லையா... கூடவே என் மேல பாசம் ஜாஸ்தி... அதனால்தான் இப்படி நடந்துக்கறா... எனக்கும் அவளை விட்டா யார் இருக்கறா...
டோன்ட்வொரி அங்கிள் . இனி நான் அவள பார்த்துக்கறேன். உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குது தானே...நீங்க அப்பாகிட்ட பேசி முடிவு பண்ணுங்கள்.
நான் உங்க பொண்ண பார்த்துவிட்டு வந்திடறேன். கால்டாக்சியை அழைத்தவன் மாலின் பெயர் சொல்லி அடுத்த கால்மணி நேரத்தில் அங்கு இருந்தான். அவளை கண்டு பிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இல்லை... அவளோடு இன்னும் நால்வர் பட்டாளம் இணைந்திருக்க கலகலத்து கொண்டிருந்தாள்.
நீலநிற ஜூன்ஸ் கருப்பு கலந்த டாப்ஸ் தூக்கி கட்டிய குதிரைவால் மேக்கப் என பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும் திரும்பி பார்க்க வைத்தாள். அவர்களது குரூப்பில் சமீபத்தில் திருமணம் பேசி இருந்து இருப்பார்கள் போல. குறிப்பிட்ட பெண்ணை சுற்றிலும் அமர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
எந்த கவலையும் இல்லாமல் சிரித்து கொண்டிருந்தவளை பார்க்க சற்றே கோபம் கூட வந்தது.
அங்க ஒருத்தன வர வச்சிட்டு எந்த கவலையும் இல்லாமல் இங்க இருக்கிறத பார்!! அதுவும் சில நிமிடம் தான் பிறகு அவனையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தான். சிறிது நேரம் பேசியவர்கள் மொத்தமாக தியேட்டர் உள் நுழைய அவர்களை தொடர்ந்து இவனும் சென்றான். அவென்சர் என்டு கேம் ஆங்கில படம் . அவர்களுக்கு நேர் பின்புறம் இரண்டு இருக்கை தாண்டி அமர்ந்து கொண்டான்.
அபிநந்தனுக்கு தன்னையே நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை அவளது வீட்டில் இந்த சந்திப்பு நடந்திருந்தால்... பிடிக்கவில்லை எனக்கு சொல்லி புறப்பட்டு இருப்பானோ!! ஆனால் இப்போது அவளது நடவடிக்கை ஓவ்வொன்றும் அவனை வியக்க வைத்தது. படம் ஆரம்பித்ததுமே ஒவ்வொரு ஹிரோவை காட்டும் போதும் கூச்சமே இல்லாமல் சத்தம் போட்டு.... விசில் அடித்துக் கொண்டு இருந்தாள்.
இதை பார்த்ததுமே தனக்கு தானே சொல்லிக் கொண்டான் அபி கல்யாணத்துக்கு அப்புறம் இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் போலயே...உன்னை தொவச்சி தோரணம் கட்ட போறா !!! தனக்குள் சிரித்தபடி மொத்தமாய் அவளை மட்டும் ரசித்துக் கொண்டு இருந்தான்.
அதே நேரம் மலருக்கு அவ்வப்போது கவனம் தந்தையிடம் போய் வந்து கொண்டிருந்தது. தன்னை அறியாமல் மணியை பார்த்தவள் வந்துட்டு போய் இருப்பான். இந்த அப்பா என்ன சொல்லி சமாளிச்சிப்பாங்க... பொய் வேற சொல்ல தெரியாது. பாவமா முழிச்சிருப்பாங்க... அதுக்காக நம்ம கொள்கையை விட்டு தர முடியுமா...
அருகில் இருந்த நந்தினி இவளை பார்த்தவள் ஏன் மலர் அடிக்கடி மொபைல் பார்க்கற..
நந்தினி அப்பாகிட்ட கோசிட்டு வந்துவிட்டேன். அதுதான் மறுபடியும் கூப்பிடறாங்களான்னு பார்க்கிறேன்.
நீ கோச்சுகிட்டயா... நம்மற மாதிரி சொல்லு...
மாப்பிள்ளை பார்க்கிறேன்னு ஒரு பையனை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தாங்க. நான் இங்க கிளம்பி வந்துட்டேன்.
ஏன் மலர் இது தப்புல்ல. உங்க அப்பா வந்தவங்க முன்னாடி சங்கடபடுவாங்கல்ல நீ அங்கேயே இருந்து நேரா அவங்க கிட்ட சொல்லி இருக்கலாம்.
இப்ப எதுக்கு என்ன கில்டியா ஃபீல் பண்ண வைக்கிற. இந்த தடவை இத பண்ணினா தான் அடுத்த தடவை என்ன கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாங்க... உள்ளூர் மாப்பிள்ளைன்னா கூட பரவாயில்லை. போனா போகுதுன்னு விடலாம். இவன் மும்பையாம். நான் இவன் கல்யாணம் பண்ணி இவன் பின்னாடி போயிட்டா... என் அப்பாவை பார்த்துக்கறது யாராம் ?
சாமி... ஆளை விடு. தெரியாம சொல்லிவிட்டேன். படத்தை பார்க்கவிடு...
அது... அந்த பயம் இருக்கணும்.
அதே நேரம் பின்புற இருக்கையில் இருந்தவனுக்கு போன் வர நம்பரை பார்த்தவன் பேசுவதற்கு வெளியே எழுந்து சென்றான். ஏனென்றால் அழைத்தது அவனது அன்பு தங்கை தாரிகா அல்லவா..
ஹேய்... தாரு சப்ரைஸ் இந்த நேரம்
கூப்பிட்டு இருக்கற...
டேய் அண்ணா சப்ரைஸா நிறைய நடக்கும் போது தானும் இப்படி பேச தான வேண்டியதா இருக்கு.
ஓய்... என்ன சொல்லற...
இப்ப தான் அப்பா கூப்பிட்டு சொன்னாங்க. நீ பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டயாம். நான் வேற இவர்கிட்ட பெட் வச்சேன். என் அண்ணா இப்போதைக்கு யாரையும் கட்டிக்க மாட்டான்னு பத்தாயிரம் ரூபாய் லாஸ்.
அந்த காச நான் தரவா... தாரு ... என் மருமக என்ன சொல்லறா...
அவளுக்கென்னணா. இவ்வளவு நேரம் அடம்புடிச்சிட்டு இப்ப தான் தூங்கறா...
தாரு.. நீ மட்டும் சமத்தா என்ன. . உன் பொண்ணும் உன்ன மாதிரிதான் இருப்பா ... எப்ப வர்ரே... ஊருக்கு...
உன் கல்யாணம் பிக்ஸ் ஆச்சுன்னா அங்கே தான் டேறா...
வா...வா... என்றவன் போனை கட் செய்து பார்க்க படம் இடைவேளை விட்டிருக்க அனைவரும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். மலர் கூட இருந்த தோழிகளுக்கு சாப்பிட என்ன என்ன
வேண்டும் என கேட்டவள் பில் பே செய்தபடி வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள் தனது இன்னொரு தோழியுடன் பேசியபடி... நிஷா சான்வெஜ் மூன்று நீ வாங்கிக்கோ... நான் பாப்கார்ன் வாங்குகிறேன் என்றபடி நகர்ந்தவள் பாப்கார்ன் வாங்கியபடி நிஷா முன் செல்ல அவளுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். இதுவரை எல்லாம் சரியாக தான் நடந்தது. அதற்கு அடுத்து நடந்தது யாரும் எதிர்பாராதது.
அவள் உள் நுழைந்ததை பார்த்தவன்
அவள் வந்ததை கவனிக்காமல் அவளை தேடியபடி அவளது நண்பர்கள் கூட்டத்தை பார்த்தபடி பின் நகர ...
இவன் வருவதை கவனித்து நிஷா நகர்ந்திருந்தாள் பின்னோடு வந்த மலரின் மேல் இடித்து விடலாம் கையில் இருந்த மொத்த பாப்கார்னும் டைல்ஸ் தரையில் கொட்டியிருந்தது.
கொட்டிய நொடியே திட்ட ஆரம்பித்து இருந்தாள். கண்ணு தெரியலையா. இப்படி தான் வந்து மோதுவிங்களா...
வாங்கிட்டு வந்தது எல்லாம் வீணா போச்சு... நிஷா முன்னாள் போனவள் திரும்பி வந்து மலர் பரவாயில்லை. விடு. வேற வாங்கிகலாம். சத்தம் போடாத...
பாரேன் தட்டி விட்டுடு எப்படி நிக்கறனான்னு... திட்டியபடி இவனது முகத்தை பார்க்க... நல்ல உயரம்,நல்ல நிறம் கூடவே கண்ணுக்கு குளிர் கண்ணாடி.. எதுவுமே நடக்காகாதது போல நின்றிருந்த தோற்றம் ....இவள் முகத்தை கவனிக்க ஆரம்பிக்கவும் அப்பாவி போல நின்றிருந்தான்.
அருகில் வந்த நிஷாவோ... மலர் நிஜமாகவே அவருக்கு கண்ணு தெரியலை போல... நீ வா இங்கே என்றபடி இழுத்து சென்றிருந்தாள்.
அதற்கேற்றாற்போல் அவன் அருகில் வந்த ஒருவன் இப்படி ஒரமா வந்து உட்காருங்கள் பாஸ் என்றபடி அழைத்து சென்று அமர்ந்து வைக்க...
இவனை பார்த்தபடியே தியேட்டரின் உள் நுழைந்தாள். கண்ணு தெரியலைன்னா எப்படி படம் பார்ப்பாங்க.. தனது பெரிய சந்தேகத்தை தனது தோழியிடம் கேட்டபடி....
நந்தினியோ... சத்தம் காதுக்கு கேட்கதான செய்யும் அத கேட்க வந்திருப்பாங்க என்றபடி படத்தில் மூழ்கி இருந்தனர் அனைவரும்.
அபிநந்தன் அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் கிளம்பி இருந்தான். அவளை எப்படி அணுகுவது என்று யோசித்தபடி..
பனிமலர் வருவாள்.
தனது மகள் பனிமலரை பெண் பார்க்க தனது நண்பனிடம் குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தார். கடைசி நேரத்தில் நண்பனின் தாயாருக்கு முடியாமல் போக தனது மகனை மட்டும் அனுப்பி இருந்தார். இவன் வருவதை கடைசி வரை சொல்லாமல்
இருந்தவர் காலையில் இவன் இங்கு வந்ததை போனில் சொல்ல அடுத்த நிமிடம் தனது பர்ஸை எடுத்துக் கொண்டு தனது அபிமான பெப்பில் கிளம்பி இருந்தாள் பனிமலர்.
புறப்பட்ட நேரத்திலேயே தனது தோழிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். குறிப்பிட்ட மாலிற்கு வரும்படி...அதே நேரத்தில் தகப்பனாறிற்கும் போனில் அழைத்தவள்.... அப்பா நான் முன்னமே உங்க கிட்ட சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு. நீங்க கொஞ்சம் கூட காதுல வாங்கவே இல்லை. எனக்கு பிடிக்கல. நான் யாரையும் பார்க்க விரும்பல..
பாப்பா இப்ப வந்திடுவாங்கம்மா...பாவமான குரலோடு சொல்லும் போது மனதை லேசாக அசைத்து தான் பார்த்தது. அதுவும் ஒரு நிமிடம் தான்...
அப்பா நீங்க தானே வர சொன்னிங்க. நீங்களே உட்கார வைச்சு பார்த்து அனுப்புங்க... எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. .அஞ்சு மணி இல்லாம வீட்டுக்கு வர மாட்டேன்.
எங்க பாப்பா இருக்கற...
ப்பா ... பாப்பா சொல்லாதிங்கன்னு எத்தனை தடவை சொல்லறது. இங்கே . இங்கே ப்ரோசோன் வந்து இருக்கிறேன் ப்ரெண்டுங்ககூட அஞ்சு மணிக்கு மேல் தான் வருவேன். நான் வர்றதுக்கு முன்னாடி அந்த மாப்பிள்ளையை சுத்தி சுத்தி நல்லா பார்த்துவிட்டு அனுப்பி வச்சிடுங்க... சரியா...இப்படி சொல்லியவளை இவனிடம் சொல்லவா முடியும்.
அங்கிள் என்ன ஆச்சு... சொன்னவனை திரும்பி பார்த்தவர். மெதுவாக ஆரம்பித்தார். பொண்ணு ஆரம்பத்தில் இருந்தே கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா... நான் கேட்கல... ஏதோ விளையாட்டுக்கு சொல்லறான்னு நினைச்சேன். அவ உண்மையாதான் சொல்லி இருக்கிறா...நீங்க வர்றது தெரியவும் சொல்லாம வெளிய கிளம்பி போயிட்டா..ஸாரி... அபி...
அபிநந்தன் நல்ல நிறம். அன்னாந்து பார்க்க கூடிய உயரம். காற்றில் கலைந்தாடும் தலை கொள்ளா கேசம்.
பேசும் கண்கள். எனக்கு கோபமே வராதே என்பது போல சிரிக்கும் உதடுகள்... இவனது குடும்பம் மொத்தமும் பெங்களூரில் இருக்க இவன் மும்பையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். திருமணம் வேண்டாம் என டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தவனை பாட்டியின்கடைசி ஆசை... உன் திருமணத்தை பார்ப்பது தான் என சொல்லி இம்முறை அழைத்து வந்திருந்தனர். இவனோடு கூட பிறந்த தங்கை ஒன்று. திருமணம் முடிந்து டெல்லியில் செட்டில் ஆகி இருந்தாள். மூன்று வயது பெண் குழந்தை ஓன்று இருந்தது.
பாதி நாட்கள் வேலை சம்மந்தமாக வெளிநாடுகளை சுற்றிக் கொண்டு இருந்தவன் ஓரு மாத விடுமுறையில் வர... இங்கே அனுப்பி இருந்தனர். ஏற்கனவே தனது தந்தையும் இவரும் பால்ய நண்பர்கள்
அதனால் பெரிதாக எதுவும் தோணவில்லை. வரும் போதே முடிவு செய்துதான் வந்திருந்தான். பாராத்ததும் பொண்ணு பிடிக்கலை... சொல்லிட்டு கிளம்பிடணும் இப்படி நினைத்து வர... இங்கே அப்படியே எதிர் பதமாய் நடந்து இருந்தது. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஓன்று ஈர்க்குதோ!!!
இப்போது அவளின் மேல் லேசாக ஆர்வம் துளிர்விட ஆரம்பித்து இருந்தது. ஏன் அங்கிள்... உங்க பொண்ணு வேறயாரையாவது விரும்பறாளா என்ன....
சே..சே அதெல்லாம் இல்லை அபி... அவளுக்கு என்னை விட்டுவிட்டு போக மாட்டாலாம். என் கூடதான் கடைசி வரைக்கும் இருப்பாளாம். நான் இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியலை.
அவர் பேச பேச ஹாலை சுற்றி பார்த்தவன் அங்கிள் உங்க பொண்ணு போட்டோ ஏதாவது இருக்கா... அவனும் அவளது புகைப்படத்தை பார்க்கவில்லை. இவனது செல்பேசிக்கு அணுப்பி இருக்க ஓபன் செய்து பார்க்காமலேயே டிலைட் செய்திருந்தான்.
இரு அபி ஆல்பம் இருக்கு எடுத்துட்டு வரேன் பாரு... தனது ரூம்பிற்கு சென்று ஆல்பம் எடுத்து வந்து இவனிடம் தர...ஏதோ பங்சனில் எடுத்து புகைப்படம் அது... ஆரஞ்சு நிற லெகன்காவில் இரு புறமும் தோள்வரையே வழிந்த கூந்தல்... . பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல பால் வெண்மை நிறம். குறை சொல்ல முடியாத அளவிற்கு நல்ல அழகி தான்.
அங்கிள் எனக்கு உங்க பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு...இங்கே தான் பார்க்கணும்ன்னு கட்டாயம் எதுவும் இல்லையே. .. எங்க போய் இருக்கறான்னு சொல்லுங்கள்... அங்கேயே போய் நான் பார்த்துக்கறேன்.
இப்படி கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது எனக்கு யோசித்தவர் கடைசி நிமிடத்தில்
யோசித்து அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு கூறினார். நல்ல பொண்ணு தான் அபி... பிடிவாதம் ஜாஸ்தி. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணில்லையா... கூடவே என் மேல பாசம் ஜாஸ்தி... அதனால்தான் இப்படி நடந்துக்கறா... எனக்கும் அவளை விட்டா யார் இருக்கறா...
டோன்ட்வொரி அங்கிள் . இனி நான் அவள பார்த்துக்கறேன். உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குது தானே...நீங்க அப்பாகிட்ட பேசி முடிவு பண்ணுங்கள்.
நான் உங்க பொண்ண பார்த்துவிட்டு வந்திடறேன். கால்டாக்சியை அழைத்தவன் மாலின் பெயர் சொல்லி அடுத்த கால்மணி நேரத்தில் அங்கு இருந்தான். அவளை கண்டு பிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இல்லை... அவளோடு இன்னும் நால்வர் பட்டாளம் இணைந்திருக்க கலகலத்து கொண்டிருந்தாள்.
நீலநிற ஜூன்ஸ் கருப்பு கலந்த டாப்ஸ் தூக்கி கட்டிய குதிரைவால் மேக்கப் என பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும் திரும்பி பார்க்க வைத்தாள். அவர்களது குரூப்பில் சமீபத்தில் திருமணம் பேசி இருந்து இருப்பார்கள் போல. குறிப்பிட்ட பெண்ணை சுற்றிலும் அமர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
எந்த கவலையும் இல்லாமல் சிரித்து கொண்டிருந்தவளை பார்க்க சற்றே கோபம் கூட வந்தது.
அங்க ஒருத்தன வர வச்சிட்டு எந்த கவலையும் இல்லாமல் இங்க இருக்கிறத பார்!! அதுவும் சில நிமிடம் தான் பிறகு அவனையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தான். சிறிது நேரம் பேசியவர்கள் மொத்தமாக தியேட்டர் உள் நுழைய அவர்களை தொடர்ந்து இவனும் சென்றான். அவென்சர் என்டு கேம் ஆங்கில படம் . அவர்களுக்கு நேர் பின்புறம் இரண்டு இருக்கை தாண்டி அமர்ந்து கொண்டான்.
அபிநந்தனுக்கு தன்னையே நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை அவளது வீட்டில் இந்த சந்திப்பு நடந்திருந்தால்... பிடிக்கவில்லை எனக்கு சொல்லி புறப்பட்டு இருப்பானோ!! ஆனால் இப்போது அவளது நடவடிக்கை ஓவ்வொன்றும் அவனை வியக்க வைத்தது. படம் ஆரம்பித்ததுமே ஒவ்வொரு ஹிரோவை காட்டும் போதும் கூச்சமே இல்லாமல் சத்தம் போட்டு.... விசில் அடித்துக் கொண்டு இருந்தாள்.
இதை பார்த்ததுமே தனக்கு தானே சொல்லிக் கொண்டான் அபி கல்யாணத்துக்கு அப்புறம் இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் போலயே...உன்னை தொவச்சி தோரணம் கட்ட போறா !!! தனக்குள் சிரித்தபடி மொத்தமாய் அவளை மட்டும் ரசித்துக் கொண்டு இருந்தான்.
அதே நேரம் மலருக்கு அவ்வப்போது கவனம் தந்தையிடம் போய் வந்து கொண்டிருந்தது. தன்னை அறியாமல் மணியை பார்த்தவள் வந்துட்டு போய் இருப்பான். இந்த அப்பா என்ன சொல்லி சமாளிச்சிப்பாங்க... பொய் வேற சொல்ல தெரியாது. பாவமா முழிச்சிருப்பாங்க... அதுக்காக நம்ம கொள்கையை விட்டு தர முடியுமா...
அருகில் இருந்த நந்தினி இவளை பார்த்தவள் ஏன் மலர் அடிக்கடி மொபைல் பார்க்கற..
நந்தினி அப்பாகிட்ட கோசிட்டு வந்துவிட்டேன். அதுதான் மறுபடியும் கூப்பிடறாங்களான்னு பார்க்கிறேன்.
நீ கோச்சுகிட்டயா... நம்மற மாதிரி சொல்லு...
மாப்பிள்ளை பார்க்கிறேன்னு ஒரு பையனை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தாங்க. நான் இங்க கிளம்பி வந்துட்டேன்.
ஏன் மலர் இது தப்புல்ல. உங்க அப்பா வந்தவங்க முன்னாடி சங்கடபடுவாங்கல்ல நீ அங்கேயே இருந்து நேரா அவங்க கிட்ட சொல்லி இருக்கலாம்.
இப்ப எதுக்கு என்ன கில்டியா ஃபீல் பண்ண வைக்கிற. இந்த தடவை இத பண்ணினா தான் அடுத்த தடவை என்ன கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாங்க... உள்ளூர் மாப்பிள்ளைன்னா கூட பரவாயில்லை. போனா போகுதுன்னு விடலாம். இவன் மும்பையாம். நான் இவன் கல்யாணம் பண்ணி இவன் பின்னாடி போயிட்டா... என் அப்பாவை பார்த்துக்கறது யாராம் ?
சாமி... ஆளை விடு. தெரியாம சொல்லிவிட்டேன். படத்தை பார்க்கவிடு...
அது... அந்த பயம் இருக்கணும்.
அதே நேரம் பின்புற இருக்கையில் இருந்தவனுக்கு போன் வர நம்பரை பார்த்தவன் பேசுவதற்கு வெளியே எழுந்து சென்றான். ஏனென்றால் அழைத்தது அவனது அன்பு தங்கை தாரிகா அல்லவா..
ஹேய்... தாரு சப்ரைஸ் இந்த நேரம்
கூப்பிட்டு இருக்கற...
டேய் அண்ணா சப்ரைஸா நிறைய நடக்கும் போது தானும் இப்படி பேச தான வேண்டியதா இருக்கு.
ஓய்... என்ன சொல்லற...
இப்ப தான் அப்பா கூப்பிட்டு சொன்னாங்க. நீ பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டயாம். நான் வேற இவர்கிட்ட பெட் வச்சேன். என் அண்ணா இப்போதைக்கு யாரையும் கட்டிக்க மாட்டான்னு பத்தாயிரம் ரூபாய் லாஸ்.
அந்த காச நான் தரவா... தாரு ... என் மருமக என்ன சொல்லறா...
அவளுக்கென்னணா. இவ்வளவு நேரம் அடம்புடிச்சிட்டு இப்ப தான் தூங்கறா...
தாரு.. நீ மட்டும் சமத்தா என்ன. . உன் பொண்ணும் உன்ன மாதிரிதான் இருப்பா ... எப்ப வர்ரே... ஊருக்கு...
உன் கல்யாணம் பிக்ஸ் ஆச்சுன்னா அங்கே தான் டேறா...
வா...வா... என்றவன் போனை கட் செய்து பார்க்க படம் இடைவேளை விட்டிருக்க அனைவரும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். மலர் கூட இருந்த தோழிகளுக்கு சாப்பிட என்ன என்ன
வேண்டும் என கேட்டவள் பில் பே செய்தபடி வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள் தனது இன்னொரு தோழியுடன் பேசியபடி... நிஷா சான்வெஜ் மூன்று நீ வாங்கிக்கோ... நான் பாப்கார்ன் வாங்குகிறேன் என்றபடி நகர்ந்தவள் பாப்கார்ன் வாங்கியபடி நிஷா முன் செல்ல அவளுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். இதுவரை எல்லாம் சரியாக தான் நடந்தது. அதற்கு அடுத்து நடந்தது யாரும் எதிர்பாராதது.
அவள் உள் நுழைந்ததை பார்த்தவன்
அவள் வந்ததை கவனிக்காமல் அவளை தேடியபடி அவளது நண்பர்கள் கூட்டத்தை பார்த்தபடி பின் நகர ...
இவன் வருவதை கவனித்து நிஷா நகர்ந்திருந்தாள் பின்னோடு வந்த மலரின் மேல் இடித்து விடலாம் கையில் இருந்த மொத்த பாப்கார்னும் டைல்ஸ் தரையில் கொட்டியிருந்தது.
கொட்டிய நொடியே திட்ட ஆரம்பித்து இருந்தாள். கண்ணு தெரியலையா. இப்படி தான் வந்து மோதுவிங்களா...
வாங்கிட்டு வந்தது எல்லாம் வீணா போச்சு... நிஷா முன்னாள் போனவள் திரும்பி வந்து மலர் பரவாயில்லை. விடு. வேற வாங்கிகலாம். சத்தம் போடாத...
பாரேன் தட்டி விட்டுடு எப்படி நிக்கறனான்னு... திட்டியபடி இவனது முகத்தை பார்க்க... நல்ல உயரம்,நல்ல நிறம் கூடவே கண்ணுக்கு குளிர் கண்ணாடி.. எதுவுமே நடக்காகாதது போல நின்றிருந்த தோற்றம் ....இவள் முகத்தை கவனிக்க ஆரம்பிக்கவும் அப்பாவி போல நின்றிருந்தான்.
அருகில் வந்த நிஷாவோ... மலர் நிஜமாகவே அவருக்கு கண்ணு தெரியலை போல... நீ வா இங்கே என்றபடி இழுத்து சென்றிருந்தாள்.
அதற்கேற்றாற்போல் அவன் அருகில் வந்த ஒருவன் இப்படி ஒரமா வந்து உட்காருங்கள் பாஸ் என்றபடி அழைத்து சென்று அமர்ந்து வைக்க...
இவனை பார்த்தபடியே தியேட்டரின் உள் நுழைந்தாள். கண்ணு தெரியலைன்னா எப்படி படம் பார்ப்பாங்க.. தனது பெரிய சந்தேகத்தை தனது தோழியிடம் கேட்டபடி....
நந்தினியோ... சத்தம் காதுக்கு கேட்கதான செய்யும் அத கேட்க வந்திருப்பாங்க என்றபடி படத்தில் மூழ்கி இருந்தனர் அனைவரும்.
அபிநந்தன் அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் கிளம்பி இருந்தான். அவளை எப்படி அணுகுவது என்று யோசித்தபடி..
பனிமலர் வருவாள்.